Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் ரத்து -- தேர்தல் ஆணையம் அதிரடி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் ரத்து..! தேர்தல் ஆணையம் அதிரடி..!
duraimurugan_1200x630xt.jpg

வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் ரத்து என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது

கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

நாளை மறுதினம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் வேலூர் தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் நடவடிக்கையாக வேலூர் தொகுதி மக்களவை தேர்தலை ரத்து செய்து  தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக, திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகனும், வேட்பாளருமான கதிர் ஆனந்த் அவர்களுக்கு சொந்தமான கல்லூரி மற்றும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மக்களுக்கு விநியோகம் செய்யவே இந்த பணம் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்த அறிக்கையை தமிழக தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது. இதனை பரிசீலனை செய்த இந்திய தேர்தல் ஆணையம், தேர்தலை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கான அனுமதியை குடியரசுத் தலைவர் வழங்கி உள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள துரைமுருகன் வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்திருப்பது ஜனநாயக படுகொலை என தெரிவித்துள்ளார். நரேந்திர மோடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார் துரைமுருகன்.

https://tamil.asianetnews.com/politics/election-commision-of-india-cancelled-vellore-constitute-election-pq25yj

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling

துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்...  இப்படி படம் எடுத்து போட்டால்...
வீட்டை  சோதனை செய்வார்கள் தானே...  
இனி 5 தேர்தல்களில் நிற்கப் படாது என்று, தண்டனை கொடுத்தால்தான்... திருந்துவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வரà¯à®®à®¾à®© வரித௠தà¯à®±à¯

வேலூரில் தேர்தல் ரத்து முடிவை திரும்ப பெற வேண்டும்- தேர்தல் ஆணையத்துக்கு கதிர் ஆனந்த் கடிதம்

வேலூரில் தேர்தல் ரத்து முடிவை திரும்ப பெற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கதிர் ஆனந்த் கடிதம் எழுதியுள்ளார்.

வேலூர் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கடந்த மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. மேலும் வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

திமுக பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலிருந்து ரூ 11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் இங்கு தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இதையடுத்து வேலூரில் தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியது. அவர் ஒப்புதல் அளித்ததன் பேரில் வேலூரில் தேர்தலை நிறுத்துவதாக அறிவித்தது தேர்தல் ஆணையம்.

Read more at: https://tamil.oneindia.com/news/vellore/kathir-anand-writes-letter-to-ec-to-get-back-the-order-of-vellore-election-cancellation-347136.html

############### ###########

கருணாநிதி வழியில், எழுதிய கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு கிடைக்க முதல்... 
தேர்தல் முடிந்து விடும் போலிருக்கே.....  :grin:  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.