Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்ட 38 ஆவது ஆண்டு நினைவுகூரல்

Featured Replies

யாழ்ப்பாணம்பொதுநூலகம் எரிக்கப்பட்டு 38 ம் ஆண்டு நிறைவுநாள் இன்று நினைவு கூரப்பட்டது.

இந்த நிகழ்வு யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜெயசீலன்,மாநகரசபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நூலகம் எரிக்கப்பட்ட செய்தியை கேள்வியுற்று அதிர்ச்சியில் மரணமடைந்த தனிநாயகம் அடிகளாரின் படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

இதேவேளை யாழ்ப்பாணம் பொது நூலக எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவு நினைவு தினம் ரெலோ கடசியினரால் இன்று நினைவு கூரப்பட்டது.

இந்த நிகழ்வு ரெலோ அமைப்பின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் யாழ் பொது நூலக முன்றலில் நடைபெற்றது.இந்த நினைவு தின நிகழ்வில் ரெலோவின் உள்ளுராட்ச்சி சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்வில் அக வணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/121177

  • தொடங்கியவர்

தமிழர் தம் வரலாற்றை பறைசாற்றுவதாக திகழ்ந்த மற்றும் வழிகாட்டியாக திகழ்ந்த யாழின் அறிவு பெட்டகம் சிதைந்தது!

தமிழர் தாயகப்பகுதியான யாழ்ப்பாண மண்ணில் ஈழத் தமிழரின் அறிவுப்பெட்டகமான யாழ்நூலகம் எரியூட்டப்பட்டு இன்றுடன் 38ஆவது ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையிலும் எமது இனத்தின் வரலாறு எமது வாழ்வின் வழிகாட்டி வன்மத்தால் அழிக்கப்பட்ட இந்நாள் என்றும் அழியாது.

31.05.1981 ஆம் ஆண்டு நள்ளிரவு யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டது இலங்கையின் இனப்பிரச்சினையில் ஓர் முக்கிய நிகழ்வாக, பதியப்பட்ட நாளே இன்றைய நாளாகும். 1981 ஆம் ஆண்டு மே மாதம் யாழ்ப்பாணத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அந்த தேர்தலுக்கான பிரசாரம் உச்ச கட்டத்தில் இருந்தது.

இதன் போது தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிங்கள பொலிஸார் கடமையில் இறக்கப்பட்டார்கள். இந்த தேர்தல் பிரசார வேளையில், தமிழர்களுக்கும் பொலிஸாருக்கமிடையில் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் சம்பவத்தில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் இறந்துள்ளார். இதனை அடிப்படையாக வைத்து திடீரென பெருமளவில் சிங்கள்வர்கள் படையெடுக்கத் தொடங்கினார்கள். அத்துடன் தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல்களையும் மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இந்த வெறிச்செயலின் ஆரம்பமாக யாழ்ப்பாணத்தில் இருந்த புத்தகக் கடைகளை குறிவைத்து நாசம் செய்ய ஆரம்பித்தனர். அத்துடன் நின்று விடாது யாழில் இருந்த பத்திரிகை நிறுவனங்களையும் குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

அதன் விளைவாக யாழின் முதல் தமிழ்ப்பத்திரிகை என பெருமையுடன் வெளியாகி வந்த ஈழநாடு பத்திரிகை நிறுவனம் தீவைத்து நாசம் செய்யப்பட்டது. அதன் பின்னர் யாழ் நாச்சிமார் ஆலயமும் தீயிடப்பட்டது. அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரின் வீடு வாகனம் என்பனவும் தீயிட்டு கொழுத்தப்பட்டது.

யாழ் மக்களின் வர்த்தக நிலையங்கள் வீடுகள் என்பவற்றையும் அடித்து உடைத்து தீயிட்டு நாசம் செய்ததோடு மட்டும் அவர்களின் ஆக்ரோசம் தணியவில்லை. தொடர்ந்தும் வன்முறைகளில் ஈடுபடவேண்டும் என நினைத்தவர்களின் கண்முன் தோன்றியது தான் வடபகுதியில் அறிவுப்பெட்டகமாக திகழ்ந்த இந்த நூலகம்.

இவர்கள் நூலகத்திற்குள் நுழைய முற்பட்ட வேளை நூலக காவலாளி தடுத்துள்ளார் அவரையும் தாக்கிவிட்டு கொண்டு வந்த பெற்றோல் மண்ணெண்ணை என்பவற்றை ஊற்றி ஒன்றும் மிச்சமில்லாது தீவைத்து நாசம் செய்தனர். இந்த நாசகார செயலில் நூலகத்திற்குள் இருந்த 97000 நூல்கள் ஓலைச்சுவடிகள் மருத்துவ நூல்கள் அதனைவிட தமிழர் தம் வரலாற்றை எடுத்தியம்பும் வரலாற்று நூல்கள் என்பனவும் தீயோடு எரிந்து பஸ்பமான ஒரு கொடூர நாளின் நினைவு நாளே இன்றாகும்.

 

 

https://www.ibctamil.com/srilanka/80/121156

Edited by போல்
காணொளி இணைப்பை சீர்செய்ய

  • தொடங்கியவர்

தமிழின அழிப்பின் ஒரு அங்கமே யாழ்.நூலக எரிப்பு: சிவாஜிலிங்கம்

தமிழின அழிப்பின் ஒரு அங்கமாகவே யாழ்.பொது நூலக எரிப்பானது அமைந்துள்ளதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சிவாஜிலிங்கம் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

”1981 ஆம் ஆண்டு இலங்கை ழுமுவதிலும் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் நடத்தப்பட்டபோது யாழ்.மாவட்டத்துக்கான அபிவிருத்தி சபை தேர்தல் ஜுன் மாதம் 4 ஆம் திகதி நடத்தப்படவிருந்தது.

இதற்காக மே மாதம் 31 ஆம் திகதி தமிழர் விடுதலை கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் யாழ்.நகரில் நடைபெற்றது. அன்றைய தினம் பொலிஸாருக்கு எதிராக துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் காணப்பட்ட நாச்சியார் ஆலயம், கடைகள் ஆகியன பெரும்பான்மை இனத்தவரினால் தீயிடப்பட்டு அழிக்கப்பட்டது.

இருப்பினும் இவ்விடயங்கள் ஊடாக திருப்தியடையாத பெரும்பான்மையினத்தவர்கள் ஜுன் 1ஆம் திகதி அதிகாலை வேளையில் யாழ்.பொது நூலகத்துக்கும் தீ வைத்தனர்.

குறித்த தீயினால் 94ஆயிரத்துக்கு மேற்பட்ட அரியவகை நூல்கள், அரிய ஓலைச்சுவடிகள் ஆகியன தீக்கிரையாகின. ஆசியாவிலேயே மிகப்பெரிய நூல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டு தமிழ் மக்களின் பண்பாட்டு படுகொலை இடம்பெற்றது.

ஆகவே தமிழின அழிப்பின் ஒரு பகுதியாகவே யாழ் பொது நூலகம் அழிக்கப்பட்டதை கருதுகிறோம்” என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/தமிழின-அழிப்பின்-ஒரு-அங்/

  • தொடங்கியவர்

யாழ். நூலக கல்வெட்டில் பிழையான வரலாற்று திணிப்பு: திருத்தியமைக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கல்வெட்டில் காணப்படும் பிழையான வரலாற்றுத் திணிப்பை மாற்றி விரைவில் உண்மை வரலாறு எழுதப்படும் என மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவுபெற்றதையடுத்து நினைவுநாள் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்.பொது நூலகம் ஆசியாவின் மிகப்பெரிய பொக்கிஷமாக காணப்பட்டது. மேலும் நூலகத்தில் ஏராளமான அரியவகை புத்தகங்கள் மற்றும் ஏடுகள் என பல வரலாற்று நூல்கள் இருந்தன.

ஆனால் இதனை அழிக்கவேண்டுமென்ற ஒரே நோக்குடன் சில விஷமிகளால் திட்டமிட்டு இந்நூலகம் எரித்து அழிக்கப்பட்டது. பின்னர் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

நூலகத்தின் வரலாறானது, குறித்த நூலக வாயில் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது. எனினும் அதில் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று குறிப்பில் பிழைகள் இருப்பதாக எமது முன்னோர்களும் சபை உறுப்பினர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் இந்த பிழையை திருத்தியமைக்க வேண்டுமென மாநகர சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானத்தின் பிரகாரம் நூலக வரலாற்றில் பிழையான தகவல்கள் திணிக்கப்பட்டுள்ளனவா? என ஆராய குழுவொன்று அமைக்கப்பட்டு, குறித்த கல்வெட்டில் பிழை உள்ளதாக  இனங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய நூலக வரலாற்றை திருத்தியமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் இடம்பெற்று வருகின்றன” என்றார்.

http://athavannews.com/யாழ்-நூலக-கல்வெட்டில்-பி/

இத்தகைய ஓர் பண்பாட்டுப் படுகொலை இத் தீவின் வரலாற்றில் இது முதல் நிகழ்வும் அல்ல! இறுதி நிகழ்வும் அல்ல!!

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி நூலகம் 1984 ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் முதல் நாளில் அதன் நூற்று ஐம்பது வருடகால புத்தகச் சேர்வுகளுடன் பாதுகாப்புப் படையினரால் தீயினால் அழிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் தாம் நிகழ்ந்தவிருந்த பண்பாட்டுப் படுகொலை குறித்த தகவல் செய்தி ஊடகங்களுக்கு எட்டாதிருக்கச் செய்யும் முற்காப்பு நடவடிக்கையாகவே “ஈழநாடு’ பணிமனை முன்கூட்டியே தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.