Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கை கைப்பற்ற முனைந்தால் விளைவு பாரதூரமாக இருக்கும் - சு.ப. தமிழ்ச்செல்வன்.

Featured Replies

வடக்கை கைப்பற்ற முனைந்தால் விளைவு பாரதூரமாக இருக்கும் - சு.ப. தமிழ்ச்செல்வன்.

சிறீலங்கா இராணுவம் வட பகுதியிலுள்ள முக்கிய தளங்களைக் கைப்பற்ற முனைந்தால், அதன் விளைவு பார தூரமாக அமையும் என, தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறீலங்காப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தமது முழுமையான பலத்தையும் பிரயோகிக்க நிர்ப்பந்திக்கப்படுவர் எனவும், அதன் வினைத்திறன் பாரதூரமாக அமையும் எனவும், தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டினார்.

நேற்று அமெரிக்காவின் ஏ.பி என்றழைக்கப்படும் அசோசியேட்டட் பிறஸிற்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறையாகக் கடைப்பிடிக்காத நிலையில், இராணுவத் தீர்வில் நாட்டம் கொண்ட இராணுவ வெறிகொண்ட அரசு, விடுதலைப் புலிகளை போரில் தோற்கடிக்க முடியும் என எண்ணுவது பாரிய தவறு என்பதை, விரைவில் புரிந்து கொள்ளும் என்றும் தமிழ்ச்செல்வன் கூறினார்.

அனைத்துலக சமூகத்தின் அணுசரணையுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையின் ஊடாக, இனப் பிரச்சினைக்கான தீர்வு ஒன்றை எட்ட முடியும் என்பதில் விடுதலைப் புலிகள் தற்பொழுதும் உறுதியாக இருப்பதாகவும் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

சிறீலங்கா அரசின் கொடுமையான இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்ற போதிலும், விடுதலைப் புலிகள் தொடர்ந்து பொறுமையைக் கடைப்பிடித்து வருவதாகவும், அசோசியேட்டட் பிறஸிற்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் மேலும் கூறியுள்ளார்

-Pathivu-

வடபகுதியை கைப்பற்ற இராணுவம் முனைந்தால் புலிகள் தமது முழுப்பலத்தையும் வெளிப்படுத்துவர்

வடபகுதியை கைப்பற்றும்நோக்கில் இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டால் விடுதலைப்புலிகள் தமது முழுப்பலத்தையும் வெளிப்படுத்துவார்கள் என எச்சரித்துள்ள புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எனினும் பேச்சுவார்த்தைமசைக்கு செல்ல தாம் தற்போதும் தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து சர்வதேச செய்திச்சேவை ஒன்றுக்கு தொலைபேசி மூலம் அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அப்பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வடக்கிலுள்ள விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அரசாங்கமும் அதன் இராணுவமும் விடுதலைப்புலிகளின் முழுப்பலத்தையும் உணர்ந்து கொள்ளுவார்கள். அது மிகவும் மோசமானதாகவும் அபாயகரமானதாகவும் இருக்கும்.

இந்தக்கட்டத்திலும் சமாதான செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கவும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவும் தாம் விருப்பம் கொண்டுள்ளோம். மோதல்களை நிறுத்தி பேச்சுக்கான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகத்திடனும் அனுசரனையாளர்களிடமும் கோரிக்கை விடுக்கின்றோம்.

தமிழ்வின்

பொறி கிண்டபடுது போல வந்தூ கட்டாயம் விழுவீனம்

வடக்கின் மீது கை வைத்தால் படையினர் எமது முழுப் பலத்தையும் உணர்வர்

பேச்சுவார்த்தையைத் தொடங்க சர்வதேசத்துக்கு இன்னமும் இடமுண்டு

கிளிநொச்சி, ஏப்.20

வடக்கைக் கைப்பற்ற அரச படைகள் முயற்சித்தால் விடுதலைப் புலிகள் தமது முழுப்பலத்தையும் பயன்படுத்துவர். அப்போது விடுதலைப் புலிகளின் முழுப்பலத்தையும் படைகள் உணர்வர்.

இப்படிக் கூறியுள்ளார் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

கிளிநொச்சியில் வைத்து நேற்று ஏ.பி.செய்தியாளருக்கு தமிழ்ச்செல்வன் வழங்கிய பேட்டியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்று என்று இன்று இப்போது இல்லை என்றும் விரைவில் வடக்கைக் கைப்பற்றுவோம் என்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கடந்தவாரம் ஏ.எவ்.பிக்குத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ஏ.பி. செய்தியாளருக்கு தமிழ்ச்செல்வன் மேலும் கூறியதாவது:

வடக்கைக் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டால் மோசமான நிலை உருவாகும். கொழும்பும் அதன் பேரினவாத அடிவருடிகளும் விடுதலைப் புலிகளின் பலம் குறித்து அப்போதுதான் உணர்ந்து கொள்வார்கள் .

விடுதலைப் புலிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே இருக்கின்றனர். சர்வதேச சமூகம் யுத்தம் ஏற்படும் சூழலைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோருகின்றோம்.

பேச்சுக்களை மீள ஆரம்பிக்கும் விடயத்தில் சர்வதேசத்துக்கு இன்னமும் பங்கிருக்கின்றது. அதனைக் கருத்தில் கொண்டே அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் இதுவரை எமது பதிலடிகளை மேற்கொள்ளாமல் உள்ளோம் என்றார் அவர். (அ1

உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடக்கும் என்பார் நடக்காது

நடக்காதென்பார் நடந்துவிடும்

என்னமோ நடக்குது

மர்மமா இருக்குது

ஓன்னுமா புறியல

யாராச்சும் வந்து என்னை கரை ஏத்திட்டு போங்கோ!

ஆஆஆப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்...... (கொட்டாவி தான் வருகுது) ...ப்ப்ப்ப்ப்ப்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஆஆப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்...... (கொட்டாவி தான் வருகுது) ...ப்ப்ப்ப்ப்ப்....

ஏன் விடுகின்ற கொட்டாவியை ஊரில் சென்று விடுகின்றது? உங்களின் போராட்ட இணைவு நினைத்தும் புலிகளுக்கும் கொட்டாவி வருது!

:D கிழக்கு !!!
  • கருத்துக்கள உறவுகள்

:D கிழக்கு !!!

வடக்க மீட்க கிழக்கு தானா வருமாக்கும்..! :blink::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்க மீட்க கிழக்கு தானா வருமாக்கும்..! :D:blink:

ஆனையிறவிற்கு கொடுக்கப் பட்ட அடி பூனகரியையும் மூட்டை கட்ட வைத்ததே அது மாதிரித்தான். :D

வரும் வரும் இல்லை வராது வராது

வராது வராது இல்லை வரும் வரும்

எது வரும்? எது வராது? அல்லது எது வந்தால் எது வரும்?

என்ன ஒரே குழப்பமாக இருக்கா?

ஒரு நாள் விடைகிடைக்கும்

அது எப்ப ஒரு நாள்?

அதுதான் ஆக்கிரமிப்புக்கு வெளிக்கிட்டால்?

பொறுமை,,பொறுமை.........

அப்ப வெளிக்கிடாட்டி?

அதுவும் ஒரு நாளைக்கு..........

பொறுமை பொறுத்தார் பூமி ஆள்வார்........

குழப்புறதுனு முடிவாயிடுச்சி.

ஆப்புரம் என்ன.

நடத்துங்க நடத்துங்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.