Jump to content

இலங்கையில் பதில் கிடைக்காத ஹர்த்தாலுக்கு சர்வதேசம் பதில் சொல்ல வேண்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பதில் கிடைக்காத ஹர்த்தாலுக்கு சர்வதேசம் பதில் சொல்ல வேண்டும்

Editorial / 2019 மார்ச் 07 வியாழக்கிழமை, பி.ப. 06:04 Comments - 0

 -அதிரதன்

அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும் என்பது பழமொழியோ, சான்றோர் வாக்கோ, எப்படி இருந்த போதிலும், இப்போது செயற்பாட்டுப் பயனில் இருக்கிறதா என்றால், ‘இல்லை’ என்றே பதில் சொல்லியாக வேண்டும். 

அப்படியானால், இலங்கையில் இனப்பிரச்சினை எனும் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டிருக்க வேண்டும்; காணாமல் போனோர் பிரச்சினை முடிவுக்கு வந்து, மகிழ்ச்சி பொங்கியிருக்க வேண்டுமே?  
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 40ஆவது கூட்டத்தொடர், கடந்த மாத இறுதியில் ஆரம்பமானது. 

இதன் ஆரம்பமே, இலங்கையிலிருந்து எழுந்த ஜனநாயக எதிர்ப்புகள் எனும் பெரும் அழுத்தத்துடனேயே நிகழ்ந்தது. மக்கள் தங்களுடைய எதிர்ப்புகளை, ஜனநாயக முறைமையின்கீழ் வெளிப்படுத்தவே முடியும் என்பதற்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில், வடக்கில் நடத்தப்பட்ட முழுக் கடையடைப்பு, கிளிநொச்சியில் நடைபெற்ற எதிர்ப்புக் போராட்டம் ஆகியவை நல்லதோர் உதாரணங்களாகும்.  

அதன் தொடர்ச்சியாக, சர்வதேச மனித உரிமைப் பேரவையில், காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான நியாயமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வைப் பெறக் கூடிய வகையில் அமைய வேண்டும் என்ற சாராம்சத்துடன், ஐ.நா மனித உரிமை சபைக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான ஆராய்வுகள், இம்மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ளன.

 இதன் போது, இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது மற்றும் சர்வதேசத்தின் நேரடித் தலையீட்டையும் கோரி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) பூரண ஹர்த்தாலுக்கும் கவனயீர்ப்புப் பேரணிக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன்  சர்வதேசத்துக்கான அழுத்தம் வழங்கும் இந்த வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது.   

இலங்கையில் நடைபெற்ற யுத்தம், ‘மனிதாபிமானத்துக்கான யுத்தம்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட, பெரும் யுத்தத்தாலும், அது நிறைவு பெற்ற பின்னர், இடம்பெற்ற கைதுகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், நிலஆக்கிரமிப்பு , அரசியல் கைதிகள் விவகாரம், ஊடகவியலாளர் தாக்கப்படுதல் அடங்கிய பல்வேறு குற்றங்கள், இனப்படுகொலைகளுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே, இப்போது தமிழ் மக்களின் அங்கலாய்ப்பாக இருக்கிறது.  

யுத்த நிறைவுக்குப் பின்னரும் அதன்போதும் நடைபெற்ற குற்றங்களுக்கு, நீதி வேண்டி ஐ.நா சபையில் முன்வைக்கப்படுகின்ற பிரேரணைகள் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டும், கால அவகாசம் கோரப்பட்டும், காலங்கடத்தியும் எனத் தாமதிக்கப்படுவதாகவே இருந்து வருகிறது. 

2017ஆம் ஆண்டில் பிரேரணைகளின் அடிப்படையில், இலங்கை அரசாங்கம் அனுசரணை செய்து, கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றைச் சீர்செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.  

 ஆனால் அரசாங்கம், குற்றச் செயல்களுக்குத் தீர்வுகளானவை, ‘மறத்தல் மன்னித்தல்’ என்று கூறுவதுடன், ‘கண்துடைப்பு’ நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றது. 2017இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக, ஆணைக்குழுக்களை நிறுவி, சர்வதேசத்திடமிருந்து தப்பிப் பிழைக்கும் யுத்தியை அரசாங்கம் மேற்கொண்டது.

ஆனால், அவற்றில் ஒப்புக்கொள்ளப்பட்டவைகள் எவையும் இன்னமும் நிறைவு செய்யப்படவில்லை. நாட்டில் நல்லிணக்கம் என்ற போர்வையில், பல்வேறு திரைமறைவு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றது எனப் பல தரப்பினராலும் குற்றஞ் சுமத்தப்படுகிறது.  

ஆயுத மோதல், அது நடைபெறும் காலத்தில் நடைபெறுகின்ற குற்றங்களுக்குத் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், அவற்றுக்கு மன்னிப்பு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் மேலெழுந்து வருகின்றன.  

பல நாடுகளில் நடைபெற்ற ஆயுத மோதல்களுக்குப் பின்னர், மோதல்களில் ஈடுபட்ட தரப்பினருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என, ஜெனீவா சமவாயம் சொல்கிறது. அவ்வாறு மன்னிப்பு வழங்குகின்ற போது, மனிதாபிமான வழக்காற்றுச் சட்டத்தின் ஒழுங்கு விதிகளுடன் இணைத்தே பார்க்கப்படவேண்டும் என்பது விதியாகும். 

இந்த விதி, போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்துக்கெதிரான குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது என்கிறது. இதிலுள்ள சிக்கல், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் யாதென எவ்வித சமவாயங்களும் தெளிவாக வரையறுக்கவில்லை.   

காணாமல்போகச் செய்தல், சித்திரவதை, பாலியல் குற்றங்கள், இன அழிப்பு என்பன மனிதாபிமானத்துக்கெதிரான குற்றங்கள் என பொதுவில் வரையறுக்கப்பட்டுள்ளன.  இந்த அடிப்படையில்தான் 70களுக்குப் பின்னரான காலத்தில், ஆரம்பமான தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எனும் இலங்கையின் இனப்பிரச்சினை சார் யுத்தமானது, 2009இல் நிறைவு பெற்றது. இக் காலகட்டத்தில் மனிதாபிமானத்துக்கெதிரான குற்றங்கள் இலங்கையில் நடைபெற்றமைக்கான சான்றுகள் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவற்றால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.  

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் இக்காலகட்டத்தில், இலங்கைத் தமிழ் மக்கள் சார்ந்த விடயங்கள் தொடர்பில், சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்; மீண்டும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என்ற கோரிக்கைகள் பல தரப்பினராலும் விடுக்கப்பட்ட வண்ணமிருக்கிறது. 

ஆனால், கால அவகாசம் கோரும் இலங்கை அரசாங்கத்துக்கு மறுப்புத் தெரிப்பதுடன் நின்றுவிட முடியுமா? என்ற கேள்விகளும் இருக்கத்தான் செய்கின்றன.  

2019 மார்ச் 20ஆம் திகதியன்று, இலங்கையின் மனித உரிமை விடயம் தொடர்பாக ஆராயப்படவுள்ளது. சர்வதேசத்தின் நேரடித்தலையீட்டுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு பொறியாக, வடக்கு, கிழக்கில் நடைபெறும் போராட்டங்கள், கவனயீர்ப்புப் பேரணிகள் அமையவேண்டும்; அமையும் என்ற எதிர்பார்ப்புடனேயே 19ஆம் திகதி, காலை மட்டக்களப்பு, கல்லடிப்பாலத்திலிருந்து காந்தி பூங்காவரை கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.  

கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் ஹர்த்தால், பேரணிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் (வந்தாறுமூலை, தென் கிழக்கு, திருகோணமலை வளாகம்), விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், தொழில் நுட்ப கல்லூரி, பாடசாலை மாணவர்கள், தமிழாசிரியர் சங்கத்தினர், அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம், அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சங்கங்கள், ஓட்டோ சங்கங்கள், ஊடக சங்கங்கள், சமயத் தலைவர்கள், இளைஞர் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், சகல கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், மகளிர் சங்கத்தினர், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரையும்  கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

அதேநேரத்தில், வடக்கு, கிழக்கில் வர்த்தக சங்கத்தினர் தமது கடைகளை மூடியும் அரச,  தனியார் போக்குவரத்து சங்கத்தினர் தமது போக்குவரத்துச் சேவைகளை நிறுத்தியும் அனைத்துத் தரப்பினரும் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  

தம்மை ஒறுத்து, தம்முடைய இனத்துக்கான உணர்வு பூர்வமாக போராட்டம் நடத்துகின்ற மக்கள் கூட்டம், கால ஓட்டத்தின் வரலாற்றில், அழிந்து போய்விடுவதில்லை என்பது யதார்த்தம்.  

யுத்தகுற்றம் தொடர்பாக, படையினரை விசாரணை செய்வதற்கு அனுமதிக்கமாட்டேன் என்று கூறுகின்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சர்வதேச விசாரணைகளுக்கான ஒத்துழைப்பை வழங்குவாரா என்ற கேள்வி இருந்தாலும், அரசாங்கம் மீண்டும் ஐக்கிய நாடுகள் சபையில் கால அவகாசம் கேட்பதானது சாத்தியப்படுமா என்பது ஒற்றைக்காலில் தவமிருக்கும் கொக்கின் நிலையாகத்தான் காணப்படுகின்றது.  

இறுதி யுத்தத்தின் நடந்த குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் திருப்தியாக அமையவில்லை எனப் பல வெளிப்பாடுகள் வந்திருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காலத்தில் மட்டுமல்ல, இன்று வரை விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பட்டியல் வெளியிடப்படவில்லை; மரணச்சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. 

‘மறப்போம் மன்னிப்போம்’ என்று கூறப்படுகின்ற வேளையில், காணாமல் போனவர்கள் எல்லோரும் வெளிநாடுகளில் தஞ்சம் கோரி வசித்து வருகிறார்கள் என்று தகவல் வெளியிடுவதும் நடைபெறுகின்ற நாட்டில், கடையடைப்பு, ஹர்த்தால்கள் வெற்றியளிக்காவிட்டாலும் சர்வதேசத்தில் பார்வையில் எடுபட வேண்டும். ஒற்றைக்கால் கொக்கின் நிலையில் மாற்றம் ஏற்படவும் வேண்டும்.  

19ஆம் திகதி நடைபெறும் காணாமல் போனோரது குடும்ப உறவினர்களின் அழைப்பிலான ஹர்த்தாலுக்கும் பேரணிக்கும் சர்வதேசம் பதில் சொல்ல வேண்டும்.     

 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கையில்-பதில்-கிடைக்காத-ஹர்த்தாலுக்கு-சர்வதேசம்-பதில்-சொல்ல-வேண்டும்/91-230492

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.