Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சஹ்ரானின் சொத்து விவரம்

Featured Replies

சஹ்ரானின் முடக்கப்பட்ட சொத்து விவரம் நீதிமன்றில் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுக்கு சொந்தமான முடக்கப்பட்டுள்ள சொத்துகளின் விவரத்தை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி, இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் அதன் தலைவர் சஹ்ரான் ஆகியோருக்கு சொந்தமான 1 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகள் மற்றும் 130 மில்லியன் ரூபாய் பெறுமதியான வங்கிக் கணக்குள் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சஹ்ரானின்-முடக்கப்பட்ட-சொத்து-விவரம்-நீதிமன்றில்-அறிவிப்பு/175-236484

தாக்குதல் நடத்த தயாராகவிருந்த 15 பேர் தடுப்புக் காவலில் ;

13.4 கோடி ரூபா பணம்,

100 கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம் 

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மிக குறுகிய காலத்துக்குள்ளேயே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் (சி.ஐ.டி.) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர தெரிவித்தார்.  

21/4 தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன்  நேரடி தொடர்புள்ள பிரதான சந்தேக நபர்கள் உட்பட அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் பயங்கரவாத அமைப்பின் 90 வீதமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

இந் நிலையில்  சி.ஐ.டி. பொறுப்பில் தற்போது 63 சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் குண்டுத் தககுதல்களை நடத்த தயாராக இருந்த 15 பேரும்,  சஹ்ரானுடன் உடன் இருந்து தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறிய 5 பேர் வரையிலும் உள்ளடங்குவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளில், இதுவரை குண்டை வெடிக்கச் செய்த பயங்கரவாதிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவர்கள் சார்பிலான நிறுவங்கள் என 41 பேருக்கு சொந்தமான 13.4 கோடி ரூபா பணம் முடக்கப்பட்டுள்ளது.  வங்கிக்கணக்குகளில் உள்ள குரித்த பணம் விசாரணைகளுக்காக மேல் நீதிமன்ற ஆணை ஊடாக முடக்கப்பட்டுள்ளது. 

அத்துடன்  பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது சகாக்களுக்கு சொந்தமான சுமார் 100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவும், சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவும் கூறினர்.

https://www.virakesari.lk/article/62279

  • தொடங்கியவர்
14 hours ago, ampanai said:

அத்துடன்  பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது சகாக்களுக்கு சொந்தமான சுமார் 100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவும், சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவும் கூறினர்.

இலங்கையில் ஒருவரின் சராசரி வருமானம் 4000 அமெரிக்க டாலர்கள் இல்லை ஏழு இலட்சம் (7,00,000) ரூபாய்கள். 

இந்த நூறு கோடி சொத்தும் உள்ளூரில் திரட்டியதா? அப்படி என்றால், கிட்டத்தட்ட 1400 பேரின் ஒரு ஆண்டுக்கான தனிநபர் வருமானம். வெளிநாட்டு உதவிகளையும் கிடைத்ததாக வேறு செய்திகள் குறிப்பிட்டு இருந்தன, ஆனால், அவர்களை எதுவும் செய்ததாக இல்லை. அவர்கள் பலம் மிக்க சவூதி பிரசைகளோ தெரியவில்லை. 

நாங்களே அவர்களின் மசகு எண்ணெயையும் வேண்டி ஓட்டல் புகாரியின் பிரியாணியையும் சாப்பிட்டு இவர்களை பொருளாதார பலம்மிக்கவர்களாக்கி விடுகின்றோம்😕

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

இலங்கையில் ஒருவரின் சராசரி வருமானம் 4000 அமெரிக்க டாலர்கள் இல்லை ஏழு இலட்சம் (7,00,000) ரூபாய்கள். 

இந்த நூறு கோடி சொத்தும் உள்ளூரில் திரட்டியதா? அப்படி என்றால், கிட்டத்தட்ட 1400 பேரின் ஒரு ஆண்டுக்கான தனிநபர் வருமானம். வெளிநாட்டு உதவிகளையும் கிடைத்ததாக வேறு செய்திகள் குறிப்பிட்டு இருந்தன, ஆனால், அவர்களை எதுவும் செய்ததாக இல்லை. அவர்கள் பலம் மிக்க சவூதி பிரசைகளோ தெரியவில்லை. 

நாங்களே அவர்களின் மசகு எண்ணெயையும் வேண்டி ஓட்டல் புகாரியின் பிரியாணியையும் சாப்பிட்டு இவர்களை பொருளாதார பலம்மிக்கவர்களாக்கி விடுகின்றோம்😕

முஸ்லீம் அரசியல்வாதிகளும், மதத் தலைவர்களும், வியாபார புள்ளிகளும்... இவர்களுக்கு தாராளமான பண உதவியை செய்திருப்பார்கள். அந்த விதத்தில்.... இதுவரை, எவரும் விசாரிக்கப் பட்டதாக தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.