Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானம் வசப்பட்ட கதையிது தொடரும்!

Featured Replies

வானம் வசப்பட்ட கதையிது தொடரும்

வானத்தை அண்ணாந்து பார்த்து

நடுங்கிய நாட்கள்

பனை நெஞ்சின் பின்னும்

பதுங்குழிகளிலும்

பதுங்கிக் கிடந்தோம்

இன்று

குனிந்த முகங்கள் நிமிர்த்தி

கொஞ்சம் சிரிக்கிறோம்!

தலைவன் புண்ணியத்தில்

தலைநகரில் பெரும் தீயெழ

உலகத்தமிழர்களின்

உள்ளத்தில் பெருமகிழ்ச்சி

எத்தனை ஆண்டுகள்தான்

இனவெறி எச்சங்களை

எங்கள் தலைகளில்

கொண்டு வந்து கொட்டுவீர்கள்?

எங்கள் உயிர் வலியின்

உச்சங்களை

உணரத் தவறியவர்களே

உணர்ந்து கொள்ளுங்கள்!

வான் ஏறிவந்து இனி

உங்கள் தலையிலும்

குண்டுகள் கொட்டுவோம்!

எங்கள் புலிகளுக்கு

பாய்வதற்கு மட்டுமல்ல

பறக்கவும் தெரியும்

பார்த்ததும் பதைத்தீர்கள்;!

இனி என்ன

செய்வதாய் உத்தேசம்?

வானம் வசப்படும்

என்ற கனவின்

கவிதைகள்

இன்று நனவானது!

வன்னிப் பெருநிலப்பரப்பில்

வண்டுகள் எல்லாம்

வீதிக்கு வந்தது.!

ஈழநாதம் பத்திரிகை

ஒரு கையில்

இனிப்புப் பண்டம்

மறுகையில்

வெடி கொளுத்தி

தமிழீழம் மகிழ்ந்தது!

நிம்மதி தொலைத்து

நித்திரையிழந்து

நீள் வீதியெங்கும்

நெடுநாளாய் அலைகிறோம்...

கொஞ்சமேனும்

ஆறுதல் அடைகிறோம்!

நிம்மதிப் பெருமூச்செறிந்து

கூரைகள்கூட துள்ளிக்

குதிக்குது!

எரிதணல் கொட்டி

எதிரிகள் எரித்த

குடில்களில் திருவிழா!

குலைநடுங்கி குற்றுயிராய்

கொழும்புக்கும்

நீர்கொழும்புக்கும் இடையில்

அவசர வண்டிகள்

அலறியபடியே

பறக்குதாம்.!

வட்டியும் முதலுமாய்

கொட்டிவிட்டு

வான் புலிகள்

எப்படித் திரும்பினர்கள்?

மனநிலை பாதிப்பில்

இன்னும்

மயங்கியே கிடக்கிறார் மகிந்தர்!

மாலைமலர் நாளேடு

புகழாரம் சூட்ட

குமுதம் ரிப்போட்டர்

குசலம் விசாரிக்க

தமிழகம் எங்கும்

பங்குனி மாதத்தில்

தீபாவளிக் கொண்டாட்டம் போல

தினசரித் தலைப்புகள்!

வான் புலிகளிடம்

வானம் வசப்பட்டது!

அன்று

பங்குனி 26.

முதல் எச்சரிக்கை

வரலாற்றில் எழுதப்பட்டது!

இன்று

சித்திரை 24

மீண்டும் எழுந்தார்கள் வான்புலிகள்!

பலாலி மீது

பத்துக் குண்டுகள் வீசப்பட்டது!

என்றால்

நாளை..எங்கோ?

நகரும் நாட்கள்

பதில் சொல்லும்

அதுவரை தொடரும் கதையிது

காத்திருப்போம்!

ஆகா அருமை...

ஆனந்த மிகுதியின் உச்சம்

வானம் வசப்பட்ட கதையிது தொடரும்

வானத்தை அண்ணாந்து பார்த்து

நடுங்கிய நாட்கள்

பனை நெஞ்சின் பின்னும்

பதுங்குழிகளிலும்

பதுங்கிக் கிடந்தோம்

இன்று

குனிந்த முகங்கள் நிமிர்த்தி

கொஞ்சம் சிரிக்கிறோம்!

தலைவன் புண்ணியத்தில்

தலைநகரில் பெரும் தீயெழ

உலகத்தமிழர்களின்

உள்ளத்தில் பெருமகிழ்ச்சி

எத்தனை ஆண்டுகள்தான்

இனவெறி எச்சங்களை

எங்கள் தலைகளில்

கொண்டு வந்து கொட்டுவீர்கள்?

எங்கள் உயிர் வலியின்

உச்சங்களை

உணரத் தவறியவர்களே

உணர்ந்து கொள்ளுங்கள்!

வான் ஏறிவந்து இனி

உங்கள் தலையிலும்

குண்டுகள் கொட்டுவோம்!

எங்கள் புலிகளுக்கு

பாய்வதற்கு மட்டுமல்ல

பறக்கவும் தெரியும்

பார்த்ததும் பதைத்தீர்கள்;!

இனி என்ன

செய்வதாய் உத்தேசம்?

வானம் வசப்படும்

என்ற கனவின்

கவிதைகள்

இன்று நனவானது!

வன்னிப் பெருநிலப்பரப்பில்

வண்டுகள் எல்லாம்

வீதிக்கு வந்தது.!

ஈழநாதம் பத்திரிகை

ஒரு கையில்

இனிப்புப் பண்டம்

மறுகையில்

வெடி கொளுத்தி

தமிழீழம் மகிழ்ந்தது!

நிம்மதி தொலைத்து

நித்திரையிழந்து

நீள் வீதியெங்கும்

நெடுநாளாய் அலைகிறோம்...

கொஞ்சமேனும்

ஆறுதல் அடைகிறோம்!

நிம்மதிப் பெருமூச்செறிந்து

கூரைகள்கூட துள்ளிக்

குதிக்குது!

எரிதணல் கொட்டி

எதிரிகள் எரித்த

குடில்களில் திருவிழா!

குலைநடுங்கி குற்றுயிராய்

கொழும்புக்கும்

நீர்கொழும்புக்கும் இடையில்

அவசர வண்டிகள்

அலறியபடியே

பறக்குதாம்.!

வட்டியும் முதலுமாய்

கொட்டிவிட்டு

வான் புலிகள்

எப்படித் திரும்பினர்கள்?

மனநிலை பாதிப்பில்

இன்னும்

மயங்கியே கிடக்கிறார் மகிந்தர்!

மாலைமலர் நாளேடு

புகழாரம் சூட்ட

குமுதம் ரிப்போட்டர்

குசலம் விசாரிக்க

தமிழகம் எங்கும்

பங்குனி மாதத்தில்

தீபாவளிக் கொண்டாட்டம் போல

தினசரித் தலைப்புகள்!

வான் புலிகளிடம்

வானம் வசப்பட்டது!

அன்று

பங்குனி 26.

முதல் எச்சரிக்கை

வரலாற்றில் எழுதப்பட்டது!

இன்று

சித்திரை 24

மீண்டும் எழுந்தார்கள் வான்புலிகள்!

பலாலி மீது

பத்துக் குண்டுகள் வீசப்பட்டது!

என்றால்

நாளை..எங்கோ?

நகரும் நாட்கள்

பதில் சொல்லும்

அதுவரை தொடரும் கதையிது

காத்திருப்போம்!

தென்னிலங்கை தேசமெல்லாம்

தென் மாங்கு பாடுதம்மா

காவு வண்டி ஒலி கேட்டு

கரகோசம் எழுப்புதம்மா....

கூட நின்ற பகைவர் உடல்

குருதியலே தோயுதம்மா

ஊர்தியிலே ஏறியின்று

ஊர்வலங்கள் போகுதம்மா...

சிற்றுராக வான் கலங்கள்

சிறகடித்து பறந்ததம்மா

கூட்டுப் படை காவல் மீது

குண்டுகளை எறிந்ததம்மா...

ஆட்டம் போட்டு வந்த பகை

ஆடிப் போயு நின்றதம்மா- பகை

ஓட்மெடுக்கும் காலமது- இனி

ஒலிம்பிக்காய் நடக்குமம்மா...

முன்னரங்கம் வந்த பகை

முதுகுடைந்து நிக்குதம்மா

தம் படையை காத்திடவே

தரணியெல்லாம் ஓடமம்மா...

அன்னை தமிழ் ஈழமம்மா

ஆடியின்று பாடுதம்மா

வண்ண வண்ண கவிகளது

வந்துயிங்கு குவியுதம்மா...

பாராட்டுக்கள் கவியே...

கொதிப்பு வியப்பு நிறைந்த

விய தகு பா...

  • தொடங்கியவர்

விகடகவி வன்னியின் மைந்தனே இரு கவிகளும் சேர்ந்து என் கவிக்கே விமர்சனக் கவி படைத்தீர்கள். மிக்க நன்றிகள் உரித்தாகட்டும்.

வாழ்த்துக்கள் கவியே

வானகம் திறந்து வழிவிட

பொங்கும் தமிழீழம்

நாம் பூரிப்பால் அயர்ந்து நிற்போம்'

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[

குலைநடுங்கி குற்றுயிராய்

கொழும்புக்கும்

நீர்கொழும்புக்கும் இடையில்

அவசர வண்டிகள்

அலறியபடியே

பறக்குதாம்.!

வட்டியும் முதலுமாய்

கொட்டிவிட்டு

வான் புலிகள்

எப்படித் திரும்பினர்கள்?

மனநிலை பாதிப்பில்

இன்னும்

மயங்கியே கிடக்கிறார் மகிந்தர்!

மாலைமலர் நாளேடு

புகழாரம் சூட்ட

குமுதம் ரிப்போட்டர்

குசலம் விசாரிக்க

தமிழகம் எங்கும்

பங்குனி மாதத்தில்

தீபாவளிக் கொண்டாட்டம் போல

தினசரித் தலைப்புகள்!

வான் புலிகளிடம்

வானம் வசப்பட்டது!

அன்று

பங்குனி 26.

முதல் எச்சரிக்கை

வரலாற்றில் எழுதப்பட்டது!

இன்று

சித்திரை 24

மீண்டும் எழுந்தார்கள் வான்புலிகள்!

பலாலி மீது

பத்துக் குண்டுகள் வீசப்பட்டது!

என்றால்

நாளை..எங்கோ?

நகரும் நாட்கள்

பதில் சொல்லும்

அதுவரை தொடரும் கதையிது

காத்திருப்போம்!

வானம் வசப்பட்ட கதையிது தொடரும்

அருமையா கவிதை தொடரட்டும்

  • தொடங்கியவர்

தரணியை ஆள வந்த பரணியே

தங்கள் தமிழுக்கு நன்றிகள்:lol:

தொடர் கவியெழுதி என் மனதை; தொட்ட

தமிழ்த்தங்கையே தமிழுக்கு தலைவணக்கம்<_<

சிலந்தி வலையில் சிக்காது

சிக்கன வரிகளில் சிந்திக்க வைத்த

கஐந்திக்கு என் கண்வழி வாழ்த்துக்கள்:lol:

வானம் வசப்பட்ட மகிழ்வில் பிறந்த கவிதை வரிக்குவரி நிஜங்கள்

  • தொடங்கியவர்

இலக்கியன் உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

எண்ணெய் ஊற்றாமலே

எரியும் எண்ணெய்க் குதங்கள்!

மகிந்தர் துடுப்பாட்டம்

பார்த்த களைப்பில் வருவார்

இதை உள்வாங்க பெரிய கஷ்ரப்படுவார்.

இன்று கொலன்னாவ!

என்றால்

நாளை...?

உபயம்: வான்புலிகள்

தமிழ்வானம் உங்களின் உணர்வுபூர்வமான கவிதைக்கு வாழ்த்துக்கள்!.

  • தொடங்கியவர்

அன்புள்ள ரசிகைக்கு, உங்கள் இனிமையான வரிகளுக்கு வானம் நிறைந்த நன்றிகள்.

எங்கள் வான்புலிகளின் விரத்தை தொடர் கவிதையாகவே எழுதுவோம்.

பார்ப்பதற்கு தும்பிபோல் தான்

தெரிவார்கள்!

பறப்பதற்கு தம்பிபோல தான்

வருவார்கள்!

அடித்தால் தும்பிக்கைபோல்

அடிப்பார்கள்!

வாரணம் ஆயிரம்

பெருகட்டும்!

வான்புலிகள் வீரம்

சிறக்கட்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.