Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி சென்னை விமான நிலையத்துக்கு ‘ரெட் அலர்ட்’

Featured Replies

Dkn_Tamil_News_2019_Aug__659694850444794.jpg

 

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை தகவலை முன்னிட்டு  மத்திய உளவுத்துறை கொடுத்துள்ள தகவலால் சென்னை விமான நிலையத்துக்கு ‘ரெட் அல்ர்ட்’ கொடுக்கப்பட்டு தீவிர சோதனைக்குப் பின்னரே பயணிகள்   அனுமதிக்கப்படுகின்றனர்.  இந்தியாவின் 73வது சுதந்திர தின விழா வருகின்ற 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இக்கோலாகல கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளதாக மத்திய உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளன. இதையடுத்து நாடு முழுவதும் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது.  இதனை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே உள்நாட்டு விமான பயணிகள் ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச விமான பயணிகள் மூன்றரை மணி நேரம் முன்னதாக விமான நிலையத்துக்கு வந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், ஜாம், அல்வா போன்றவைகளை எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் குறிப்பாக கார் பார்க்கிங், பயணிகள் பாதுகாப்பு சோதனைகள் நடைபெறும் பகுதிகள், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதி, சரக்கு பார்சல்களை கையாளும் பகுதிகளில் கூடுதல் பதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு அவர்களது பணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதோடு விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் தொடர்ந்து சோதனை நடத்துகின்றனர். மேலும்  விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள்  கொண்டு வரப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமலில் உள்ளது. தற்போது அதை விட கூடுதலாக ‘’ரெட் அலர்ட்’’  பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=516737

 

ஆந்திரா, கர்நாடகா உட்பட 7 மாநிலங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கையால் பாதுகாப்பு அதிகரிப்பு

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஆந்திரா, கர்நாடகா உட்பட 7 மாநிலங்களில் புல்வாமாவில் நடத்தப்பட்டது போன்ற தாக்குதலை நடத்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளும், பாகிஸ்தான் உளவுத்துறையும் (ஐஎஸ்ஐ) திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதையடுத்து இந்த மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்து செய்து, அவற்றை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய தூதரை வெளியேற்றிய பாகிஸ்தான், இந்திய விமானங்கள் பறப்பதற்கான பாகிஸ்தான் வான்வழியையும் மூடியது. இரு நாடுகள் இடையே சென்று வந்த சம்ஜோதா ரயில் சேவையையும் நிறுத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது பாகிஸ்தானை மேலும் கோபம் அடையச் செய்துள்ளது. தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தை கூட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆலோசித்தார்.
 

 

கடந்த பிப்ரவரியில் காஷ்மீரின் புல்வாமாவில் நடத்திய தாக்குதல் போன்று, இந்தியாவின் பல பகுதிகளில் நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும், ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளும் திட்டமிட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினரின் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக கண்டறிப்பட்டுள்ளது. இதனால் இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=516749

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விமானநிலையம் தானாகவே 50 தடவைக்கு மேலே விழுந்திட்டுது.

இதுக்கு போய் யாரும் மினக்கெட்டு குண்டு வைப்பானோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.