Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசியின் கொடுமை - இலங்கையில் மற்றுமொரு துயர சம்பவம் - தாயும் மகளும் பரிதாப நிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குருநாகலில் பசியின் கொடுமை காரமாண தாயும் மகளும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கல்கமுவ பிரதேசத்தில் பல நாட்களாக உணவின்றி தவித்த தாயும் மகளுமே தற்கொலை செய்ய முயன்றுள்ளனர். எனினும் பொலிஸார் அவர்களை காப்பாற்றியுள்ளனர்.

கணவனால் கைவிடப்பட்ட 38 வயதான பெண்ணும் அவரது 10 வயது மகளுமே இவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர்.

தாயும் மகளும் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் கண்ணீருடன் நிற்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அவர்களை அவ்விடத்தில் இருந்து காப்பாற்றிய வேளையில், கோட்டையில் இருந்து வவுனியா நோக்கி ரயில் ஒன்று பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடனடியாக பொலிஸ் அதிகாரிகள் செயற்பட்டிருக்கவில்லை என்றால் இரண்டு உயிர்களும் பறி போயிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணுடன் கணவனுக்கு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர் விட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

எந்தவித வருமானமும் இல்லாத நிலையில், வீதியில் சென்றவர்களிடம் உதவி கோரிய போதிலும் எவரும் உதவி செய்யவில்லை.

வீட்டில் உடல் நிலை கோளாறுடன் வயோதிப தந்தை ஒருவரும் உள்ளார். பசிக்கொடுமையை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை முயற்சியை எடுத்ததாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை கடந்த மாதம் வறுமையின் காரணமாக தமிழ் பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் ரயிலில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் கொள்ளுப்பிட்டி - பம்பலப்பிட்டிக்கு இடையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/community/01/220032?ref=imp-news

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தின் தலைநகரில் ஒரு சோமாலியா - அரசியல்வாதிகளும் இந்நிலைக்கு காரணமே - Thina Seithy

By venuja -
ddddd.jpg

தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் பாட்டாளிபுரம் என்ற இடத்தில் வாழ்ந்துவரும் தமிழ் குடும்பங்களின் இருப்பிடங்கள்தான் இவை.

gfgggggggggggg.jpgddddddddvvvvvv.jpg

வறுமையும் பசியும் வாட்டிவதைக்கும் அந்த உறவுகளையும் கொஞ்சம் நினைத்துக்கொள்வோம் – தமிழ் தேசியம் பற்றிப் பேசுகின்ற போது…

இந்தப்பகுதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனின் தேர்தல் தொகுதி.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேச்சு நடத்தி அரசுக்கு முண்டுகொடுத்துவரும் தமிழ்தேசியக் கூட்மைப்பு இந்த மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக செய்தது தான் என்ன? ரணில் அரசாங்கம் கவிழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக முண்டுகொடுத்துவருபவர்கள் இந்த மக்களாலேயே தாம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதனை ஏன்மறந்தனர்.

கம்பெரலிய திட்டத்தினூடாக பெருமளவு நிதியைப்பெற்று தனிநபர் வீடுகளுக்குச் செல்லும் வீதிகளையும் துரித கதியில் புனரமைப்பு செய்வதில் காட்டப்படும் வேகம் இந்த மக்களின் அடிப்படை வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முனையாதது ஏன்?

இந்தநிலையில் மக்களை மறந்து வாழும் மக்கள் பிரதிநிதிகளுக்கு தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கூட மக்களின் நிலை தெரியவரவில்லையா?

கடந்த முப்பது வருடங்களாக யுத்தவாழ்வுக்குள் நிர்க்கதியாக வாழ்ந்த மக்கள் தற்போது சொந்த இடத்துக்கு திரும்பியும் திரும்பாமலும் உள்ளநிலையில் அடிப்படை வாழ்வுக்கே அல்லலுறுகின்றனர்.

உறவுகளை இழந்து,தமது உடல் உறுப்புக்களை இழந்து எவருமே உதவ முன்வரமாட்டார்களா என ஏங்கும் எம்மவருக்கு அவர்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே முதுகை காட்டுவதுதான் வேதனை.

அத்துடன் தற்போது வரவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு யாரை ஆதரிக்கலாம் என மந்திராலோசனை வேறு. மக்களிடம் பல்வேறு பொய்களைச் சொல்லி ஆதரவுக்கரம் கோரவும் தீட்டப்படுகிறது திட்டம்

ஆனால் மக்களின் வாழ்வோ அதேநிலைதான்..

https://thinaseithy.com/தமிழீழத்தின்-தலைநகரில்-ஒ/?fbclid=IwAR0RFDJHmcZeDvfrYy0pyNfWBgz5NeIW3TYuii7XhTZvG_ICWGBWM6Sa7OQ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.