Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத தாக்குதலின் அதிர்வுகள் – களையிழந்தது சீயோன் தேவாலயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தாக்குதலின் அதிர்வுகள் – களையிழந்தது சீயோன் தேவாலயம்

இலங்கையின் பல பகுதிகளில் கடந்த மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர். 500 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.

குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் (புதன்கிழமை) 17 நாட்கள் கடந்துவிட்டன. இலங்கை ஓரளவு வழமைக்குத் திரும்பியுள்ள போதிலும், பாதிப்படைந்த மக்களும் பாதிக்கப்பட்ட தேவாலயங்களும் வலிகளின் ரணத்திலிருந்து இன்னும் மீளவில்லை.

இதற்கு மட்டக்களப்பு சீயோன் தேவாலயமும் விதிவிலக்கல்ல. கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் சுமார் 30 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர். இந்தத் தாக்குதல் 14 சிறுவர்களின் உயிர்களையும் காவுகொண்டிருந்தது.

இந்நிலையில் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 17 நாட்கள் கடந்த நிலையில் சீயோன் தேவாலயத்தின் தற்போதைய நிலை குறித்து அறிய ஆதவன் செய்திப் பிரிவு மட்டக்களப்பிற்கு பயணித்தது.

30 வருட யுத்தத்திலிருந்து மீண்டெழுந்த மக்கள் மீண்டும் அச்சத்துடன் வாழும் சூழ்நிலையை தற்போது அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே மக்கள் வாழ்கின்றனர்.

சீயோன் தேவாலயம் படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் வெறிச்சோடி காணப்பட்டமை எமது கமராவில் பதிவாகியது. அத்தோடு குண்டுத்தாக்குதல்களின் எச்சங்களும் ஆங்காங்கே காணப்பட்டன. 17 நாட்கள் ஆகிய போதிலும் தற்போது வரையில் தேவாலயம் மூடியே காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

http://athavannews.com/பயங்கரவாத-தாக்குதலின்-அத/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலைத் தாக்குதலுக்குள்ளான சியோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்

President-maithripala-srisena-visit-batticalao-Zion-Church-1.jpg

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி இன்று (புதன்கிழமை) பிற்பகல் இந்த விஜயத்தை மேற்கொண்டார்.

தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதியை, பிரதம திருத்தந்தையான ரொஷான் மகேஷன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.

கொடிய பயங்கரவாத தாக்குதலினால் சேதமடைந்த தேவாலயத்தை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி, தேவாலயத்தின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு கிழக்கு மாகாண கட்டளை தளபதி உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்த துன்பியல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தேவாலயத்தின் பிரதம திருத்தந்தை உள்ளிட்ட திருத்தந்தைகளுக்கும் பிரதேசத்தின் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் ஜனாதிபதி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

இந்த விஜயத்தில், அமைச்சர் தயா கமகே, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரிகளும் இணைந்துகொண்டனர்.

President-maithripala-srisena-visit-batt

President-maithripala-srisena-visit-batt

President-maithripala-srisena-visit-batt

President-maithripala-srisena-visit-batt

President-maithripala-srisena-visit-batt

President-maithripala-srisena-visit-batt

 

 

 

http://athavannews.com/தற்கொலைத்-தாக்குதலுக்கு/

1 hour ago, கிருபன் said:

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

மைத்திரி தனது சட்டவிரோத செயற்பாடுகளின் உதவியுடன் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் சேதங்கள் எப்படி உள்ளது என்பதை நேரில் அறிந்து  தனது அடுத்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு தயாராகும் நோக்கத்துடன் மட்டக்களப்புக்கு சென்றதாக கருதப்படுகிறது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.