Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கில் மறைக்கப்பட்ட 600 முஸ்லிம்களின் படுகொலை (ஜுன் 11)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
13423856_1751050381773815_2177184677308678110_n.jpg
 
 
1990.06.11 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்கள் விடுதலைப்புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது மேலிடத்து அரச உத்தரவின் பெயரில் ஆயுதங்கள் தம்வசம் இருந்தும் விடுதலைபுலிகளுக்கு தாக்குதல் நடத்தாமல் தம்மிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் விடுதலைப்புளிகளிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்த 800 பொலிஸ் அதிகாரிகளில் 600 பேர் முஸ்லிம்கள் ஆவார்கள்.
 
ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாச புதிய ஆயுதங்களை கிழக்கு பொலிஸ் நியங்களுக்கு வழங்கி ஒரு கிழமையில் கிழக்கில் LTTE யின் கட்டளை தலைமைகளான கருனா அம்மான் மற்றும் கரிகாளன் தலைமையிளான குழுவிடம் ஒப்படைக்க 800 பொலிஸ் பாதுகாப்பு படையினரின் உயிர் தாரைவார்க்கப்பட்டது.
 
சரன் அடைந்தவர்கள் திருக்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஒன்றில் 3 நாட்கள் அடைத்து வைத்திருந்து 4காவது நாள் இரவு இவர்கள் திருக்கோவில் பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதி சமவெளியில் வைத்து LTTE யின் பொலீஸ் பிரிவுக்கு பொறுப்பாய் இருந்த நடேசனின் மேற்பார்வையில் 800 பொலிஸ் அதிகாரிகளும் நிர்வாணப்படுத்தி கண்களும் கைகளும் கட்டப்பட்டு சுடப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சுடப்பட்டு பின்னர் ஒரே கிடங்கில் போட்டு பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டார்கள் .
 
இந்த சம்பவத்தின் போது துப்பாக்கிச்சூடு பட்டும் உயிர் தப்பிய இரண்டே இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மாத்திரம் தற்போதும் வாழ்ந்து வருகின்றார்கள்.
 
ஒருவர் ஹோமாகமையைச் சார்ந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபல் பின்னர் இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அடுத்தவர் ஒரு முஸ்லிம் இவர் பலாங்கொடையை சேர்ந்தவர்.
 
1994 சந்ரிகா பண்டாரநாயக ஜனாதியானதும் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆனைக்குளுவில் இந்த கிழக்கின் பொலிஸ் கொலை சம்பந்தமாக இவ் இருவரும் மாத்திரம் தான் இந்த சம்பவத்தில் இறுதிக் கட்டத்தில் சாவின் விளிம்பில் தப்பியவர்களாக சாட்சியம் அளித்தார்கள்.
 
பின்னர் அந்த திருக்கோயில் புதைகுழி அகழ்வுக்கும் ஆணைக்குழு சிபார்சு செய்தது….,.
 
ஒரு சிலதை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை இந்த படுகொலைகள் சாதாரணமாக விடுதலைபுலிகள் செய்த கொலைகளுடன் இதுவும் ஒன்றாக கருத முடியாது. இந்த படுகொலைகள் அரச அனுசரனையில் விடுதலைப்புலிகள் நடத்திய கொலைகளில் மிகப்பெரிய படுகொலை யாகும். இம் மாதம் ஜுன் 11ம் திகதியோடு 28 வருடங்கள் கழிந்தும் இன்னும் இதன் மர்மங்கள் அகலவில்லை.
 
முன்னால் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜெரத்னவும் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாசவும் விடுதலைப்புலிகளின் தலைமைகலும் மாத்திரமே இதன் மர்மங்களை அறிவார்கள்.
 
விடுதலைப்புலிகளின் கிழக்கு கட்டளை தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் கருனா அம்மான் கடந்த மகிந்த அரசில் பல முக்கிய பதவிகள் மற்றும் அமைச்சுக்கள் பொறுப்பாக இருந்தும் இந்த கொலைகளுக்குரிய பின்னனியை அரசு கண்டரிய தவறிவிட்டது.
 
விடுதலைப்புலிகளின் முன்னால் கிழக்கு கட்டளை தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் தற்போதைய முஸ்லிம் காங்கரஸ் உறுப்பினரும் முன்னால் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினருமாகிய அலிசாகிர் மௌலானாவின் பாதுகாப்பில் வெளிநாடு ஒன்றில் தங்கி மீண்டும் இலங்கை வந்தபோதும் அதன் பின்னர் அவர் அமைச்சு பதவி வகிக்கும் போதும். திரு விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களை பலமுறை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது அந்த நேரங்களில் ஒருமுறை இந்த போலீஸ் கொலைகள் சம்பந்தமாக அவரிடம் வினவியபோது அவர் அதற்கான ஒரு நீண்ட பதில் கூறினர். ஆனால் அந்த பதில் திருப்தியடைய முடியாததாலும் அந்த பதில் இப்பிரட்சினையை வேறு திசைக்கு கொண்டுசெல்லும் என்பதால் நான் இங்கு பதிவிட விரும்பவில்லை.
 
THE WTF TIMES இணையத்தில் வெளிவந்த 17 TERRORIST ATTACKS THAT SHOOK THE WORLD ஆக்கத்தில் இடம் பிடித்த இலங்கையின் இந்த கொலைக்களம் இன்று 28 வருடங்களுக்கு பிறகு இவ்விடயத்தை நினைவுகூரும் நாம் அதே நேரத்தில் இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசபடைகளால் மேற்கொண்ட இன அழிப்பையும் மறந்துவிட முடியாது .
 
-U.H Hyder Ali-

ஆயுதம் தரிக்காமல் இருந்து கொல்லப்பட்ட அனைத்து உறவுகளின் ஆத்மா சாந்தியடையட்டும்.

சனநாயகம் என்ற பெயரில், இந்த சம்பவம் தொடரும் இனப்படுகொலையின் ஒரு முக்கியமான அத்தியாயம். 

சில வேளைகளில் உண்மைகள் வெளிவர தாமதமாகலாம்.  

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் சேவையாற்றிய 23 வயதான  நாகராஜா பிரசாந்தன் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போன சம்பவம், திட்டமிட்ட  கொலை சம்பவம் என்பதை  11 வருடங்களின் பின்னர் சி.ஐ.டி. வெளிப்படுத்தியுள்ளது.

2018 நவம்பர் மாதம்  வவுணதீவு பொலிஸ் காவலரணில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்ப்ட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் அத்தியட்சர்  ஒருவரின் கீழான குழுவுக்கு  கிடைத்த தகவல் ஒன்றினை மையபப்டுத்தி முன்னெடுக்கப்பட்ட தொடர் விசாரணைகளிலேயே 11 வருடங்களின் பின்னர் மர்மம் வெளிவந்துள்ளதாக பொலிஸ்  அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் கூறினார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பின்னர்,  கொக்கட்டிச் சோலை, சிவன் கோயில் அருகேயுள்ள மயானப் பகுதியை அண்மித்த இடமொன்றில் புதைக்கப்பட்டமை தொடர்பிலும் கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் தகவல்கள் தெரியவந்துள்ளது.

http://www.virakesari.lk/article/58039

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.