Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐதேகவில் நான்கு அதிபர் வேட்பாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐதேகவில் நான்கு அதிபர் வேட்பாளர்கள்

ranil-unp-300x200.jpgவரும் அதிபர் தேர்தலில் ஐதேகவின் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் என்று கருதப்படுவோரின்  எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

ஐதேகவின் அதிபர் வேட்பாளராக போட்டியிடக் கூடும் என்று ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோர் எதிர்பார்க்கப்படுகின்றனர். இவர்களுக்கு சார்பான அணிகளும் ஐதேகவுக்குள் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், நான்காவதாக, இன்னொருவரும் ஐதேகவின் வேட்பாளர் பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடியவர்களின் பட்டியலில் இருப்பதாக அலரி மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் தகவல் அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“கட்சிக்குள் நான்கு தகுதியான வேட்பாளர்கள் உள்ளனர். எமது வேட்பாளர் யார் என்ற இறுதி முடிவு பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும்.

பொதுஜன பெரமுன இன்னமும் தமது வேட்பாளரை அறிவிக்கவில்லை. எனவே ஐதேகவும் வேட்பாளரை அறிவிக்க அவசரப்படாது.

பொதுஜன பெரமுனவினர் வேட்பாளரை அறிவித்ததும் நாமும் எமது வேட்பாளரை அறிவிப்போம்.

கோத்தாபய ராஜபக்சவை வேட்பாளராக அறிவித்தால், நாமும் பொருத்தமானவரை அறிவிப்போம்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் ஐதேகவுடன் இணைந்து கொள்ளவுள்ளனர். அவர்களில் ஒருவர் அனுராதபுர மாவட்டத்தில் பலம் வாய்ந்தவர்” என்றும் தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2019/07/30/news/39245

17 hours ago, nunavilan said:

ந்த நிலையில், நான்காவதாக, இன்னொருவரும் ஐதேகவின் வேட்பாளர் பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடியவர்களின் பட்டியலில் இருப்பதாக அலரி மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

நான் நினைச்சன் 4 ஆவது சாத்திய வேட்பாளர் மங்கள சமரவீர என்று சொல்லப்போகிறார்கள் என்று. 😎

17 hours ago, nunavilan said:

பொதுஜன பெரமுன இன்னமும் தமது வேட்பாளரை அறிவிக்கவில்லை. எனவே ஐதேகவும் வேட்பாளரை அறிவிக்க அவசரப்படாது.

பொதுஜன பெரமுனவினர் வேட்பாளரை அறிவித்ததும் நாமும் எமது வேட்பாளரை அறிவிப்போம்.

இதென்ன ஐதேக தமது வேட்பாளரை ஓகஸ்ட் 5 ஆம் திகதி அறிவிக்கும் என முன்னர் கூறினார்கள். இப்ப ஏன் பின்னடிக்கினம்? 😀

  • 2 weeks later...
On 7/30/2019 at 4:15 AM, nunavilan said:

பொதுஜன பெரமுனவினர் வேட்பாளரை அறிவித்ததும் நாமும் எமது வேட்பாளரை அறிவிப்போம்.

கோத்தாபய ராஜபக்சவை வேட்பாளராக அறிவித்தால், நாமும் பொருத்தமானவரை அறிவிப்போம்.

அவை கோத்தா தான் வேட்பாளர் என்று அறிவிச்சிட்டினம். நீங்கள் எப்ப உங்கள் வேட்பாளர் யார் என்று அறிவிப்பீங்கள்?

Edited by Lara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Lara said:

அவை கோத்தா தான் வேட்பாளர் என்று அறிவிச்சிட்டினம். நீங்கள் எப்ப உங்கள் வேட்பாளர் யார் என்று அறிவிப்பீங்கள்?

அநேகமாக ரனில் அல்லது  சஜித்துக்கு தான் வாய்ப்புக்கள் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/30/2019 at 4:08 PM, Lara said:

நான் நினைச்சன் 4 ஆவது சாத்திய வேட்பாளர் மங்கள சமரவீர என்று சொல்லப்போகிறார்கள் என்று. 😎

மங்கள சமரவீர பிரதமர் பதவிக்கே பொருத்தமானவர்.

10 hours ago, Lara said:

அவை கோத்தா தான் வேட்பாளர் என்று அறிவிச்சிட்டினம். நீங்கள் எப்ப உங்கள் வேட்பாளர் யார் என்று அறிவிப்பீங்கள்?

மகிந்தவே பிரதமரும் கட்சி தலைவரும் ஆவார். 19ம் திருத்த சட்டத்துக்கு பிறகு ஜனாதிபதிக்கு பெருமளவு அதிகாரங்கள் இல்லை.

கோத்தாவை கட்டுப்படுத்தவும் நாமலின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் மகிந்த அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறார்.

10 hours ago, nunavilan said:

அநேகமாக ரனில் அல்லது  சஜித்துக்கு தான் வாய்ப்புக்கள் அதிகம்.

யார் பிரதமர் என்பதே முக்கியமானது.

5 hours ago, Jude said:

மங்கள சமரவீர பிரதமர் பதவிக்கே பொருத்தமானவர்.

மங்கள சமரவீரவை ஜனாதிபதி வேட்பாளராக நிற்குமாறு சில சிங்களவர்கள் கேட்டு எழுதினார்கள். அது தான் நக்கலா எழுதியிருந்தேன். 😀

5 hours ago, Jude said:

மகிந்தவே பிரதமரும் கட்சி தலைவரும் ஆவார். 19ம் திருத்த சட்டத்துக்கு பிறகு ஜனாதிபதிக்கு பெருமளவு அதிகாரங்கள் இல்லை.

கோத்தாவை கட்டுப்படுத்தவும் நாமலின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் மகிந்த அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறார்.

யார் இப்ப இல்லை என்றது? 😀

6 hours ago, Jude said:

யார் பிரதமர் என்பதே முக்கியமானது.

இன்னும் முற்றுமுழுதாக அதிகாரங்கள் பிரதமர் கைக்கு சென்று விடவில்லை. எனவே யார் ஜனாதிபதி என்பதும் முக்கியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.