Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

50 விகாரைகளில் தற்கொலை தாக்குதல்கள் நடத்தத் திட்டம் – எதிர்வு கூறுகிறார் ஞானசாரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
April 29, 2019
Gnasara.png?zoom=1.2100000262260437&resi
 

வெசாக், பொசன் என எந்தவொரு உற்சவங்களையும் நாட்டில் நடத்துவதற்கு இடமளிக்க வேண்டாம். 50 பௌத்த விகாரைகளில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தன்னை சந்திக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியமை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த தொடர் குண்டுத்தாக்குதல்கள் வெசாக்தினத்திலும் இடம்பெறுவதற்கு இடமளிக்க வேண்டாம்.

50 பௌத்த விகாரைகளுக்கு வெசக் தினத்தில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன எனவே உற்சவங்கள் நடத்தப்படக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். #gnanasarathero #srilanka  #eastersundaylk

http://globaltamilnews.net/2019/119944/

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசார தேரர், சொல்வது நடக்கக்  கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம்.
இலங்கையில்... ஏற்கெனவே 300 இஸ்லாமிய  பயங்கரவாதிகள் இருப்பதால், 
அடுத்து விகாரையாக தான் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஞானசார தேரர், சொல்வது நடக்கக்  கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம்.
இலங்கையில்... ஏற்கெனவே 300 இஸ்லாமிய  பயங்கரவாதிகள் இருப்பதால், 
அடுத்து விகாரையாக தான் இருக்கும். 

அப்பிடி ஏதாவது விகாரையில் கைவைத்தால், இப்ப இருக்கும் நிலையில் விளைவுகள் எப்பிடி இருக்கும் என யோசித்து பார்க்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை நிற ஆடைகள் கொள்வனவு செய்த புர்கா பெண்கள் குறித்து  தீவிர விசாரணை

(எம்மனோசித்ரா)

வெள்ளை நிற ஆடைகளை கொள்வனவு செய்த முஸ்லிம் பெண்கள் குறித்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பையும் பொலிசார் கோரியுள்ளனர். 

burka.jpg

கடந்த 19 ஆம் திகதி மீரிகம பகுதியில் அமைந்துள்ள ஆடை விற்பணை நிலையத்தில் சிங்கள பௌத்த பெண்கள் விகாரைகளுக்கு அணியும் வெள்ளை நிற 10 க்கும் மேற்பட்ட ஆடைகளை கொள்வனவு செய்த புர்கா அணிந்த மூன்று பெண்களையும் சாரதியையும் அடையாளம் காண பொலிஸ் தலைமையகம் பொது மக்களின் உதவியை கோரியுள்ளது. 

மே மாதம் இடம்பெற கூடிய வெசக் பௌர்ணமி தினத்தில் தாக்குதல் நடத்துவதற்காகவே வெள்ளை நிற ஆடைகளை கொள்வணவு செய்திருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுவதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

குறித்த சந்தேக நபர்கள் கடந்த 19 ஆம் திகதி பெரிய வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மீரிகம பகுதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையத்தில் 29 ஆயிரத்து 20 ரூபாவிற்கு சந்தேகத்திற்கிடமான வகையில் ஆடைகளை கொள்வனவு செய்துள்ளனர். இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட வெள்ளை நிற ஆடைகள் சில சாய்ந்தமருது சுனாமி வீட்டுத்திட்ட பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. 

D5QQFNUWwAA25Hp.jpg

இந்நிலையில் , உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னர் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தலாகியுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளினால் மற்றுமொரு தாக்குதல் முன்னெடுக்க கூடும் என்ற எச்சரிக்கையினை புலனாய்வு பிரிவு விடுத்துள்ளது. 

இதற்கமைய நாட்டில் அனைத்து பிரதான நகரங்களிலும் தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் சோதனைச் சாவடிகள் என அனைத்து வகையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய பயங்கரவாத குழுவினால் இராணுவ உடையில் வந்து தாக்குதல் நடத்த கூடும் என்ற புலனாய்வு எச்சரிக்கையே தற்போது காணப்படுகின்றது. 

எவ்வாறாயினும் பலத்த பாதுகாப்பு எச்சரிக்கைகளுக்கு மத்தியில் சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

 

http://www.virakesari.lk/article/54986

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.