Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இ.தொ.கா. என்ன தும்புத்தடியா? கூட்டிவிட்டு வெளியே தூக்கி வீச!

Featured Replies

""நாங்கள் (இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர்) என்ன தும்புத் தடிகளா, கூட்டிவிட்டு தூக்கி எறிந்து விடுவதற்கு? நாங்கள் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை. எங்களது உரிமைகளைத்தான் கேட்கிறோம்.''

இவ்வாறு அரசின் மீது சீறிப் பாய்ந்திருக்கிறார் இ.தொ.கா. தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான்.

நேற்று ஜனாதிபதியின் அலரி மாளிகையில் இடம்பெற்ற பொது வைபவம் ஒன்றில் பேசுகையி லேயே அவரது இந்தச் சீற்றம் வெளிப்பட்டது.

மலையகத் தமிழ்ப் பாடசாலைகளில் முதல் முறை யாக அதிக எண்ணிக்கையில், 3 ஆயிரத்து 179 ஆசி ரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான முதல் கட்ட வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றபோதே இ.தொ.கா. தலைவர் கோபம் கொப்புளிக்க இவ்வாறு பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப் பட்டிருந்த போதிலும், அவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதி யாட்டத்தைப் பார்ப்பதற்காகத் திடீரெனப் புறப்பட்டு விட்டதால் நேற்றைய நிகழ்வில் அவர் பங்கு பற்றவில்லை. அவருக்குப் பதிலாகப் பிரதமர் ரட்ண சிறி விக்கிரமநாயக்கா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வை எதிர்வரும் 30 ஆம் திகதி அல் லது 3 ஆம் திகதி நடத்துவதற்கே முதலில் தீர்மானிக் கப்பட்டிருந்தது. அதற்கு ஜனாதிபதியும் ஒப்புதலளித் திருந்தார்.

அவ்வாறு 30 ஆம் திகதி அல்லது 3 ஆம் திகதி இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்பதைக் கருத்தில் கொண்டு அமைச்சர் ஆறுமுகனும், ஏனைய இ.தொ காவின் மூத்த பிரமுகர்கள் சிலரும், இந்தியாவில் முக்கிய சில விடயங்களைக் கையாள்வதற்காக ஏற் கனவே அங்கு புறப்பட்டுச் சென்றிருந்தனர்.

முந்திய ஏற்பாட்டுக்கு மாறாக இந்த நிகழ்வை திடீரென முற்கூட்டி நடத்திக் குழப்பத்தை ஏற்படுத் தியமை, மலையக மக்கள் தொடர்பான இந்த முக்கிய நிகழ்வில் ஜனாதிபதி பங்கு கொள்ளாமல் போனமை, மேற்படி ஆசிரிய நியமனங்களை வழங்குவதில் அர சுத் தரப்பிலும் அதிகாரிகள் மட்டத்திலும் போடப் பட்ட முட்டுக்கட்டைகள், இது விவகாரத்தில் தங்களது கட்சியினர் நடத்தப்பட்ட முறைமை போன்றவை இ. தொ. கா. தலைவருக் குச் சீற்றத்தை ஏற்படுத்தின என்று உள்வீட்டுத் தகவல் கள் தெரிவிக்கின்றன.

அங்கு தமிழில் உரை நிகழ்த்துகையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேலும் கூறியவையாவது:

இந்த வைபவம் காலை 9.00மணிக்கு ஆரம்பமா வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நான் இங்கு உரிய நேரத்துக்கு வந்து பார்த்தபோது பொறுப்பானவர்கள் எவருமே வந்திருக்கவில்லை. கல்வி அமைச்சின் அதிகாரிகள் கூட வந்திருக்கவில்லை.

நான் முன்னர் ஜனாதிபதியைச் சந்தித்தபோது மே 3ஆம் திகதி இவ்வைபவத்தை வைத்துக்கொள் வோம் என்றார் அவர். எனக்கு புதுடில்லியிலிருந்து வந்த அழைப்பை அடுத்து நான் ஜனாதிபதியின் அனு மதியுடன் இந்தியா சென்றேன்.

திடீரென மலையக ஆசிரியர் நியமனம் 26 ஆம் திகதி வழங்கப்படுகிறது என எனக்குத் தகவல் தரப் பட்டது. நான் இந்திய வெளியுறவுச் செயலாளர், இந் திய சுகாதார அமைச்சர் ஆகியோருடன் முக்கிய விட யங்கள் குறித்து பேச்சு நடத்தவிருந்தேன். இந்தியா வில் 800 மலையக இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுக் கொடுத்தல், கொழும்பு ஜெயவர் தனபுர வைத்தியசாலைபோல ஓர் வைத்தியசாலையை நுவரெலியாவில் நிர்மாணித்தல் போன்ற விடயங் கள் குறித்து இந்தியத் தலைவர்களுடன் நடத்தவிருந்த பேச்சுகளை இரத்துச் செய்துவிட்டே இங்கு இந் நிகழ்வுக்கு விரைந்து வந்தேன்.

மலையக ஆசிரியர் நியமனத்துக்கு கல்வி அமைச் சின் அதிகாரிகளே முட்டுக்கட்டை போட்டனர். ஆனால், கல்வி அமைச்சர் நியாயத்துடன் செயற்பட்டார். முட்டுக்கட்டை போட்டவர்கள் யாரென்பது எமக் குத் தெரியும். எம்மை இளக்காரமாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் என்ன தும்புத்தடியா கூட்டிவிட்டு வெளியே தூக்கி எறிந்துவிட?

இவ்வாறு மேடையில் வைத்தே அமைச்சர் ஆறு முகன் தொண்டமான் கர்ச்சித்தார்.

உதயன்

-----------

இவருக்கு இப்பவா இதெல்லாம் தெரியுது :lol:

இவருக்கு இப்பவா இதெல்லாம் தெரியுது :lol:

தெரிஞ்சும் பிரயோசனம் இல்லை..நாளைக்கே மப்பில மறந்துடுவார் :P

  • கருத்துக்கள உறவுகள்
:lol: தும்புத்தடி இல்லைங்கோ குப்பை

தும்புத்தடியாவது கூட்டுவதுக்கு பிரியோசனாமாக இருக்கும் இவர்கள் மலத்துக்கு சமனானவர்கள்

  • தொடங்கியவர்

கேட்டால் சொல்வர்கள் மலையக மக்களுக்கு உரிமை பெற்று கொடுக்க அரசில இணைந்தோம் என்று, அப்படி சொல்லி சொல்லியே வீட்டில அலுமாரியா நிரப்பிடுவாங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.