Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செயற்கைகோள் தயாரித்த அரசு பள்ளி மாணவர்கள்: 11-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
செயற்கைகோள் தயாரித்த அரசு பள்ளி மாணவர்கள்: 11-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது

செயற்கைகோள் தயாரித்த வெள்ளியணை அரசு பள்ளி மாணவர்கள்

கரூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் 30 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்து அசத்தினர். இந்த செயற்கை கோள் வருகிற 11-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.

கரூர்:

விண்வெளித்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் ‘விக்ரம் சாராபாய் விண்வெளி சவால்‘ என்ற போட்டியை ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு அறிவித்திருந்தது.

இந்த போட்டியில் கலந்து கொண்ட கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-வகுப்பில் படிக்கும் மாணவர் நவீன்குமார் தலைமையில் மாணவர்கள் சுகந்த், பசுபதி, விஷ்ணு, ஜெகன் ஆகியோர் தங்களின் அறிவியல் ஆசிரியர் தனபால் வழிகாட்டுதலுடன் 30 கிராம் எடையில் சிறிய வகை செயற்கைகோளை தயாரித்தனர்.

 

மேலும் அவர்கள் இந்த செயற்கைகோளின் செயல்பாடுகள் அதன் நோக்கம், இதன் மூலம் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறித்த பதிவுகள் அடங்கிய வீடியோவை ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப்பிற்கு அனுப்பி வைத்தனர். அந்த அமைப்பின் சார்பில் தமிழக அளவில் தேர்தெடுக்கப்பட்ட 12 பள்ளிகளின் செயற்கைகோள்களில் வெள்ளியணை அரசு பள்ளி மாணவர்களின் செயற்கைகோளும் ஒன்றாகும். வருகிற 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்த நாளில் இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

மாணவர்கள் தயாரித்த 30 கிராம் எடை கொண்ட செயற்கைகோள்

 

இதற்காக மாணவர்கள் 5 பேரும் தங்களின் வழிகாட்டியான ஆசிரியர் தனபாலுடன் காஞ்சீபுரம் மாவட்டம் சிறுசேரியிலுள்ள ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப்பின் வளாகத்திற்கு செல்கின்றனர். அங்கு சந்திரயான் முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை முன்னிலையில் இந்த செயற்கைகோள் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ராட்சத பலூனில் இணைத்து விண்ணில் அனுப்பப்படும்.

விண்வெளியில் குறிப்பிட்ட உயரம் சென்றவுடன் பலூன் வெடித்து செயற்கைகோள் தனியாக பிரிந்து வானிலை நிலைமை குறித்த தகவல்களை சேகரித்துக்கொண்டு பாராசூட் அமைப்பின் உதவியால் பூமிக்கு வரும். அப்போது அது அனுப்பும் படங்கள், சமிக்ஞைகளை தரையிலுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து பெறுவது குறித்து இம்மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர் .

இதுகுறித்து, செயற்கைகோளை தயாரித்த மாணவர் குழுவின் தலைவர் நவீன்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘இன்றைய காலகட்டத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. நிலத்தடி நீர் குறைந்துபோனதே இதற்கு காரணம். நிலத்தடி நீரை அதலபாதாளம் வரை சென்று உறிஞ்சி நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும் சீமைக்கருவேல மரங்கள் முக்கிய காரணமாகின்றன. எனவே சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அழிக்கும் விதமாக அதன் வேர், தண்டு, பட்டை, இலை, பூ, காய், விதை ஆகியவற்றை சாறாக பிழிந்து பின் உலர வைத்து படிகமாக்கி அதை இந்த செயற்கைகோளில் வைத்து அனுப்ப முடிவு செய்தோம். விண்வெளிக்கு சென்று பின் கீழேவரும்போது வளிமண்டல அழுத்தம், சூரிய கதிர்வீச்சின் தாக்கம், ஈரப்பதம் உள்ளிட்டவை இந்த படிகத்தில் உண்டாக்கும் விளைவுகளினால் அதன் ஜீன்கள், டி.என்.ஏ.வில் ஏற்படும் மாறுபாடுகளை கண்டறிந்து அதன்மூலம் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அழிப்பதற்கான வழிவகைகளை கண்டறிய உள்ளோம்’ என்றார்.

https://www.maalaimalar.com/news/topnews/2019/08/06083353/1254782/government-school-students-produced-Satellite-will.vpf?fbclid=IwAR2kXSMmBGzJVkc6LJAVQQpIcW0iwMo_8AvRpWIjMYpBJNFqH13HP9oc7LY

  • கருத்துக்கள உறவுகள்

à®à¯à®¯à®±à¯à®à¯à®à¯à®³à¯ தயாரிதà¯à®¤ à®à®°à®à¯ பளà¯à®³à®¿ மாணவரà¯à®à®³à¯: 11-நà¯à®¤à¯à®¤à®¿ விணà¯à®£à®¿à®²à¯ à®à¯à®²à¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®à¯à®à®¿à®±à®¤à¯

இலங்கை பல்கலைக் கழக மாணவர்கள்...  ராவணா என்ற செயற்கை கோளை செலுத்தி விட்டு, 
பெரிய எடுப்பு... எடுத்துக் கொண்டு திரிந்தவர்கள்.

முளைச்சு மூன்று இல்லை துளிர்க்காத... 
கரூர் அரசுப்  பள்ளி சின்னஞ் சிறிய மாணவர்கள் செய்திருப்பது மிகப் பெரிய சாதனை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.