Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் சென்ற வாகனத்தில் கஞ்சா மீட்பு ; பொலிஸார் துணைநிற்கின்றனரா.?

Featured Replies

வவுனியாவிலிருந்து நேற்று யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்குச் சென்ற வாகனத்தில் சாவகச்சேரி பொலிசார் கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்த பொலிசார் ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

kg2.jpg

வவுனியா கல்கமுவ பகுதியிலிருந்து நேற்று வாகனம் ஒன்றில் சிலர் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்குச் சென்றுள்ளனர். சாவகச்சேரிப்பகுதியில் வைத்து பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான பொருளினை அவதானித்தபோது அதனுள் 4கிலோ 400கிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளனர். 

இதன்போது வாகனத்தில் பயணித்த நபர் ஒருவரை சந்தேகத்தினடிப்படையில் கைது செய்து விசாரணகைளை மேற்கொண்ட பொலிசார் குறித்த நபர் வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் வன்னிநாயக்க என்பர் எனத் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட வாகனம் மற்றும் கஞ்சாவை சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/60529

  • தொடங்கியவர்

ஹெரோயின் வைத்திருந்த ஐந்து நபர்கள் கைது...  Tuesday, 16 July 2019 - 16:14

களுத்துறை- கொன்கஸ்சந்தி பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஐந்து நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த சிற்றூந்து ஒன்றை பரிசோதனை செய்த போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 2 கிலோ 600 கிராம் ஹெரோயினும், 80 ஆயிரத்து 550 ரூபாய் பணமும் மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் 24 முதல் 33 வயதுக்குற்பட்டவர்கள் என காவல்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

http://www.hirunews.lk/tamil/220427/ஹெரோயின்-வைத்திருந்த-ஐந்து-நபர்கள்-கைது

  • தொடங்கியவர்

ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு சாகும்வரை சிறை  2019 ஜூலை 15 திங்கட்கிழமை, பி.ப. 03:59

ஹெரோய்ன் போதைபொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட  நபர் ஒருவருக்கு சாகும் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த சுராஜ் குமார என்ற நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது.

2014 ஆண்டு ஜனவரி 7ஆம் திகதி 3.31 கிராம் ஹெரோய்ன் போதைபொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நீண்ட வழக்கு விசாரணைகளை அடுத்து, தீர்ப்பினை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதி குறித்த நபர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/மேல்-மாகாணம்/ஹெரோய்ன்-வைத்திருந்தவருக்கு-சாகும்வரை-சிறை/95-235348

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.