Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜம்மு காஷ்மீர் அரசு: 'ஒரு புல்லட்டைக் கூட நாங்கள் பயன்படுத்தவில்லை'

Featured Replies

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யபட்டு, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்திய நிர்வாகத்தின்கீழ் உள்ள காஷ்மீரில் போராட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளியன்று வீதிகளில் திரண்ட நிலையில், அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆறு நாட்களில் காவல்துறை ஒரு புல்லட்டைக்கூட சுடுவதற்காக பயன்படுத்தவில்லை என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலியான மற்றும் உள்நோக்கங்களைக் கொண்ட செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் வேண்டுகோள் விடுப்பதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

 

வெள்ளியன்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைக் கலைக்க காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டதையும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியத்தையும் அப்போது களத்தில் இருந்த பிபிசி செய்தியாளர்கள் கண்டனர்.

மக்கள் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க குவிவதாகவும், பல கடைகள் திறந்திருந்ததாகவும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக அகில இந்திய வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. எந்த மாவட்டத்திலும் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்றும் அரசின் செய்தி தெரிவிக்கிறது.

தலைநகர் ஸ்ரீநகர் இயல்பு நிலையில் இருப்பதாகக் காட்டும் காணொளி ஒன்றையும் ஜம்மு காஷ்மீர் அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

இந்தக் காணொளியில் உண்மைத் தன்மையை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை.

மக்கள் முதிர்ச்சியுடன் நடந்துகொண்டு, காவல்துறை மற்றும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக ஸ்ரீநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இம்தியாஸ் ஹுசேன் ட்விட்டரில் பதிவிட்டுளார்.

https://www.bbc.com/tamil/india-49309930

  • தொடங்கியவர்

ஸ்ரீநகரில் தற்போது என்ன நிலைமை? பக்ரித் பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுமா? - களத்தில் இருந்து பிபிசி

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக இந்திய அரசு அறிவித்து ஒரு வாரம் முடிவடைய உள்ளது. ஆறாவது நாளான இன்று ஸ்ரீநகரில் என்ன சூழ்நிலை நிலவுகிறது என்பது குறித்து பதிவு செய்கிறார் பிபிசி செய்தியாளர் அமீர் பீர்ஸாடா.

அவர் இன்று மாலை 4 மணியளவில் பிபிசி செய்தி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசிய போது, அங்கு நிலவும் சூழ்நிலையை பதிவு செய்தார்.

"இன்று காலை முதல் ஸ்ரீநகரில் நிலைமை இயல்பாகவே இருந்தது. வீதிகளில் வாகனங்கள் செல்வதை பார்க்க முடிந்தது. போக்குவரத்து நெருக்கடி கூட ஏற்பட்டது. எல்லாம் இயல்பாகவே காட்சியளித்தது.

ஆனால், கடைகள் எல்லாம் மூடப்பட்டிருந்தன. குறைந்தளவு பாதுகாப்புப் படையினர் மட்டுமே வீதிகளில் இருந்தார்கள். சாலை தடுப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டிருந்தன. எல்லாம் சாதாரணமாக இருந்தது.

ஆனால், நண்பகல் 12 மணிக்கு பின்னர் நிலைமை இங்கு தலைகீழாகிவிட்டது. திடீரென வீதிகள் வெறிச்சோடின. பாதுகாப்புப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். சாலை தடுப்புகள் மீண்டும் போடப்பட்டன.

தற்போது நான்கு மணிக்கு, நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, இங்கு ஸ்ரீநகர் தெருக்களில் பாதுகாப்புப் படையினர் மட்டுமே இருக்கிறார்கள். இந்த திடீர் மாற்றம் ஏன் என்று தெரியவில்லை.

ஸ்ரீநகரில் தற்போது என்ன நிலைமை?

 

ஏனெனில், இங்கு இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று மாலை ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதாக அறிவிக்கப்பட்ட பின்பு சூழ்நிலை சாதாரணமாகதான் தோன்றியது. சாலைகளில் மக்கள் நடமாட்டத்தை பார்க்க முடிந்தது. வாகனங்கள் சென்றன. இன்று காலையும் அதேபோலதான் இருந்தது.

ஆனால் மதியம் 12 மணிக்கு அனைத்தும் மாறிவிட்டது. என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சித்தோம். ஆனால், அலைபேசி, தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.

பக்ரித் கொண்டாட்டம் - அரசு என்ன செய்ய போகிறது?

நாளை பக்ரித் பண்டிகை. ஸ்ரீநகரில் ஆண்டுதோறும் மக்கள் இப்பண்டிகையை ஒரு பெரிய மைதானத்திலோ அல்லது ஒரு பெரிய மசூதியிலோ ஒன்றாகக்கூடி தொழுகை செய்வது வழக்கம். ஒவ்வொரு தொழுகை கூட்டத்திலும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பார்கள்.

நாளை என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஏனெனில் ஸ்ரீநகரின் சௌரா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு, ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அது ஒரு பகுதியில் நடந்த சம்பவம் மட்டுமே.

தற்போது நாளை என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இந்திய அரசு இந்த பக்ரித் தொழுகைகள் நடப்பதை எப்படி பார்க்கும், நிலையை எப்படி சமாளிக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

அனைவரும் பக்ரித் பண்டிகை கொண்டாட எங்களால் முடிந்தவற்றை செய்வோம் என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.

பக்ரித் பண்டிகையை மக்கள் கொண்டாடுவதற்காக, தொழுகைகள் செய்வதற்காக, இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை நாளை தளர்த்தும் பட்சத்தில், இங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடக்கலாம். ஏனெனில் மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள்.

கடந்த ஐந்து நாட்களாக நான் இங்கு பலரிடம் பேசி வருகிறேன். அனைவரும் கோபத்துடன் இருக்கிறார்கள். அப்படியிருக்க அரசு இதனை எவ்வாறு சமாளிக்க போகிறது என்று தெரியவில்லை.

கூடுதல் ஆணையர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பக்ரித் பண்டிகை அன்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்றும் மக்கள் வெளியே வந்து பொருட்களை வாங்கலாம், கொண்டாடலாம் என்றும் அதற்கு தங்களால் முடிந்தவற்றை இந்த நிர்வாகம் செய்யும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் இன்று மதியம் நடந்த நிகழ்வுகளை பார்க்கும்போது, நாளை அரசு என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அனைத்து தகவல் தொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டிருந்தன."

https://www.bbc.com/tamil/india-49312062

 

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினரை ஏற்கனவே இருந்ததைவிட மேலதிகமாக காஸ்மீர் முழுவது நிரப்பி வைத்துவிட்டு யாராவது முனகினால்கூட தூக்கி உள்ளேபோட்டுவிட்டு பொய்க்குமேல் பொய் சொல்லக்கூடாது. ஆரம்பத்திலிருந்தே காஸ்மீர் மக்களது உரிமையப் பறிப்பதற்கு முன்னதான ஆயத்த வேலைகளிலேயே எதுவித விவரமும் கூறாது அவர்களது உரிமையைப் பறித்துவிட்டு உண்மைக்குப்பிறம்பாக கூறுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

தென் கொரியாவில் மான்சு எனும் பகுதியில் நடந்த போராட்டத்தைப் பற்றிய பதிவுடஙூடிய ஒரு திரைப்படம் வெளிவந்தது அதன் பெயர் டாக்சி ட்ரவர் முடியுமாகில் இணையத்தில் பாருங்கள் அப்படம் தென் கொரியாவில் இப்போதும் தடைசெய்யப்பட்டுள்ளது. 

சீனாவின் தியனமன் சதுக்கத்தில் நடந்த படுகொலையை சீனாவில் எண்பத்து ஐந்துவீத மக்கள் இதுவரை அறிந்திருக்கவில்லை. அதேபோலவே இன்று காஸ்மீரில் நடக்கும் கொடூரம்.

  • தொடங்கியவர்

காஸ்மீரில் முஸ்லீம்கள் இந்துக்களை, அடையாளங்களை அழித்ததும் மறைக்கப்பட்ட வரலாறே.  சரி, அதற்காக இன்று இந்துக்கள்  முஸ்லீம்களை பழிவாங்கலாமா ?   இல்லை. ஒரு தவறை தவறால் சரிசெய்ய கூடாது என்பது அறிவுசார்ந்த வாதம்.
  
ஆனால், காஸ்மீர் முஸ்லீம்கள் ஊடாக 'பயங்கரவாதிகள்'  இந்துக்களை, இந்தியாவை குறிவைப்பது  தொடர்ந்து உள்ளது. இதற்கு இந்த மாற்றம் ஒரு தீர்வாக அமையலாம் என்பது இந்த இந்திய கணக்கு.

இதில் பலிக்கடா - அப்பாவி மக்களே 

  • கருத்துக்கள உறவுகள்

 

    Archived

    This topic is now archived and is closed to further replies.

    Important Information

    By using this site, you agree to our Terms of Use.

    Configure browser push notifications

    Chrome (Android)
    1. Tap the lock icon next to the address bar.
    2. Tap Permissions → Notifications.
    3. Adjust your preference.
    Chrome (Desktop)
    1. Click the padlock icon in the address bar.
    2. Select Site settings.
    3. Find Notifications and adjust your preference.