Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைவம்

Featured Replies

  • தொடங்கியவர்

வீறன்மீண்ட நாயனார் புராண சூசனம்

சங்கமபத்தி முதிர்ச்சி

சிவனிடத்தே இடையறாத அன்பு செய்து, அவருடைய திருவடிகளை அணைய வொட்டாது அயர்த்தலைச் செய்விக்கும் இயல்பினை உடைய மலசம்பந்தங்களைக் களைந்த மெய்யுணர்வு உடையோர், தம்முடன் இணங்குவோர்களை உயிர்க்கு உயிராகிய சிவனை மறப்பித்துத் தீ நெறிக்கட் செலுத்திப் பிறவிக்குழியில் வீழ்த்தித் துயருறுத்தும் அஞ்ஞானிகளுடனே சிறிதும் இணங்காதொழிந்து தம்முடன் இணங்குவோர்களைச் சிவனிடத்தே அன்பை விளைவித்து நன்னெறிக்கட் செலுத்திப் பிறவிக்குழியில் நின்றும் எடுத்து வாழ்விக்கும் மெய்ஞ்ஞானிகளாகிய சிவனடியார்களோடுங் கூடி, அவர்கள் திருவேடத்தையும் சிவலிங்கத்தையும் சிவன் என்றே பாவித்து வணங்குவர்கள். இதற்குப் பிரமாணம் சிவஞான போதம். "செம்மலர் நோன்றாள் சேர லொட்டா - வம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ - மாலறநேய மலிந்தவர் வேடமு - மாலயந் தானு மரனெனத் தொழுமே." எ-ம். "மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்குஞ் - சிறப்பில்லார் தந்திறத்துச் சேர்வை - யறப்பித்துப் - பத்த ரினத்தாய்ப் பரனுணர்வி னாலுணரு - மெய்த்தவரை மேவா வினை" எ-ம் வரும்.

இவ்விறன்மிண்ட நாயனார் இவ்வாறே, சிவனுடைய திருவடிகளையே பற்றி நின்று, மலசம்பந்தங்களை ஒழித்து, சிவனடியார்களுடன் இணங்கி, அவர்களையும் சிவலிங்கத்தையும் சிவன் எனவே வழிபட்டனர் என்பது, இங்கே "செப்பற்கரிய பெருஞ்சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி - யெப்ப瓭் றினையு மறவெறியா ரெல்லை தெரிய வொண்ணாதார் - மெய்ப்பத் தர்கள் பாற் பரிவுடையா ரெம்பிரானார் விறன்மிண்டர்." என்பதனாலும், "நதியு மதியும் புனைந்தசடை நம்பர் விரும்பி நலஞ்சிறந்த - பதிகளெங்குங் கும்பிட்டுப் படருங் காதல் வழிச்செல்வார் - முதிர疓 மன்பிற் பெருந்தொண்டர் முறைமை நீடு திருக்கூட்டத் - தெதிர்முன் பரவு மருள்பெற்றே யிறைவர் பாதந் தொழப் பெற்றார்" என்பதனாலும் உணர்த்தப்பட்டது.

சிவனடியாரிடத்துப் பத்தி இல்லாதவர் சிவனிடத்தும் பத்தி இல்லாதவரே. சிவனடியாரிடத்து அவமானம் பண்ணிச் சிவலிங்கத்திலே பூசை செய்தலாற் பயன் இல்லை என்பது சிவாகமத் துணிவாதலானும்; சிவபத்தரிடத்து அன்புடையராய் அவர் வழி நிற்பினன்றி, உலகியல்பு மாறிச் சிவானுபூதியுணர்வு மேலிடுதல் கூடாமையானும், இந்நாயனாரது உள்ளமானது சங்கமபத்தியிலே மிக முதிர்ச்சி உற்றது. அதனாலன்றோ, இவர், தேவாசிரியமண்டபத்தில் எழுந்தருளியிருந்த சிவனடியாரை வணங்காது செல்லும் சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவரை வலிய ஆண்ட பரசிவனையும், அடியார் திருக்கூட்டத்துக்குப் புறகு என்றும், அச்சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகை பாடியபின், அடியார் திருக்கூட்டத்துக்கு உள்ளொன்றும், அருளிச் செய்தார். இவர், அடியார் கூட்டத்தைச் சுந்தரமூர்த்தி நாயனார் வணங்காது செல்லக் கண்டமையால் அவரை அத்திருக்கூட்டத்துக்குப் புறகு என்று கூறியது ஒக்கும்; சருவஞ்ஞராகிய சிவனை அவ்வாறு கூறியது குற்றமாகாதோ எனின், ஆகாது. இவர், தற்போதம் சீவித்து நின்றவழி, இவ்வாறு சொன்னாராயில், குற்றம் ஏறும்; இவர், சிவன் பணித்தபடி செய்து, பரம் அற்று, சிவானுபவம் மேலிட்டு, சிவாதீனமாய் நிற்கையால்; இவர் கூறியது சிவன் கூறியதேயாம். அக்கருத்து, இங்கே "வன்றொண்டன் புறகென் றுரைப்பச் சிவனருளாற் - பெருகா நின்ற பெரும் பேறுபெற்றார்" என்பதினும், "பிறைசூடிப் - பூணாரரவம் புனைந்தார்க்கும் புறகென் றுரைக்க மற்றவர் பாற் - கோணாவருளைப் பெற்றார்மற் றினியார் பெருமை கூறுவார்." என்பதினும், அமைந்து கிடந்தமை நுண்ணுணர்வால் உணர்க. காருண்ணிய சமுத்திரமாகிய சிவனே, தமது அடியாரிணக்கம் இல்வழிப் பிறவிப் பிணி தீர்ந்து உய்தல் கூடாமையைச் சருவான்மாக்களும் உணர்ந்து உய்யும் பொருட்டும்; சுந்தரமூர்த்தி நாயனாரைக் கொண்டு திருத்தொண்டத்தொகை செய்வித்து, சிவனடியார்கள் தம்மிடத்துச்செய்த அன்பின்றிறத்தையும், அவ்வன்புக்கு எளிவந்த தமது திருவருட்டிறத்தையும் யாவரும் உணர்ந்து தம்மிடத்து அன்பு செய்து உய்தற்பொருட்டும்; தமது திருவுள்ளத்து முகிழ்த்த பெருங்கருணையினாலே, இந்நாயனாரிடத்து ஆவேசித்து நின்று கூறிய கூற்றாம் இது என்பது தெளிக. சிவனடியாரிடத்துப் பத்தி இல்லாதவர் சிவனிடத்தும் பத்தி இல்லாதவரே என்பது; "ஈசனுக்கன் பில்லாரடியவர்க்கன்பில்லார்" என்னும் சிவஞான சித்தியாரால் உணர்க. மெய்யுணர்வுடையார் சிவனடியார் இணக்கத்தையே பொருளென வேண்டுவர் என்பது "தேவர்கோ வறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்துகாத் தழிக்குமற்றை - மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத் தெந்தை - யாவர்கோனென்னை யும்வந் தாண்டு கொண்டான் யாமார்க்குங் குடியல்லோம் யாது மஞ்சோ - மேவினோ மவனடியாரடியா ரோடு மேன்மேலுங் குடைந்தாடி யாடுவோமே" "உடையா ளுன்ற னடுவிருக்கு முடையாணடுவு ணீயிருத்தி - யடியே 璽டுவு ளிருவீரு மிருப்ப தானா லடியேனுன் - னடியார் நடுவு ளிருக்கு மருளைப் புரியாய் பொன்னம் பலத்தெம் - முடியா முதலே யென்கருத்து முடியும் வண்ண முன்னின்றே" என்னுந் திருவாசகத்தினாலும், "நல்லாரிணக்கமு நின்பூசை நேசமு ஞானமுமே - யல்லாது வேறு நிலையுள தோவக மும்பொருளு - மில்லாளுஞ் சுற்றமு மைந்தரும் வாழ்வு மெழிலுடம்பு - மெல்லாம் வெளிமயக்கேயிறை வாகச்சி யேகம்பனே." என்னும் பட்டணத்துப் பிள்ளையார் பாடலாலும் காண்க.

  • Replies 479
  • Views 68.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அமர்நீதி நாயனார் புராண சூசனம்

naamarni_i.jpg

சிவனடியாருக்கு அன்னம் வஸ்திரம் கெளபீனம் கொடுத்தல்

சிவஸ்தலத்திலே மடங்கட்டுவித்து, புண்ணிய காலங்களிலே சிரத்தையோடும் கற்பாத்திரமாகிய சிவனடியார்களை அமுது செய்வித்தலும், அவர்களுக்கு வஸ்திரம் கெளபீனம் முதலியன கொடுத்தலும், பெரும்புண்ணியமாம். அன்னம் வஸ்திரம் கெளபீனம் முதலியன தானஞ் செய்தல் புண்ணியம் என்பதற்குப் பிரமாணம் சிவதருமோத்திரம். "திருப்பதி வணங்க வென்று சென்றுறுஞ் சிவநேசர்க்கு - மருத்தியாற் கங்கையாதி யாடிட நாடினார்க்கு - மருத்துக வன்னபான மவரவர்க்குபயோகங்கள் - பொருத்துக வூனைப் போக்கிச் சிவபுரம் புகுவர்தாமே." எ-ம். "பிரம சாரியைப்பேரற மோங்கிடுங் - கிரக சாரியை யூட்டிய கேண்மையர் - விரவியேசிவ லோகம் விரும்பிய - பரம போக மனைத்தும் பயில்வரே." எ-ம். "ஊட்டினார்களுதவிய தேதெனுங் - காட்டு ளாடி கழறங் கருத்தினு - ணாட்டி னாரைத் தமைநலி யும்வினை - யோட்டியே சிவலோக முறைவரே" எ-ம். "மாதவர்க்குறவற்களையீந்தவர் - சீத வாரித வாடையுஞ் சேர்த்தினர் - கோதி ல甶வச னாதியுங்கோல்வளை - மாதொர் பாகன் புரத்தினுள் வாழ்ந்தபின்." எ-ம். சிவபுண்ணியத் தெளிவு; "நாற்ற மாமல ரோனெழி னாரணன் - போற்று சங்கர னன்பர்க்குப் பொங்கிழை - யாற்று கோவண மீந்தவ ராயிரந் - தேற்று கோடி யுகஞ்சிவ லோகரே." எ-ம். வரும். இப்புண்ணியத்தைப் புண்ணியஸ்தானத்திலே. புண்ணிய காலத்திலே சிரத்தையோடும் செய்தல் உத்தமோத்தமம் என்பதற்குப் பிரமாணம் சிவதருமோத்தரம்; "சிறந்தநற் றேசந் தன்னிற் றேடருங் காலங்கூட - மறந்திடா விதியினாலே வாய்த்தவாதரவுங் கூர - வறந்தனை யறிந்த வாய்மைப் பாத்திரமாவா னங்கைச் -செறிந்திடச் செய்த வற்ப முலகினும் பெருகுந் திண்ணம்." எ-ம். "ஓங்கிய வதனைச் செய்த வுத்தமர் சிவலோ கத்துட் - டாங்கியே போக பேதம் பிரளய சமயந் தன்னி - னீங்கரும் பொருளைக் கண்டு நிறையுற வொருமை நீடத் - தூங்குவ ரின்பந் தோன்றத் துகண்மலஞ் சோருமன்றே" எ-ம். வரும்.

இவ்வமர்நீதிநாயனார் இந்தச் சிவபுண்ணியத்தின் மிகச் சிறந்தவராகி, சிவனிடத்தே இடையறாத மெய்யன்புடையராயினார். சிவனிடத்து அன்பில்லாமற் செய்யப்படும் புண்ணியம் உயிர் இல்லாத உடல் போலப் பயன்படாதாம், இவ்வன்பு பல பிறப்புக்களிலே பயன் குறியாது செய்யப்பட்ட தபோபலத்தினாலே சிவன் அருள் செய்யக் கிடைக்கும். இவ்வன்பு உள்ளவழியே சிவனது திருவருள் உண்டாம். அது உண்டாய வழி, முத்தி உண்டாம் இதற்குப் பிரமாணம், வாயுசங்கிதை; "ஆங்கவ னருளாற் பத்திநன்குண்டாம் பத்தியா லவனருளுண்டாம் - வீங்கிய பத்தி பற்பல பிறப்பில் வேதங்க ளுரைத்திடும் படியே - தீங்கறு கரும மியற்றிய பலத்தாற் சிவனருள் செய்திட வருமா - லோங்கிய பத்தி யாற்சிவ தரும மொழிவறப் புரிந்திடப் படுமால்." எ-ம். "புரிதலா லிறைவ னல்லருள் புரிவாள் புரிந்திடப் போக்கற நின்ற - விருவினை கழியுங் கழிந்திட முத்தி யெய்தலா மிறைவன்வார் கழலி - லொருவழி சிறிது பத்திசெய்வோரு மொருமூன்று பிறப்பின்மேற் பிறப்பின் - மருவிடா ரங்கத் தொடுமனுச் செபித்தன் மாசறு பத்தியாமென்பர்." எ-ம். வரும். இவ்வமர்நீதி நாயனார் மெய்யன்பிற் குறைபடாதவர் என்பது, பிரமசாரி வடிவங் கொண்டு வந்த பரமசிவனது கெளபீனம் இட்டதட்டுக்கு இவர் தம்மிடத்து உள்ள கெளபீனங்கள் வஸ்திரங்கள் பட்டுக்கள் பொன் வெள்ளி முதலிய உலோகங்கள் நவரத்தினங்கள் முதலிய அனைத்தையும் இட்டதட்டு ஒவ்வாது மேலெழுந்து, பின்பு தாமும் தம்முடைய மனைவியும் புத்திரனும், நாம் அன்பினோடு சிவனது திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோமாயின் இத்தட்டு மற்றதனோடு நேர்நிற்க என்று சொல்லி ஏறியவுடனே, அதனோடு ஒத்து நின்றமையாலே தெளியப்படும். அன்பின் திறம் கண்ணப்ப நாயனார் புராணத்துச் சூசனத்தில் விரித்து உரைக்கப்படும் ஆதலால் இங்கே விரித்திலம்.

  • தொடங்கியவர்

எறிபத்த நாயனார் புராண சூசனம்

naeripat_i.jpg

சிவனடியாருக்கு இடர் செய்தாரைக் கொல்லல்

சைவாசாரியருக்கும் சிவனடியாருக்கும் இடர் செய்தவரைக் கொல்லுதல் சிவபுண்ணியமாம். இடர் செய்தவர் பிராமணராயேனும் தபோதனராயேனும் இருப்பின், அவரைக் கொல்லாமல், பிறவழியால் வெல்லல் வேண்டும். இதற்குப் பிரமாணம், சங்கற்பநிராகரணம்; "தேசிகர்க்குத் தீங்குசெயுந் தீம்பரைவெல் லல்லதுநீ - சாசமுறு சேர்வாய் நலம்," எ-ம். "அந்தணரை மாதவரைக் கொல்லாதே வெல்லல்லார் - சிந்தவுஞ்செய் நீசெறியாய் தீங்கு." எ-ம் வரும். களவு, கொலை முதலியன சமயத்தாராலும் உலகத்தாராலும் குற்றம் என்று விலக்கப்பட்டன அன்றோ; அவற்றுல் ஒன்றாகிய கொலையை இங்கே புண்ணியம் என்றது என்னை எனின், அறியாது கூறினாய்; களவு என்னுஞ் சொற்கேட்டுக் கொலைதீது என்றலும், கொலை என்னுஞ் சொற்கேட்டுக் கொலைதீது என்றலும், கூடாவாம். அவை நல்லனவாதலும் உண்டு. ஒருத்தி தன் சுற்றத் தாரோடு கோபங்கொண்டு, நஞ்சுண்டு சாவேன் என்று துணிந்து, நஞ்சு கூட்டி வைத்து, விலக்குவார் இல்லாத போது உண்ண நினைந்து நின்றவழி; இரக்கமுடையவன் ஒருவன் அதனைக் கண்டு இவள் இதை உண்டு சாவா வண்ணம் கொண்டு போய் உகுப்பேன் என்று, அவள் காணாமே கொண்டு போய் உகுத்தான். அவள் சனநீக்கத்தின் கண்ணே நஞ்சுண்டு சாம்படி சென்று, அதனைக் காணாமையால், மரணம் நீங்கினாள். அவன் அக்களவினாலே அவளை உய்வித்தமையால், அது குற்றமாகாமல் அவனுக்கு நன்மை பயக்கும் அன்றோ; அது போலவே, இக்கொலையும் நன்மை பயக்கும். சிவனடியார்களுக்கு இடர் செய்வோர் மறுமைக்கண் நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்; இவ்வாறு இடர் செய்வாரைக் கண்டு பிறரும் சிவனடியாருக்கு இடர் செய்து கெடுவர்; சிவனுக்குத் திருத்தொண்டு செய்ய விரும்புவோர்களுள் தீவிர பத்தியுடையோரை யொழிந்த பிறர், தாம் செய்யும் திருத்தொண்டுகளுக்கு இப்படி இடையூறுகள் நிகழுமாயின், திருத்தொண்டுகள் செய்யாது தம்வாணாளை வீணாளாகக் கழிப்பர். சிவனடியாருக்கு இடர் செய்தாரைக் கொல்லுதல் இத்தீங்குகள் எல்லாவற்றையும் ஒழிக்கும். ஆதலால், இக்கொலை பாவமாகாமல் அது செய்தாருக்குச் சிவபதம் பயக்கும் என்று துணிக.

இச்சிவபுண்ணியத்திலே மிகச் சிறப்புற்றவர் இவ்வெறிபத்த நாயனார். இவர் சிவனடியார்களுக்கு இடையூறு வந்த காலத்திலே வெளிப்பட்டு, அவ்விடையூறு செய்தவர்களை மழுவினால் வெட்டுதலே தொழிலாகக் கொண்டமையாலும், சிவகாமியாண்டார் சிவனுக்குச் சாத்தும்படி கொண்டு வந்த பூவைப் பறித்துச் சிந்திய யானை அரசனது பட்ட யானையென்பது பாராமல், அதனையும் அது தீங்கு செய்த பொழுது விலக்காத பாகர்களையும் கொன்றமையாலும், என்க. இன்னும், சிவனடியாரிடத்து மிக்க பத்தி உடையோர் என்பது, புகழ்ச்சோழநாயனாரது பத்தி மிகுதியக் கண்டவுடனே, மிக அஞ்சி, தமது யானையும் பாகரும் இறந்து போகவும் அதைக் குறித்துச் சிறிதும் துக்கம் உறாமல் உடைவாளைத் தந்து தம்மையும் கொல்லும்படி வேண்டுகின்ற இவ்வன்பருக்குத் தீங்கு நினைத்தேனே என்று அவ்வாளைத் தமது கழுத்திலே பூட்டி அறுக்கத் தொடங்கினமையாலும் தெளியப்படும்.

திருச்சிற்றம்பலம்

  • தொடங்கியவர்

போற்றித் திருஅகவல்

(தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா)

நான்முகன் முதலா வானவர் தொழுது எழ

ஈர் அடியாலே மூவுலகு அளந்து

நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்

போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று

அடிமுடி அறியும் ஆதரவு அதனில்

கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து

ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து

ஊழி முதல்வ சயசய என்று

வழுத்தியும் காணா மலர்அடி இணைகள்

வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10

யானை முதலா எறும்பு ஈறாய

ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்

மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து

ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்

ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்

இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்

மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்

ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்

ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும 20

ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்

எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்

ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்

தக்க தசமதி தாயொடு தான்படும்

துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும்

ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை

ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்

காலை மலமொடு கடும்பகல் பசி நிசி

வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்

கரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில் 30

ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக்

கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து

எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து

ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்

கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்

பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்

மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்

கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்

செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்

நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40

புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்

தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி

முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்

ஆறு கோடி மாயா சக்திகள்

வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின

ஆத்தம் ஆனார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்

சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்

பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்

விரதமே பரம் ஆக வேதியரும் 50

சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்

சமய வாதிகள் தம்தம் தங்களே

அமைவது ஆக அரற்றி மலைந்தனர்

மிண்டிய மாயா வாதம் என்னும்

சண்ட மாருதம் சுழிந்து அடித்துத் தாஅர்த்து

உலோகாய தமெனும் ஒள் திறப்பாம்பின்

கலா பேதத்த கடுவிடம் எய்தி

அதில் பெருமாயை எனைப்பல சூழவும்

தப்பாமே தாம் பிடித்தது சலியாத்

தழலது கண்ட மெழுகு அது போலத் 60

தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து

ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்

கொடிறும் பேதையும் கொண்டது விடாதென

படியே ஆகி நல் இடைஅறா அன்பின்

பசுமரத்து ஆணி அறைந்தால் போலக்

கசிவது பெருகிக் கடல் என மறுகி

அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச்

சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப

நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை

பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச் 70

சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும்

கதியது பரமா அதிசயம் ஆகக்

கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்

மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது

அருபரத்து ஒருவன் அவனியில் வந்து

குருபரன் ஆகி அருளிய பெருமையைச்

சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்

பிறிவினை அறியா நிழல் அது போல

முன் பின்னாகி முனியாது அத்திசை

என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80

அன்பு எனும் ஆறு கரை அது புரள

நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி

உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப

கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்

கண்களி கூர நுண் துளி அரும்ப

சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்

தாயே ஆகி வளர்த்தனை போற்றி

மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்

கைதரவல்ல கடவுள் போற்றி

ஆடக மதுரை அரசே போற்றி 90

கூடல் இலங்கு குருமணி போற்றி

தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி

மூவா நான்மறை முதல்வா போற்றி

சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி

மின் ஆர் உருவ விகிர்தா போற்றி

கல் நார் உரித்த கனியே போற்றி

காவாய் கனகக் குன்றே போற்றி

ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி

படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்fறி 100

இடரைக் களையும் எந்தாய் போற்றி

ஈச போற்றி இறைவா போற்றி

தேசப் பளிங்கின் திரளே போற்றி

அரைசே போற்றி அமுதே போற்றி

விரை சேர் சரண விகிர்தா போற்றி

வேதி போற்றி விமலா போற்றி

ஆதி போற்றி அறிவே போற்றி

கதியே போற்றி கனியே போற்றி

நதி நேர் நெஞ்சடை நம்பா போற்றி

உடையாய் போற்றி உணர்வே போற்றி 110

கடையேன் அடிமை கண்டாய் போற்றி

ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி

குறியே போற்றி குணமே போற்றி

நெறியே போற்றி நினைவே போற்றி

வானோர்க்கு அரிய மருந்தே போற்றி

ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி

மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை

ஆழாமே அருள் அரசே போற்றி

தோழா போற்றி துணைவா போற்றி 120

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி

முத்தா போற்றி முதல்வா போற்றி

அத்தா போற்றி அரனே போற்றி

உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி

விரிகடல் உலகின் விளைவே போற்றி

அருமையில் எளிய அழகே போற்றி

கருமுகி லாகிய கண்ணே போற்றி

மன்னிய திருவருள் மலையே போற்றி

என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்

சென்னியில் வைத்த சேவக போற்றி 130

தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி

அழிவிலா ஆனந்த வாரி போற்றி

அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி

முழுவதும் இறந்த முதல்வா போற்றி

மான்நேர் நோக்கி மணாளா போற்றி

வான்அகத்து அமரர் தாயே போற்றி

பார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

அளிபவர் உள்ளதது அமுதே போற்றி

கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி

நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி

இடைமருது உறையும் எந்தாய் போற்றி

சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

சீர் ஆர் திருவையாறா போற்றி

அண்ணாமலை எம் அண்ணா போற்றி

கண் ஆர் அமுதக் கடலே போற்றி 150

ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி

பாகம் பெண் உரு ஆனாய் போற்றி

பராய்த் துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி

குற்றாலத்து எம் கூத்தா போற்றி

கோகழி மேவிய கோவே போற்றி

ஈங்கோய் மலை எந்தாய் போற்றி

பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி

கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160

அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி

இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு

அத்திக்கு அருளிய அரசே போற்றி

தென்னாடுடைய சிவனே போற்றி

என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஏனக் குருளைக்கு அருளினை போற்றி

மானக் கயிலை மலையாய் போற்றி

அருளிட வேண்டும் அம்மான் போற்றி

இருள் கெட அருளும் இறைவா போற்றி

தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170

களம் கொளக் கருத அருளாய் போற்றி

அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி

நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி

அத்தா போற்றி ஐயா போற்றி

நித்தா போற்றி நிமலா போற்றி

பத்தா போற்றி பவனே போற்றி

பெரியாய் போற்றி பிரானே போற்றி

அரியாய் போற்றி அமலா போற்றி

மறையோர் கோல நெறியே போற்றி

முறையோ தரியேன் முதல்வா போற்றி 180

உறவே போற்றி உயிரே போற்றி

சிறவே போற்றி சிவமே போற்றி

மஞ்சா போற்றி மணாளா போற்றி

பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி

அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி

இலங்கு சுடர் எம் ஈசா போற்றி

சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி

குவைப்பதி மலிந்த கோவே போற்றி

மலை நாடு உடைய மன்னே போற்றி

கலை ஆர் அரிகேசரியாய் போற்றி 190

திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி

பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி

அருவமும் உருவமும் ஆனாய் போற்றி

மருவிய கருணை மலையே போற்றி

துரியமும் இறந்த சுடரே போற்றி

தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி

தேளா முத்தச் சுடரே போற்றி

ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி

ஆரா அமுதே அருளா போற்றி

பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 200

தாளி அறுகின் தாராய் போற்றி

நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி

சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி

சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி

மந்திர மாமலை மேயாய் போற்றி

எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி

புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி

அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி

கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி

இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210

படி உறப் பயின்ற பாவக போற்றி

அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி

நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்

பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி

ஒழவற நிறைந்த ஒருவ போற்றி

செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி

கழு நீர் மாலைக் கடவுள் போற்றி

தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி

பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்

குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220

புரம்பல் எரித்த புராண போற்றி

பரம் பரம் சோதிப் பரனே போற்றி

போற்றி போற்றி புயங்கப் பெருமான்

போற்றி போற்றி புராண காரண

போற்றி போற்றி சய சய போற்றி 225

திருச்சிற்றம்பலம்

http://www.tamilnation.org/sathyam/east/th.../tvasagam04.htm

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாட்டை டவுண்லோடு செய்யலாம்.

http://www.megaupload.com/?d=6U4EBTI7

  • தொடங்கியவர்

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

காமதகனர்

kamathakanar.jpg

"பூதப் படையுடைப் புண்ணியரே! புறஞ்சொற்கள் நும்மேல்

ஏதப்பட எழுகின்றனவால்! இளையாளொடு உம்மைக்

காதற் படுப்பான் கணைதொட்ட காமனைக் கண்மலராற்

சேதப் படுத்திட்ட காரணம் நீர்இறை செப்புமினே"

- சேரமான் பெருமாள் நாயனார்

லகில் வரும் கேடுகளை ஊன்றிக் கவனித்தால் அவற்றிற்கு அடிப்படைக் காரணம் காமமே என்பது புலப்படும்.

காமமே கொலைகட்கெல்லாம் காரணம், கண்ணோடாத

காமமே களவுக்கெல்லாம் காரணம், கூற்றும் அஞ்சும்

காமமே கள்ளுண்டற்கும் காரணம், ஆதலாலே

காமமே நரகபூமி காணியாக் கொடுப்பதாகும்.

என்று காமத்தின் தன்மையைத் திருவிளையாடற்புராணம் தொகுத்துரைக்கின்றது.

"மணிநகையாரே தெய்வம், வாக்கு உபதேசம், கொங்கைத்

துணைகுரு பீடம், பாதத்துணை வருடுவதே பூசை

அணைவது முத்தி... காமன் ஆகமங்கள் என்றான்"

என்றபடி காமன் ஆகமங்களில் வல்லவர்களே உலகில் அதிகம். காமனை வெல்லுவதென்பது எளிதான காரியமல்லவே. காமத்தையும் காலத்தையும் வெல்லும் ஆற்றல் நாம் பெறவேண்டுமாயின் அவற்றை வென்ற சிவபெருமானுடைய பெருங்கருணைக்கு ஆளாக வேண்டும்.

  • தொடங்கியவர்

காமதகனம் பற்றி வடமொழி லிங்கபுராணம் விரிவாகப் பேசுகின்றது.

சூரபன்மாதியரின் கொடுமையால் தீமையின் வலிமை மிகுந்து உலகம் அல்லலுற்றது. அவுணர்களை அழிக்க இறைவனைப் பணிந்து பரவினர் நல்லோர். கயிலையில் மோன மூர்த்தியாக - யோகியாக - தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து நால்வர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு பற்றி சொல்லாமற் சொல்லும் குருமூர்த்தியாக எழுந்திருளியிருந்தார் சிவபெருமான். இமவான் மகளாக அவதரித்து உமையம்மையார் பெருமானைத் திருமணம் புரிந்து கொள்ளக் கடுந்தவம் இயற்றி வந்தாள். இவர்கள் திருமணம் நிகழ்ந்து ஒரு குமாரன் தோன்றி அசுரர்களை அழித்தாக வேண்டும். யோகியாய் விளங்கும் இறைவன் போகியாக மாற வேண்டும். அவருக்கு உமையம்மைபால் மனம் செல்ல வேண்டும்.

ஆம் அவருக்கு காமம் வரவேண்டும்! என் செய்வது விண்ணோர் கூடினர். இந்திரன் காமனை அழைத்துச் சிவபெருமான் மீது மலரம்பு தொடுக்கப் பணித்தனன். மன்மதன் அஞ்சினான். இந்திரனால் அழிவதை விடச் சிவபெருமானால் உய்வடைவது உயர்வு தரும் எனத் துணிந்தான். சிவபெருமான் மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான். சிவபெருமான் மோனங்கலைந்து கண் திறந்தார். நெற்றிக்கண் வீழ்த்தது. மன்மதன் சாம்பலானான். காமன் மலர்களைத் தானே சிவன்மீது செலுத்தினான்! கல்லெறிந்த சாக்கியருக்குக் கதியளித்த கண்ணுதற் கடவுள் மலர் எறிந்த மன்மதனை மாய்த்துவிட்டார்! என்ன நியாயம்! ஆம், மன்மதன் மலர் எய்திய போதிலும் அவன் உள்ளம் பக்தியால் அதனைச் செய்யவில்லை. சக்கியர் கல்லெறிந்த போதிலும் அவர் உள்ளம் சிவபெருமான் மீது கனிந்து பக்தி மிகுந்திருந்தது. செயலை விட நோக்கம் தான் முக்கியம். ஆதலால் தான் மன்மதன் கதி அவ்வாறாயிற்று. மன்மதன் பாணம் மாதேவனை மயக்கிவிடவில்லை என்பது ஈண்டு கருதத்தக்கது. தனது அமர காதலனை மன்மதன் மாய்ந்தது கண்டு இரதிதேவி புலம்பினாள். இறைவனைப் பலவாறு துதித்துப் பரவினாள். தனக்கு மாங்கல்ய பிச்சை அருள வேண்டினாள். சிவபெருமானும் அவள் நிலைக்கு இரங்கி, அருவமாய் தன் தொழில் செய்யுமாறு மன்மதனைப் பணித்து உயிரளித்து அருள்புரிந்தார்

  • தொடங்கியவர்

"எரிபுனை நமது நோக்கால் இறந்தநின் உடலம் நீறாய்

விரைவொடு போயிற்றன்றே வேண்டினள் இரதியன்னாட்

குருவமாய் இருத்தியேனை உம்பரோ டிம்பர்க்கெல்லாம்

அருவினை யாகியுன்றன் அரசியல் புரிதி என்றான்"

என்று இந்நிகழ்ச்சியைக் கந்தபுராணம் பேசும். இரதியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனைக் கிருஷ்ணாவதாரத்தில் பிரத்யும்னனாகத் திருமால் பெற்றெடுப்பார் என்றருள் புரிந்தார் சிவபெருமான் என வடமொழிப்புராணம் பேசும். காம பாணத்தை விட உமையின் தவமே இறைவனது மோனங்கலையக் காரணமாயிற்று. பார்வதி தன்தவத்தினாலேயே சிவபெருமானை அடையப் பெற்றார் என்று குமாரசம்பவம் விளக்குகின்றது. சிவபெருமான் உமையை மணந்தருளினார்.

எந்த நெற்றிக் கண்ணிலிருந்து காமனை எரித்த நெருப்புத் தோன்றியதோ, அதே நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றி அறுமுகச் செவ்வேளாகி, பார்வதி பாலனாகி - பூவுலகில் அசுரர்களை மாய்த்து அமரர் இடரும் அவுணர் உயிரும் அழிய அருள் புரிந்ததைக் கந்தபுராணம் விரிவாகக் கூறும்.

காமனை எரித்த இறைவனைக் காமதகன மூர்த்தி என்று போற்றுகிறோம். இதில் சில தத்துவங்கள் பொதிந்துள்ளன. இறைவனும் இறைவியும் பிரிந்திருந்த நிலையில் உலகுயிர்கள் செயலிழந்து கிடந்தன என்னும்போது அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற உண்மை புலப்படும். இறைவி மலைமகளாய் அவதரித்துத் தவம் இயற்றினாள் இறைவனை மணக்க, இறைவனோ தட்சிணாமூர்த்தி ஆக யோக நிலையில் இருந்தார்

ஒரு சிறந்த கணவனை அடையப் பெண்ணும்

ஒரு சிறந்த மனைவியைப் பெற ஆணும் அருந்தவம் இயற்ற வேண்டும்.

தவத்தினாலேயே கணவனுக்குத் தகுந்த மனைவியும் மனைவிக்குத் தகுந்த கணவனும் வாய்க்கும் என்ற தத்துவமும் இதில் வெளிப்படுகின்றது. காமதகனம் நடைபெற்ற பிறகே குமாரசம்பவம் ஏற்பட்டது என்பது காமம் நீங்கித் த்வயோகத்தால் பிள்ளை பெறுவதே சிறப்புடையது என்பதனைப் புலப்படுத்தும்..

்திருச்சிற்றம்பலம்

  • தொடங்கியவர்

இரண்டாவது

இலைமலிந்த சருக்கம்

மானக்கஞ்சாறநாயனார் புராணம்

கஞ்சநகர் மானக்கஞ் சாற னார்சீர்க்

காதன்மகள் வதுவைமணங் காண நாதன்

வஞ்சமலி மாவிரதத் தலைவ னாகி

வந்துபுகுந் தவளளக மகிழ்ந்து நோக்கிப்

பஞ்சவடிக் காமென்ன வரிந்து நீட்டும்

பத்தரெதீர் மறைந்திறைவன் பணித்த வாக்கா

லெஞ்சலில்வண் குழல்பெற்ற பேதை மாதை

யேயர்பிராற் குதவியரு ளெய்தி னாரே.

ஞ்சாறூரிலே, வேளாளர்குலத்திலே, அரசர்களிடத்திற் பரம்பரையாகச் சேனாதிபதிநியோகத்தில் இருக்கின்ற குடியிலே சிவபத்தி அடியார்பத்திகளிற் சிறந்த மானக்கஞ்சாறநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிலகாலம் பிள்ளைப் பேறின்மையால் அதிதுக்கங்கொண்டு, பிள்ளைப் பேற்றின் பொருட்டுப் பரமசிவனை உபாசனைபண்ணி, அவருடைய திருவருளினால் ஒரு பெண்குழந்தையைப் பெற்றார். அந்தப் பெண் வளர்ந்து மணப்பரும் அடைய; ஏயர்கோன் கலிக்காம நாயனார் சில முதியோர்களை மானக்கஞ்சாறநாயனாரிடத்தில் அனுப்பி, அந்தப்பெண்ணைத் தமக்கு விவாகஞ் செய்து தரும்படி பேசுவித்து, அவர் அதற்கு உடன்பட்டமையை அறிந்து, சோதிடர்களாலே நிச்சயிக்கப்பட்ட சுபதினத்திலே மணக்கோலங்கொண்டு, சுற்றத்தார்களோடும் கஞ்சாறூருக்குச் செல்லும்படி பிரஸ்தானமானார்.

அவர் கஞ்சாறூருக்கு வருதற்குமுன்னே, கருணாநிதியாகிய பரமசிவன் ஒரு மகாவிரதி வடிவங்கொண்டு, மானக்கஞ்சாற நாயனார் வீட்டுக்குச் சென்றார். அந்நாயனார் அவரைக்கண்டு எதிர்கொண்டு, உபசாரவார்த்தைகளைச் சொல்லி வணங்கினார். மகாவிரதியார் அந்நாயனாரை நோக்கி, "இங்கே என்னமங்கல கிருத்தியம் நடக்கப்போகின்றது" என்றுவினாவ; நாயனார் "அடியேனுடைய புத்திரியின் விவாகம் நடக்கப்போகின்றது" என்றார். மகாவிரதியார் "உமக்குச் சோபனம் உண்டாகுக" என்று ஆசிர்வதித்தார் நாயனார் உள்ளே போய், மணக்கோலங் கொண்டிருந்த தமது புத்திரியை அழைத்துவந்து மகாவிரதியாரை வணங்கும்படி செய்தார். மகாவிரதியார் தம்மைவணங்கி எழுந்தபெண்ணினுடைய கூந்தலைப் பார்த்து, மானக்கஞ்சாற நாயனாரை நோக்கி, "இந்தப் பெண்ணினுடைய தலைமயிர் நமக்குப் பஞ்சவடிக்கு (பஞ்சவடியாவது மயிரினாலெ அகலமாகச் செய்யப்பட்டு மார்பிலே பூணூலாகத் தரிக்கப்படும் வடமாம். பஞ்சம் -விரிவு வடி-வடம்) உதவும்" என்றார். உடனே நாயனார் தம்முடைய உடைவாளை உருவி, "இவர் இது கேட்டதற்குச் சிறியேன் என்னபுண்ணியஞ் செய்தேனோ" என்று, அந்தப் பெண்ணினுடைய கூந்தலை அடியிலே அரிந்து, அம்மகாவிரதியார் கையிலே நீட்ட; கடவுள் தாங்கொண்டு வந்த மகாவிரதிவடிவத்தை ஒழித்து, ஆகாயத்திலே உமாதேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றினார். அதுகண்டு, மானக்கஞ்சாறநாயனார் பரவசமாகி, அடியற்ற மரம்போல விழுந்து நமஸ்கரித்து எழுந்து, அஞ்சவியஸ்தராகி நின்றார். சிவபெருமான் அம்மானக்கஞ்சாற நாயனாருக்குத் தம்முடைய சந்நிதானத்திலே தம்முடைய பெருங்கருணைத் திறத்தைப் புகழ்ந்து கொண்டிருக்கும் பெரும் பேற்றைக் கொடுத்து அந்தர்த்தான மாயினார்.

shiva-hindu-god.jpg

கலிக்காமநாயனார் கஞ்சாறூரிலே வந்து சேர்ந்து அங்கே நிகழ்ந்த சமாசாரத்தைக் கேள்வியுற்று மனமகிழ்ந்து, திருவருளைத்துதித்து, "முண்டிதஸ்திரியை விவாகம்பண்ணுதல் சாஸ்திர விரோதமன்றோ" என்று மனந்தளர, அதற்குச் சிவபெருமான் "கலிக்காமா! நீ மனந்தளரவேண்டாம்; இந்தப் பெண்ணுக்குக் கூந்தலை மீளக் கொடுத்தருள்கின்றோம்" என்று அருளிச்செய்த திருவாக்கைக் கேட்டு, மனத்தளர்ச்சி நீங்கி, முன்போலக் கூந்தலைப் பெற்ற அப்பெண்ணை விவாகஞ்செய்து கொண்டு, தம்முடைய ஊருக்குப் போய்விட்டார்.

திருச்சிற்றம்பலம்

  • தொடங்கியவர்

shiva.jpg

  • தொடங்கியவர்

namaanak_i.jpg

namaanak.gif

http://www.shaivam.org/namaanak.html- Click this to view the Life History of this Nayanaar in English.

  • தொடங்கியவர்

ஏனாதிநாத நாயனார் புராண சூசனம்

விபூதி மேற் பத்தி மிகுதி

சிவசின்னமாகிய விபூதியை மெய்யன்போடு தரிப்பவர் சிவபதம் அடைவர். அது "கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை - மங்காமற் பூசி மகிழ்வாரே யாமாகிற் - றங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி - சிங்காரமான சிவனடி சேர்விரே" என்னும் திருமந்திரத்தால் உணர்க. இவ்விபூதியிலே மிகுந்த பத்தியுடையோர் இவ்விபூதியைத் தரித்த அடியார்களைக் காணின், அவர்களுக்கும் சிவனுக்கும் பேதம் நோக்காமல் அவர்களை வழிபடுவர். அது "எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி - யுவராதே யுவரரைக் கண்ட போது வுகந்தடிமைத் திறநினைந்திங் குவந்து நோக்கி - யிவர்தேவரிவர் தேவ ரென்று சொல்லி - யிரண் டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக் - கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தால் அறிக.

இவ்விபூதியில் எல்லையின்றி மிகுத்த பத்தியாற் சிறந்தவர் இவ்வேனாதிநாத நாயனார் என்பது, இவர் வாள் வித்தை பயிற்றலினாலே தமக்கு வரும் வளங்கள் எல்லாம் விபூதி இட்ட அடியார்களுக்கே ஆக்கினமையாலும், தமது பகைவன் நீதி இன்றி ஆயுதம் பிடித்துத் தம்மைக் கொல்லப் புகுந்தபோது, தாம் அதனைத் தடுத்து அவனைக் கொல்லுதற்கு வல்லராய் இருந்தும், அவனது நெற்றியில் விபூதியை நோக்கி, அவன் கருத்தே முற்றும்படி நின்று பெருந்தகைமையாலும் தெளியப்படும்.

naeenaat_i.jpg

சிவதருமோத்திரத்திலே "படைபிடித்துத் தங்கையிற் பற்றாரைச் சமரிற் பாழ்படுக்கப் போர் புரியும் பார்ப்பாரைப் பற்றா - ருடலிறுத்தா ரேலவர்க்குப் பிரமகத்திபாவமொன்றுவதன் றெனவுணர்க." எனக் கூறுதலானும், அதிசூரன் விபூதி யிட்டவனாயினும் ஆயுதம் பிடித்துத் தம்மைக் கொல்ல வந்தமையானும், அவனைக் கொல்லுதல் பாவமாகாதே எனின், சத்தியம் நீ சொல்லியது ஆயின், இவர் தமக்கு அவன் தீது செய்யினும் தாம் அவனைக் கொல்லில் தமக்கு மறுமைக்கண் நரகத்துன்பம் வருமென்னும் அச்சத்தால் ஒழித்தவரல்லர்; சிவனடியார் யாதுசெய்யினும் அதுவே தமக்கு இனிமையாம் என்னும் ஆர்வமிகுதியால் ஒழித்தவர் என்க. தன் உயிரை விடுத்தல் பாவம் என்றும் தன்னுயிரைக் காத்தலினும் வேறாகிய புண்ணியம் ஒன்றும் இல்லை என்றும், சிவசாத்திரங்கள் கூறவும், இவர் தமது பகைவன் தம்மைக் கொல்லப் புகுந்த போது அக்கொலையைத் தடுத்துத் தம்முயிரைக் காக்கவல்லராய் இருந்தும், அது செய்யாமை பாவமன்றோ எனின், கருணாநிதியாகிய சிவன் பெறுதற்கரிய இம்மானுட சரீரத்தை எமக்குத் தந்தது தம்மேலே பத்தி செய்து முத்தி பெறுதற் பொருட்டாதலானும், இச்சரீரம் இல்வழி அது கூடாமையானும், அவருக்குத் திருத்தொண்டு செய்தற் பொருட்டு இச்சரீரத்தைக் காத்தல் புண்ணியமும், அதனைச் சிறிதும் நோக்காது கோபம் நோய் முதலிய ஏதுக்களாலே இதனைப் போக்குதல் பாவமும் ஆயின, இந்நாயனார் தமது சரீரத்தை இங்கே பேணாது நின்றமைக்கு ஏது, சிவன்பாலுள்ள பத்தியேயாதலால், அது இத்துணைத்தென்று கூறலாகாத பெரும் புண்ணியமாதல் காண்க; இக்கருத்து நோக்கி அன்றோ, குருலிங்க சங்கமங்களுக்கு இடையூறு வரும் வழிப் பத்தி மிகுதியாலே தன்னுயிர் விடுத்தல் புண்ணியமாம் என்று சிவாகமங்கள் கூறியதூஉமென்க.

முத்திநாதனும் அதிசூரனும் யாண்டுப் புக்கார்கள் எனின், மெய்யடியார்களை வஞ்சித்துக் கொன்ற பெரும் பாதகத்தால் நரகத்தில் வீழ்ந்தார்கள் என்றே கொள்ளப்படும், அவர்கள் சிவவேடம் தரித்தமையால் பயன் இல்லையோ எனின், அரசனிடத்துச் சிறிதும் பத்தியின்றி அவனுக்கு உரிய அடையாளங்களைத் தரித்துப் பிறரை வஞ்சித்து அவருக்குத் தீங்கு செய்தோர், அவ்வடையாளம் தரியாது தீங்கு செய்தோரினும் மிகப்பெருந்தண்டத்தை அவ்வரசனாலே பெற்று வருந்துவர் அன்றோ. அது போலவே, சிவனிடத்துச் சிறிதும் பத்தியின்றி அவருக்கு உரிய சின்னங்களைத் தரித்துப் பிறரை வஞ்சித்து அவருக்குத் தீங்கு செய்தோர், அச்சின்னங்கள் தரியாது தீங்கு செய்தோரினும் மிகப் பெருந்தண்டத்தை அச்சிவனாலே பெற்று வருந்துவர் என்பது தெள்ளிதிற்றுணியப்படும். ஆதலால், பெரும் பாதகர்களாகிய அவ்விருவரும் சிவவேடத்தாற் சிறிதும் பயன் பெறாது மிகக் கொடிய நரகத்தில் வீழ்ந்தார்கள் என்பது சத்தியம். சிவன் விதித்தவழி ஒழுகாதவர்க்கு வேடத்தாற் பயன் இல்லை என்பது, "வேடநெறிநில்லார் வேடம்பூண்டென் பயன் - வேட நெறி நிற் போர் வேட மெய் வேடமே - வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன் - வேட நெறி செய்தால் வீடதுவாகுமே" எ-ம். "தவமிக்கவரே தலையான வேட - ரவமிக் கவரே யதிகொலை வேட - ரவமிக் கவர்வேடத் தகாதவர்வேடந் - தவமிக் கவர்க்கன்றித் தாங்க வொண்ணாதே" எ-ம். திருமந்திரத்திற் கூறுமாற்றாற் காண்க. எங்ஙனமாயினும், அவர்கள் சிவவேடம் தரித்தவர்கள் அன்றோ; அது நோக்காது நீர் அவர்களைப் பாதகர்கள் என்று இகழ்ந்தது என்னை எனின், "மாதவ வேடங் கொண்ட வன்கணான்" என்றும் "முன்னின்ற பாதகனுந் தன்கருத்தே முற்றுவித்தான்" என்றும் ஆசிரியர் சேக்கிழார் நாயனார் இகழ்ந்தமையின், யாமும் இகழ்ந்தோம் என்க. அவர் இகழ்ந்தமை குற்றமாகாதோ எனின், ஆகாது. மெய்ப்பொருணாயனாரும் ஏனாதிநாத நாயனாரும் பிறிதொன்றும் நோக்காது இவர் சிவனடியார் என்பது நோக்கி அவர்கள் கருத்தின் வழி நின்றமைக்குச் சிவபத்தியே ஏதுவாயினமை போல, சேக்கிழார் நாயனார் அப்பாதகர்கள் இம்மெய்யடியார்களை வஞ்சித்துக் கொன்றார்களே என்பது நோக்கி இகழ்ந்தமைக்கும் சிவபத்தியே ஏதுவாயினமையால் என்க.

திருச்சிற்றம்பலம்

god1.jpg

  • தொடங்கியவர்

madei.jpg

திருச்சதகம்

(திருப்பெருந்துறையில் அருளியது)

இந்தப் பாட்டைக் கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

http://www.megaupload.com/?d=UZ0QGY55

1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை)

மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்

கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்

பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்

கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே. 5

கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும்

நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்

எள்ளேன் திருஅருளாலே இருக்கப் பெறின் இறைவா

உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே. 6

உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி

மத்த மனத்தொடு மால் இவன் என்ன மனம் நினைவில்

ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும்

தம் தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே. 7

சாவ முன் நாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி

ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர் அவரே

மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண்மேல்

தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரதவரே. 8

தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்டாது இறைஞ்சேன்

அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ளாம்

சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம்

பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்பரம்பரனே. 9

பரந்து பல் ஆய்மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி

இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம்

கரந்து நில்லாக் கள்வனே நின்தன் வார்சுழற்கு அன்பு எனக்கும்

நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே. 10

முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடிசாய்ந்து முன்னாள்

செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான்

கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய்

உழுவையின் தோல் உடுத்து உன் மத்தம் மேல் கொண்டு உழிதருமே. 11

உழிதரு காலுங் கனலும் புனலொடு மண்ணுவிண்ணும்

இழிதரு காலமெக் காலம் வருவது வந்ததற்பின்

உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினையக்

கழிதரு காலமு மாயவை காத்தெம்மைக் காப்பேவனே. 12

பவனெம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோர்பெருமான்

சிவனெம் பிரான்என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமைகண்டும்

அவனெம் பிரானென்ன நானடி யேனென்ன இப்பரிசே

புவனெம் பிரான்தெரி யும்பரிசாவ தியம்புகவே. 13

புகவே தகேன்உனக் கன்பருள் யானென்பொல் லாமணியே

தகவே யெனையுனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை

மிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண் ணாவமுதே

நகவே தகும்எம் பிரானென்னை நீசெய்த நாடகமே. 14

2. அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா)

நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே

வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்

ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என்

ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. 15

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என கடவேன்

வான் ஏயும் பெறல் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன்

தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான்எம்

மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே. 16

வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாய்அடியேன்

இருந்து நலம் மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏறப்

பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல்

வருந்துவன் அத்தமியேன் மற்று என்னேநான் ஆமாறே. 17

ஆம்ஆறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்பு உருகேன்

பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்க்

கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன்

சாம் ஆறே விரைக்கின்றேன் சதுராலே சார்வோனே. 18

வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. 19

வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால்

தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டிக்

சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன்

பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே. 20

பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்

குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம்

விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன்

அரவுவார் கழல் இணைகள் காண்பாரோ அரியானே. 21

அரியானே யாவரக்கும் அம்பரவா அம்பலத்து எம்

பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ்

விரைஆர்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்துஉருகேன்

தரியேன் நான் ஆம்ஆறுஎன் சாவேன் நான் சாவேனே. 22

வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெள் நகை செவ்வாய்க்கரிய

பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே

ஊன் எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான் இன்றுபோய்

வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே. 23

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு

ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே

சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும்

வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே. 24

3. சுட்டறுத்தல் (எண் சீர் ஆசிரிய விருத்தம்)

வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்

பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய்

பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆகப்

பதைத்து உருகும் அவ நிற்க என்னை ஆண்டாய்க்கு

உள்ளம்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்

உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா

வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம்

கண் இணையும் மரம் ஆம் தீ வினையினேற்கே. 25

வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று

போதுநான் வினைக் கேடன் என்பாய் போல

இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை

ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை

அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ

அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்

முனைவனே முறையோ நான் ஆனவாறு

முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே? 26

ஆயநான் மறையனும் நீயே ஆதல்

அறிந்து யான் யாவரினும் கடையேன் ஆய

நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்

நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்

ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய்

அடியார் தாம் இல்லையே அன்றி மற்று ஓர்

பேயனேன் இதுதான் நின்பெருமை அன்றே

எம்பெருமான் என் சொல்லிப் பேசுகேனே. 27

பேசின் தாம் ஈசனே எந்தாய் எந்தை

பெருமானே என்று என்றே பேசிப் பேசிப்

பூசின்தான் திருமேனி நிறைப் பூசி

போற்றி எம்பெருமானே என்று பின்றா

நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார் தம்மை

ஆண்டானே அவா வெள்ளம் கள்வனேனை

மாசு அற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ

என்னை நீ ஆட்கொண்ட வண்ணம் தானே. 28

வண்ணம்தான் சேயது அன்று வெளிதே அன்று

அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு

எண்ணம்தான் தடுமாறி இமையோர் கூட்டம்

எய்துமாறு அறியாத எந்தாய் உன் தன்

வண்ணம்தான் அது காட்டி வடிவு காட்டி

மலர்க்கிழல்கள் அவைகாட்டி வழி அற்றேனைத்

திண்ணம்தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்

எம்பெருமான் என் சொல்லிச் சிந்துக்கேனே. 29

சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன்

கண் இனை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி

வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்

மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர

வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்து விச்சை

மால் அமுதப் பெரும் கடலே மலையே உன்னைத்

தந்தனை செந் தாமரைக்காடு அனைய மேனித்

தனிச்சுடரே இரண்டுமிலி இத்தனிய னேற்கே. 30

தனியேனன் பெரும் பிறவிப் பௌவத்து எவ்வம்

தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக்

கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்

கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு

இனி என்னே உய்யும் ஆற என்று என்று எண்ணி

அஞ்சு எழுத்தின் பணை பிடித்துக் கிடக்கின்றேனை

முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற்

கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே. 31

கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான்

கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான்

நாட்டார்கன் விழித்திருப்ப ஞாலத்து உள்ளே

நாயினுக்கு தவிசு இட்டு நாயினேற்கே

காட்டாதன எல்லாம் காட்டிப் பின்னும்

கேளாதான எல்லாம் கேட்பித்து என்னை

மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான்

எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே. 32

விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின்

மிகுகாதல் அடியார்தம் அடியன் ஆக்கி

அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி

அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர

அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி

ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற

செச்சை மலர் புரையும் மேனி எங்கள்

சிவபெருமான் எம்பெருமான் தேவா கோவே. 33

தேவர்க்கோ அறியாத தேவ தேவன்

செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை

மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி

மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை

யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டு கொண்டான்

யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம்

மேவினோம் அவன் அடியார் அடியரோடும்

மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே. 34

4. ஆத்ம சுத்தி (அறுசீர் ஆசிரிய விருத்தம்)

ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்புஉருகிப்

பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர்

சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை இலி பிண நெஞ்சே

தேடிகின்றிலை தெருவுதோறு அலறிலை செய்வதொன்று அறியேனே? 35

அறிவு இலாத எனைப்புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை அருளிமேல்

நெறிஎலாம் புலம் ஆக்கிய எந்தையைப் பந்தனை அறுப் பானைப்

பிறிவு இலாத இன் அருள் கண் பெற்றிருந்தும் மாறி ஆடுதி பிண நெஞ்சே

கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னைக் கெடுமாறே. 36

மாறிநின்று எனைக் கெடக் கிடந்தனையை எம் மிதி இலிமட நெஞ்சே

தேறுகின்றிலம் இனி உனைச் சிக்கனெக் சிவன் அவன் திரங் கோள் மேல்

நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இக்காயம்

கீறு நின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே. 37

கிற்றவா மனமே கெடுவாய் உடையான் அடி நாயேனை

விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரைமலர் திருப் பாதம்

முற்று இலா இளந்தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம்

அற்றவாறும் நின் அறிவும் நின்பெருமையும் அளவு அறுக் கில்லேனே. 38

அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு

அடியவர்க்கு எளியான் நம்

களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள்

கசிந்து உணர்ந்து இருந்தேயும்

உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன்

செய்ததும் இலை நெஞ்சே

பளகு அறுத்து அடையான் கழல் பணிந்திலை

பரகதி புகுவானே. 39

புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற்

குகுவ தாவதும் எந்தையெம் பிரானென்னை யாண்டவன் சுழற்கன்பு

நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டி

மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற் கென்செய்கேன் வினையேனே. 40

வினையென் போலுடை யார்பிற ராருடை யானடி நாயேனைத்

திசையின் பாகமும் பிரிவது திருக்குறிப் பன்றுமற் றதணாலே

முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்தும்நான்முட்டிலேன் தலைகீறேன்

இனையன் பாவனை யிரும்புகல் மனஞ்செவி யின்னதென் றறியேனே. 41

ஏனை யாவரும் எய்திட லுற்றமற் றின்ன தென் றறியாத

தேனை ஆன்நெயைக் கரும்பின் இன் தேறலைச் சிவனையென் சிவலோகக்

கோனை மான்அன நோக்கிதன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம்

ஊனை யானிருந் தோம்புகின் றேன்கெடு வேனுயி ரோயாதே. 42

ஓய்வி லாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள்தந்து

நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறிகாட்டித்

தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன்

தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே. 43

வேனில் வேள்கணை கிழித்திட மதிகெடும் அதுதனை நினையாதே

மான்நி லாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித்

தேன்நி லாவிய திருவருள் புரிந்தவென் சிவனகர் புகப்போகேன்

ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டினும் உண்டுடுத் திருந்தேனே. 44

5. கைம்மாறு கொடுத்தல் (கலிவிருத்தம்)

இருகை யானையை ஒத்திருந் தென்னுளக்

கருவை யான்கண்டி லேன் கண்ட தெவ்வமே

வருக வென்று பணித்தனை வானுளோர்க்கு

ஒருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே. 45

உண்டோ ர் ஒண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம்

பெண்டிர் ஆண்அலி யென்றறி யொண்கிலை

தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய்

கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே. 46

மேலை வானவ ரும்மறி யாததோர்

கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே

ஞால மேவிசும் பேயிவை வந்துபோம்

கால மேயுளை யென்றுகொல் காண்பதே. 47

காண லாம்பர மேகட் கிறந்ததோர்

வாணி லாப் பொரு ளேயிங்கொர் பார்ப்பெனப்

பாண ளேன்படிற் றாக்கையை விட்டுனைப்

பூணு மாற்றி யேன் புலன் போற்றியே. 48

போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்தும்நின்று

ஆற்றன் மிக்கஅன் பாலழைக் கின்றிலேன்

ஏற்று வந்தெதிர் தாமரைத் தாளுறுங்

கூற்ற மன்னதொர் கொள்கையென் கொள்கையே. 49

கொள்ளுங் கில்லெனை யன்பரிற் கூய்ப்பணி

கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்

நள்ளுங் கீழளும் மேலுளும் யாவுளும்

எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே. 50

எந்தை யாயெம் பிரான்மற்றும் யாவர்க்குந்

தந்தை தாய்தம் பிரான்தனக் கஃதிலான்

முந்தி யென்னுள் புகுந்தனன் யாவருஞ்

சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே. 51

செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப்

புல்வரம் பின்றி யார்க்கும் அரும்பொருள்

எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன்

கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே. 52

கட்டறுத்தெனை யாண்டுகண் ணாரநீறு

இட்ட அன்பரொ டியாவருங் காணவே

பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை

எட்டி னோடிரண் டும் அறி யேனையே. 53

அறிவ னேயமு தேஅடி நாயினேன்

அறிவ னாகக் கொண்டோ எனை ஆண்டது

அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள்

அறிவ னோவல்ல னோஅரு ளீசனே. 54

6. அநுபோகசுத்தி (அறுசீர் ஆசிரிய விருத்தம்)

ஈசனேயென் எம்மானே யெந்தை பெருமான் என்பிறவி

நாசனே நான் யாதுமென் றல்லாப் பொல்லா நாயான

நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே

தேசனேஅம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே. 55

செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப்

பொய்யார் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யிலா

மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டுங் கேட்டிருந்தும்

பொய்ய னேன்நான் உண்டுடுத்திங் கிருப்ப தானேன் போரேறே. 56

போரேறேநின் பொன்னகர்வாய் நீபோந்தருளி இருள்நீக்கி

வாரே றிளமென் முலையாளே டுடன்வந் தருள அருள்பெற்ற

சீரே றடியார் நின்பாதஞ் சேரக் கண்டுங் கண்கெட்ட

ஊரே றாயிங் குழல்வேணே கொடியான் உயிர்தான் உளவாதே. 57

உலவாக் காலந் தவமெய்தி உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான்

பலமா முனிவர் நனிவாடப் பாவி யேனைப் பணிக்கொண்டாய்

மலமாக் குரம்பை யிதுமாய்க்க மாட்டேன் மணியே உனைக்காண்பான்

அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண்டெழுகேன் எம்மானே. 58

மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட

தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக்

கோனே உன்தன் திருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட

ஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே. 59

உடையா னேநின்றனையுள்கி உள்ளம் உருகும் பெருங்காதல்

உடையா ருடையாய் நின்பாதஞ் சேரக் கண்டிங் கூர்நாயிற்

கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனந்தேன் கசியாதேன்

முடையா புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தாக் முடித்தாயே. 60

முடித்த வாறும் என்றைக்கே தக்க தேமுன் னடியாரைப்

பிடித்த வாறுஞ் சோராமற் சோர னேனிங் கொருத்திவாய்

துடித்த வாறுங் துகிலிறையே சோர்ந்த வாறும் முகங்குறுவேர்

பொடித்த வாறு மிவையுணர்ந்து கேடென்றனக்கே சூழ்ந்தேனே. 61

தேனைப் பாலைக் கன்னலின் தெளியை ஒளியைத் தெளிந்தார்தம்

ஊனை உருக்கும் உடையானை உம்ப ரானை வம்பனேன்

தானின் னடியேன் நீயென்னை ஆண்டா யென்றால் அடியேற்குத்

தானுஞ் சிரித்தே யருளலாந் தன்மை யாமென் தன்மையே. 62

தன்மை பிறரா லறியாத தலைவா பொல்லா நாயன

புன்மை யேனை ஆண்டையா புறமே போக விடுவாயோ

என்மை நோக்கு வார்யாரே என்நான் செய்கேன் எம்பெருமான்

பொன்னே திகழுந் திருமேனி எந்தா யெங்குப் புகுவேனே. 63

புகுவே னெனதே நின்பாதம் போற்றும் அடியா ருள்நின்று

நகுவேன் பண்டு தோணோக்கி நாண மில்லா நாயினேன்

நெடுமன் பில்லை நினைக்காண நீயாண்டருள் அடியேனுந்

தகுவ னேயென் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே. 64

7. காருணியத்து இரங்கல் (அறுசீர் ஆசிரிய விருத்தம்)

தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான

விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில்

ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை

நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி. 65

போற்றியோ நமச்சி வாய புயங்களே மயங்கு கின்றேன்

போற்றியோ நமச்சி சாய புகலிடம் பிறிதொன் றில்லை

போற்றியோ நமச்சி வாய புறமெனப் போக்கில் கண்டாய்

போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி. 66

போற்றியென் போலும் பொய்யர் தம்மைஆட் கொள்ளும் வள்ளல்

போற்றிநின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி

போற்றி நின் கருணை வெள்ளம் புதுமதுப் புவனம் நீர்தீக்

காற்றிய மானன் வானம் இருசுடர்க் கடவுளானே. 67

கடவுளே போற்றி யென்னைக் கண்டுகொண் டருளு போற்றி

விடவுளே உருக்கி யென்னை ஆண்டிட வேண்டும் போற்றி

உடலிது களைந்திட் டொல்லை உம்பர்தந் தருளு போற்றி

சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி. 68

சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப்

பொங்கரா அல்குற் செவ்வாய் வெண்ணைக் கரிய வாட்கண்

மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி போற்றி

இங்கிவ்வாழ் வாற்ற கில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே. 69

இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி

பழித்தனன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி

பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி

ஒழித்திடில் வாழ்வு போற்றி உம்பர்நாட டெம்பி ரானே. 70

எம்பிரான் போற்றி வானத் தவரவர் ஏறு போற்றி

கொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண் ணீற போற்றி

செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி

உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி. 71

ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர்

குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி

வருவவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி

தருகநின் பாதம் போற்றி தமியனேன் தீர்த்தே. 72

தீர்ந்தஅன் பாய அன்பர்க் கவரினும் அன்ப போற்றி

பேர்ந்துமென் பொய்மை யாட்கொண்டருளும் பெருமை போற்றி

வார்ந்தநஞ் சயின்று வானோர்க் கமுதமா வள்ளல் போற்றி

ஆர்ந்தநின் பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி. 73

போற்றிப் புவனம் நீர்தீர் காலொடு வான மானாய்

போற்றியெவ் வுயிர்க்குந் தோற்றம் ஆகிநீ தோற்ற மில்லாய்

போற்றியெல் லாவுயிரக்கும் ஈறாயீ றின்மை யானாய்

போற்றியைம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே. 74

8. ஆனந்தத்து அழுத்தல் (எழுசீர் ஆசிரிய விருத்தம்)

புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய்

புணர்ப்பது அன்று இது என்றபோது நின்னொடு என்னொடு என்இது ஆம்

புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின்கழல் கணே

புணர்ப்பது அது ஆக அம் கனாள் புங்கம் ஆன போகமே. 75

போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தரஆதி இன்பமும்

ஏகநின் கழல் இணை அலாது இலேன் எம்பிரான்

ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக் கணே

ஆக என் கை கண்கள் தாரை ஆறு அது ஆக ஐயனே. 76

ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன்

பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என்பிரான்

மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல் கணே

மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே. 77

வேண்டும் நின் கழல் கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்மையே

ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ

பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும் என்றும்

மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின் வணங்கவே. 78

வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு

உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின்

வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு

இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே. 79

நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஆய வாக்கினால்

தினைத் தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே

அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா

எனைத்து எனைத்து அது எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே. 80

எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இவ்வஞ்சனேற்கு

உய்தல் ஆவது உன் கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில்

பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு

ஈது அல்லாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே. 81

ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும்

பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான்

நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஓர் நின் அலால்

தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே. 82

சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீர் இல் ஐம்புலன்களால்

முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்

வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன்

எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே. 83

இருப்பு நெஞ்சம் வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்னதாள்

கருப்புமட்டு வாய் மடுத்து எனைக் கலந்து போகவும்

நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும்

விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே. 84

9. ஆனந்த பரவரசம் (கலிநிலைத்துறை)

விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு இனை வைத்தாய்

இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார்

அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர் எம்

மிச்சைத் தேவா என் நான் செய்தேன் பேசாயே. 85

பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே

பூசப்பட்டேன் பூதரால் உன் அடியான் என்று

ஏசப்பட்டேன் இனிப்படுகின்றது அமையாதால்

ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே. 86

அடியேன் அல்லேன் கொல்லோ தானெனை ஆட்கொண்டு இலை கொல்லோ

அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார்

செடிசேர் உடலம் இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா

கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே. 87

காணுமாறு காணேன் உன்னை அந்நாள் கண்டேனும்

பாணே பேசி என் தன்னைப் படுத்தது என்ன பரஞ்சோதி

ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன்

ஏண் நாண் இல்லா நாயினேன் என்கொண்டு எழுகேன் எம்மானே. 88

மான் நேர் நோக்கி உமையாள் பங்கா மறை ஈறு அறியா மறையானே

தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும்

கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மாநகர் குறுகப்

போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே. 89

புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு

பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான்

அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார்

சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தான் சேர்ந்தாரே. 90

தாராய் உடையாய் அடியேற்கு உன்தான் இணை அன்பு

போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான்

ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆமிலைத்து இங்கு உன்தான் இணை அன்புக்கு

ஆராய் அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே. 91

அழுகேன் நின்பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த

மெழுகே அன்னார் மின்ஆர் பொன் ஆர் கழல் கண்டு

தொழுதே உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே

பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னைப் பணிகேனே. 92

பணிவார் பிணி தீர்ந்து அருளிப் பழைய அடியார்க்கு உன்

அணி ஆர் பாதம் கொடுக்கி அதுவும் அரிது என்றால்

திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித்

தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய்தீர் மெய்யானே. 93

யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்

ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே

தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்

மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே. 94

10. ஆனந்த அதீதம் (எண்சீர் ஆசிரிய விருத்தம்)

மாறு இலாத மாக் கருணை வெள்ளமே

வந்து முந்தி நின்மலர் கொள்தாள் இணை

வேறு இலாப் பதம் பரிசு பெற்ற நின்

மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்

ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து

ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும்

கீறு இலாத நெஞ்சு உடையேன் ஆயினன்

கடையன் நாயினன் பட்ட கீழ்மையே. 95

மை இலங்கு நல் கண்ணிப் பங்கனே

வந்து என்னைப் பணிகொண்ட பின்மழக்

கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால்

அரியை என்று உனைக் கருது கின்றேன்

மெய் இலங்கு வெண் நீற்று மேனியாய்

மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்

பொய் இலங்கு எனைப் புகுதவிட்டு நீ

போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே. 96

பொருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன்

போதஎன்றுஎனைப் புரிந்து நோக்கவும்

வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன்

மாண்டிலேன் மலர்க் கமல பாதனே

அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும்

நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை

இருத்தினாய் முறையோ என் எம்பிரான்

வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே. 97

இல்லை நின் கழற்கு அன்பு அது என் கணே

ஏலம் ஏலும் நல் குழலி பங்கனே

கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு

என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்

எல்லை இல்லை நின் கருணை எம்பிரான்

ஏதுகொண்டு நான் ஏது செய்யினும்

வல்லையே எனக்கு இன்னும் உன் கழல்

காட்டி மீட்கவும் மறு இல் வானனே. 98

வான நாடரும் அறி ஒணாத நீ

மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ

ஏனை நாடரும் தெரி ஒணாத நீ

என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா

ஊனை நாடகம் ஆடு வித்தவா

உருகி நான் உனைப் பருக வைத்தவா

ஞான நாடகம் ஆடு வித்தவா

நைய வையகத்து உடைய விச்சையே. 99

விச்சு அது இன்றியே விளைவமு செய்குவாய்

விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்

வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும்

புலையனேனை உன்கோயில் வாயிலிற்

பிச்சன்ஆக்கினாய் பெரிய அன்பருக்கு

உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர்

நச்சு மாமரம் ஆயினும் கொலார்

நானும் அங்கனே உடைய நாதனே. 100

உடைய நாதனே போற்றி நின் அலால்

பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி

உடையனே பணி போற்றி உம்பரார்

தம் பராபரா போற்றி யாரினும்

கடையன் ஆயினேன் போற்றி என் பெரும்

கருணையாளனே போற்றி என்னை நின்

அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும்

அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே. 101

அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே

அகம்நெக அள் ஊறு தேன்

ஒப்பனே உனக்கு அரிய அன்பரில்

உரியனாய் உனைப் பருக நின்றது ஓர்

துப்பனே சுடர் முடியனே துணை

யாளனே தொழும்பாளர் எய்ப்பனில்

வைப்பனே எனை வைப்பதோ சொலாய்

நைய வையகத்து எங்கள் மன்னனே. 102

மன்ன எம்பிரான் வருக என் எனை

மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும்

முன்ன எம்பிரான் வருக என் எனை

முழுதும் யாவையும் இறுதி உற்ற நான்

பின்ன எம்பிரான் வருக என் எனைப்

பெய் கழற் கண் அன்பாய் என் நாவினால்

பன்ன எம்பிரான் வருக என் எனைப்

பாவ நாச நின் சீர்கள் பாடவே. 103

பாடவேன்டும் நான் போற்றி நின்னையே

பாடிநைந்துறைந்துறுகி நெக்குநெக்கு

ஆடவேன்டும் நான் போற்றி அம்பலத்

தாடுநின்கழற்போது நாயினேன்

கூடவேண்டும் நான்போற்றி யிப்புழுக்

கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம்

வீடவேண்டும் நான் போற்றி வீடுதந்

தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே. 104

திருச்சிற்றம்பலம்

http://www.tamilnation.org/sathyam/east/th.../tvasagam05.htm

இந்தப் பாட்டைக் கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

http://www.megaupload.com/?d=UZ0QGY55

  • தொடங்கியவர்

கண்ணப்ப நாயனார் புராண சூசனம்

அன்புடைமை

எமக்கு இனியரென்று எம்மாலே தெளியப்பட்டவர் யாவரோ அவரிடத்தே எமக்கு விருப்பம் நிகழும். எமக்கு யாவரிடத்து விருப்பம் நிகழுமோ அவரிடத்தே எமக்கு அன்பு நிகழும். அன்பாவது தன்னால் விரும்பப்படவரிடத்தே தோன்றும் உள்ள நிகழ்ச்சி. ஆதலால், நாம் நமக்கு இனியவர் யாவரென்று ஆராய்ந்து, நிச்சயிப்பேம். தந்தை தாய் மனைவி மைந்தர் முதலிய உறவினரே எமக்கு இனியரெனக் கொள்வமெனின், இவருக்கும் எமக்கும் உளதாகிய தொடர்ச்சி நீர்க்குமிழிபோல நிலைமில்லாததாகிய இவ்வுடம்பினால் ஆயதாதலானும்; இவ்வுடம்பு ஒழியவே இதனாலாகிய தொடர்ச்சியும் ஒழிதவானும்; உடம்பினாலே தொடர்ச்சி உள்ளபோதும், நாம் தீவினைப் பயனை அனுபவிக்கும்வழி இவ்வுறவினரே பகைவராகவும், நல்வினைப் பயனை அனுபவிக்கும் வழி இவரல்லாத பகைவரும் உறவராகவும், காண்டலானும்; இவர் உறவராய் நின்றவழியும், எமக்கு இதம் செய்தல் தம் பயன் கருதியன்றி எம் பயன் கருதியன்மையானும், இவர் எமக்கு இனியரென்று கொள்ளுதல் ஒருவாற்றானும் கூடாது. நாமோ நம்மை ஒருகாலும் பகைத்தலின்மையானும், எந்நாளும் துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தை அனுபவித்தல் வேண்டுமென்னும் கருத்தே நமக்கு உண்மையானும், நமக்கு நாமே இனியமெனக் கொள்வமெனின், கேவலாவத்தையிலே ஆணவமல மறைப்பினாலே அறிவும் தொழிலும் சிறிதும் விளங்காமையானும், சகலாவத்தையிலே அறிவும் தொழிலும் உள்வழியும், அவை சிற்றறிவும் சிறுதொழிலுமன்றி முற்றறிவும் முற்றுத்தொழிலும் அன்மையானும், அதனால் எமக்கு இது துன்பம் இது துன்பத்தினின்றும் நீங்கி இன்பம் பெறும் நெறி இது என உள்ளபடி அறிந்து துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தைப் பெறுதல் கூடாமையானும், எமக்கு நாமே இனியமெனக் கொள்ளுதலும் கூடாது. முற்றறிவு முற்றுத் தொழில் உடையராகி, தம் பயன் குறியாது மலபெத்தராகிய ஆன்மாக்கள் மேல் வைத்த பெருங்கருணையினாலே, அவர்களுக்குத் தனுகரணங்களைக் கொடுத்து, ஆணவமல சத்தியைச் சிறிது நீக்கி, அறிவை விளக்கிப் போகங்களைப் புசிப்பித்து, மலபரிபாகமும் இருவினையொப்பும் சத்திநிபாதமும் வருவித்து, பாச நீக்கமும் சிவத்துவவிளக்கமும் செய்யும் பரமபதி ஒருவர் உண்மையானும், அவர் சிவனே ஆதலானும், அவரே எமக்கு இனியரெனக் கொள்ளல் வேண்டும். இக்கருத்தனைத்தும் நோக்கி அன்றோ, "என்னில் பிரரு மெனக்கினி யாரிலை - யென்னி லும்மினி யானொரு வன்னுள - னென்னுளே யுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக் - கென்னு ளெநிற்கு மின்னம்ப ரீசனே" என்று திருவாய் மலர்ந்தருளினார் திருநாவுக்கரசுநாயனார் என்க. ஆதலால், அச்சிவனையே நாமெல்லாம் விரும்பி, அவரிடத்து இடையறாத மெய்யன்பு செய்தல் வேண்டும். அன்பு பத்தி என்பன ஒரு பொருட் சொற்கள்.

அன்பானது, குடத்துள் விளக்கும் உறையுள் வாளும் போல, ஒருவர் காட்டக் காணற்பாலதன்று; அவ்வன்புடைமையால் வெளிப்படும். செயல்களைக் கண்டவழி, இவை உண்மையால், இங்கே அன்பு உண்டென்று அநுமிதித்துக் கொள்ளற்பாலதாம். அது "அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர் - புன்கணீர் பூச றரும்" என்னும் திருக்குறளானும், "சுரந்த திருமுலைக்கே துய்யதிருஞானஞ் - சுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் - சுரந்த தனமுடையா டென்பாண்டி மாதேவி தாழ்ந்த - மனமுடையா ளன்பிருந்த வாறு" என்னும் திருக்களிற்றுப்படியாரானும் உணர்க. சிவனிடத்து அன்புடைமைக்கு அடையாளம் அச்சிவனுடைய உண்மையை நினைத்தல் கேட்டல் காண்டல் செய்த பொழுதே தன்வசம் அழிதலும், மயிர்க்கால்தோறும் திவலை உண்டாகப் புளகம் கொள்ளலும், ஆனந்த அருவி பொழிதலும், விம்மலும், நாத்தழுதழுத்தலும், உரை தடுமாறலும், ஆடலும், பாடலும், அவர் உவப்பன செய்தலும், வெறுப்பன ஒழிதலும் பிறவுமாம்.

இவ்வன்பு இல்வழிச் சிவனை அடைதல் ஒருவாற்றானும் கூடாது. அது "உள்ள முள்கலந் தேத்தவல்லார்க்கலாற் - கள்ள முள்ளவ ருக்கருள் வானலன் - வெள்ள மும்மர வும்விர வுஞ்சடை - வள்ள ல甶கிய வான்மியூ ரீசனே." "நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே - புக்கு நிற்கும் பொன் னார் சடைப் புண்ணியன் - பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு - நக்கு நிற்ப னவர் தம்மை நாணியே" என வரும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தானும், "தேவ தேவன்மெய்ச் சேவகன் றென்பே ருந்துறை நாயகன் - மூவ ராலு மறியொ ணாமுதலாய வானந்த மூர்த்தியான் - யாவ ராயினு மன்ப ரன்றி யறியொ ணாமலர்ச் சோதியான் - றூய மாமலர்ச் சேவடிக்கணஞ் சென்னி மன்னிச் சுடருமே" என்னும் திருவாசகத்தானும், "என்பே விறகா விறைச்சி யறுத்திட்டுப் - பொன்போ லெரியிற் பொரிய வறுப்பினு - மன்போ டுருகி யகங்குழைந் தார்க்கன்றி - யென்போன் மணியினை யெய்தவொண் ணாதே" என்னும் திருமந்திரத்தானும், "அன்பேயென் னன்பேயென் றன்பாவழைத் தழைத்திட் - டன்பேயன் பாக வறிவழியு - மன்பன்றித் தீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமது - சாத்தும் பழமன்றே தான்" என்னும் திருக்களிற்றுப்படியாரானும், "கருமமா தவஞ்செ பஞ்சொல் காசறு சமாதி ஞானம் - புரிபவர் வசம தாகிப் பொருந்திடேம் புரை யொன்றின்றித் - திரிவறு மன்பு செய்வோர் வசமதாய்ச் சேர்ந்து நிற்போ - முரைசெய்வோ மலர்மு னெய்தி யவருளத் துறைவோ மென்றும்." என்னும் வாயுசங்கிதையானும் அறிக. இவ்வன்பு பல பிறப்புக்களிலே பயன் குறியாது செய்த புண்ணிய மிகுதியினாலே சிவன் அருளிச் செய்ய வரும். சிவன் அருளின்றி இவ்வன்பு ஒருவாற்றானும் நிகழாது. அது "ஆங்கவ னருளாற் பத்திநன் குண்டாம் பத்தியா லவனரு ளுண்டாம் - வீங்கிய பத்தி பற்பல பிறப்பில் வேதங்க ளுரைத்திடும் படியே - தீங்கறு கருமமியற்றிய பலத்தாற் சிவனருள் செய்திட வருமா - லோங்கிய பத்தியாற்சிவ தரும மொழிவறப் புரிந்திடப் படுமால்." எ-ம். "அற்றுமன் றறியச் சுருங்கயா னுரைப்ப னாயிழை பாகன்வார் கழலிற் - றெற்றன வறிவாற் பத்திமை யெய்தல் வேண்டுமாற் சிறந்தபத் திமையான் - மற்றிணையில்லா முத்தியெய் திடுமான் மாசிலா தாயபத் திமையு - முற்றிழைபாக னருளினா லெய்தல் வேண்டுமான் மொழிந்திடுங்காலே" எ-ம். வாயுசங்கிதையிற் கூறுமாற்றால் உணர்க.

இடையறாது முறுகி வளரும் அன்பின் முதிர்ச்சியிலே சிவம் விளங்கும். ஆதலால் அன்பும் சிவமும் இரண்டற அபேதமாய் நிற்கும். அன்பு முதிர்ச்சியிலே சிவம் விளங்கும் என்பதற்குப் பிரமாணம், திருவாசகம்; "பத்தி வலையிற் படுவோன் காண்க." எ-ம். "அம்மையே யப்பா வொப்பிலா மணியே யன்பினில் விளைந்தவா ரமுதே - பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் றனக்குச் - செம்மையே யாய சிவபதமளித்த செல்வமே சிவபெருமானே - யிம்மையே முன்னைச் சிக்கெனப் பிடித்தே னெங்கெழுந் தருளுவ தினியே" எ-ம்; திருக்களிற்றுப்படியார். "ஆரேனு மன்பு செயி னங்கே த்லைப்படுங்கா - ணாரேனுங் காணா வரன்." எ-ம். வரும். அன்பும் சிவமும் அபேதமாம் என்பதற்குப் பிரமாணம், திருமந்திரம்; "அன்பு சிவமிரண் டென்பரறிவிலா - ரன்பே சிவமாவ தாரு மறிகில - ரன்பே 瑊ிவமாவ தாரு மறிந்தபி - னன்பே சிவமா யமர்ந்திருப்பாரே." எ-ம். திருவாசகம்; "மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே - யூறிநின் றென்னு ளெழுபரஞ் சோதி யுள்ளவா காணவந் - தருளாய் - தேறலின் றெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே - யீறிலாப் பதங்களி யாவையுங் கடந்த வின்பமே யென்னுடை யன்பே." எ-ம் வரும்.

இத்துணைப் பெருஞ்சிறப்பினதாகிய இவ்வன்புடைமையிலே தமக்கு உயர்வொப்பின்றி விளங்கிய பெருந்தகைமையினர் இக்கண்ணப்ப நாயனார், இவர் வேதாகமங்களைக் கற்றல் கேட்டல் சிறிதும் இல்லா வேட்டுவச் சாதியிற் பிறந்தும், சிவனிடத்து மெய்யன்புடையராயினதற்குக் காரணம் என்னை எனின், முற்பிறப்பிலே வேதாகமங்களை ஓதி உணர்ந்து, சிவனைத் தமது மனம் வாக்குக் காயங்களினாலே சிரத்தையுடன் உபாசித்தமையேயாம். இவர் முற்பிறப்பிற் செய்த தவமே இப்பிறப்பில் எல்லையின்றி முறுகி வளர்ந்த இவ்வன்புக்குக் காரணமாயிற்றென்பது இங்கே "முன்பு செய் தவத்தினீட்ட முடிவிலா வின்பமான - வன்பினை யெடுத்துக்காட்ட" என்பதனால் உணர்த்தப்பட்டது. இவர் முற்பிறப்பிலே பஞ்சபாண்டவருள் ஒருவராகிய அருச்சுனர் என்றுணர்க.

Shiva%20and%20Arjuna.jpg

பாசுபதாஸ்திரம் பெறவேண்டிப் பெருந்தவஞ் செய்த அருச்சுனரோடு கருணாநிதியாகிய பரமசிவன் வேட்டுவ வடிவங்கொண்டு வந்து, விற்போர் செய்து, அவரது வில்லினால் அடிபட்டு, பின்பு அவரைத் தீண்டி மற்போர் செய்து, பின்னர்த் தமது வடிவத்தைக் காட்ட, அது கண்ட அருச்சுனர் சிவனை வணங்கி, தமக்கு முத்தி தந்தருளும் பொருட்டு விண்ணப்பம் பண்ணினார். அதுகேட்ட பரமசிவன், 'நீ பகைவரைக் கொல்லுதற்பொருட்டுப் பாசுபதாஸ்திரம் பெற நினைந்து, தவம் செய்தாய்;

Mbharat7a.gif

ஆதலால், இப்பொழுது பாசுபதாஸ்திரமே தருவோம்" என்று கொடுத்தருளி, "நீ என்னை வேடன் என்று இகழ்ந்தமையால் வேட்டுவராசனாய்ப் பிறந்து, தக்ஷிணகைலாசமாகிய காளத்தி மலையை அடைந்து அன்புருக்கொண்டு, நம்மைப் பூசித்து, பன்றி முதலிய விலங்குகளைக் கொன்று, அவற்றின் மாமிசத்தை எமக்கு நிவேதிப்பாய்; அந்நாளிலே உனக்கு மோக்ஷம் தந்தருளுவோம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். இச்சரித்திரம் திருக்காளத்திப் புராணத்திற் கூறப்பட்டது.

நாயகி நாயகனது பெயர் கேட்டவுடனே வசமழிதல் தலையன்பும், அவனைக் கண்டவுடன் வசமழிதல் இடையன்பும், அவனைக் கூடினவுடன் வசமழிதல் கடையன்புமாம். அவ்வாறே பக்குவமான்மா சிவனது பெயர் கேட்டவுடன் வசமழிதல் தலையன்பும், அவரைக் கண்டவுடன் வசமழிதல் இடையன்பும், அவரைக் கூடினவுடன் வசமழிதல் கடையன்புமாம். நாயகனது பெயர் கேட்டவுடன் வசமழியும் தலையன்பையுடைய நாயகிக்கு, அக்கேட்டலோடு காண்டல் கூடல்களும் நிகழ்ந்தவழி, முறுகி வளரும் அன்பின் பெருக்கம் இத்துணைத்தென்று கூறுதல் கூடாதன்றோ! அது போலவே! "இந்தச் - சேணுயர் திருக்காளத்தி மலைமிசை யெழுந்து செவ்வே - கோணமில் குடுமித்தேவ ரிருப்பர்கும் பிடலாம்" என்று நாணன் கூறினமை கேட்டவுடன் வசமழிந்த தலையன்பையுடைய இந்நாயனாருக்கு, அக்கேட்டலோடு சிவலிங்கப்பெருமானைக் காண்டல் கூடல்களும் நிகழ்ந்தவழி, முறுகி வளர்ந்த அதிதீவிரமாகிய அன்பின் பெருக்கத்தை இத்துணைத்தென்று கூறுதல் கூடாது.

இவர் சிவனது சட்சுதீக்ஷையினாலே பசுத்துவம் நீங்கி, சிவத்துவம் பெற்றார். அது இங்கே "திங்கள்சேர்சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே - யங்கணர் கருணை கூர்ந்த வருட்டிரு நோக்க மெய்தித் - தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட் டகல நீங்கிப் - பொங்கிய வொளியி னீழற் பொருவிலன் புருவமானார்." என்பதனாலும் "முன்புதிருக் காளத்தி முதல்வனா ரருணோக்கி - னின்புறுவே தகத்திரும்பு பொன்னானாற் போல் யாக்கைத் - தன்பரிகம் வினையிரண்டுஞ் சாருமல மூன்றுமற - வன்புபிழம் பாய்த்திரிவா ரவர்கருத்தினளவினரோ" என்பதனாலும் உணர்த்தப்பட்டது.

பத்தியானது மந்தகரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நால்வகைப்படும். அரக்கானது வெய்யிலின் முன் இருந்து வெதும்புதல் போல்வது மந்ததரபத்தி. மெழுகானது வெய்யிலுக்கு எதிர்ப்படின் உருகுதல் போல்வது மந்தபத்தி. நெய்யானது சூட்டுக்கு இளகுதல் போல்வது தீவிரபத்தி. தைலதாரையானது சிறிதும் இடையறாது ஒழுகுதல் போல்வது தீவிரதரபத்தி. இந்நாயனாரது பத்தி தீவிரதரமேயாம் என்பது சிவலிங்கப்பெருமானைக் கண்டவுடனே நிகழ்ந்த இவர் செயல்களாலே தெளியப்படும். அச்செயல்கள் "மாகமார் திருக்கா ளத்தி மலையெழு கொழுந்தா யுள்ள - வேகநா யகரைக் கண்டா ரெழுந்தபேருவகை யன்பின் - வேகமா னது மேற் செல்ல மிக்கதோர் விரைவி னோடு - மோகமா யோடிச் சென்றார் தழுவினார் மோந்து நின்றார்" "நெடிதுபோ துயிர்த்து நின்று நிறைந்தெழு மயிர்க்கா றோறும் - வடிவெலாம் புளகம் பொங்க மலர்க்கணீ ரருவி பாய - வடியனேற் கிவர்தா மிங்கே யகப் பட்டா ரச்சோ வென்று - படியிலாப் பரிவு தானோர் படிவமாம் பரிசு தோன்ற" என்னும் திருவிருத்தங்களால் உணர்க.

இந்நாயனார் சுவாமியைக் கண்டவழி வணங்குதல் பயின்றறியாதவராதலானும், தாய் தந்தையர் தங்களுக்கு இனிய பிள்ளையைக் கண்டவுடன் பேராசையினால் மிக விரைந்து ஓடிப் போய், தழுவி மோத்தல் உலகியற்கை ஆதலானும், தமக்கு இனியராகிய சுவாமியைக் கண்டவுடனே அதிமோகமாய் விரைந்து ஓடிச் சென்று தழுவி மோந்தார் என்க. இவர் தம்மினும் சிவனே தமக்கு இனியராக அது பற்றியெழுந்து முறுகி வளர்ந்த அன்பே வடிவமாயினார். அது, இவர் திருக்காளத்தி மலையை அணுகுமுன் பெரும்பசியால் வருத்தமுற்றும், சிவலிங்கப்பெருமானைக் கண்டபின் இவருக்கு அவ்வருத்தமென்பது சிறிதாயினும் தோன்றாமையானும், சிவபெருமான் துட்ட மிருகங்கள் திரியும் காட்டிலே தனித்திருத்தலால் அவரைத் தாம் பிரியமாட்டாமையையும், அவருக்கு அமுது செய்ய இறைச்சி இன்மையால் அதன் பொருட்டுத் தாம் பிரிதல் வேண்டினமையையும், குறித்து இவருக்கு எழுந்த பதைப்பு மிகுதியினாலும் தெளிக. அப்பதைப்பும் அதனால் நிகழ்ந்த செயல்களும் இங்கே "வெம்மறக் குலத்து வந்த" என்பது முதல் "முன்புநின் றரிதினீங்கி" என்பது இறுதியாய் உள்ள எட்டுத் திருவித்தங்களாலும் உணர்த்தப்பட்டன. இன்னும், இவர் சிவபெருமானைக் கண்ட நாள் முதல் ஆறு நாளும் பசி நித்திரை யென்பன இவருக்குச் சிறிதும் தோன்றாமையானும், காடன் தம்மோடு பேசினமையும், அவனும் நாணனும் தம்மை விட்டு போயினமையும், தந்தையாகிய நாகன் முதலியோர் வந்து தம்மோடு பேசினமையும், தம்மைப் பிரிந்தமையும் பிறவும் இவருக்குச் சிறிதும் விளங்காமையானும், இவர் இடையறாது ஒழுகும் தைலதாரைபோல ஆவியோடாக்கை ஆனந்தமாய்க் கசிந்துருகும் அன்புருவமே ஆயினார் என்பது ஐயம் திரிபு அற உணரப்படும்.

சிவன் உவப்பன செய்தலும் வெறுப்பன ஒழிதலும் அவரிடத்து அன்புடைமைக்கு அடையாளம் என்றீர். சுவாமிக்கு யாகத்திலன்றிப் பிறவழியில் மாமிசம் சுவாமிக்கு யாகத்திலன்றிப் பிறவழியில் மாமிசம் நிவேதித்தலும், வாயிற் கொண்டு வரும் நீரால் அபிஷேகம் செய்தலும், காற்செருப்பினாலே திருமுடியில் நிருமாலியம் கழித்தலும், தலையிற் சூட்டிய பூக்களைச் சாத்தலும் ஆகிய இவைகள் நினைப்பினும் எண்ணிறந்த காலம் மிகக் கொடிய நரகத் துன்பம் பயக்குமன்றோ? அங்ஙனமாக, இவர் இவற்றைச் செய்தமை என்னையெனின், இவர் இப்பிறப்பில் ஓர் ஆசாரியரை அடைந்து, இது புண்ணியம் இது பாவம் இது செயற்பாலது இது ஒழிதற்பாலது என்று ஒருகாலும் கேட்டும் அறிந்தவர் அல்லர். முற்பிறப்பிற் செய்த சிவபுண்ணிய மிகுதியினாலே தாம் சிவலிங்கப் பெருமானைத் தரிசித்த பொழுது திருமுடியிலே நீர் வார்த்து மலர் இட்டு இருத்தல் கண்டமையானும், ஒரு பார்ப்பான் யாதையோ கொண்டு வந்து ஊட்டினான் என்று கேட்டமையானும், அவர் மாட்டு முறுகி வளர்ந்த அன்பினாலே இவையே சுவாமிக்கு உவப்பாவன என்று துணிந்து, அவ்வாறு செய்ய நினைந்து, தமக்கு முன் இனியதாய் உள்ளது மாமிசமே ஆதலால் அதுவே சவாமிக்கும் இனியதாம் என்று மாமிசத்தை வாயில் அதுக்கிச் சுவை பார்த்து இனியனவற்றைப் படைத்தலும், பாத்திரம் இன்மையால் அபிஷேகத்திற்கு ஜலம் வாயில் எடுத்துக் கொள்ளுதலும், ஒரு கையில் தேனொடு கலந்த மாமிசம் பொருந்திய கல்லையும் மற்றக் கையில் அம்புவில்லும் இருத்தலால் புஷ்பங்களைத் தலையில் வைத்தலும், திருமுடியில் நிருமாலியத்தைக் காற்செருப்பினால் கழித்தலும் செய்தனர். இன்னும், தாம் மாமிசம் உண்டல் போலச் சுவாமியும் உண்பரென்று நினைத்து "கொழுவிய தசைகளெல்லாங் கோலினிற் றெரிந்து கோத்தங் - கழலுறு பதத்திற் காய்ச்சிப் பல்லினா லதுக்கி நாவிற் பழகிய வினிமை பார்த்துப் படைத்தலில் விறைச்சி சால - வழகிது நாய னீரே யமுதுசெய் தருளும்" என்று வேண்டிக்கோடலும், சிவன் முடிவில்லாத ஆற்றலுடையவரென்பது நோக்காமல், 'நீர் துணையின்றித் தனித்து இருக்கின்றீரே' என்று நித்திரை இன்றி இரா முழுதும் எதிர் நின்று காத்தலும் செய்தனர். இவையெல்லாம் முற்பிறப்பிற் செய்த சிவபுண்ணிய மிகுதியால் சிவன்மாட்டு எழுந்து இடையறாது மேன்மேலும் முறுகி வளர்ந்த அன்பின் பெருக்கத்தினாலே செய்யப்பட்டமையால், அவருக்கு மிக உவப்பாயின. இது சிவகோசரியாருக்குச் சிவன் திருவாய்மலர்ந்தருளிய பொருளையுடைய, "அவனுடைய வடிவெல்லாம்" என்பது முதல் "உனக்கவன்றன் செயல்காட்ட" என்பது இறுதியாய் உள்ள ஏழு திருவிருத்தங்களாலும் உணர்க. "பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச் - செருப瘃புற்ற சீரடி வாய்க்கலச மூனமுதம் - விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தல் - கருட்பெற்று நின்றவா தோணோக்க மாடாமோ" என்னும் திருவாசகத்தானும் காண்க. பேய்பிடியுண்டாரது செயலெல்லாம் பேயின் செயலாதல்போல, பசுபோதம் அற்றுச் சிவபோதம் உற்ற இந்நாயனாரது செயலெல்லாம் சிவன் செயலேயாம் என்பது தெளிக.

சிவலிங்கப்பெருமானது திருக்கண்ணில் உதிரநீர் பாயக் கண்டபொழுது இந்நாயனாருக்கு உண்டாகிய பதைப்பு மிகுதியும், தமது கண்ணைத் தாமே இடக்கும்போதும் இவருக்குச் சிறிதாயினும் வருத்தம் தோன்றாமையும், அக்கண்ணைச் சிவனுடைய கண்ணில் அப்பினவுடனே உதிரநீர் நிற்கக் கண்டமையால் எழுந்த ஆனந்த மிகுதியும், சிவனது மற்றக் கண்ணிலும் உதிரநீர் பாயக் கண்டு தமது மற்றக் கண்ணை இடக்கும் போதும் சுவாமி கண்ணில் உதிரநீர் நிற்கும் என்னும் துணிவினாற் பிறந்த விருப்பமும், இவருக்குச் சிவன்மாட்டுள்ள அன்பே இன்பமாம் என்பதைத் தெளிவுற விளக்குகின்றன. அன்பே இன்பம் என்பது "அன்பினா லடியே னாவியோ டாக்கை, யானந்த மாய்க்கசிந் துருக" என்று திருவாசகத்திலும், "முடிவிலா வின்பமான வன்பினை யெடுத்துக் காட்ட" என்று இப்புராணத்தினும், "இறவாத வின்ப வன்பு வேண்டி" என்று காரைக்காலம்மையார் புராணத்திலும், கூறுமாற்றானும் அனுபவத்தானும் உணர்க.

இந்நாயனாரது உயர்வொப்பில்லாத பேரன்பை, எம்போலிகளும் உணர்ந்து தம்மாட்டன்பு செய்து உய்தற் பொருட்டு, சிவகோசரியாருக்கு வெளிப்படுத்தப் புகுந்த பரம கருணாநிதியாகிய சிவன், இவர் தமது மற்றக் கண்ணையும் இடக்கும் பொருட்டு அம்பை ஊன்றும்போது, தரிக்க லாற்றாதவராகிய, தமது வியத்திஸ்தானமாகிய இலிங்கத் திற்றோன்றிய திருக்கையினாலே இவர் கையை அம்போடும் பிடித்துக்கொண்டு, "நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப வென் னன்புடைத்தோன்ற னில்லு கண்ணப்ப" என்று திருவாய் மலர்ந்தருளினார். இதனால் இந்நாயனாரது அன்பிற்கும், சிவனது திருவருட்கும் உயர்வொப்பின்மை தெளிக. இவ்வாறு மும்முறை அருளிச்செய்தார் என்பது நக்கிரதேவர் அருளிச்செய்த கண்ணப்பதேவர் திருமறத்தில் "மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தது - நில்லு கண்ணப்ப நில்லுகண் ணப்பவென் - னன்புடைத் தோன்ற னில்லுகண் ணப்பவென் - றின்னுரையதனொடு மெழிற் சிவலிங்கந் - தன்னிடைப் பிறந்த தடமலர்க்கையா - லன்னவன் றன்கை யம்பொடு மகப்படப் பிடித் - தருளினன்" என்பதனாலும், இங்கே "மூன்றடுக்கு - நாக கங்கண ரமுதவாக்குக் கண்ணப்ப நிற்க வென்ற" எனக் கூறியவாற்றாலும், உணர்க.

kannappar.jpg

இதுகாறுங் கூறியவாற்றால், சிவன்மாட்டுள்ள அன்பே பேரின்பம் என்பதும், அவ்வன்புடைமையிலே தமக்கு உயர்வொப்பில்லாதவர் இக்கண்ணப்பநாயனாரே யென்பதும், செவ்விதிற்றுணியப்படும். அது "கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை கண்டபி - னென்னப்ப னென்னொப்பி லென்னையுமாட் கொண்டருளி - வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச் - சுண்ணப்பொன் னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ" என்று திருவாசகத்தும், "கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை யென்றமையாற் - கண்ணப்ப னொப்பதோ ரன்பதனைக் - கண்ணப்பர் - தாமறிதல் காளத்தியாரறித லல்லதுமற் - றாரறிவு மன்பன் றது" என்று திருக்களிற்றுப்படியாரினும், கூறுமாற்றானும் தெளிக.

திருச்சிற்றம்பலம்

  • தொடங்கியவர்

P1011807.jpg

பசு ஓம்பல்

சிவலோகத்திலே சிவனது சந்நிதியில் இடபம் இருக்கும். அதன் பக்கத்திலே நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, கமனை என்னும் ஐவகைப் பசுக்கள் இருக்கும். இவை முறையே, கபிலநிறமும், கருநிறமும், வெண்ணிறமும், புகைநிறமும், செந்நிறமும் உடையனவாம். இவ்வைந்தும், சிவனது திருவருளினாலே திருப்பாற்கடலில் இருந்து, சிவபூசையின் பொருட்டும், யாகாதிகமருங்களின் பொருட்டும் பூமியில் உற்பவித்தன.

இப்பசுவின் உறுப்புக்களிலே தேவர்களும் முனிவர்களும் தீர்த்தங்களும் இருக்குமாறு கூறுதும். பிரமாவும் விட்டுணுவும் கொம்பினடியில் இருப்பர்; கோதாவரி முதலிய தீர்த்தங்களும் சராசரங்களும் கொம்பின் நுனியில் இருக்கும்; சிவன் சிரத்திலும், உமாதேவி நடுநெற்றியிலும், முருகக் கடவுள் மேல் நாசியிலும், நாகேசர் உள் நாசியிலும், அச்சுவினிதேவர் இரண்டு காதுகளிலும், சூரியனும் சந்திரனும் இரண்டு கண்களிலும், வாயு பல்லிலும், வருணன் நாவிலும், சரஸ்வதி ஊங்காரத்திலும், இயமன் இருதயத்திலும், இயக்கர்கள் கெண்டைத் தலத்திலும், உதயாஸ்தமயன சந்திகள் உதட்டிலும், இந்திரன் கழுத்திலும், அருக்கர்கள் திமிலிலும், சாத்தியர் மார்பிலும், அனிலவாயு நான்கு கால்களிலும், மருத்துவர் முழந்தாள்களிலும், நாகலோகத்தார் குரத்தின் நுனியிலும், கந்தருவர் குரத்தின் நடுவிலும், தேவ மாதர்கள் மேற்குரத்திலும்; உருத்திரர் முதுகிலும், வசுக்கள் சந்திகளிலும், பிதிர்கள் அரைப்பலகையிலும், சத்தமாதர்கள் பசுத்திலும், இலக்குமி அபானத்திலும், நாகேசர் அடிவாலிலும் இருப்பர், சூரியனொளி வால் மயிரிலும், கங்கை மூத்திரத்திலும், யமுனை சாணத்திலும் இருக்கும், முனிவர்கள் உரோமத்திலும், பூமிதேவி உதரத்திலும் இருப்பர்; சமுத்திரம் முலையிலும், காருகபத்தியம் முதலிய அக்கினி மூன்றும் முறையே வயிறு இருதயம் முகம் என்னும் உறுப்புக்களிலும், யாகங்களெல்லாம் எலும்பிலும் சுக்கிலத்திலும் இருக்கும்; கற்புடைமகளிர் எல்லா அவயவங்களிலும் இருப்பர்.

cow.jpg

இத்துணைச் சிறப்பினவாகிய பசுக்களை இயக்குங்கால், சிறிதும் வருத்தம் செய்யாமல், இரக்கத்தோடும் பலாசங்கோலினாலே மெல்ல ஓங்கி, போ போ என்று இயக்குக.

இரக்கமின்றிக் கோபித்து அதட்டி அடிப்போர் நரகத்து வீழ்வர். பசுக்களின் பெருமையை உணர்ந்து, அவைகளை வலஞ்செய்து, துதித்து வணங்கி, புல்லுக்கொடுத்தோர் சிவலோகத்தை அடைந்து இன்புறுவர். பசுக்களைத்தீண்டினும், தீவினைகள் நீங்கி, நல்வினைகள் பெருகும். அவைகள் இம்மை மறுமை இரண்டிலும் பயனைத் தரும். பசுக்களுக்குச் சாலையை விதிப்படி செய்வித்து, ஆற்றுமண் ஓடைமண் புற்றுமண் வில்வத்தடிமண் அரசடிமண் என்பவைகளால் நிலம்படுத்து, முதிர்கன்று இளங்கன்று நோயுற்றகன்று என்னும் இவைகளுக்கு இடங்கள் வெவ்வேறாக அமைக்க, நாடோறும் கோசல கோமயங்களைப் புறத்தே நீக்கி, சுத்தி செய்க. மசகம் வராமல் தூபம் இடுக, தீபங்கள் ஏற்றுக சாலை எங்கும் பூமாலை நாற்றுக. பசுக்களை, சாலையினுள்ளே சுவத்தி என்னும் சொல்லைச் சொல்லி, மெல்ல மெல்லப் புகுவித்து, சிரத்தையோடும் புல்லைக் கொடுக்க, நோயுற்ற பசுக்களுக்கு வேறிடம் அமைத்து, மருந்து கொடுத்துப் பேணுக. அட்டமி தோறும் பசுக்களை நீராட்டி, பூச்சூட்டி, அன்னமும் ஜலமும் ஊட்டி, தூபதீபம் காட்டி வணங்குக. பசுக்களை வேனிற்காலத்திலே சோலைகளிலும், மழைக்காலத்திலே மலைச்சாரல் வனங்களிலும், பனிக்காலத்திலே வெய்யில் மிகுந்த வெளிகளிலும், இடர் உறாவண்ணம் மேய்க்க, பசுக்களை இடர் நீங்கக் காக்காதவர்களும், பூசை செய்யாதவர்களும், காக்காத பாவிகளைத் தண்டியாத அரசனும் நரகத்தில் வீழ்வர்கள். ஆவுரிஞ்சுகல் நாட்டுதலும், சிவனுக்கும் ஆசாரியருக்கும், பசுவைத் தானம் செய்தலும், குற்றமற்ற இலக்கணங்களையுடைய இடபத்தைச் சிவசந்நிதிக்குத் தானம் செய்தலும், சிவனது திருப்பணியின் பொருட்டுச் சகடத்திற்கு எருது கொடுத்தலும், இளைத்த பசுவைக் கண்டி இரங்கித் தாம் வாங்கி வளர்த்தலும், பெரும் புண்ணியங்களாம்.

பசுக்கள் தரும் பால் தயிர் நெய் கோசலம் கோமயம் என்னும் பஞ்சகவ்வியங்களையும் சிவனுக்கு அபிஷேகம் பண்ணுவிக்க.

கன்று பால் உண்டு முலையை விடுத்தபோது, ஜலத்தினாலே முலையைக் கழுவிக் கறக்க. ஆசை மிகுதியினாலே கன்றுக்குப் பால்விடாமற் கறந்தவன் நரகத்தில் வீழ்ந்து நெடுங்காலம் வருந்தி, பின்பு பூமியிலே பிறந்து, கடும்பசியினாலே வீடுகள் தோறும் இரப்பன். கபிலையின் பாலைச் சிவனுக்கே கொடுக்க; அதனைத் தாம் பருகில் நரகத்து வீழ்வர். மலட்டுப்பழுவின் மேலேனும் இடபத்தின் மேலேனும், பாரம் ஏற்றினோரும், இடபத்தில் ஏறினோரும் நரகத்தில் வீழ்வர். பசுக்களைப் பகைவர் கவரின், எதிர்த்து காக்க; காத்தல் அரிதாயவழித் தம்முயிர் விடுத்தோர் சிவபதம் அடைவர். இதுகாறும் கூறியவற்றிற் கெல்லாம் பிரமாணம் சிவதருமோத்தரத்துக் கோபுரவியலின் இறுதியிற் காண்க.

Cow_with_calf.jpg

கோமாதா நமக்கு இன்னொரு மாதா(அம்மா)

தாய் தன் முலைப் பாலை தன் பிள்ளைகளுக்கு கொடுக்கிறாள்.

பசுவோ நம் எல்லோருக்கும் அம்மா அது எல்லோருக்கும் பால் கொடுக்கிறது.

யாராவது அம்மாவைக் கொன்று உண்பார்களா?

சிந்தியுங்கள்.

இன்று பசு மாடுகள் கேரளாவிற்கு இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுகிறது.

நமக்கு பால் கொடுத்த அம்மாவைக் கொல்லலாமா?

தோலுக்காவும் பசுமாடுகள் கொல்லப்படுகின்றன.

ஆதலால் பசுதோலில் செய்யப்பட்ட பர்ஸ், பெல்ட், செருப்பு, சூ, முதலியவற்றை புறக்கணியுங்கள்.

பசு வதையை உண்மையான பசுவின் பிள்ளைகள் தடுங்கள்.

நமக்கு பால், தயிர், நெய், வீடு தெளிக்க சாணம், பூச விபூதி என்று அணைத்தையும் தரும் பசுவை வதைக்காதீர்கள்.

இந்த செய்தியை ஒவ்வொருக்கும் அனுப்பி வையுங்கள்....

ஆதரவு தாருங்கள்.

  • தொடங்கியவர்

இரண்டாவது

இலைமலிந்த சருக்கம்

அரிவாட்டாயநாயனார் புராணம்

தாவில்கண மங்கலத்துள் வேளான் டொன்மைத்

தாயனார் நாயனார் தமக்கே செந்நெற்

றூவரிசி யெனவிளைவ தவையே யாகத்

துறந்துணவு வடுவரிசி துளங்கு கீரை

யாவினினைந் துடன் கொணர்வார் கமரிற் சிந்த

வழிந்தரிவாள் கொண்டூட்டி யரியா முன்னே

மாவடுவி னொலியுமரன் கரமுந் தோன்றி

வாள்விலக்கி யமரர்தொழ வைத்த வன்றே.

சோழமண்டலத்திலே, கணமங்கலம் என்கின்ற ஊரிலே; வேளாளர்குலத்திலே, சிவபத்தியிற் சிறந்தவரும், இல்லறத்தை ஒழுங்காக நடத்துகின்றவரும், மிகுந்த செல்வமுள்ளவருமாகிய தாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனுக்குச் செந்நெல்லரிசியும் செங்கீரையும் மாவடுவும் தினந்தோறுங் கொண்டுபோய், திருவமுது செய்வித்து வருவார். இப்படி நிகழுங்காலத்திலே, கடவுளுடைய திருவருளினால் அவருக்கு வறுமை உண்டாயிற்று. உண்டாகியும், அவர் கூலிக்கு நெல் அறுப்பவராகி, தாங்கூலியாகப் பெற்ற செந்நெலெல்லாம் சுவாமிக்குத் திருவமுது செய்வித்து, கார் நெல்லைக்கொண்டு; தாஞ்சீவனம் செய்து வந்தார். செய்யுநாளிலே, பரமசிவன் அவ்வூரிலிருக்கின்ற வயல்களிலுள்ள நெல்லெல்லாம் செந்நெல்லாகும்படி அருள்செய்ய; தாயனார் மனமகிழ்ந்து, நாள்தோறும் வயல்களுக்குப் போய் நெல்லறுத்து, கூலி வாங்கி, "இப்படிக் கிடைத்தது அடியேன் செய்த புண்ணியத்தால்" என்று சுவாமிக்கு மிகத் திருவமுது செய்விப்பாராயினார்.

இப்படி நடக்கின்றபடியால், நாடோறும் உணவில்லாமை பற்றி, மனைவியார் வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்திற்குப் போய், இலைக்கறி கொய்து சமைத்து வைக்க; தாயனார் அதையுண்டு முன்போலத் தாஞ்செய்யும் திருப்பணியைச் செய்தார். செய்யுநாளிலே, தோட்டத்திலுள்ள இலைக்கறியெல்லாம் அற்றுப்போக, மனைவியார் தண்ணீர் வார்க்க, அதனைப் பானம்பண்ணி, திருப்பணியைச் செய்து வந்தார். இப்படிச் செய்துவருநாளிலே ஒரு நாள், முன்போலச் சுவாமிக்குத் திருவமுது செய்விக்கும் பொருட்டுச் செந்நெலரிசியும் செங்கீரையும் மாவடுவும் கூடையில் வைத்துச் சுமந்துகொண்டு போக; மனைவியார் பஞ்சகவ்வியங்கொண்டு அவருக்குப் பின்னால் நடந்தார். முன் செல்கின்ற தாயனார் பசியினாலே கால் தள்ளாடித் தவறி விழ, மனைவியார் பஞ்சகவ்வியக் கலயத்தை மூடியிருந்த கையினால் அவரை அணைத்தார். அணைத்தும், எல்லாம் கமரிலே போவதினால் பயன் யாது" என்று துக்கித்து, "இங்கே சிந்திய செந்நெல்லரிசியையும் செங்கீரையையும் மாவடுவையும் கடவுள் திருவமுது செய்தருளும் பேற்றைப் பெற்றேனில்லையே" என்று, அரிவாளினாலே தம்முடைய ஊட்டியை அரியத் தொடங்கினார். அப்பொழுது அவ்வடியார் தம்முடைய கழுத்தை அரிகின்ற கையைத் தடுக்கும் பொருட்டுச் சிதசித்துப் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கின்ற பரமசிவன் உயர நீட்டிய திருக்கரமும், மாவடுவைக் கடித்தலால் உண்டாகுகின்ற விடேல் விடேல் என்னும் ஓசையும், கமரினின்றும் ஒக்க எழுந்தன. தாயனார், பரமசிவனுடைய திருக்கரம் வெளியில் வ்ந்து அரிவாள் பிடித்த தம்முடைய கையைப் பிடித்தபொழுது, பயங்கொண்டு, முந்திய துன்பம் நீங்கி, மனம் மிகமகிழ்ந்து, அவர் தமக்குச் செய்த திருவருளை வியந்து அஞ்சலிசெய்து ஸ்தோத்திரம் பண்ணிக்கொண்டு நின்றார். சிவபெருமான் இடபாரூடராய்த் தோன்றி, "நீ நம்மேல் வைத்த அன்பினாலே செய்த செய்கை நன்றாயிருக்கின்றது. நீ உன் மனைவியோடு வந்து நமது சிவலோகத்தில் வாழ்ந்திரு" என்று சொல்லி, அவர்கள் உடன் செல்ல, போயருளினார் அந்தத் தாயனாரென்பவர் "இங்கே சிந்தியவைகளைப் பரமசிவன் திருவமுதுசெய்யப் பெற்றேனில்லையே" என்று துக்கித்து, அரிவாளினாலே தமது கழுத்தை அரிதலுற்றபடியால், அவருடைய பெயர் அரிவாட்டயநாயனார் என்றாயிற்று.

shivaperuman17.jpg

  • தொடங்கியவர்

குங்குலியக்கலயநாயனார் புராண சூசனம்

சிவசந்நிதானத்திலே தூபம் இடுதல்

திருக்கோயில்களிலே சிவசந்நிதானத்தில் மெய்யன்போடு சுகந்ததூபம் இடுதல் சிவபுண்ணியமாம். அது "பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி - யரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து - விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல்லார்க்குக் - கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்டனாரே" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தான் அறிக. தூபம் ஐவகைப்படும்; அவற்றை "ஐவகைய தூபங்களாவனதாங் குந்துருகந் - துய்யபெருங் கருப்பூரந் துன்னியகா ரகில்வெண்மை - யெய்தியசந் தனமினிய குக்குலுவு மெனவறிக - நெய்யதனாற் றிருவிளக்கைக் காபிலத்தா னிகழ்த்துகவே!" என்னும் சிவதருமோத்தரச் செய்யுளிற் காண்க.

இச்சிவபுண்ணியத்தினால் மிகச் சிறப்புற்றவர் இக்குங்குலியக்கலய நாயனார் என்பது இவர் தமக்குச் செல்வம் உள்ள பொழுதன்றி மிகுத்த வறுமை எய்தியபொழுதும் இத்திருத்தொண்டைத் தவறாது செய்தமையாலே தெளியப்படும். இவர் தமது மனைவியார் இரண்டுநாள் போசனம் இன்றி வருந்தும் புதல்வரையும் சுற்றத்தாரையும் பார்த்து இரங்கி, நெல்லுக் கொள்ளும் பொருட்டுத் தம்மிடத்திலே தந்த தாலியைக் கொண்டு போம்பொழுது, குங்குலியப் பொதியைக் கண்டு, தம்மையும் தமது மனைவி முதலியோரையும் வருத்தும் பெரும்பசியைச் சிறிதும் நோக்காமல், அத்தாலியைக் கொடுத்துக் குங்குலியப் பொதியை வாங்கி, பெருமகிழ்ச்சி உற்றமையே இவர் இப்புண்ணியத்தை இடையறாத மெய்யன்போடு செய்தனர் என்பதற்குச் சான்றாம். அக்குங்குலியப் பொதி சிவபெருமானது பண்டாரத்திற் சேர்ந்தவுடன், அதனால் இவருக்கு உளதாகிய ஆனந்தம் முன்னை நிகழ்ச்சிகளை மறப்பித்து மேன்மேலும் வளர்ந்த பெரும் வியப்பை "ஒருவர்தம் பண்டாரத்தி - லடைவுற வொடுக்கி யெல்லா மயர்த்தெழு மன்பு பொங்கச் - சடையவர் மலர்த்தாள் போற்றி யிருந்தனர் தமக்கொப் பில்லார்" என்பதனாற் காண்க. இன்னும், இவரது மெய்யன்பின் முதிர்ச்சி, திருப்பனந்தாளிலே இராஜா யானைகள் எல்லாவற்றையும் பூட்டி இழுப்பித்தும் நிமிராத சிவலிங்கம் இவரால் நிமிர்ந்தமையானும் தெளியப்படும். இத்துணைச் சிறப்பினதாகிய மெய்யன்பினாலன்றோ, சமயகுரவர்களாகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார் என்பவர்கட்குத் திருவமுது செய்வித்த பெரும்பேறும் பெற்றனர்.

nakungil_i.jpg

திருச்சிற்றம்பலம்

  • தொடங்கியவர்

சைவ சித்தாந்த வினா விடை

-தொகுப்பு சு.சொரிமுத்து

சிவஞான சுவாமிகள் பேரவை. விக்கிரமசிங்கபுரம்

1. சமயம் என்றால் என்ன?

மனிதன் வாழ்வை வழிப்படுத்துவது சமயம்.

2. சைவம் என்றால் என்ன?

சைவம் என்றால் சிவ சம்பந்தமுடையது என்பது பொருள்.

3. சைவ சமயம் எப்போது தோன்றியது?

சைவ சமயம் அநாதியானது. அநாதி என்றால் ஆதி அற்றது (தொடக்கமில் காலம் தொட்டு) என்பது பொருள்.

4. யார் சைவர்?

சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து வழிபடுபவரே சைவர்.

5. சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் யாவை?

பதினான்கு சாத்திரங்களும், பன்னிரண்டு திருமுறைகளும்.

6. சமயக் குரவர்கள் யாவர்?

1. திருஞான சம்பந்த நாயனார்

2. திருநாவுக்கரசு நாயனார்

3. சுந்தரமூர்த்தி நாயனார்

4. மாணிக்கவாசகர்

nalvar.jpg

7. அகச்சந்தானக் குரவர்கள் யாவர்?

1. திருநந்தி தேவர்

2. சனற் குமாரமுனிவர்

3. சத்திய ஞான தரிசினிகள்

4. பரஞ்சோதி முனிகள்

20655324_6c60a66210_m.jpg

8. புறச்சந்தானக் குரவர்கள் யாவர்?

1. ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார்

2. அருள்நந்தி சிவாச்சாரியார்

3. மறைஞான சம்பந்தர் சுவாமிகள்

4. உமாபதி சிவாச்சாரியார்

san.jpg

9. திருமுறை மற்றும் சாத்திரங்களின் அமைப்பு எவ்வாறு உள்ளது?

திருமுறைகள் சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் புகழ் நூல்களாக் அமைந்திருக்கின்றன.

சாத்திரங்கள் சைவ சமயத்தின் கொள்கைகளை விளக்கும் பொருள் நூல்களாக அமைந்துள்ளன.

10. திருமுறை என்ற சொல்லுக்குப் பொருள் யாது?

முறை என்னும் சொல் நூல் என்னும் பொருளை உடையது. திருமுறை என்பது மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல் என்பது பொருள்.

இந்நூல் 12 பகுதிகளாக தொகுக்கப் பெற்று பன்னிரு திருமுறை என்று போற்றப்படுகிறது.

  • தொடங்கியவர்

11. திருமுறைகள் பிரணவத்துள் அடங்கும் என்பதை விளக்குக?

பன்னிரு திருமுறையில் முதல் பாடல் 'தோடு' என்னும் சொல்லுடன் தொடங்கி, இறுதிப் பாடலில் 'உலகெலாம்' என்ற சொல்லுடன் முடிகிறது. தோடு என்பதில் முதல் எழுத்து ஓ உலகெலாம் என்பதில் ஈற்றெழுத்து ம் ஆகும்.

12. திருமுறைகளை முறையாக வகைப்படுத்தியவர் யாவர்?

திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாருக்குப் பூசைகள் செய்து அவரிடம் நேரடியாக உபதேசம் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள்.

rajarajan.jpg

இராசராச சோழர் காலத்தில் பொல்லாப் பிள்ளையார் அருளினால் நம்பியாண்டார் நம்பிகள், மறைத்து வைக்கப்பட்டிருந்த தேவாரங்களை எடுத்து தொகுத்து அருளினார்கள்.

13. திருமுகப் பாசுரம் யார் அருளிச் செய்தது?

திருமுகப்பாசுரம் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டது. இப்பகுதி பதினொராம் திருமுறையில் அமைந்திருக்கிறது.

14. பஞ்சபுராணம் குறிப்பு தருக.

மூவர் தேவாரங்களில் ஒரு பாடலும், திருவாசகத்தில் ஒரு பாடலும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடலுமாக மொத்தம் ஐந்து பாடல்கள் பாடுவது பஞ்சபுராணம் எனப்படும்.

15. அகத்தியர் தேவாரத் திரட்டு - குறிப்பு தருக

agasthiyar.jpg

அகத்திய முனிவர் 'அடங்கள் முறை' முழுவதையும் சிவாலய முனிவருக்கு உபதேசித்து. அவற்றில் இருந்து 25 பதிகங்களை திரட்டி ஒரு நூலாக செய்து அருளினார். அந்நூலே அகத்தியர் தேவாரத் திரட்டு ஆகும். இதில் 8 நிலைகள் உள்ளன.

1. குருவருள்

2. பரையின் வடிவம்

3. அஞ்செழுத்து

4. கோயில் திறம்

5. சிவன் உருவம்

6. திருவடிகள் பெருமை

7. அருச்சனைச் சிறப்பு

8. அடிமைத் திறம்

16. தேவார அருள்முறைத் திரட்டு -குறிப்பு தருக.

மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரங்களை திருவருட்பயன் என்னும் சாத்திர நூலில் வரும் பத்து தலைப்புகளில் உமாபதிசிவம் ஒரு நூல் அருளியுள்ளார். அந்நூலுக்கு தேவார அருள்முறைத் திரட்டு என்று பெயர். அந்நூலில் 99 தேவாரப் பாடல்கள் உள்ளன.

  • தொடங்கியவர்

17. பன்னிரு திருமுறைகளில் மொத்தம் எத்தனை பாடல்கள்?

18,497 பாடல்கள்.

18. மூவர் பெருமக்கள் பாடிய மொத்த பதிகங்கள் எவ்வளவு?

மொத்தம்----------- ----------- ----------- பாடியவை----------- கிடைத்தவை

திருஞான சம்பந்த சுவாமிகள் ----------- 16,000----------- 383

திருநாவுக்கரசு சுவாமிகள்----------- 49,000----------- 312

சுந்தரமூர்த்தி சுவாமிகள் ----------- 38,000 ----------- 100

--------------------------------------------------------------------------------

மொத்தம் ----------- ----------- 1,03,000 ----------- 795

--------------------------------------------------------------------------------

19. நால்வர் பெருமக்களின் அவதாரத் தலங்கள் எவை?

திருஞான சம்பந்த சுவாமிகள் - சீர்காழி

திருநாவுக்கரசு சுவாமிகள் - திருவாமூர்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருநாவலூர்

மாணிக்கவாசகர் - திருவாதவூர்

20. நால்வர் பெருமக்கள் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் எவ்வளவு?

sambanda_small.jpg

திருஞான சம்பந்த சுவாமிகள் - 16 ஆண்டுகள்

appar.jpg

திருநாவுக்கரசு சுவாமிகள் - 81 ஆண்டுகள்

sundarar.jpg

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - 18 ஆண்டுகள்

vacakar_small.jpg

மாணிக்கவாசகர் - 32 ஆண்டுகள்

  • தொடங்கியவர்

மானக்கஞ்சாறநாயனார் புராண சூசனம்

சிவனடியார்கள் விரும்பியதைக் குறிப்பறிந்து கொடுத்தல்

சிவனடியார்கள் விரும்பியது யாதாயினும், அதனை அவர் கேட்குமுன் அவர் குறிப்பறிந்து கொடுத்தல் மிகச் சிறந்த சிவபுண்ணியமாம். இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இம்மானக்கஞ்சாற நாயனார். இவர் மாவிரதி வடிவங்கொண்டு வந்த பரமசிவன் தம்முடைய புதல்வியினது கூந்தலை நோக்கி, இவளது தலைமயிர் நமக்குப் பஞ்சவடிக்காம் என்று அருளிச் செய்தவுடனே, அப்பெண்ணோ தாம் அருந்தவஞ் செய்து பெற்ற ஏகபுத்திரி என்பதும், அத்தினமோ அவளுக்கு விவாகம் நிகழும் தினம் என்பதும், நோக்காமல் பெருமகிழ்ச்சியோடும் அவளது கூந்தலை அடியில் அரிந்து நீட்டிய பெருந்தகைமையே இவரது சங்கமபத்திக்குச் சான்றாம். குடும்பத்தோடு கூடியிருந்தும் வாசனைமாண்டு நின்ற இந்நாயனாரது மெய்யன்பை எம்போலிகளும் உணர்ந்து தம்மிடத்து அன்புசெய்து உய்தற் பொருட்டு அன்றோ! கருணாநிதியாகிய சிவன் இவரது செயற்கருஞ் செயலை யாவர்க்கும் வெளிப்படுத்தி யருளினார். மாவிரதம் உட்சமயம் ஆறனுள் ஒன்று. இச்சமயிகள் சிவனை என்புமாலை தரித்த மூர்த்தியாகத் தியானிப்பர்; தமது சாஸ்திரத்திற் கூறிய முறையே தீக்ஷை பெற்று, எலும்பணிதல் முதலிய சரியைகளை அனுட்டிப்பர். பஞ்ச வடியாவது மயிரினாலே அகலமாகச் செய்யப்பட்டு மார்பிலே பூணூலாகத் தரிக்கப்படும் வடமாம். வடம் எனினும் வடி எனினும் ஒக்கும். பஞ்சம் என்பது விரிவு.

namaanak_i.jpg

திருச்சிற்றம்பலம்

  • தொடங்கியவர்

murugan_birth_1.jpg

  • தொடங்கியவர்

ishwarams.gif

  • தொடங்கியவர்

இரண்டாவது

இலைமலிந்த சருக்கம்

ஆனாயநாயனார் புராணம்

மங்கலமா மழநாட்டு மங்கலமா நகருண்

மருவுபுக ழாயனார் வளரா மேய்ப்பார்

கொங்கலர்பூந் திருக்கொன்றை மருங்கு சார்ந்து

குழலிசையி லைந்தெழுத்துங் குழைய வைத்துத்

தங்குசரா சரங்களெல்லா முருகா நிற்பத்

தம்பிரா னணைந்துசெவி தாழ்த்த வாழ்ந்து

பொங்கியவான் கருணைபுரிந் தென்று மூதப்

போதுகவென் றருளவுடன் போயி னாரே.

ழநாட்டிலே, மங்கலவூரிலே, ஆயர்குலத்திலே, சிவ பத்தியிற் சிறந்த ஆனாயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய ஏவலாளராகிய மற்றை யிடையர்களோடும் பசுநிரைகளைக் காட்டுக்குக் கொண்டுபோய் மேய்த்துக் கொண்டும், காந்தருவ வேதத்திலே சொல்லியபடி செய்யப்பட்ட வேய்ங்குழலினாலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் சத்தசுரம் பொருந்த வாசித்து ஆன்மாக்களுக்குத் தம்முடைய இசையமுதத்தைச் செவித் துவாரத்தினாலே புகட்டிகொண்டும் வருவார்.

கார்காலத்திலே ஒருநாள், இடையர்கள் பசுநிரைகளைச் சூழ்ந்துகொண்டு செல்ல, அவ்வானாயநாயனார் கையிலே கோலும் வேய்ங்குழலுங் கொண்டு நிரைகாக்கும்படி காட்டுக்குச் சென்றபொழுது; அவ்விடத்திலே மாலையைப்போல நீண்ட பூங்கொத்துக்களைத் தாங்கிக்கொண்டு புறத்திலே தாழ்கின்ற சடையினையுடைய பரமசிவனைப்போல நிற்கின்ற ஒரு கொன்றைமரத்துக்குச் சமீபத்திலேபோய் அதைப் பார்த்துக்கொண்டு நின்று, அன்பினாலே உருகி இளகிய மனசையுடையவராகி, வேய்ங்குழலினாலே இசை நூலிலே விதித்தபடி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வாசித்தார். அவர் பஞ்சாக்ஷரத்தை அமைத்து வாசிக்கின்ற அதிமதுரமாகிய இசை வெள்ளமானது எவ்வகைப்பட்ட உயிர்களின் செவியிலும் தேவ கருவின் பூந்தேனைத் தேவாமிர்தத்தோடு கலந்து வார்த்தாற்போலப் புகுந்தது. புற்களை மேய்ந்த பசுக்கூட்டங்கள் அசைவிடாமல் அவரை அடைந்து, உருக்கத்தினாலே மெய்ம்மறந்து நின்றன; பால் குடித்துக் கொண்டு நின்ற கன்றுகளெல்லாம் குடித்தலை மறந்துவிட்டு, இசை கேட்டுக் கொண்டு நின்றன; எருதுகளும் மான் முதலாகிய காட்டுமிருகங்களும் மயிர் சிலிர்த்துக்கொண்டு அவர் சமீபத்தில் வந்தன; ஆடுகின்ற மயிற்கூட்டங்கள் ஆடுதலொழிந்து அவர் பக்கத்தை அடைந்தன; மற்றைப் பலவகைப் பட்சிகளும் தங்கள் செவித்துவாரத்தினாலே புகுந்த கீதம் நிறைந்த அகத்தோடும் அவரருகிலே வந்து நின்றன; மாடு, மேய்த்துக்கொண்டு நின்ற இடையர்களெல்லாரும் தங்கள் தொழிலை மறந்து கானத்தைக் கேட்டுக்கொண்டு நின்றார்கள்; விஞ்சையர்களும் சாரணர்களும் கின்னரர்களும் தேவர்களும் மெய்ம்மறந்து விமானங்களிலேறிக் கொண்டு வந்தார்கள்; வருத்துகின்ற உயிர்களும் வருத்தப்படுகின்ற உயிர்களும் அவ்விசையைக் கேட்டு அதன்வசமான படியால், பாம்புகள் மயங்கிப் பயமின்றி மயில்களின் மேலே விழும்; சிங்கமும் யானையும் ஒருங்கே கூடிவரும்; மான்கள் புலிகளின் பக்கத்திலே செல்லும்; மரக்கொம்புகள் தாமும் சலியாதிருந்தன. இப்படியே சரம் அசரம் என்னும் ஆன்மவர்க்கங்களெல்லாம் ஆனாயநாயனாருடைய வேய்ங்குழல் வாசனையைக் கேட்டு, இசைமயமாயின, அவ்விசையைப் பொய்யன்புக்கு அகப்படாத பரமசிவன் கேட்டு, பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய் ஆகாயமார்க்கத்தில் எழுந்தருளி வந்து நின்று,

paintings5.jpg

அவ்வானாயநாயனார் மீது திருவருணோக்கஞ்செய்து, "மெய்யன்பனே; நம்முடைய அடியார்கள் உன்னுடைய வேய்ங்குழலிசையைக் கேட்கும்பொருட்டு, நீ இப்பொழுது இவ்விடத்தில் நின்றபடியே நம்மிடத்துக்கு வருவாய்" என்று திருவாய்மலர்ந்தருளி, அவ்வானாயநாயனார் வேய்ங்குழல் வாசித்துக் கொண்டு பக்கத்திலே செல்லத் திருக்கைலாசத்தை அடைந்தருளினார்.

திருச்சிற்றம்பலம்

இலைமலிந்த சருக்கம் முற்றுப்பெற்றது

  • தொடங்கியவர்

அரிவாட்டாயநாயனார் புராண சூசனம்

சிவனுக்கு அன்னம் கறி முதலியன அமுது செய்வித்தல்

சிவனுக்கு அன்னம் கறி முதலியன அமுது செய்வித்தல் மிக்க மேலாகிய சிவபுண்ணியமாம். அது, "அருத்திய வவிழி னேக மமலனை முதலோர்க் கன்பா - லிருத்திடுஞ் சிவலோ கத்தில் வருடமா யிரமு மேயப் - பொருந瘍தியவன்பர் தம்மைப் பொருந்திடிற் பருப்பு நெய்யு - முரைத்த வவ் வருடந் தன்னிற் றசகுண மோங்கு மாங்கே", "பொறித்தநற் கறியும் புல்கிற் றசதச குணிதம் போனந் - தரித்தசாட்டியமே யென்னிற் சததச குணமுஞ் சாரும் - பரித்தநற் கந்த பந்தஞ் சதசத குணமும்பற்று - மிரத்தநற் சாலி யன்ன மயுதமே யெண்ணி லென்றும்." "சாலியின் விசிட்ட ராச சாலியாற் சமைத்த வன்ன - மேலைய பலத்தின் மிக்க தசகுணம் விளைக்கு மீண்டுங் - கோலிய பலங்களேறுங் கொழுவிய நெய்யுங் கூடி - லேலவே கறியுங் கூடிலேற்றமுன் னிசைத்த வாறாம்" என்று சிவதருமோத்தரத்திற் கூறுமாற்றால் அறிக.

இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இவ்வரிவாட்டாய நாயனார். இவர் தமது பெருஞ்செல்வ மெல்லாம் இழந்து, மிகக் கொடிய வறுமை எய்தியும்; கூலிக்கு நெல் அறுப்பவர் ஆகி, தாம் கூலியாகப் பெற்ற செந்நெலெல்லாம் சிவனுக்கு அமுது செய்வித்து, கார் நெல்லைக் கொண்டு தாம் சீவனம் செய்து வரும் நாளிலே; அச்சிவனது திருவருளினாலே கார்நெற் கிடையாது செந்நெல்லே கிடைப்ப, இது அடியேன் செய்த புண்ணியம் என்று, அவை எல்லாம் சிவனுக்கே அமுது செய்விப்பாராகி, தாம் இலைக்கறி உண்டு கொண்டு இருந்த பெருந்தகைமை, நினையுந்தோறும் எவ்வளவு ஆச்சரியத்தைத் தருகின்றது! இவ்விலைக் கறியும் அற்றுப்போக; ஜலபானமாத்திரம் செய்து கொண்டு இச்சிவபுண்ணியத்தை விடாது செய்தமை அதினும் மிக ஆச்சரியம் அன்றோ! இவர்தாம் சிவனுக்கு அமுது செய்விக்கும் பொருட்டுச் சுமந்து செல்லும் செந்நெல்வரிசி முதலியன தாம் பசியினாலே கால் தள்ளாடித் தவறி விழுந்தபொழுது கமரிலே சிந்தக் கண்டு, இவற்றை எம்பெருமான் அமுது செய்தருளும் பேற்றைப் பெற்றிலேனே என்று அரிவாளினாலே தமது ஊட்டியை அரிதலுற்ற ஆச்சரியம் யாவராலே சொல்லற்பாலது! இவர்தாம் இன்ப துன்பம் அடைதல், தமக்கு இச்சிவபுண்ணியம் செய்யக் கிடைத்தல் கிடையாமைகளாலன்றி, செல்வ வறுமைகளால் அன்று என்பது ஈண்டும் கூறியவாற்றாற் காண்க.

இந்நாயனார் குடும்பத்தோடு கூடி இருந்தும், தமக்கு உறவு சிவனே என்னும் மெய்யுணர்வு உடையராகி அவரது திருவடிக்கணன்றித் தமது சரீரத்தினும் உயிர்ச் சார்பு பொருட்சார்புகளினும் சிறிதும் பற்றின்றி வாசனை மாண்டு நின்ற பெருந்தன்மையினர் என்பது ஈண்டுக் கூறிய இவரது செயற்கருஞ் செய்கையினாலே பொள்ளெனப் புலப்படுகின்றது. இப்பெருந்தன்மை, "செய்யி லுகுத்த திருப்படி மாற்றதனை - யைய விதுவமுது செய்யெனவே - பையவிருந் - தூட்டி யறுப்பதற்கே யூட்டி யறுத்தவரை - நாட்டியுரை செய்வதே நாம்'.' எ-ம். "கல்லிற் கமரிற் கதிர்வாளிற் சாணையினில் - வல்லுப் பலகையினில் வாதனையைச் - சொல்லி - லகமார்க்கத் தாலவர்கண் மாற்றினர்காணையா - சகமார்க்கத் தாலன்றே தான்". எ-ம். திருக்களிற்றுப்படியாரிற் கூறுமாற்றானும் உணர்க. இவரது இடையறாத இம்மெய்யன்பினால் அன்றோ, பிரம விட்டுணுக்களும் காண்டற்கரிய பரமசிவன் கமரினின்றும் இவரது அரிவாள் பிடித்த கையைத் தடுத்தற்பொருட்டு உயர வீசிய தமது திருக்கரத்தையும் இவரது வியாகுலத்தை ஒழித்தற் பொருட்டுத் தாம் அமுது செய்தலால் ஆகும் ஓசையையும் தோற்றுவித்து, பின்னர் இடபாரூடராய் வெளிப்பட்டு, இவருக்கும், எத்துணை வறுமை எய்திய வழியும் சிறிதும் மாறுபடாது இவர் கருத்தின்வழி நின்ற மனைவியாருக்கும், முத்தி கொடுத்தருளினார். ஆதலால், சிவனது வியத்தி ஸ்தானங்களாகிய குரு லிங்க சங்கமங்களுக்கு வறுமையினும் தம்மால் இயன்றது சிறிதேனும் அன்போடு கொடுத்தல் புண்ணியமும், கொடாமை பாவமுமாம் என்பது துணிக. ஒன்றும் கிடையாதாயினும்; பச்சிலையாயினும் கிடையாததா! அதுவும் கிடையாதாயின், அவர் சந்நிதியிற் கிடக்கும் செத்தையை ஒருமையுடனே திருவலகினால் போக்குதலும், அரிதோ! அரிது அன்றே! இது "பரமன் றிருமுன் னழன்முன்னும் பரம குரவன்றிரு முன்னு - மொருமை யுறவே வறுமையினு முதவா தவருஞ் சிறிதேது - மரிது பொருடான் பச்சிலையு மரிதோ வஃது மரிதாயிற் - றிருண மதனைத் திருமுன்னே மாற்ற லரிதோ செயலாலே" எனச் சிவதருமோத்தரத்தில் கூறுமாற்றால் உணர்க.

naarivat_i.jpg

திருச்சிற்றம்பலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.