Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் மே நாளில் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு

Featured Replies

பிரான்ஸ் மே நாளில் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு

இன்றைய மேதின ஊர்வலம் Republique ல் ஆரம்பித்து Nation ல் முடிவடைந்தது இதில் 8000ற்கு மேற்பட்ட மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டு கோசங்களை எழுப்பியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும், எமது தலைவர் பிரபாகரன் என்ற கோசங்களுடனும் பிரெஞ்சு மொழிகளிலான துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தும் சிறப்பித்தனர். இவ் ஊர்வலத்தில் தமிழ்ச்சங்கங்கள், இளையோர் அமைப்பு, விளையாட்டுக்கழகங்கள், வர்த்தக சங்கங்கள், உதைபந்தாட்டச்சம்மேளனம், தமிழ்ச்சோலைகள், ஏனைய பிற பாடசாலைகள், சங்கங்கள், வர்த்தகர்களுடன் சிறப்பாக நடைபெற்றது. வர்த்தகர்கள் மதியம் 1 மணியுடன் தமது நிறுவனங்களைப்பூட்டியும் கலந்து கொண்டனர். இறுதியாக பாதர். இம்மானுவேல் அடிகளார் உரையாற்றிய போது தரைப்படை, கடற்படை, வான்படை மட்டும் அல்லாது மக்கள் படையும் சேர்ந்திருக்கிறது நாங்கள் இங்கு வாழவேண்டியது இல்லை தமிழீழத்தில் போய் சுகந்திரமாக வாழ்வோம் எனக்கூறி உரையாற்றினார். இறுதியாக நன்றி உரையினை ஈழநாடு பத்திரிகையின் உரிமையாளர் திரு. சிவகுரு பாலச்சந்திரன் அவர்கள் ஆற்றும் போது நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல நாங்கள் சுகந்திரம் வேண்டி ஜனநாயக ரீதியில் தான் போராடுகின்றோம். எங்களை பட்டியலில் இருந்து நீக்கும்வரை எத்தடை வந்தாலும் தொடர்ந்து போராடி எமது உரிமைகளைப் பெறுவோம் எனக் கூறினார். அத்துடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் எனும் தாயக மத்திரத்திரத்தோடு அனைவரையும் கலைந்து சென்றனர்.

http://www.pathivu.com/

  • தொடங்கியவர்

சுவிஸ் மேதின ஊர்வலத்தின்போது புளொட் உறுப்பினர்கள் மீது தாக்குதல் இதில் நால்வருக்கு கடும் இரத்தகாயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

சுவிஸ்லாந்தில் உள்ள புளொட் உறுப்பினர்கள்மீது மீது தாக்குதல் இரும்புக்கம்பிகள் பொல்லுகள் சிறிய கத்திகள் சகிதம் நடத்தினர். இதில் நால்வருக்கு கடும் இரத்தகாயங்கள் ஏற்;பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சுவிஸ் பொலிஸார் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

http://www.tamilwin.com/

தமிழர் தாயகத்திற்கான எமது பங்களிப்புகள் தொடரும் - மே நாளில் யேர்மனிய தமிழீழ மக்கள் உறுதி

யேர்மனியில் பேர்லின், டுசில்டோவ், பிராங்போட், ஸ்ருட்காட், கம்பேர்க் ஆகிய 5 மாநகரங்களில் மே நாள் ஊர்வலங்கள் நடத்தப்பட்டுள்ளன. யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மே நாள் ஊர்வலத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழீழ மக்கள் பங்கெடுத்தனர்.

இன்றைய ஊர்வலத்திற்கு வருகைதந்த தமிழீழ மக்கள் தமிழீழத் தேசியக்கொடியினைத் தாங்கியவாறு சிறிலங்கா அரசபயங்கரவாத தமிழினப் படுகொலையைக் கண்டிக்கும் பதாதைகள் தாங்கியவாறும் சிறீலங்காவின் அரச பயங்கரவாதத்தின் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக தமிழ் மக்கள் காணாமல் போதல், தமிழினப் படுகொலைகள், தமிழ் மக்கள் மீதான விமானத் தாக்குதல்கள், மற்றும் எறிகணைத் தாக்குதல்கள், தமிழ் மக்களின் இடப்பெயர்வுகள், போன்ற விடயங்கள் யேர்மனிய மக்களுக்கு தெரியப்படுத்தும் வாசங்கள் மற்றும் நிழல்படங்களைத் தாக்கிய பாதாதைகளை தமிழீழ மக்கள் ஏந்தி தமிழீழ மக்களுக்கு தமிழீழமே தீர்வாக அமையும் எனவும், எங்கள் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் எங்களுடைய தாயகம் தமிழீழம் என கோசங்களை எழுப்பி எமது அபிலாசைகளை வெளிப்படுத்தினர்.

இதேநேரம் ஊர்வலத்தில் சிறீலங்கா அரசின் மனித உரிமைகள் மீறல்களை எடுத்துச் சொல்லும் யேர்மனி மொழியிலான துண்டுப் பிரசுரங்கள் யேர்மனிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சம்பந்தமான யேர்மன் மொழியிலான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.

ஊர்வலத்தின் நிறைவில் இன்றை தாயகத்தின் நிலமையையும் தாயக விடுதலைப் போராட்டத்திற்கு இனிவரும் காலங்களின் புலம் பெயர் தமிழீழு மக்கள் செய்ய வேண்டிய கடப்பாடுகள் பற்றியும் தமிழீழ மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கும் தமிழர் தாயகத்தில் எமது மக்களின் உயிர்களை பாதுகாக்கவும் புலம் பெயர் தமிழீழ மக்கள் தொடர்ச்சியான பொருளாதார உதவிகளை எத்தடைகள் வந்தாலும் அத்தடைகளை உடைத்து தமிழீழத் தேசியத் தலைவருக்கும் தமிழீழ மக்களுக்கும் வழங்குவோம் என உறுதியெடுத்து இன்றைய ஊர்வல்கள் நிறைவுக்கு வந்தன.

http://www.tamilwin.com/

பின்லான்ட் நாட்டிலும் மே நாள் ஊர்வலங்கள் எழுச்சியுடன் நடைபெற்றன.

பின்லான்ட் நாட்டில் வாழும் தமிழீழ மக்களினால் மே நாள் ஊர்வலங்கள் முன்னெடுக்கப்பட்டன. பின்லான்ட் ஹெல்சிங்கியில் நடைபெற்ற மே நாள் ஊர்வலத்தில் கலந்துகொண்ட தமிழீழ மக்கள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் தமிழினப் படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் பதாதைகள் தாங்கியவாறு ஊர்வலத்தில் எழுச்சியுடன் கலந்துகொண்டுள்ளன.

http://www.pathivu.com/

  • கருத்துக்கள உறவுகள்

படங்களை பார்க்கவே சந்தோஷமா இருக்கு...அவுஸ்திரேலிய தமிழர்களும் இருக்கின்றார்களே சுத்த வேஸ்ட்......

WELL DONE EUROPE

  • தொடங்கியவர்

நேர்வே மே நாளில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் உணர்வுடன் கலந்துகொண்டனர்

நோவேயில் நடைபெற்ற மே நாள் ஊர்வலத்தில் என்றும் இல்லாத அளவுக்கு அதிகளவு மக்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டனர். நேற்று நடைபெற்ற மே நாள் ஊர்வலத்தில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்ககள் பங்கெடுத்து சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள், ஆட்கடத்தல்கள், மற்றும் படுகொலைகளை வெளிப்படுத்தும் பாதாதைகளைத் தாங்கியவாறு கோசங்கள் எழுப்பியவாறு வீதியூடாக நகர்ந்து சென்றனர்

http://www.pathivu.com/

படங்களை பார்க்கவே சந்தோஷமா இருக்கு...அவுஸ்திரேலிய தமிழர்களும் இருக்கின்றார்களே சுத்த வேஸ்ட்......

WELL DONE EUROPE

100%உண்மை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.