Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திமுக முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி,  உட்பட மூவர் வெட்டிப் படுகொலை...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

à®à®¾à®°à¯à®¤à¯à®¤à®¿à®à®¾

திமுக முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி,  உட்பட மூவர் வெட்டிப் படுகொலை...

ஹால், பெட்ரூம், கிச்சன் என ஒவ்வொரு ரூமிலும் ஒவ்வொரு கொலை விழுந்து, திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் வீடே ரத்த வெள்ளத்தில் கிடந்தது. கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டதற்கு பின்னணி காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது சம்பந்தமாக 4 ஆண்கள், 3 பெண்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணையையும் நடத்தி வருகின்றனர்.

1996-ம் ஆண்டு சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று மேயரானார் உமா மகேஸ்வரி. மேயராக இருந்தபோது உமா மகேஸ்வரியின் செயல்பாடுகளை எத்தனையோ முறை மனதார பாராட்டியவர் மறைந்த கருணாநிதி.

கட்சி இவரது செயல்பாடுகளுக்கு காத்து கிடந்தாலும் குடும்ப சூழல் காரணமாக இவர் அரசியலைவிட்டு விலகி இருந்தார். சில வருடங்களுக்கு முன்புதான் இவரது மகன் சாலைவிபத்தில் உயிரிழந்தார்.

இரு மகள்கள், கார்த்திகா மற்றும் பிரியா. உமா மகேஸ்வரி தனது கணவர் முருகசங்கரனுடன் தனியாக வாழ்ந்து வந்தார். மகள் கார்த்திகா நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். அம்மா வீட்டுக்குப் பக்கத்திலேயே இவரது வீடு உள்ளது. பிரியா தனது குடும்பத்துடன் திருச்சியில் வசித்து வருகிறார்.

நேற்று காலேஜ் முடிந்து கார்த்திகா 5 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டின் கதவு சாத்திய நிலையில் இருக்கவும், உள்ளே சென்று பார்த்தார். ஹாலிலேயே உமா மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். கதறி அழுது கொண்டே பெட் ரூமூக்குள் ஓடினால், தந்தையின் சடலம், கிச்சனில் கழுத்து அறுபட்ட நிலையில் வேலைக்கார பெண் மாரி என வீடு முழுதும் ரத்தம் வழிந்து ஓடியது.

இதன்பின்னர்தான் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து போலீசுக்கு தகவல் தந்து, மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை ஆரம்பமானது. உள்ளே நுழைந்த மர்ம கும்பல், உருட்டுக்கட்டை, இரும்புக்கம்பி, அரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களால் 3 பேரின் தலைகளிலும் தாக்கியுள்ளனர். அது மட்டுமில்லை.. கொலையாளிகள். 3 பேரையுமே தனித்தனி ரூமில் வைத்து கொலை செய்துள்ளனர்.

விஷயம் அறிந்து முக்கிய காவல்துறை அதிகாரிகளும் உமா மகேஸ்வரி வீட்டிற்கு விரைந்து வந்தனர். உமா மகேஸ்வரி கழுத்தில் கடந்த சங்கிலி, கம்மல், வளையல் போன்றவை காணாமல் போயிருந்தது... வீட்டின் பீரோ திறந்து கிடந்தது.. அதனால் முதல்கட்ட விசாரணையிலேயே நகைகளுக்கான கொலை என்பது தெரியவந்தது.
 

எவ்வளவு பணம், நகை மொத்தமாக கொள்ளை போனது என்பது உடனடியாக தெரியாமல் இருந்தது. கணவர் முருக சங்கரன் நெடுஞ்சாலை துறையில் இருந்து ரிடையர் ஆனவர் என்பதால், உமா மகேஸ்வரி பெயரில் சொத்துக்கள் நிறைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் காரணமாக சொந்தக்காரர்களுடன் சில பிரச்சனை இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதனால் சொத்துக்காக சொந்தக்காரர்களோ அல்லது நகை, பணத்துக்காக வெளிநபர்களோ இந்த கொலைகளை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனால்தான், எவ்வளவு நகை, பணம் கொள்ளை போனது என்பதை கண்டறியவே 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி, உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டதற்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/thirunelveli/nellai-ex-mayor-uma-maheswari-murder-case-357910.html

அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழ்நாட்டில் மட்டும்தான் நடக்கிறதா?
இந்தியா பூராக இருக்குமா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தà®à®¯à®à¯à®à®³à¯

திடீர் திருப்பம்.. உமா மகேஸ்வரி கொலையில் முக்கிய குற்றவாளி கைது?.. கொலையாளி சைக்கோ என தகவல்

கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன நிலையில், நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 3 பேரை கொன்றது யார் என்று போலீசார் பிடித்து விட்டார்களாம்.. ஆனால் யார் அந்த கொலையாளியை பற்றி விவரம் என்பதை வெளியிட போலீசார் மறுக்கிறார்கள்.

கடந்த 23-ம் தேதிதான் உமா மகேஸ்வரி, அவரது கணவர், வீட்டு வேலைக்கார பெண் என 3 பேரும் கொல்லப்பட்டனர். நடந்த கொலையே ரொம்ப பயங்கரமாக இருந்தது.

உமா மகேஸ்வரி கழுத்தில் 6 இன்ச் அளவுக்கு கத்தியால் குத்தி கிழிக்கப்பட்டு இருந்தது. கணவரின் உடம்பெல்லாம் எண்ணவே முடியாத அளவுக்கு கத்தி குத்துகள். அவ்வளவு ஆவேசமாக குத்தி துளைத்திருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு ரூமில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.

வந்தவர்கள் உமா மகேஸ்வரிக்கு தெரிந்தவர்கள் என்று கருதப்பட்டது. ஏனெனில் ஹாலில் உட்கார்ந்து தண்ணி குடித்திருக்கிறார்கள். கடைசிவரை தங்கி சென்று தடயங்களையும் அழித்து விட்டு சென்றிருக்கிறார்கள். அதனால் போலீசாருக்கு எந்த க்ளூவும் அந்த வீட்டில் கிடைக்கவில்லை என்பது பெரிய மைனசாக இருந்த. அடுத்ததாக வீட்டில் கேமராவும் இல்லை.

30 கோடிக்கு சொத்து இருந்தாலும், 25 கோடி ரூபாய் சொத்து கொஞ்சம் வில்லங்கம் கொண்டது என்பதால், சொத்துக்கான கொலையாக இது பார்க்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தர ஏமாற்றம் அடைந்ததால், அரசியல் ரீதியான கொலையாக இது பார்க்கப்பட்டது. கணவரின் வீட்டு பக்கம் நிறைய பிரச்சனை சொத்து விவகாரத்தில் இருந்து வந்ததால், இது குடும்ப தகராறாகவும் பார்க்கப்பட்டது. டெக்னிக்காக கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்தால் வடமாநில ஆட்கள்நகை, பணத்துக்காக செய்திருக்கலாம் என்றும் பார்க்கப்பட்டது. வீட்டில் வேலைக்காரியை திடீரென வேலையை விட்டு நிறுத்தி வேறு ஒருவரை வேலைக்கு வைத்ததால், அதனால் பழிவாங்கும் கொலையாக இது பார்க்கப்பட்டது.

இப்படி எத்ததனையோ விதங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி, கொலையாளியை பிடிக்க திணறி வந்தனர். இந்தசூழலில்தான் கொலையாளியை பிடித்துவிட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இந்த கைது அதிகாரப்பூர்வமானது இல்லை என்று சொல்லப்படுகிறது.

"2006ம் ஆண்டு TN 07" எனும் எழுத்தில் தொடங்கும் ஒரு ஸ்கார்பியோ கார்தான் தடயமாக சிக்கி உள்ளது. இந்த காரின் ஓனர் ஒரு சைக்கோ.. அதிலும் இவர் கயத்தாறு, நெல்லை மாவட்டங்களில் ஏகப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியாம். கொலைக்குக் காரணம் கொடுக்கல்-வாங்கல் விவகாரமாக இருக்கக் கூடும் என்று முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.

ஆனாலும் 3 பேரை இவ்வளவு கொடூரமாக கொன்றது இந்த நபர் ஒருவரே இருக்க முடியாது என்றும், வேறு சிலரும் இதில் தொடர்பு இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இந்த கொலையாளி யார் என்பதை போலீசார் வெளியிடவில்லை. எதற்காக கொலை, எல்லா விசாரணையும் முடிந்த பிறகே முறையாக அறிவிப்பார்கள் என்று தெரிகிறது. ஆனால் இந்த கொலையாளி முருகக் கடவுளின் பெயர் கொண்டவராம்!

Read more at: https://tamil.oneindia.com/news/thirunelveli/main-culprit-arrested-in-uma-maheswari-murder-case-358428.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.