Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மின்னல் வேகத் தாக்குதல்

Featured Replies

மின்னல் வேகத் தாக்குதல்

-புரட்சி-

இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனியர்களினால் பயன்படுத்தப்பட்ட பிலிட்ஸ்ரீக் (Blitzkrieg) என்ற மின்னல் வேகத் தாக்குதல் நடவடிக்கையானது சூழ்ச்சிகர நகர்வுத் தந்திரோபாயத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியாகவும் பயன்பாடாகவும் கருதப்படுகின்றது.

இது தொடர்பாக படைத்துறை மூலோபாய வல்லுநரும் வரலாற்றாசிரியருமான லிட்டெல் ஹாட் கூறுவதாவது;

மின்னல் வேக நடவடிக்கையின் தந்திரோபாயமானது நீரால் நிரம்பிய பாரிய குளத்தின் அணைக்கட்டை நீரானது தள்ளுவது அல்லது அமுக்குவது போன்றது.

அதாவது நீரானது குளத்தினது அணைக்கட்டின் எல்லா பகுதிகளுக்கும் அமுக்கத்தை பிரயோகிக்கும். எங்கு சிறிய இடைவெளி அல்லது பலவீனம் இருக்கின்றதோ அங்கு நீரானது வெளியேறத் தொடங்கும். முதலில் சிறிய இடைவெளியூடாக கசியத் தொடங்கிய நீர் பின்னர் வேகமாக வெளியேறத் தொடங்கும் போது அந்த இடைவெளியையும் அகட்டிப் பெருப்பிக்கும். அத்துடன் நீரானது வேகமாக ஓடி வெளியேறி அணைக்கட்டின் பின்பக்கத்தைச் சுற்றிப் பரவி அணைக்கட்டினைப் பலவீனப்படுத்தும்.

சூழ்ச்சிகர நகர்வுக் கோட்பாடானது மேலே கூறப்பட்ட முறையிலேயே செயற்படுத்தப்படுகின்றது. எதிரிகளின் பாதுகாப்பு நிலைகளின் பலவீனமான பகுதிகளை அல்லது இடைவெளிகளைக் கண்டுபிடித்து அதனூடாக உடைப்பை ஏற்படுத்த வேண்டும். இதனால் எதிரிக்கு ஏற்படும் திகைப்பையும் அதிர்ச்சியையும் பயன்படுத்தி குறிப்பிட்ட சமரில் வெற்றி கொள்வதே இந்த தந்திரோபாயத்தின் சிறப்பம்சம் ஆகும்.

விடுதலைப் புலிகளின் முல்லைத்தீவு நகர், கிளிநொச்சி நகர் மீட்புச் சண்டைகள் மற்றும் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை என்பன மேற்கூறிய தந்திரோபாயத்தின் அடிப்படையிலேயே இடம்பெற்றது என்பதை ஒப்பீட்டு பார்க்கலாம்.

ஜேர்மனியர்கள் சன்சூவின் அறிவுரைகளையும் மின்னல்வேகத் தாக்குதல் தந்திரோபாயத்தினையும் பயன்படுத்தி எதிரிகளின் நிலைகளின் பலவீனமான பகுதிகளைக் கண்டறிந்து ஊடுருவல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். தலையோடு தலை மோதுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்ப்பதே இந்த தந்திரோபாயத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

இந்த தந்திரோபாயத்தின் அடிப்படையில் ஊடுருவல் நகர்வுகளை மேற்கொள்ளும்போது தமது இலக்கின் நோக்கத்தை மறைப்பது எதிரிக்கு திகைப்பை ஏற்படுத்தும் என்பது ஜேர்மனியர்களுக்கு சாத்தியமாயிற்று. அத்துடன், எதிரியின் நிலைகளில் எந்தெந்தப் பகுதியில் பலவீனம் இருக்கின்றது என்பதைக் கண்டறியவும் முடிந்தது.

எதிரியின் முன்னணி நிலைகளின் பல்வேறு பகுதிகளினூடாக ஒரே சமயத்தில் ஊடுருவி தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் எதிரியின் பலமான பகுதிகளினூடாக முட்டி மோதுவதைத் தவிர்க்க முடிந்ததோடு பலவீனமான பகுதிகளினூடாக விரைவான நகர்வுகளை மேற்கொண்டு சமர்களிலே வெற்றிகளைப் பெறுவதோடு கிடைக்கின்ற வெற்றிகளையும் தக்க வைத்துக் கொள்ளவும் முடிந்தது.

இப்போது பிலிட்ஸ்ரீக் என்ற மின்னல் வேக நடவடிக்கையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

1939 ஆம் ஆண்டு ஜேர்மன் நாசிப்படைகள் போலந்தை ஆக்கிரமித்தது தொடர்பாக அமெரிக்காவின் ரைம்ஸ் சஞ்சிகையின் செப்டெம்பர் 25 1939 இதழில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது;

"போலந்தின் ஆக்கிரமிப்பு போர் வெகு விரைவாக முடிந்துவிட்டது . சமர்க்களம் ஒன்று போலந்திலே இடம்பெற்றது போன்றே தெரியவில்லை. அத்துடன், இது ஒரு ஆக்கிரமிப்பு போர் போலவும் நடக்கவில்லை. விரைவான ஊடுருவல் மற்றும் அழித்தொழிப்பு நடவடிக்கை மூலம் வெற்றி இலகுவாக ஜேர்மனியர்களால் பெறப்பட்டு விட்டது, இது தான் மின்னல் போரின் குணாம்சம்".

"அணியணியாக கவச துருப்புக்காவிகளும் யுத்த டாங்கிகளும் போலந்து படையினரை மிதித்து நசுக்கிக் கொண்டு விரைவாக முன்னேறின. இவ்வாறு முன்னேறிய படையினரால் எதிரிகளின் தொலைத் தொடர்பு , கட்டளைபீடம், விநியோக வழிகள் எல்லாமே நிர்மூலமாக்கப்பட்டன. ஜேர்மனியர்களின் மின்னல் வேகப் படையினரோ தமது காலாட்படையினர் மற்றும் மோட்டார், ஆட்லறி படையினரிடம் இருந்து 50 கிலோ மீற்றர் தூரம் வித்தியாசத்தில் எதிரிகளின் நிலைகளுக்கு பின்னால் முன்னேறியிருந்தனர். ஜேர்மனியர்களின் இந்த நகர்வினால் போலந்து படையினர் தம்மை மீள தற்பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஒழுங்குபடுத்த முடியாமல் போய் விட்டது, அத்துடன், போலந்து படையினர் சமர்க்களங்களில் இருந்து சிதறி ஓடிவிட்டார்கள்".

"இதன்பின் ஜேர்மனியர்களின் காலாட் படையினர் போலந்து படையினரின் முன்னணி நிலைகளாக முன்னர் இருந்த பகுதிகளுக்கு முன்னேறி எஞ்சியிருந்த எதிரிகளின் படையினரை அப்படி யாராவது மிஞ்சியிருந்தால் தாக்கியழித்தார்கள்" இவ்வாறு தான் மின்னல் போர்முறை அரங்கேற்றப்பட்டது. இதுவே மின்னல் போர் முறையின் வெற்றியின் இரகசியமும் ஆகும்.

மின்னல் போர் முறையின் ஆரம்பமும் வளர்ச்சியும்

ஜேர்மனியர்கள் முதலாம் உலகமகா யுத்தத்தில் தோற்றதன் பின்னர் அவர்கள் வேர்சைல்லிஸஸ் என்ற ஒப்பந்தத்தில் கைச் சாத்திட வேண்டி ஏற்பட்டது. அதாவது, ஜேர்மனியர்கள் எதிர்காலத்தில் ஒரு இலட்சத்திற்கும் குறைவான காலாட்படையினரை மட்டுமே வைத்திருக்க முடியும் என்றும் கவசப்படை, வான்படை என்பன வைத்திருக்கமுடியாது என்றும் கட்டுப்பாடுகள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் போடப்பட்டிருந்தன.

இதனால் மிகவும் கோபமும் சீற்றமும் அடைந்திருந்த ஜேர்மனியத் தலைவர்கள் மீண்டும் ஒரு பேரரசாக ஜேர்மனியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போர்களின் 56 முக்கிய அம்சங்களை ஆராய்வதற்காக போரியல் வல்லுநர்கள் குழு ஒன்றை அமைத்தனர்.

இக் குழுவினர் ஊடுருவல் தந்திரோபாயம், சூழ்ச்சிகர நகர்வு தந்திரோபாயம் போன்ற பல விடயங்களை ஆராய்ந்து விரிவான அறிக்கைகளை ஒப்படைத்தனர். இதில் ஒப்பீட்டு ரீதியில் சிறிய எண்ணிக்கையிலான படையினர் பாரிய சமர்களில் வெற்றி பெறுவது போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆய்வு நடத்தப்பட்டது.

ஜேர்மனியர்களின் படையியல் வரலாறானது கார்ல் வொன் குளோஸ்விச், அல்பிரட் வொன் செலிப்பன் மற்றும் வொன் மொல்ற்கே ஆகிய போரியல் வல்லுநர்களின் கோட்பாடுகளான நகர்வு, படைக்குவிப்பு, சுற்றுவளைப்பு ஆகிய தந்திரோபாயங்களின் தாக்கத்திற்கும் செல்வாக்கிற்கும் உட்பட்டிருந்தன.

முதலாம் உலகப் போரின் பின் ஜேர்மனியர்களின் மேலாளர் குழாம் தலைவராக இருந்த ஹான்ஸ் வொன் செக்கெற் பழைய மரபுவழிச் சிந்தனை முறைகளைப் புறந்தள்ளிவிட்டு படைகளின் விரைவினைப் பயன்படுத்தி "சுற்றிவளைத்தல்" என்ற தந்திரோபாயத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதாவது, விரைவானது எதிரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.படையினரின் விரைவு, நகர்வுதிறன் மற்றும் வேகமாக முடிவெடுக்கும் தன்மை என்பன சிறப்பாகச் செயற்படில் விரைவால் ஏற்பட்ட அதிர்ச்சியைப் பயன்படுத்தி சமர்க்களங் களிலே வெற்றிகளை பெற முடிவதோடு அதன் சாதகங்களையும் அனுபவிக்க முடியும்.

இதற்கப்பால் எதிரியின் மையத்தை தாக்கி உடைப்பது சுற்றிவளைப்பு செய்வதை விட பிரயோசனமானது என்றால் எதிரியின் மையத்தை தாக்குவதே புத்திசாலித்தனமாது. சுற்றிவளைப்பு சாத்தியமில்லாத சூழல்கள் நிலவுமிடங்களுக்கும் இத் தந்திரோபாயம் பொருத்தமானது.

பெரும் எண்ணிக்கையிலான படையினரை சமர்க்களங்களிலே பயன்படுத்துவதை விட ஒப்பீட்டளவில் சிறிய எண்ணிக்கையிலான நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தற்காப்புப் போரில் தொழில்சார் திறனுள்ள படையினரை பயன்படுத்துவதே சிறந்தது என்று ஹான்ஸ் வொன் கருதினார்.

நவீன போரியல் வரலாற்றில் இவ்வாறான படைப்பிரிவானது வலிந்த தாக்குதலை மேற்கொள்ளும் திறன், விரைவாக தயாராகுதல் போன்ற செயற்றிறன்களை கொண்டிருப்பதோடு இதற்காக அதிகளவு நவீன போர்த் தளபாடங்களை வழங்க வேண்டிய அவசியமும் இருக்காது.

இவ்வாறான போர் முறைக்கு புதிய தனித்துவமான கட்டளைபீடம் ஒன்று இருத்தல் அவசியம். அத்துடன் சமர்க்களங்களிலே பல்வேறு இடங்களில் நடவடிக்கைளில் ஈடுபட்டிருக்கும் படைப்பிரிவுகள் தமது சூழலுக்கு ஏற்ப தேவையான முடிவுகளை எடுப்பதற்கான நெகிழ்வுத் தன்மையையும் இக்கட்டளைப் பீடம் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறான தன்மைகளே மின்னல் போர் நடவடிக்கையின் வெற்றிகளுக்கு காரணமாகும்.

மாவீரன் நெப்போலியன் மூலோபாயங்கள் மற்றும் தந்திரோபாயங்கள் தொடர்பாக கூறியதாவது;

"தந்திரோபாயங்கள், போரின் பரிணாம வளர்ச்சிகள், ஆட்லறிகள் மற்றும் மோட்டார்கள், படைத்துறை பொறியியல் விஞ்ஞானம் போன்றவற்றை எண் கணிதம் படிப்பது போன்று புத்தகங்களை வாசித்து அறிய முடியும்.

ஆனால் திறமையாக சமர்க்களங்களிலே பொருத்த வேண்டுமென்றால் போர்களின் வரலாறுகளையும் திறமையான ஜெனரல்களின் சமர்களையும் படிக்க வேண்டும். இவையெல்லாவற்றையம் விட முக்கியமானது சமர்களங்கள் தொடர்பான தமது சொந்த அனுபவங்களை கொண்டிருக்கும் படைகளையும் அதற்கு தலைமை தாங்கிய தளபதிகளையும் கொண்ட தரப்பே போர்களில் வெற்றி பெறும். போர்களில் நிரந்தரமான அல்லது கட்டுப்பெட்டித்தனமான விதிகள் கிடையாது. களநிலைமைகளில் ஏற்படுகின்ற புதிய சூழ்நிலைகளின் அடிப்படையிலே தலைவர்களும் படைத்தளபதிகளும் முடிவுகளை எடுப்பார்கள். படைத் தலைவனின் போரியல் ஆற்றல், படையினரின் தன்மை, படை உபகரணங்கள் மற்றும் கருவிகளின் தன்மை, காலநிலை மற்றும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான சூழ்நிலைகளும் புறநிலைகளும் என எல்லா காரணிகளும் சேர்ந்து முடிவு எடுப்பதில் செல்வாக்கு செலுத்தும். ஒவ்வொரு சமரும் போரும் ஒரே மாதிரி அமையமாட்டா. அவை எப்போதுமே ஒன்றில் இருந்து ஒன்று வேறுபட்டே காணப்படும்".

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினையும் அதற்கு தலைமை தாங்குகின்ற தமிழீழ விடுதலைப் புலிகளையும் அழிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் தொடர்ச்சியாக இராணுவதீர்வில் மீண்டும் மீண்டும் சிங்களத் தலைவர்களும் பேரினவாதிகளும் ஆசை கொள்வதற்கு காரணம் தமிழர் தரப்பை பற்றியோ அதற்கு தலைமை தாங்குகின்ற தேசியத் தலைவர் பற்றியோ உள்ள அறியாமைதான் காரணமாகும்.

சிங்களத் தலைவர்களாக இருந்தாலும் சரி, இந்தியத் தலைவர்களாக இருந்தாலும் சரி அல்லது சர்வதேச சமூகமாக இருந்தாலும் சரி இவர்கள் அனைவருமே இந்த விடயத்தில் தவறுகளையே இழைத்துள்ளார்கள். இதனை அசைன்மன்ற் கொழும்பு என்ற நூலை எழுதிய முன்னாள் இந்திய தூதுவராகவும் பின்னர் இந்திய வெளியுறவு செயலாளராகவும் இருந்த காலஞ் சென்ற ஜே.என்.டிக்சிற் தெரிவித்ததைத் தருகின்றேன்.

"நான் தமிழ்த் தலைவர்கள் பலரைச் சந்தித்திருக்கின்றேன். பிரபாகரன் இவர்களில் மிகவும் தனித்துவமானவர். அவர் தொடர்பாக எனக்கு சில அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் அவரது கொள்கைப் பிடிப்பையும் அவருக்கு இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இருக்கின்ற மேதைத் தன்மையையும் நான் மதிக்கின்றேன். தமிழீழ தனியரசை உருவாக்க வேண்டும் என்ற அவரது கொள்கைப்பிடிப்பும் அர்ப்பணிப்பும் உறுதியானது.

அதில் எந்த விட்டுக் கொடுப்புகளுக்கும் இடமில்லை. இரண்டு தசாப்த காலத்தில் அவர் அரசியல் மூலோபாய வல்லுநராகவும் சிறந்த இராணுவ வல்லுநராகவும் உருவானார். இந்திய இராணுவ நடவடிக்கை காலப்பகுதியில் தான் அவரது கொள்கைக்கும் இருப்பிற்கும் பெரும் நெருக்கடிகளும் சவால்களும் ஏற்பட்டன.

ஆனால் எல்லாவற்றையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக தனது போராட்டத்தை முன்னெடுத்தார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் மிகவும் தூய்மையானவர், கட்டுப்பாடானவர். அத்தோடு தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் நாட்டில் கூட ஒரு தேச நாயகனாக அவர் கணிக்கப்படுகின்றார்".

தென்னாசியாவின் பிராந்திய வல்லரசாகவும் உலகின் நாலாவது பெரிய இராணுவத்தைக் கொண்டதுமான ஒரு நாட்டின் வெளியுறவுச் செயலாளராக இருந்தவரும் தலைவரோடு நேரடியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவருமான டிக்சிற்றின் கணிப்பை ஸ்ரீலங்காவின் பாதுகாப்புச் செயலாளரும் வெளிநாட்டுப் பிரஜையுமான கோதாபய ராஜபக்‌ஷ, மூன்று வருடங்களுக்குள் புலிகளை அழிப்பேன் என்று பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதற்கு முன்னர் வாசிப்பது அவருக்கு பிரயோசனமாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.