Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர் ரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - கூட்டமைப்புக்குள் குழப்பம்!

Featured Replies

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில், ஆரா ய்ந்தே தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் நிர்மலநாதன் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அமைச்சர் ரிசாட்டுக்கு எதிரான பிரேரணை தொடர்பில் கூட்டமைப்புக்குள் குழப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னதாக அமைச்சு பதவியிலிருந்து விலகவேண்டும். தவறின் அந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/120359

  • தொடங்கியவர்

அமைச்சர் ரிசாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள மன்னார் மாவட்ட தமிழரசு கட்சி உறுப்பினர்கள்!

கடந்த வாரம் கூட்டு எதிர்க்கட்சியால் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் கைத்தொழி வணிக வர்த்தக அமைச்சருமான ரிசாட் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட தமிழரசு கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

அண்மையில் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையிலா பிரேரனை தொடர்பாகவும் எவ்வாறு நாடாளுமன்றத்தில் தீர்மானம் மேற்கொள்வது தொடர்பாக மன்னார் மாவட்ட தமிழரசு கட்சி உயர்மட்ட குழுவின் கலந்துரையாடல் நேற்று மாலை 4 மணியளவில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம் பெற்றது

குறித்த கலந்துரையாடலின் போது தற்போது அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அவசரகாலச்சட்டத்தால் தமிழ் மக்கள் திட்டமிட்டு பழிவாங்கப்படுவதனாலும் பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மீது திட்டம்மிட்டு குற்ற நடவடிக்கைகள் எடுப்பதனால் நிச்சயமாக அவசரகால சட்டத்தை எதிர்க்கவேண்டும் என ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்ப்பட்டது

குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மல நாதன்

அவசரகால சட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்தில் நிச்சயம் வெற்றி பெறும் ஆனாலும் இவ் அவசர கால நிலமையினை பயன்படுத்தி எமது மக்கள் பழிவாங்கப்படுகின்றனர்

எனவே நம்பிக்கையில்லா பிரேரணையின் காலப்பகுதி ஒவ்வொருமாதம் ஆகும். அக் காலப்பகுதி நிறைவடைந்த பின்னர் மீண்டும் நாடாளுமன்றத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் போது அதற்கான ஆதரவை வழங்கப்போவது இல்லை என எமது மன்னார் மாவட்ட உயர் மட்ட குழு தீர்மானித்துள்ளது.

அதே நேரத்தில் குண்டு வெடிப்பில் சம்மந்தப்பட்ட ஒருவரை விடுவிப்பதற்காக அமைச்சர் ரிசாட் பதியுதீன் மூன்றுதடவை இராணுவத்தளபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும்

அவர் மூலமாக மன்னார் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் அண்மையில் தாராபுரபகுதியில் அமைச்சருக்கு சொந்தமான விடுதியில் சந்தேத்துக்கு இடமான இலக்கத்தகடு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் குறித்த இலக்கத் தகடானது இலங்கை மோட்டார் வாகன திணைக்களத்தால் (RMP) விநியோகிக்கப்படவில்லை எனவும் ஏதோ ஒரு வகையில் தவறான நடவடிக்கைக்காகவே குறித்த இலக்கத் தகடு பயன்பட்டிருக்கலாம் எனவும்

இது தொடர்பான முழுமையான விசாரணைகள் நடத்துவதற்காகவாவது அவர் மீது கொண்டுவரப்படுகின்ற நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து அவருக்கும் இந்த தற்கொலை குண்டுதாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா இல்லையா என்பது தொடர்பாகவும் குறுகிய காலத்தில் அவர் எவ்வாறு செல்வந்தராக வந்தார் என்பது தொடர்பாகவும் விசாரிக்கவேண்டும் என தெரிவித்தார்

அத்துடன் ஒட்டு மொத்த மன்னார் தமிழ் அரசு கட்சி உயர்மட்ட குழுவினராலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/120278

  • தொடங்கியவர்

றிசாட்டின் வீட்டிலிருந்து சட்டவிரோத வாகன தகடுகள்: மூடி மறைத்த பாதுகாப்பு தரப்பினர்! வெளியாகிய உண்மை

மன்னார் - தாராபுரத்தில் அமைந்துள்ள, கைத்தொழில், வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதியூதினின் வீட்டிலிருந்து சட்டவிரோத வாகன தகடுகள் கைப்பற்றப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த விடயம் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

மீட்கப்பட்ட வாகனத் தகடுகள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உயர் அதிகாரிகள் மறுப்பு தெரிவிப்பதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் சாள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உறுப்பினர்களுடன் தொடர்பை வைத்திருந்ததாக அமைச்சர் பதியூதீன் மீது குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியூதீன் வெளிநாடு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் மன்னார் - தாராபுரம் பகுதியிலுள்ள அவரது வீட்டை கடந்த 6 ஆம் திகதி பகல் சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது எந்தவித சந்தேகத்திற்கிடமான ஆவணங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்த பாதுகாப்பு படையினர், வீட்டின் வளாகத்திலிந்து கூர்மையான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையிலே அமைச்சர் றிசாட்டின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத வாகன தகடுகள் தொடர்பான தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டினார்.

எவ்வாறாயினும் கூட்டு எதிர்க் கட்சியினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கைத்தொழில் வர்தக வணிக அமைச்சருமான ரிசாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு வழங்கப்படும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/120302

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.