Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்­களின் உரிமைக்குர­லாக செயற்­பட்ட குமார் பொன்­னம்­பலம்!

Featured Replies

அண்ணல் குமார் பொன்­னம்­பலம் என்னும் உரிமைக்­குரல் எம்­மி­ட­மி­ருந்து பறிக்­கப்­ப­டாமல் வாழ்ந்­தி­ருந்தால் இன்று ஆகஸ்ட் 12 இல் அவ­ருக்கு 81 வய­தாகும்.

Maamanithar-Kumaar-Ponnampalam-Aiyaa-8-660x330.jpg

அர­சியல் கார­ணங்­க­ளுக்­காகக் கைது செய்­யப்­பட்ட தமிழ் இளை­ஞர்கள் சார்பில் நீதி­மன்­றங்­களில் வாதா­டினார். எவ்­வி­டத்­திலும், தமிழ் மக்­க­ளுக்குச் சார்­பான கருத்­துக்­களைத் துணி­வாக வெளி­யிட்டு வந்தார். இதனால்,  இதன் உச்சக் கட்­ட­மாக இன­வா­தி­களால் குமார் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

தமிழர் தம் அடிப்­படை அபி­லா­சை­களை இடித்து வலி­யு­றுத்­தி­யவர் அவர். திம்­புக்­கோட்­பா­டு­களையே  தமிழர் தம் அடிப்­படை அபி­லா­சை­க­ளாக  கொண்­டி­ருந்தார். எந்த  ஒரு  சிங்­கள தலை­மையும்  வடக்கு கிழக்கு எனும் தமிழர் தம் பூர்­வீக நிலத்­தையும் பிறப்­பு­ரி­மை­யான  சுய­நிர்­ணய  உரி­மை­யையும் ஏற்று கொள்­வார்­க­ளானால் அர­சியல் தீர்­வைத்­தர வல்­ல­வர்­க­ளாவர் அன்றேல் இல்லை  என்­பதே அவ­ரது நிலைப்­பா­டாக இருந்­தது. ஒன்றுபட்ட இலங்­கைக்­குள்­ளான சக வாழ்வு சாத்­தி­யப்­ப­டு­மென நம்­பினார். அதுவே அவர் அடிப்­படை அபி­லா­சை­களை என்று வலி­யு­றுத்த கார­ண­மா­னது.

இதனை ஊர்­ஜிதம் செய்யும் வகையில்  பார்ப்போம் ஆனால் இந்­திய ஈடு­பாடு குறித்த அவ­ரது நிலைப்­பா­டா­னது திரு­மதி பண்­டா­ர­நா­யக்க மற்றும் இட­து­சாரிக் கம்­யூ­னிஸ்ட்­டுகள் என்­போரின் நிலைப்­பா­டு­க­ளுக்கு நெருங்­கி­ய­தாக நகர்ந்­தது. அபி­லா­சை­களை அடி­யொற்­றிய DPA Manifesto எனும்­ அ­ர­சியல் உடன்­பாடு ஊடாக 1988 ஜனா­தி­பதித் தேர்­தலில் திரு­ம­தி­ ஸ்ரீ­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவை ஆத­ரிப்­ப­தற்­காக வடக்கின் இட­து­சாரிக் கம்­யூ­னிஸ்ட்கள் ஏனைய முற்­போக்குச் சக்­தி­க­ளுடன் இணைந்­த­போது குமார் பெறு­ம­தி­மிக்க பங்­க­ளிப்பை ஆற்­றினார். அது திரு­மதி ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்கவுட­னான நட்­பு­ற­விற்குக் கார­ண­மா­யிற்று. சம்­பிக்க ரண­வக்கவும் பல்­க­லை­க்க­ழக மாணவர் அமைப்பின் சார்­பாக இதில் கையொப்­ப­மிட்­டி­ருந்தார். அவ­ரி­டம் ­நேர்­மை­யி­ருந்­ததால் அர­சியல் நேர்­மையும் இருந்­தது.

கடைசி வரு­டங்­க­ளின்­போது அவர் ஆற்­றிய பங்­க­ளிப்பை நினை­வூட்­டு­வது சில­ருக்குப் பிடிக்­காது. அவ­ரது கடைசி வரு­டங்­க­ளின்­போது அவர் காட்­டிய மன வலி­மை­யா­னது அதீ­த­மா­னது. எம் தலைவர்  குமாரின் அர­சியல் நிலைப்­பா­டா­னது ஏறு­மா­றா­ன­தா­கவோ சந்­தர்ப்­ப­வாத போக்­கு­டை­ய­தா­கவோ இருக்­க­வில்லை. ஆனால் கொள்­கை­ நி­லை­யைத்­த­மிழர் தம் அபி­லா­சை­களை வலி­யு­றுத்­து­வ­தா­கவே இருந்­தது. அவ­ரது முயற்சிகள் நம்­பிக்­கையின் தோல்­வி­யா­னது. குமாரின் மனப்­பாங்­கில் ­மாற்றம் ஏற்­பட வழி­கோ­லிற்று.

அவ­ரி­ட­மி­ருந்து நான்  இன்றும் கைக்­கொள்ளும் ஒரு பண்பு, கருத்து வேற்­று­மைகள் வேறு, மனித அன்­பும் ­ம­னித பண்பும்  வேறு. இறு­திக்­காலம் வரை அனைத்து இயக்­கங்­க­ளையும் வர­வேற்று தனது இல்­லத்தில் விருந்­தோம்பி ஒன்­று­ப­டுத்தி பொது கருத்­திற்­காக சந்­திப்­புக்­களை ஏற்­ப­டுத்­தினார். இதன் விளை­வு­தான் ­அ­வரின்  பின்­னாளில் பத்து பதி­னொரு கட்­சி­களின் கூட்­ட­மைப்­பாக நாம் ஒன்­று­பட்டு செயற்­பட, போராட்டம் நடத்த வழி­வ­குத்­தது.

அதே­வேளை தமிழ் மக்­களின் அபி­லா­சை­க­ளுக்குச் சார்­பாக நின்ற ஒரே­யொரு உண்­மை­யான சக்­தி­யாக விடு­தலைப்புலிகள் என அவ­ருக்குத் தென்­பட்­டது. அவர் இரத்­தத்­தையும் துன்­பி­ய­லையும் பார்க்­க­மு­டி­யா­தவர். இந்­நி­லைப்­பாட்­டிற்கு ஒரு தமிழ்த் தேசி­ய­வாதி என்ற கோணத்­தி­லி­ருந்து குரல் கொடுத்தார்.

பிரச்­சி­னைக்கு நீதி­யா­னதும் நிலை­யா­ன­து­மான ஒரு தீர்வைக் காண்­பது தொடர்பில் உள்­ளொன்றும் புற­மொன்­று­மாக விளங்கும் குறு­கிய எண்ணங்கொண்ட நாட்டுப் பற்­றை­ வ­லி­யு­றுத்தும் சக்­தி­களும் தேசிய அர­சியல் கட்­சி­களும் தான் சுய­நிர்­ணய கோரிக்­கைக்குப் பாரிய அளவில் பாத­க­மேற்­ப­டுத்­தி­ய­தாக கூறுவார்.

குமார் வாழ்ந்த காலம் மிக­மிக கடி­ன­மான கால­மாகும். இது­வரை ஆயுதம் ஏந்­தாத எந்­த­வொரு தமிழ் அர­சியல் வாதி­யை­விட  அதிக பிரச்­ச­ினைக்கு தனது எதிர் நீச்­சலை, ஆபத்தை ஏற்­றுக்­கொண்ட அவர், அவ­ரது எந்­த­வொரு பாரா­ளு­மன்ற அர­சியல் எதி­ரி­யை­வி­டவும் நேர்­மை­யாக அதி­க­மாகச் சாதித்தார்.

சில்­லறை அர­சியல் வாதி­க­ளைப்­போ­லன்றி பாரிய சர்­வ­தேச உற­வு­க­ளையும்,இவரை அவர்கள் நாட­வேண்­டிய தேவை­யையும்  முற்­றிலும் தமி­ழி­னத்­திற்­கா­கவே ஏற்­ப­டுத்தி செயற்­பட்டார் என்­பதை அவரின் மறை­வின்­பின்­னான ஐ.நா. உள்­ளிட்ட சர்­வ­தே­சத்­தா­ரது பதி­வுகள், இரங்­கல்கள், பாராட்­டு­களும்  துயர்­ப­கிர்வுப் பதி­வு­களும் எடுத்துக்காட்­டி­ன.

இலங்கை வாழ் தமிழ் சமூ­கத்­தின்­அ­ர­சியல் நலன்­களில்  அவ­ருக்­கி­ருந்த அர்ப்பணிப்பு  முக்கியத்துவம் கொண்டதாக விளங்கியது.அரசியல் சதுரங்கத்தில்  தாக்கத்தையும்  விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. அவருடைய அரசியலுடன் பாரிய ஈடுபாட்டுடன் செயற்பட்டு இக்கட்டான நேரத்தில் அவருயிர் பறிக்கப்பட்டவுடன் அவர் தம் அரசியல் வழி தொடர பொதுச்செயலாளர் பணியை அன்று ஏற்றவன் இன்றும் என்றும் என் அரசியற் தலைவனாக கொண்டவன் எனும் வகையில் இன்றைய அவரது பிறந்த நாளில்  இப்பதிவு காலத்தின் தேவை என உணர்கின்றேன்.

கலாநிதி நல்லையா குமரகுருபரன் 

(தலைவர் தமிழ் தேசிய பணிக்குழு)

https://eelamurasu.com.au/?p=20865&fbclid=IwAR0dmEQDA7ap6D1N0-sL2gRhXVqrDKuQuCanvgg9CuJFRmlNShA0Std88TE

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.