Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராகுல் காந்தி பதவி விலகல்: 'தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகி விட்டேன்'

Featured Replies

இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உண்டான தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிவிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் 52 இடங்களில் மட்டுமே வென்றது.

ஒட்டுமொத்த இடங்களில் 10%ஐ விடவும் கூடுதல் இடங்களில் வெல்லவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் பிரதான எதிர்க் கட்சி அந்தஸ்தும் கிடைக்கவில்லை.

 

2014இல் நடந்த மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் 44 இடங்களில் மட்டுமே வென்றது என்பதால் அப்போதும் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தர முடியாது என்று நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தெரிவித்திருந்தது.

இரண்டு இடங்களில் போட்டியிட்ட ராகுல் அவர் தொடர்ந்து மூன்று முறை வென்ற உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் தோல்வியைச் சந்தித்தார்.

இரண்டாவது தொகுதியாக அவர் களம் இறங்கிய கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் வென்றார்.

'நானே பொறுப்பு'

இந்த நாட்டின் மதிப்பீடுகள் மற்றும் விழுமியங்களுக்கு உயிர் ஆதாரமாக விளங்கிய காங்கிரஸ் கட்சிக்கு தொண்டாற்றியது எனக்கு ஒரு மிகப்பெரிய கௌரவம். என் மீது அளவுக்கும் அதிகமான அன்பையும் நன்றி உணர்வையும் காட்டிய இந்த நாட்டுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று அந்த அறிக்கையின் தொடக்கத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் என்ற முறையில் தேர்தல் தோல்விக்கு தாமே பொறுப்பு என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள நான்கு பக்க அறிக்கை ஒன்றில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் இவரது பதிவு @RahulGandhi: It is an honour for me to serve the Congress Party, whose values and ideals have served as the lifeblood of our beautiful nation. I owe the country and my organisation a debt of tremendous gratitude and love.Jai Hind 🇮🇳புகைப்பட காப்புரிமை @RahulGandhi @RahulGandhi <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @RahulGandhi: It is an honour for me to serve the Congress Party, whose values and ideals have served as the lifeblood of our beautiful nation. I owe the country and my organisation a debt of tremendous gratitude and love.Jai Hind 🇮🇳 " src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/RahulGandhi/status/1146359704815194112~/tamil/india-48854332" width="465" height="564"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @RahulGandhi</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@RahulGandhi</span> </span> </figure>

கட்சியின் அடுத்த தலைவரை தானே முன்மொழிய வேண்டும் என்று கட்சியினர் தம்மிடம் கூறியதாகவும் அவ்வாறு தாம் தேர்வு செய்வது முறை ஆகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பை ஒரு குழுவிடம் ஒப்படைக்குமாறு பதவி விலகிய உடனேயே காங்கிரஸ் காரிய கமிட்டியிடம் தாம் கேட்டுக்கொண்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்திபடத்தின் காப்புரிமை Getty Images

புதிய தலைவரை தேர்வு செய்ய அவர்களுக்கு தாம் அதிகாரம் அளித்துள்ளதாகவும், சுமூகமான மாற்றத்துக்கு தமது முழு ஆதரவை வழங்க உறுதியளித்துள்ளதாவும் ராகுல் காந்தி அதில் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டமும் பெருமையும் நிறைந்த வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, இந்தியத் தன்மையுடன் இயைந்துள்ளது. துணிவு, அன்பு மற்றும் நம்பிக்கையுடன் வழிநடத்துபவரை தலைமையேற்க கட்சி தேர்வு செய்யும் என்று தாம் நம்புவதாக ராகுல் காந்தி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

எனது போராட்டம் அதிகாரத்துக்கு மட்டுமானதல்ல. எனக்கு பாஜக மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை; ஆனால் என் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் இந்தியா பற்றிய அவர்களின் கருத்தை உள்ளார்ந்து எதிர்க்கிறது.

இந்தியா பற்றிய எனது கருத்தும் அவர்களது கருத்தும் நேரெதிராக உள்ளதால் இந்த எதிர்ப்பு கிளம்புகிறது என்று ராகுல் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/india-48854332

  • கருத்துக்கள உறவுகள்

à®®.பி. à®®à¯à®¤à®²à¯à®µà®°à¯

ராகுல் விலகல்.. காங்கிரஸின் இடைக்காலத் தலைவராகிறார் மோதிலால் வோரா?

ராஜினாமாவை திரும்ப பெற ராகுல் மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து அக்கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமனம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் தலைவராக கடந்த 2017-ஆம் ஆண்டு ராகுல் காந்தி பதவியேற்றார். இவர் பதவியேற்றபின்னர் வடமாநிலங்களில் நடந்த மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரண்டன.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை கூட பெற முடியாமல் பெரும் தோல்வி அடைந்தது.

இந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் ராகுல் அப்பதவியில் தொடர பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதை ஏற்க மறுத்த ராகுல் காந்தி இன்றைய தினம் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதுகுறித்த விளக்கத்தையும் அவர் அளித்துவிட்டார். இந்த நிலையில் அப்பதவிக்கு வேறு ஒருவரை தானே தேர்வு செய்ய முடியாது என கூறிவிட்டார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக கட்சியின் மூத்த தலைவர் மோதிலால் வோரா தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது. 90 வயதான வோரா இரு முறை மத்திய பிரதேச முதல்வராகவும் , உத்தரப்பிரதேச ஆளுநராகவும் பதவி வகித்தார்.

தற்போது மாநிலங்களவை எம்பியாக உள்ளார். காரிய கமிட்டியின் உறுப்பினர்களாக உள்ள மன்மோகன் சிங், ஏ கே அந்தோணி, மோதிலால் வோரா ஆகியோரில் ஒருவரை இடைக்கால தலைவராக நியமிக்க மூத்த தலைவர்கள் விரும்பினர். இவர்களில் மன்மோகனுக்கும் அந்தோணிக்கும் இடைக்காலத் தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை.

இதனால் வோராவை ஏற்குமாறு நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதையடுத்து சோனியாகாந்தியின் ஆலோசனைபடி வோரா இடைக்கால தலைவராக நியமிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு நியமிக்கப்படும் இடைக்காலத் தலைவர் மற்ற நிர்வாகிகள், மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து காங்கிரஸுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வர்.

மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சுஷில்குமார் ஷிண்டே, அசோக் கெலாட் ஆகியோரில் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவோ செயல்தலைவராகவோ நியமிக்கப்படுவர் என தெரிகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/motilal-vora-will-be-selected-as-interim-president-of-congress-355899.html

  • கருத்துக்கள உறவுகள்

34wgop.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.