Jump to content

காத்தான்குடி பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதி சஹ்ரான் குறித்து சாட்சியமளித்தது என்ன ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி)

அடிப்படைவாதம், இறுக்கமான கொள்கைகளை போதித்துவந்த சஹரான் ஹாசிம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜப்பான் சென்று மூன்று மாதகாலம் தங்கியிருந்து மீண்டும் இலங்கைக்கு வந்த பின்னர் அவரின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்கள் காணப்பட்டது பல பொய்களைக் கூறி வந்தார். எவ்வாறு இருப்பினும் சிறிய அளவில் அடிப்படைவாத குழுவாகும் நிதி நிலைமைகளில் மிகவும் மோசமாகவும் இருந்த சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது குழு குறுகிய காலத்தில் மிகப்பெரிய ஆயுததாரியாகவும் செல்வந்தர்களாகவும் மாறியது எவ்வாறு என்ற கேள்வி எம்முள் உள்ளது என பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதி சட்டத்தரணி அபுசாலி உவைஸ் குறிப்பிட்டார். 

kathankudy.jpg

ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்ட காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதி சட்டத்தரணி அபுசாலி உவைஸ் சாட்சியமளிக்கையில் இதனை குறிப்பிட்டார். 

கேள்வி : உங்கள் அமைப்பைப் பற்றி விளக்கமளிக்க முடியா?

பதில் : காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளமானது 1985ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் 140 முஸ்லிம் நிறுவனங்களும், 65 பதிவுசெய்யப்பட்ட பள்ளிவாசல்களும் உள்ளன.  இந்தத் துன்பியல் சம்பவம் அளவிடமுடியாத துக்கத்தையும், இலங்கையில் முஸ்லிம்களுக்கு சூத்திரதாரி காத்தான்குடியிலிருந்து வந்தமை துரதிஸ்டமாகும். 250ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததுடன், 500ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இவர்களுக்கான நான் எனது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர். 

இந்த நிகழ்வுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் தேடுதல் நடவடிக்கைகள் குறிப்பாக முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன. காத்தான்குடியில் மக்கள் அரசாங்கத்துக்கு நம்பிக்கை உடையவர்களாக  இந்த விடயத்தில்  முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.  மேலும் இந்தத் தாக்குதலின் சூத்திரதாரி தொடர்பில் பேசுவோமானால் சஹ்ரான் ஹாசிம் வறுமையான சூழலிலேயே வளர்ந்து வந்ததுடன், ஐந்தாம் தரம் மட்டுமே படித்தார். அதன் பின்னர் ஜமியத்துல் பரா வில் இணைந்துகொண்டார். எட்டு வருட பாடநெறியை பூர்த்தி செய்ய இணைந்து கொண்டதுடன், அதன் பின்னர் அவருக்கு மௌலவி சான்றிதழ் வழங்கப்படும். எனினும் நிர்வாகத்துக்குக் கட்டுப்படாமை, சட்டத்தை மதிக்காமை, பிரச்சினைகளை ஏற்படுத்தும் நபராக காணப்பட்டதால் இவரை  சபை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் நிர்வாகம அவரை கல்லூரியிலிருந்து நீக்கியதால் முழுமையாக கல்வியை பூர்த்திசெய்யவில்லை. 

தனது சான்றிதழைப் பெற மதரஸாவைத் தேடிக்கொண்டிருந்தபோதே  குருநாகலில் கொட்டரமுல்ல  பிரதேசத்தில் உள்ள மதரஸாவில் இணைந்தார். அதில் கூட அவர் நிலைக்கவில்லை. அவருடைய கொள்கைகளால் அக்கல்லூரியிலிருந்தும் நீக்கப்பட்டார். அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு அவர் மீண்டும் காத்தான்குடிக்கு வந்தார். அங்கு  தாருல் அதர் என்ற நிறுவனத்தை ஸ்தாபித்தார். நபித்துவக் கலாசார வீடு என்ற அர்தத்தைக் கொண்ட நிறுவனத்தை உருவாக்கினார். அவருடைய செயற்பாடுகளை ஆரம்பிக்கும்போது தன்னை ஒரு நடுநிலையாளராக அறிமுகப்படுத்தினார். இரத்ததானம் செய்வது, போதையிலிருந்து மக்களை மீட்பது. சிரமதானங்களில்  ஈடுபடுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டார். எனினும் படிப்படியாக அவருடைய செயற்பாடுகள் மக்களால்  ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின்னரே பிரச்சினைகளை தூண்டக்கூடிய பேச்சுக்களை 2016ஆம் ஆண்டிலிருந்து பேசத்தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து எமது அமைப்பினாலும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டபோதும் அவர் சமூகமளிக்கவில்லை. அப்போது அவருக்கு 20 வயதிருக்கும். அவர்ருடைய நடவடிக்கைகள் ஜம்இயத்துல் உலமாவினால் கண்காணிக்கப்பட்டது. அவருடைய பேச்சுக்களின் பாணிகள் மிகவும் வித்தியாசமாகக் காணப்பட்டன. பெண்கள் நகை அலங்காரங்கள் அணியக்கூடாது என்பதான கருத்துக்கள் கூட இருந்தது. அவர்  தமிழிலேயே நன்கு கவரக்கூடிய வகையில் பேசக்கூடிய பேச்சாளர். தாருல் அதரினை ஆரபிக்கின்றபோது  பணத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது பற்றி அவர்களுக்கான நிதி வழங்கப்படக்கூடாது என்ற பகிரங்க அறிவிப்பை விடுத்திருந்தோம். அவருடைய செயற்பாட்டுக்கு எதிரப்புத்தெரிவித்த முதலாவது சந்தரப்பமாகும்.

தன்னுடைய நிறுவனத்தைப் பதிவுசெய்வதற்கு முயற்சித்தபோது நாம் அதனை முறியடித்திருந்தோம். அதேபோன்று காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலிருந்து பேச்சுக்களை ஒலிபரப்ப அனுமதி வழங்கப்பட்டபோதும் நாம் அதனை எதிர்ப்புத் தெரிவித்திருந்தோம். ரமழான் கொண்டாட்டம் தொடர்பிலும் முரண்பாடு ஏற்பட்டது. ரமழான் கொண்டாட்டத்தை தீர்மானிப்பதற்கு தனியான கலண்டர் ஒன்று இல்லை. பிறையை கண்ட நாளிலிருந்தே நோன்மை ஆரம்பித்து நோன்பை முடிப்போம். எனினும் சஹ்ரானும் அவருடைய ஆதரவாளர்களும் வெளிநாட்டு தினத்துக்கு அமையவே கொண்டாடுவார்கள். சாதாரணமாக நாம் ரமழானைக் கொண்டாடும்போது அதற்கு முதல்நாளே அவர்கள் கொண்டாடுவார்கள். 

அவருடைய பிரசாரம் மாணவர்களை இலக்கு வைத்ததாகவே  இருந்தது. பிழையான பிரசாரங்களை அவர்களுக்கு வழங்கினர். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பளித்து எழுந்து நிற்கக்கூடாது என போதனை வழங்கினார். இது தொடர்பில் பாடசாலைகளிலிருந்து முறைப்பாடு கிடைத்து ஆராய்ந்தபோது சஹ்ரானின் போதனைகளிலிருந்து என்று தெரியவந்தது. 2010ம் ஆண்டு காலப் பகுதியில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனைத் தொடரும் அதேநேரம், முஸ்லிம் மாணவர்கள் தேசிய கீதத்துக்கு எழுந்துநின்று மதிப்பளிக்கத் தேவையில்லையென்றும் போதித்திருந்தார். 2010, 2011 ஆண்டு காலப் பகுதியில் இந்தப் போதனைகள் செய்யப்பட்டன. சர்வதேச இஸ்லாமிய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புலமையாளர்களுக்கு எதிரான பேச்சுக்களை அவர் முன்வைத்திருந்தார்.

ஜம்இயத்துல் உலமாவின் காத்தான்குடி கிளை இவரை நட்பான கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தது. எமது நிறுவனத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் சிலவற்றில் இவர் கலந்துகொண்டாலும் அது பலனளிக்கவில்லை. 2015ஆம் ஆண்டு காலப் பகுதியில் சஹ்ரான் ஜப்பான் சென்றிருந்தார். மூன்று மாதங்கள் அங்கிருந்திருந்தார். அவர் ஜப்பான் சென்றபோது இருந்த நிலைமை அவர் அங்கிருந்து வந்தபோது இருக்கவில்லை. பல மாற்றங்களை அவதானிக்க முடிந்தது. மீண்டும் நாட்டுக்குத் திரும்பி, தனது நிறுவனத்தின் ஊடான செயற்பாடுகளை முன்வைத்தனர். ஜப்பானில் உருது மொழியில் போதனை செய்ததாக கூறினார். ஆனால் இது பொய் என்பது நன்றாகவே தெரியும். ஆனால் அவர்  பாரியதொரு பொய்யைக் கூறினார். இதனைத் தொடர்ந்து அவருடைய நிறுவுனத்தில் இருந்தவர்கள் முரண்பட்டுக்கொண்டதால் அவர் ஆரம்பித்த நிறுவுனத்திலிருந்து 2016ஆம்  வெளியேற்றப்பட்டார். அதன் பின்னரே தேசிய தௌஹீத் ஜம்ஆத் அமைப்பை உருவாக்கினார்.

பல்வேறு தௌஹீத் ஜம்ஆத் அமைப்புக்கள் பல இருக்கின்றபோதும், ஸ்ரீலங்கா தௌஹீத் ஜம்ஆத் மற்றும் தேசிய தௌஹீத் ஜம்ஆத் ஆகிய இரு அமைப்புக்களும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர்களுடைய போதனைகள் தவறானவையாக இருந்தன. அத்துடன் அவர் தௌஹீத் என்பதன் அர்த்தத்தைப் பிழையாக விளங்கிக் கொண்டிருந்தார். யார் ஒருவர் ஒரு கடவுளில் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர் தௌஹீத் என்பதே அர்த்தமாகும். அவர் தனது தௌஹீத் செயற்பாட்டை ஆரம்பித்தபோதும் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 2015ஆம் ஆண்டு மீரா பாலிகா வித்தியாலயத்தில் நிகழ்வொன்று நடைபெற்றது. இந்த நிகழ்வு ஆசிரியர்களாலும் அபிவிருத்தி சபையினாலும் ஏற்பாடு செய்யப்பட்டது. தரம் 4,5 மாணவர்கள் இதில் கலந்துகொண்டதுடன், பாடல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டனர். இதன்போது சஹ்ரானும் அவருடைய சகாக்களும் இந்த நிகழ்வு இஸ்லாத்துக்கு எதிரானது என பிரசாரங்கள் செய்யத் தொடங்கியதுடன், துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர். இதனால் அதிருப்தியடைந்த குறித்த பாடசாலையின் அதிபர் எமது அமைப்பில் முறைப்பாடு செய்தார். இது குறித்து கலந்துரையாடலுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். இதற்கு அவர் வரவிரும்பவில்லை.

கேள்வி : -இக்காலத்தில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜம்ஆத் இருந்ததா?

பதில் :- ஆம். அந்த அமைப்புத் தொடர்பிலும் நாம் எதிராக இருந்தோம்.

கேள்வி :-ஏனைய தௌஹீத் ஜம்ஆத்களும் உள்ளனவா?

பதில் : ஆம் நான் குறிப்பிட்ட இரண்டு தௌஹீத் அமைப்புக்களை விட ஏனையவை இதுவரை பயங்கரவாத செயற்பாட்டை அவர்கள் காண்பிக்கவில்லை.  

மேலும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது குறித்த பாடசாலையின் ஆசிரியரிடம் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு கோரினோம். பாடசாலையின் செயற்பாட்டை குழப்புவது மாத்திரமன்றி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை துன்புறுத்துவதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டது. அதன் பின்னர் பாடசாலை அபிவிருத்தி சபையினால் துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வு சஹரானினால் மோசமாக விமர்சிக்கப்படுவது  ஆரோக்கியமானது இல்லையென அதில் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. குறித்த பாடசாலை அதிபரின் மனைவி மற்றும் பிள்ளைகளையும் விமர்சித்துள்ளதாக அதில்  சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதன்பின்னர் மற்றுமொரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது, தௌஹீத் அமைப்பினர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரா எனக் கேட்டு பாடசாலை ஆசிரியர் சங்கத்தினரால் அத்துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது.

 கேள்வி : பொலிஸ் முறைப்பாட்டுக்கு என்ன நடந்தது?

பதில் : இரு தரப்பினரையும் அழைத்து சமாதானத்தை பேணுமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதிபர் இதனைக் கூறினார். சஹரான் வந்தாரா என்பது எனக்குத் தெரியாது. 

அதன் பின்னர் சஹரானின் செயற்பாடுகள் மோசமடைந்ததுடன், அவர் ஜம்இயத்துல் உலமா உறுப்பினர்களை விமர்சிக்கத் தொடங்கினார். அவரை திருத்த முயற்சித்தமையால் சஹரான் அவர்களை விமர்சிக்கத் தொடங்கினார். கலாசார நிலையத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அவர் ஜனநாயகம் பற்றி உரையாற்றியிருந்தார். ஜனநாயகம் இஸ்லாத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாதது, நாட்டின் இறைமை தொடர்பில் கேள்வியெழுப்பியதுடன், தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர் என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார். அந்தக் கூட்டத்தை பாதூப்பு அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் அவதானித்திருப்பார்கள் என நாம் எண்ணியிருந்தோம். அவருடைய உரை ஒலிப்பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஜம்யத்துல் உலமா அறிக்கையொன்றை வெளியிட்டதுடன், ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய அடிப்படைக்கு அப்பால்பட்டது என 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் பின்னர் சஹரானின் பேச்சின் பின்னர், ஜம்இயத்துல் உறுப்பினர்கள் கூட கூட்டமொன்றை கூட்டி, சஹரானினால் மேற்கொள்ளப்பட்ட உரை இஸ்லாமத்துடன் தொடர்புபட்டது அல்லது என விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுத்தனர். எனினும், சஹரானின் இரண்டு சகாக்கள் இந்தக் கூட்டத்தில் தேவையற்ற கேள்விகளைக் கேட்டு குழப்பினர். இவ்வாறு குழப்பிய இருவரும் தற்கொலை குண்டுதாரிகளாகும்.

கேள்வி : யார் அந்த இரு நபர்கள்?

பதில் : ஒருவர் நியாஸ். இவர் சாய்ந்தமருதில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர். மற்றையவர் ஆசாத், சியோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர். கூட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன் இது முடிவுக்கு வந்தது. இந்தச் சம்பவம் இடம்பெற்ற பின்னரே இந்த இருநபர்களும் தற்கொலைக் குண்டுத்தாரிகள் எனத் தெரிந்துகொண்டோம். இந்தச் சம்பவங்களின் பின்னர் 2017 மார்ச் 10ஆம் திகதி சஹரான், வேறு கொள்கையைக் கொண்டவர்களுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்தார். சுபி தரப்பினருக்கு எதிராக அமைந்தது. அவர்களை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அழைத்தார். குறிப்பிட்ட சம்பவம் பாரதூரமானதாகும். சுபி சமூகத்தினர் இருக்கும் இடத்துக்கு மிகவும் அருகிலேயே கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். கல் வீச்சு நடத்தும் தூரமாக இருந்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் பட்டாசு கொழுத்தப்பட்டதாகத் தெரிந்துகொண்டேன். இக்கலவரத்தில்  சஹரானின் ஆதரவாளர்கள் கத்திகள், வாள்கள் மற்றும் கற்களைப் பயன்படுத்தியிருந்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்றபோதும், சஹரானின் தரப்பினர் எவரும் வைத்தியசாலைக்குச் செல்லவோ சிகிச்சை பெறவோ இல்லை.

கேள்வி : குறித்த கூட்டத்தில் எத்தனைபேர்  இருந்திருப்பார்கள்?

பதில் : நூற்றுக்கும் அதிகமான சஹரானின் ஆதரவாளர்கள் இருந்திருப்பார்கள். அவர்களால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கத்திகள் மற்றும் வாள்கள் பயன்படுத்தப்பட்டன. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பில் இருவர் மாத்திரமே கைதுசெய்யப்பட்டனர். இதில் சஹரான் கைதுசெய்யப்படவில்லை. 

கேள்வி : இதிலிருந்து என்ன கூற வருகின்றீர்கள்?

பதில் : ஏன் இருவர் மாத்திரம் கைதுசெய்யப்பட்டனர் என்பது தெரியாது. பின்னர் மோசமான ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக இவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான்  நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டது. அவர்கள் தடுத்துவைக்கப்பட்டதுடன், ஜுன் 30ஆம் திகதி ஆகும்போது 9ற்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர். சஹரான் மற்றும் அவருடைய சகோதரர் ரில்வான தலைமறைவாகியிருந்தனர். இவர்கள் இருவருக்கும் திறந்த பிணை வழங்கப்பட்டது. ஏனைய சந்தேகநபர்கள் எட்டு மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் மேல்நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கேள்வி : வழக்கு விசாரணைகள் நடத்தப்படவில்லையா?

பதில் : இல்லை, வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை. அவர்கள் பிணையில் இருந்தனர்.

அதன் பின்னர் சஹரான் தலைமறைவாகியதுடன், காத்தான்குடி மக்கள் அவரைக் காணவில்லை. சாதாரண கேள்வியொன்று எழுந்தது, 2017ஆம் ஆண்டில் சஹரானும் அவருடைய ஆதவாளர்களும் வாள்கள், மற்றும் கத்திகளுடனும் இருந்தவர்கள் எப்படி இந்தளவு பாரிய ஆயுதங்களைப் பெற்றார்கள் என்பதேயாகும். சஹரானின் நிதி நிலைமை மிகவும் மோசமாகவிருந்தது. ஒன்றரை வருடங்களில் எப்படி அவர் இந்தளவு நிதியைப் பெற்று பலமானவரானார். இந்தச் சந்தர்ப்பங்களின் பின்னர் பின்னணியில் அவர் இருப்பதாக அறிந்தோம். எனினும், பொதுமக்கள் அவரைப் பகிரங்கமாகக் காணவில்லை. 

கேள்வி : அவருடைய மனைவியையும் பிள்ளைகளையும் பார்க்கவரவில்லையா? அவர்கள் எங்கே இருந்தார்கள்?

பதில் : அதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் எனினும், எனக்குத் தெரியாது, அவர்கள் அங்குதான் இருந்தார்கள். 

கேள்வி : அவருடைய ஆதவாளர்கள்  நூறுக்கும் குறைவானவர்கள் என்பதை எப்படிக் கூறுகின்றீர்கள்?

பதில் : அந்த கூட்டத்தில் மிகவும் குறைவானவர்களே கலந்துகொள்வார்கள். பொதுவாக அரசியல் கூட்டமாக இருந்தாலும் வீதியில் செல்பவர்கள் என பலரும் நின்று பார்ப்பார்கள். இவ்வாறான நிலையில் அவருடைய கூட்டத்தில் எத்தனை பேர் அவருடைய ஆதரவாளர்கள் என்பது தெரியாது. அத்துடன் இந்த கூட்டன நகருக்கு முக அருகையில் நடந்ததால் சாதாரணமாக அனைவரும் வருவார்கள் தானே. 

 கேள்வி : பொதுவாக அவருடைய ஆதரவாளர்கள் எத்தனை பேர் எனக் கூறமுடியாது?

பதில் : இல்லை சரியாகக் கூறமுடியாது. எனினும், வெறுப்பவர்களே அதிகமாகவிருந்தனர். சஹரான் தொடர்பான சரியான விம்பமொன்றைக் கொடுக்கவே வந்துள்ளேன். நாட்டை விரும்பும் சட்டத்தரணி என்ற நிலையில் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றேன். குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் 66 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சனநெருக்கடி நிறைந்த பகுதியில் கூட்டம் நடத்தப்பட்டமையால் அவருடைய ஆதரவாளர்கள் எத்தனை பேர் என்பதை சரியாகக் கூறமுடியாது.

கேள்வி : ஆயிரக்கணக்கானவர்கள் அவரைத் தொடர்பவர்களாக இருக்கின்றனரா?

பதில் : குறிப்பிட்ட சம்பவத்தில் தந்தை, இரண்டு சகோதரர்கள், நண்பர்கள் என மிகவும் குறைவானவர்களே பங்கெடுத்திருந்தனர். 

காத்தான்குடி மக்கள் விழிப்புணர்வுடன் இருந்ததுடன் பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல்களை வழங்கியிருந்தனர். கலாசார நிலையத்தில் நடைபெற்ற பேச்சு தொடர்பில் நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்க முடியும்.

 கேள்வி : வேறு யாராவது இது தொடர்பிலானவர்கள் இருக்கின்றார்களா?

பதில : அப்படியானவர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணவில்லை. நாம் விழிப்புணர்வுடன் இருக்கின்றோம்.

 கேள்வி : சாய்ந்தமருதில் உயிரிழந்தவர்கள் அனைவரும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களா?

பதில் : மனைவி தவிர ஏனையவர்கள் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள். மனைவி குருநாகலை சேர்ந்தவர். 

கேள்வி : காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பில் என்ன நிலைப்பாட்டில் இருந்தனர்?

பதில் : பிரசாரங்களை ஆரம்பித்தபோது  எமது சம்மேளனம் காத்தான்குடி பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினோம். சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நாம் தெரியப்படுத்தினோம். 

கேள்வி : திகன சம்பவத்தின் பின்னர் அவருடைய உரைகளைக் கேட்டுள்ளீர்களா?

பதில் : அப்போது கேட்கவில்லை. பொதுவாக நான் அவரது உரைகளை கேட்பதில்லை. எனினும்  குண்டுத் தாக்குதலின் பின்னர் கேட்டுள்ளேன்.

கேள்வி : ஏப்ரல் 16ஆம் திகதி மோட்டார் சைக்கிள் வெடிக்கவைக்கப்பட்டமை தொடர்பில் உடனேயே தெரியுமா?

பதில் : இல்லை, உடனடியாகத் தெரியாது, குண்டுத் தாக்குதல்களின் பின்னரே அதனைத் தெரிந்துகொண்டோம்.

 கேள்வி : நாம் இலங்கையில் சிறுபான்மையினராக இருந்தாலும் உலகத்தில் நாங்களே பெரும்பான்மையானவர்கள் என ஹிஸ்புல்லா கூறுகின்றார். இதனை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா? 

பதில் : இல்லை. இந்தக் கருத்துடன் நான் இணங்கவில்லை. ஏன் இவ்வாறான சூழலில் அவர் இப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. அவருடைய கருத்து நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும். இலங்கை குறிப்பிட்ட சமூகம் ஒன்றைச் சார்ந்தது இல்லை. இலங்கையின் சட்டத்தை மதிக்கும் எல்லா சமூகத்தினரையும் சார்ந்ததாகும். அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. 

கேள்வி : ஷரியா பல்கலைக்கழகம் அமைக்கப்படுவது பற்றிய விடயம் உள்ளது.

பதில் : ஷரியா பல்கலைக்கழகமாயின் அதனை மானியங்கள் ஆணைக்குழுவே அனுமதி வழங்க வேண்டும். இலங்கையில் முஸ்லிம்களுக்கு விசேட சட்டங்கள் உள்ளன. குறிப்பிட்ட சில ஷரியா சட்டங்களை நாம் பின்பற்றுகின்றோம். இதனைவிட நீங்கள் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்.

கேள்வி : இலங்கையில் இரண்டு அரசகரும மொழிகள் இருக்கும் நிலையில் வீதிகளில் சில அரபு மொழியில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இது தேவை எனக் கருதுகின்றீர்களா?

பதில் : அரபு ஐ.நாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழியாகும். வரலாற்று  ரீதியான மொழி என்பதால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அரபு மொழியைக் கற்றுக் கொள்ளாமல் குர்ஆனை புரிந்துகொள்ள முடியும். 

கேள்வி : அரபுமயமாக்கல் எப்படி ஆரம்பமானது?

பதில் : சவுதி அரேபியாவில் ஆரம்பிக்கப்பட்ட விடயமாகும். காத்தான்குடியின் பிரதிநிதி ஹிஸ்புல்லாவாகும். அவருடைய காலப் பகுதியிலேயே இவை நடைபெற்றன. 

கேள்வி : அரபுமயமாக்கல் பின்னணில் இவர் இருப்பதாகக் கூறமுலாம்.

பதில் : 20 வருடங்கக்கு மேலாக அவர் அரசியலில் உள்ளார். அவரடைய காலப் பகுதியில் இவை முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

கேள்வி : அரபுமயமாக்கல் அடிப்படைவாதத்துக்கு வழியை ஏற்படுத்தியிருக்குமா எனக் கருதுகின்றீர்களா?

பதில் : நான் அவ்வாறு கருதவில்லை.

இந்தச் சம்பவம் முஸ்லிம் சமூகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியளார்களுடன் முஸ்லிம்கள் சிறந்த நட்புறவைப் பேணிவந்திருப்பதுடன், நாட்டின் அபிவிருத்திக்கு சிறந்த பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர். காத்தான்குடி சகவாழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இந்தச் சம்பவம் இஸ்லாத்துடன் தொடர்புபட்டது அல்லது. இஸ்லாம் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளது. அடிப்படைவாதம் இஸ்லாத்துக்குள் புகுத்தப்பட்டுள்ளது. குண்டுத் தாக்குதல் சம்பவங்களின் பின்னர் நாம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தோம்.  சம்பவங்களால் முஸ்லிம் வர்த்தகர்கள் முடக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் வேறிடங்களுக்குச் சென்று வர்த்தகம் செய்ய முடியாதுள்ளது. வர்த்தகத்துக்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டடங்களிலிருந்து வெளியேறுமாறு கட்டட உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர். அது மாத்திரமன்றி முஸ்லிம்களுக்கு ஆடை தொடர்பான பிரச்சினையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் பாதுகாப்பற்றதாக உணர்கின்றனர். 

http://www.virakesari.lk/article/58128

Link to comment
Share on other sites

மொழி ரீதியில் இலங்கையில் இரண்டு மொழிகள் உள்ளன. தமிழ் மொழி அதில் சிறுபான்மை இனம். மதம் ரீதியாக இலங்கையில் நான்கு மதங்கள் உள்ளன என பார்க்கலாம். அதில் பௌத்தம் பெரும்பான்மை இடத்தை வகிக்கின்றது. 
 
அந்த தமிழுக்கு, இல்லை தமிழருக்கு இல்லாத உரிமை, தமிழை தாய் பொழியாக் கொண்ட இஸ்லாமியச் சரியாச் சட்டத்தின் ஊடாக, இலங்கையில் முஸ்லிம்களுக்கு இருக்கிறது. சஹ்ரான் ஹாசீம் தரப்பினரின் தொடர் தாக்குதலானது, பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்டிருக்கிறது. அது வளர்ந்து மரமாகிக் காய், கனி என்று "பயன் தரும்" போது, எல்லோரும் மலைத்துப் போய்விட்டதை  இந்த வாக்குமூலம் காட்டுகின்றது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.