Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடுகடலில் இந்தியர்களிடம் அடைக்கலம் கேட்டு கதறிய முன்னாள் மாலதீவு துணை அதிபர்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடுக்கடலில் இந்தியர்களிடம் அடைக்கலம் கேட்டு கதறிய மாலத்தீவு மாஜி துணை அதிபர்- ஷாக் தகவல்.!

ahmedadeep-1564664528.jpg

தூத்துக்குடி: மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமத் அதிப் இந்திய சரக்கு கப்பலில் தஞ்சமடைந்தது பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.மாலத்தீவில் கருங்கல் இறக்கிவிட்டு இந்திய சரக்கு கப்பல் நாடு திரும்பிக் கொண்டிருந்தது.

அப்போது திடீரென படகில் வந்த நபர் ஒருவர் சரக்கு கப்பலை நடுக்கடலில் வழிமறித்திருக்கிறார்.படகில் இருந்தபடியே தம்மை காப்பாற்றி அழைத்து செல்லுங்கள் என கூச்சலிட்டிருக்கிறார். இதனால் சரக்கு கப்பலில் இருந்தவர்கள் படகில் இருந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தாம் மாலத்தீவின் முன்னாள் அதிபர் என்றும் இந்த நாட்டில் இருந்தால் என்னை கொலை செய்துவிடுவார்கள் என அச்சப்படுகிறேன் என கதறி இருக்கிறார். முன்னாள் துணை அதிபர் என கூறியதால் செய்வதறியாது அவரை கப்பலில் அழைத்துக் கொண்டு இந்தியா நோக்கி பயணப்பட்டனர்.மீண்டும் மாலத்தீவு சென்றால் சட்ட சிக்கல்கள் வரலாம் என்பதால் இந்தியா நோக்கி வந்தனர்.

தூத்துக்குடி துறைமுகத்தை அடைவதற்கு முன்னதாக சரக்கு கப்பலில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் தமது நிறுவன உரிமையாளருக்கு இத்தகவலை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கடலோர காவல் படை மற்றும் உளவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தூத்துக்குடி துறைமுகத்துக்கு முன்னதாக கப்பலில் ஏறி சோதனை நடத்தி அகமது அதிப்பை கைது செய்திருக்கின்றனர்.

https://tamil.oneindia.com/news/tuticorin/how-maldives-ex-vp-board-in-indian-ship-358869.html

  • கருத்துக்கள உறவுகள்

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் தூத்துக்குடி அருகே கடலில் கைது

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதிப் மாறுவேடத்தில் பயணித்து தூத்துக்குடிக்கு வருவதற்குப் பயன்படுத்திய இழுவைப்படகு விர்கோ 9.படத்தின் காப்புரிமைHANDOUT Image captionமாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமத் அதிப்.

மாலத்தீவில் இருந்து வந்த இழுவைக் கப்பலில் மாறுவேடத்தில் வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமத் அதிப் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடியில் இருந்து கடந்த 11 ஆம் தேதி மாலத் தீவிற்கு கருங்கல் ஏற்றி சென்ற விர்கோ 9 என்ற இழுவைப் படகில் இந்தோனீசியாவை சேர்ந்த 8 ஊழியர்களும், ஓர் இந்தியரும் சென்றுள்ளனர்.கடந்த 27 ஆம் தேதி சரக்கை இறக்கிவிட்டு தூத்துக்குடி நோக்கி வந்த இந்த இழுவைப் படகில் பத்தாவதாக ஒரு நபர் வந்துள்ளார்.

இது தொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து உளவுத்துறையினர் நடுக்கடலில் படகில் வந்த பத்தாவது நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்தப் பத்தாவது நபர் மாலத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதி அகமத் அதிப் என்பது தெரியவந்தது.

மாலத்தீவு முன்னாள் அதிபர் அகமது அதிப் மாறுவேடத்தில் பயணித்து தூத்துக்குடிக்கு வருவதற்குப் பயன்படுத்திய இழுவைப்படகு விர்கோ 9. Image captionமாலத்தீவு முன்னாள் அதிபர் அகமது அதிப் மாறுவேடத்தில் பயணித்து தூத்துக்குடிக்கு வருவதற்குப் பயன்படுத்திய இழுவைப்படகு விர்கோ 9.

இந்நிலையில் விர்கோ 9 இழுவைப் படகை தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அகமத் அதிப்பிடம் சுங்கத் துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/india-49193891

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

-----அப்போது திடீரென படகில் வந்த நபர் ஒருவர் சரக்கு கப்பலை நடுக்கடலில் வழிமறித்திருக்கிறார்.படகில் இருந்தபடியே தம்மை காப்பாற்றி அழைத்து செல்லுங்கள் என கூச்சலிட்டிருக்கிறார். இதனால் சரக்கு கப்பலில் இருந்தவர்கள் படகில் இருந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தாம் மாலத்தீவின் முன்னாள் அதிபர் என்றும் இந்த நாட்டில் இருந்தால் என்னை கொலை செய்துவிடுவார்கள் என அச்சப்படுகிறேன் என கதறி இருக்கிறார். முன்னாள் துணை அதிபர் என கூறியதால் செய்வதறியாது அவரை கப்பலில் அழைத்துக் கொண்டு இந்தியா நோக்கி பயணப்பட்டனர்.

ஒரு நாட்டின் முன்னாள் அதிபருக்கே... இந்த நிலையா?
சரக்கு கப்பலில் இருந்தவர்கள்.... நடந்து கொண்ட விதம் சரியாகவே தெரிகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.