Jump to content

சோபாவும் சுயாதிபத்தியமும் : அமெரிக்க - இலங்கை உடன்படிக்கைகள் குறித்த விசனங்கள் ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சோபாவும் சுயாதிபத்தியமும் : அமெரிக்க - இலங்கை உடன்படிக்கைகள் குறித்த விசனங்கள் ஏன்?

 

(பி.கே.பாலசந்திரன்)

அமெரிக்காவுடன் படைகளின் அந்தஸ்த்து உடன்படிக்கை (Status of Forces Agreement – SOFA)  கைச்சாத்திடும் தறுவாயில் இலங்கை இருக்கிறது.மிகவும் சர்ச்சைக்குரியதாக நோக்கப்படுகின்ற இந்த உடன்படிக்கை கொள்கையளவில் இலங்கையை இலட்சக்கணக்கான அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளினதும், பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் கொந்தராத்துக்காரர்களின் மகிழ்ச்சியானதொரு வேட்டைக்களமாக மாறிவிடக்கூடும் என்று மூலோபாய விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறுகிறார்கள்.

thilak_marapana.jpg

தயாராகிக் கொண்டிருக்கும் இன்னுமொரு சர்ச்சைக்குரிய உடன்படிக்கை மிலேனியம் சவால் கூட்டுத்தாபனத்திடமிருந்து (Millennium Challenge Corporation – MCC ) 48 கோடி அமெரிக்க டொலர்களைப் பெறுவது தொடர்பானதாகும்.

 இந்த உடன்படிக்கை அமெரிக்க காங்கிரசும், இலங்கை அமைச்சரவையும் அங்கீகரிக்கும் பட்சத்தில் பல உட்கட்டமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். 

ஆனால் பிரதானமாக கிழக்குக் கரையோரத்தையும், மேற்குக் கரையோரத்தையும் இணைக்கும் 200 கிலோமீட்டர் கொழும்பு – திருகோணமலை பொருளாதார வழித்தடத்தை(Colombo – Trincomalee Economic Corridor – CTEC) அமைக்கும் திட்டம் இதில் உள்ளடங்கியுள்ளது.

மிலேனியம் சவால் கூட்டுத்தாபன உடன்படிக்கை அரசினால் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை விவசாயிகள் பராதீனப்படுத்துவதற்கு வசதியாக நாட்டின் காணிச்சட்டங்களில் அரசாங்கம் மாற்றம் செய்ய வேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது. 

அவ்வாறு பாராதீனப்படுத்தும் காணிகளை வாங்குபவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களாக இருக்க முடியுமென்று இலங்கையின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கலாநிதி பாலித கோகன கூறுகிறார்.

கொழும்பு – திருகோணமலை பொருளாதார வழித்தடம் 1987 ஜுலை இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையை மீறுவதாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அந்த சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் இந்தியாவிற்குப் பாதகமாக அமையக்கூடிய ஒரு இராணுவ நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படுவதற்கு வெளிநாடொன்றுக்கு இலங்கைத்தீவின் எந்தவொரு துறைமுகம் அல்லது விமான நிலையத்தை வழங்குவதிலிருந்து இலங்கை அரசாங்கத்தைத் தடுக்கிறது. அமெரிக்கா திருகோணமலையை இராணுவ போக்குவரத்து – தளபாட விநியோகத் தளமாக (Logistic Base) அபிவிருத்தி செய்ய நோக்கம் கொண்டுள்ளது என்றும் கலாநிதி கோகன கூறினார்.

நாட்டின் சுயாதிபத்தியத்தைப் பாரதூரமாகப் பாதிக்கும் வகையில் அமைவதால் தான் சோபாவை கடுமையாக எதிர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறார்.

தற்போதைய வடிவில் சோபா ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்குக் கூறுமாறு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு ஜனாதிபதி பணிப்புரையும் விடுத்திருந்தார். 

பொதுவில் அமெரிக்கா சார்பானவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சோபா தொடர்பில் ஐயுறவுகளைக் கொண்டிருக்கிறார். அவரது சம்மதம் இல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவரான வெளியுறவு அமைச்சர் மாரப்பன சோபா குறைபாடுகளைக் கொண்டிருக்கிறது என்று அமெரிக்கர்களுக்குக் கூறியிருக்க மாட்டார். நிதியமைச்சர் மங்கள சமரவீர மாத்திரமே சோபாவையும், மிலேனியம் சவால் கூட்டுத்தாபன உடன்படிக்கையையும் முழுமையாக ஆதரிக்கிறார்.

2017 நுழைவுரிமை உடன்படிக்கையும், சோபாவும் 2007 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட நுழைவுரிமை மற்றும் சேவைகள் உடன்படிக்கை (Access and Services Agreement – ACSA) எளிதான ஒன்றாகும். இலங்கை இராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி நடவடிக்கைகளுக்காக வருகின்ற அமெரிக்கத் தருப்புக்களுக்கு வசதி செய்வதை நோக்கமாகக் கொண்டதென்று இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியும், தற்போது பாத் பைன்டர் பவுண்டேஷனில் கடல்சார் பாதுகாப்பு நிபுணராகப் பணியாற்றுபவருமான அட்மிரல் ஜயநாத் கொலம்பகே கூறினார்.

அக்ஸா 2007 பத்துவருட காலத்திற்கானது என்றே நிர்ணயிக்கப்பட்டது. 2017 இல் அதனைப் புதுப்பிப்பதற்காகப் பரிசீலித்த போது அது முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக மாறியிருந்தது.

அதாவத ஐம்பதிற்கும் மேலான இணைப்புக்களைக் கொண்ட 83 பக்க ஆவணமாக அது இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அது வரையறை எதனையும் கொண்டிருக்கவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் உடன்படிக்கையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் அதை முடிவிற்குக் கொண்டுவர விரும்பினால் 180 நாட்கள் முன்னறிவித்தலைக் கொடுக்க வேண்டும் என்ற ஏற்பாடொன்றைத் தவிர வேறெந்தக் காலவரையறையையும் அது கொண்டிருக்கவில்லை என்று விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதிக்கட்டத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த கலாநிதி கோகன கூறினார்.

அதையடுத்து அக்ஸாவை விரிவானதொரு சோபாவினால் பதிலீடு செய்யும் யோசனையை அமெரிக்கா முன்வைத்தது. 'சன்டே டைம்ஸ்" பத்திரிகையில் வெளியான கட்டுரையில் காணப்பட்ட விபரங்களின்படி அமெரிக்க அரசாங்கம் அதன் விமானங்களும், கப்பல்களும் எந்தவிதமான சோதனைக்கும் உட்படாதிருக்கக் கூடியவாறான ஏற்பாடொன்றை விரும்புகிறது. 

இதன் அர்த்தம் அமெரிக்க இராணுவக் கப்பலோ அல்லது விமானமோ இலங்கையின் துறைமுகம் ஒன்றிற்கு அல்லது விமான நிலையத்தில் தரித்து நிற்கும் போது கடற்படை, கரையோரக் காவற்படை அல்லது சுங்கத்திணைக்களம் போன்ற இலங்கை பந்தோபஸ்த்து அமைப்புக்கள் எவற்றினதும் அதிகாரிகள் அந்தக் கப்பலிலோ, விமானத்திலோ ஏறி சோதனை எதையும் செய்ய முடியாது. 

தரையில் கூட அமெரிக்க வாகனங்களை அவர்கள் சோதனையிட முடியாது, ஆனால் இவ்வாறு சோதனை செய்வதென்பது ஒரு நாட்டின் சுயாதிபத்திய உரிமையாக சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

இலங்கைக்குள் அனுமதிப்பத்திரங்கள், சுங்கத்தீர்வைகள், வரிகள் மற்றும் எந்தவொரு கட்டண அறவீடுகளில் இருந்தும் விதிவிலக்களிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா விரும்புகிறது.

இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் 'கடமையிலிருக்கும் போது" அமெரிக்கத் துருப்புக்கள் அவர்களின் சீருடைகளை அணிவதற்கும், ஆயுதங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களைக் கொண்டு திரிவதற்கும் அனுமதியளிக்கப்பட வேண்டும் என்றும் வாஷிங்டன் கோருகிறது. 

ஆனால் இலங்கை அரசியலமைப்பினதும், வழமையான சட்டங்களினதும் பிரகாரம் சொந்த ஆயுதப்படைகளுக்கும், பொலிஸாருக்கும் மாத்திரமே இந்த சிறப்புரிமைகள் உள்ளது.

மேலும் அமெரிக்கத் துருப்புக்களும், கொந்தராத்துக்காரர்களும் அவர்களிடமுள்ள அமெரிக் அடையாள ஆவணங்களை மாத்திரம் பயன்படுத்தி தனியாகவோ அல்லது கூட்டாகவோ இலங்கைக்குள் பிரவேசிக்கவும், வெளியேறவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வாஷிங்டன் விரும்புகிறது. இதன் அர்த்தம் அவர்கள் கடவுச்சீட்டையோ அல்லது விசாவையோ கொண்டுதிரியப் போவதில்லை என்று 'சன்டே டைம்ஸ்" கூறுகிறது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திலுள்ள தொழில்நுட்ப மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளும், சிறப்புரிமைகளும் அமெரிக்க இராணுவ அதிகாரிகள், இராணுவ கொந்தராத்துக்காரர்கள் மற்றும் இராணுவ விநியோகஸ்த்தர்களுக்கும் வழங்கப்படுவதற்கு சோபா வகைசெய்வதாக அமைகிறது.

அமெரிக்க இராணுவத்தினர் தங்குவதற்கும், பொழுதுபோக்குவதற்குமான நிலையமொன்றை இங்கு அமைப்பதனால் ஏற்படக்கூடிய சமூகக் கெடுதிகள் குறித்து கலாநிதி பாலித கோகன கவனம் செலுத்திய அதேவேளை, அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கொந்தராத்துக்காரர்கள் என்ற வடிவில் அமெரிக்கக் கூலிப்படையினர் இலங்கைக்குள் பிரவேசிக்கக்கூடிய சாத்தியம் குறித்து அட்மிரல் கொலம்பகே எச்சரிக்கை செய்கிறார். (உதாரணமாக பிளக் வாட்டர் என்ற இராணுவக் கம்பனி மத்திய கிழக்கில் இயங்குகிறது) சுமார் 20 இலட்சம் அமெரிக்க அதிகாரிகள் இலங்கையில் ஏதாவதொரு வழியில் செயற்படுவதற்கு அதிகாரம் அளிக்கப்படலாம் என்று கோகனவும், கொலம்பகேயும் கூறுகின்றனர்.

இராஜதந்திர உரிமைகளைப் பொறுத்தவரை, பரஸ்பர செயற்பாட்டை வலியுறுத்தும் 1996 இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தை சோபா மீறுகிறது. அமெரிக்காவுக்கு இலங்கையில் கிடைக்கின்ற அதே இராஜதந்திர சிறப்புரிமைகளை அமெரிக்காவில் உள்ள இலங்கையின் இராஜதந்திரிகளுக்கு வாஷிங்டன் வழங்கவில்லையென்றால் இலங்கை அரசாங்கம் இந்த சட்டத்தின் பிரகாரம் அந்த சிறப்புரிமைகளை இங்குள்ள அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு மறுக்கமுடியும். இலங்கையில் இருக்கின்ற வெளிநாடொன்றின் தூதரகத்துக்கும் அதனுடன் தொடர்புபட்ட நபர்களுக்கும் மேற்கூறப்பட்ட சட்டத்தின் பிரகாரம் வழங்கப்படுகின்றவற்றையும் விட குறைவான சிறப்புரிமைகளும் விதிவிலக்குகளுமே அந்த நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கும் அதனுடன் தொடர்புபட்ட நபர்களுக்கும் வழங்கப்படுகிறதென்று வெளியுறவு அமைச்சருக்கு தெரியவந்தால் அவர் வர்த்தமானி பிரகடனம் ஒன்றின் மூலம் இங்குள்ள அந்த நாட்டின் தூதரகத்துக்கு அந்த உரிமைகளை ரத்துச்செய்யமுடியும் என்று சட்டம் கூறுகிறது.

எனவே 1996 இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் அடிப்படையில் நோக்கும்போது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் 1995 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட சோபாவை 2019 இல் எதிர்பார்க்கப்படுகின்ற சோபாவுக்கு தன்னியல்பாக நீடிக்க முடியாது.

வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன இறுதியாக அமெரிக்காவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது அங்கு இராஜாங்க திணைக்களத்துக்கும் பாதுகாப்பு திணைக்களத்துக்கும் இது கூறப்பட்டது.

அணிசேரா கொள்கைக்கு பாதிப்பு எந்த நாட்டையும் எதிரியாக நோக்காமல் சகல நாடுகளுடனும் நட்புறவைப் பேணுவதற்கு விரும்புகின்ற ஒரு அணிசேரா நாடு என்றவகையில் இலங்கைக்கு இருக்கின்ற அந்தஸ்தை சோபா பாரதூரமாகப் பாதிக்கிறது என்று கலாநிதி கோஹன கூறுகிறார்.

'எந்தவொரு நாட்டினதும் அச்சுறுத்தலின் கீழ் நாம் இல்லையென்பதால், ஒரு வல்லரசு நாட்டுடன் எதற்காக நாம் இத்தகைய பரந்தளவிலான உடன்படிக்கையொன்றை நாம் செய்யவேண்டும் ? இலங்கையில் ஒரு

தளத்தை அமைப்பதன் மூலமாக சீனாவுடனான தனது மோதலுக்குள் எம்மை இழுத்துவிடுகின்ற நோக்கம் அந்த வல்லரசுக்கு இல்லையொன்றால் எம்முடன் இத்தகைய உடன்படிக்கையொன்றை செய்வதில் ஏன் தீவிர அக்கறை காட்டவேண்டும்?" என்று கோஹன கேள்வியெழுப்பினார்.

சீனா வல்லமை கொண்ட நாடாக வளர்ந்துவருவதைத் தொடர்ந்து இந்தோ -- பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்துகின்றமையால், சோபா சீன - அமெரிக்க மோதல் ஒன்றுக்குள் இலச்கையை பெரும்பாலும்இழுத்துவிடும் ஆபத்து இருக்கிறது என்று அவர் எச்சரிக்கை செய்கிறார்.

கபடத்தனமான இந்திய மௌனம் இந்து சமுத்திரத்திலும் தெற்காசியப் பிராந்தியத்திலும் வல்லமைபொருந்திய ஒரு நாடாக விளங்கும்

இந்தியா அமெரிக்காவுடனான இலங்கையின் சோபா தொடர்பான விவகாரத்தில் மௌனம் சாதிக்கின்றது என்று அட்மிரல் கொலம்பகே சுட்டிக்காட்டுகிறார். இலங்கையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதையோ அல்லது இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்க தந்திரோபாயத்துடன் முழுமையாக ஒத்துப்போகவோ இந்தியா விரும்புவதாக கொலம்பகே நம்பவில்லை.

'வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக சீனாவுடன் நல்லுறவைப் பேணுவதற்கே இந்தியா விரும்புகிறது.எனவே, இந்தியா தனக்கே உரிய முறையில் சந்தடியின்றி நடவடிக்கைகளை எடுக்கின்றது என்றே தோன்றுகிறது என்று அவர் கூறுகிறார்.

'கடந்த காலத்தில் இந்தியா கடல் பாதுகாப்பில் பெருமளவுக்கு கவனம் செலுத்தாமல் இருந்தது.அதனாலேயே 26/11 மும்பை தாக்குதல் இடம்பெறக்கூடியதாக இருந்தது. கடல் பாதுகாப்பில் அக்கறையில்லாத இந்திய போக்கே இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஊடுருவலுக்கும் வழிசெய்தது" என்று கொலம்பகே சுட்டிக்காட்டினார்.

மிலேனியம் சவால் கோர்ப்பரேசனின் நிதியைப் பயன்படுத்தி திருகோணமலையை போக்குவரத்து தளமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் சோபாவுடன் தொடர்புடையதாகும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் கலாநிதி கோஹன இதனால் இந்தியா கவலைப்படவேண்டும் என்கிறார்.

இந்தியாவுக்கு பாதகமான முறையில் இராணுவ நோக்கங்களுக்கு எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இலங்கையின் துறைமுகங்களில் அல்லது விமானநிலையங்களில் எந்தவொன்றுமே வழங்கப்படக்கூடாது என்று 1987 இந்திய -- இலங்கை சமாதான உடன்படிக்கை கூறுகிறது.அது நாம் அலட்சியம் செய்யமுடியாத இருதரப்பு உடன்படிக்கை என்று அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார காரணி ஆனால், சோபாவின் உறுதியான ஆதரவாளராக நிதியமைச்சர் மங்கள சமரவீர விளங்குகிறார்.

சோபா ஆபத்தானது என்ற குற்றச்சாட்டை அவர் மறுதலித்திருக்கிறார். 'ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் 1995 ஆம் ஆண்டில் சோபா கைச்சாத்திடப்பட்டது. அது நாட்டுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

 தற்போது நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தைகள் அந்த உடன்படிக்கையைப் புதுப்பிப்பதைப் பற்றியவையே " என்று சமரவீர கூறுகிறார்.

'மேலும், சுமார் 370 கோடி டொலர்கள் பெறுமதியான பொருட்களையும் சேவைகளையும் வருடாந்தம் எம்மிடமிருந்து கொள்வனவு செய்கின்ற நாடு என்பதால் அமெரிக்காவை அந்நியப்படுத்துவது இலங்கையின் பொருளாதார நலன்களுக்கு பாதகமாக அமையும்.ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி பங்காளியாக இருக்கிறது. இலங்கையின 500 கோடி டொலர் ஆடைக்கைத்தொழில் துறையின் உற்பத்திகளில் மிகவும் பெருமளவு சதவீதத்தை ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் கொள்வனவு செய்கின்றன " என்று நிதியமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

https://www.virakesari.lk/article/59671

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.