Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் புதிய இராணுவதளபதி சவேந்திரசில்வா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் புதிய இராணுவதளபதி சவேந்திரசில்வா?

யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள இராணுவ அதிகாரியும் முப்படைகளின் பிரதானியுமான மேஜர் ஜெனரல்  சவேந்திர டி சில்வா இலங்கையின் இராணுவதளபதியாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகிள்ளன.

இலங்கையின் தற்போதைய இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே புதிய இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்படலாம் என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்கவிற்கு பதவி நீடிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளபோதிலும் அதற்கான சாத்தியம் இல்லை என பாதுகாப்பு மற்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை சவேந்திர டி சில்வா  மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினர் கடும் எதிர்ப்பை வெளியிடும் நிலை காணப்படுகின்றது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனசவேந்திர டி சில்வா  இலங்கையின் இராணுவதளபதியாக நியமித்தால் ஐக்கியநாடுகள் அமைதிப்படையுடனான இலங்கையின் தொடர்புகள் முற்றாக தடைபடலாம்.

shaven.jpg

யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான  அரசாங்க படையினருடன் ஐக்கிய நாடுகள் தொடர்புகளை பேணுவது தடை செய்யப்பட்டுள்ளதால் இந்த நிலை உருவாகலாம்.

இதேபோன்று இலங்கையுடனான அமெரிக்காவி;ன் பாதுகாப்பு ஒத்துழைப்புகளும் பாதிக்கப்படலாம்

சவேந்திரசவேந்திர டி  சில்வாவிற்கு கடந்த காலங்களில் மைத்திரிபால சிறிசேன பதவி உயர்வு வழங்கியவேளை சர்வதேச அளவில் இதற்கு கடும் எதிர்ப்பு உருவானது குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/62826

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE.jpg

புதிய இராணுவத் தளபதியாகும்... யுத்தக் குற்றவாளி?

புதிய இராணுவத் தளபதியாக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) ஓய்வு பெறவுள்ளார்.

இவ்வாறு அவர் ஓய்வு பெற்றால், இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு மூத்த அதிகாரிகள் இராணுவத் தளபதிக்கான போட்டியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இராணுவத் தலைமை அதிகாரியாக இரண்டாவது இடத்தில் உள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் தொண்டர்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே ஆகியோரே இவ்வாறு போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில் குறித்த பதவிக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூலை மாதமே ஓய்வு பெற்றிருக்க வேண்டிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு மாத சேவை நீடிப்பை வழங்கியிருந்தார்.

இராணுவத்தில் இரண்டாவது நிலை அதிகாரியாக இருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இறுதிப் போரில் சர்ச்சைக்குரிய 58 ஆவது பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்தவர்.

இதன்போது அவர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா.வும் மனித உரிமை அமைப்புக்களும் தொடர்ச்சியாக குற்றஞ்சுமத்தி வருகின்றன.

இதற்கு முன்னர் இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து பல்வேறு சர்வதேச அமைப்புகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/புதிய-இராணுவத்தளபதியாகு/

 

  • கருத்துக்கள உறவுகள்

புதிய இராணுவத் தளபதி நியமனம் – உச்சக்கட்ட குழப்பம்

 

Sri_Lanka_Army_Flag-300x199.jpgசிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதி தொடர்பான முடிவு இன்று சிறிலங்கா அதிபரால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா இராணுவத் தளபதி தொடர்பான அறிவிப்பை நேற்று அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது, எனினும், நேற்று எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க சேவை நீடிப்பைக் கோரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதிய இராணுவத் தளபதிக்கான போட்டியில் நான்கு மூத்த மேஜர் ஜெனரல்கள் உள்ளனர்.

மேஜர் ஜெனரல்கள் சவேந்திர சில்வா, சத்யப்பிரிய லியனகே, தர்ஷன ஹெற்றியாராச்சி, குமுது பெரேரா ஆகிய நால்வரில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் தற்போது இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவியான இராணுவத் தலைமை அதிகாரியாக இருக்கிறார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இராணுவத் தளபதி தொடர்பான முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

தற்போதைய இராணுவத் தளபதிக்கு சேவை நீடிப்பு அளிக்கப்படுமா அல்லது புதிய தளபதி நியமிக்கப்படுவாரா என்பது குறித்து ஏதும் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இன்று புதிய இராணுவத் தளபதி நியமனம் தொடர்பான அறிவிப்பை சிறிலங்கா அதிபர் வெளியிடுவார் என, பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொடவும், தெரிவித்துள்ளார்.

எனினும், புதிய இராணுவத் தளபதி நியமனம் தொடர்பான எந்த தகவலும் தனக்குத் தெரியாது என, சிறிலங்கா அதிபரின் செயலர் உதய செனிவிரத்ன கூறியுள்ளார்.

இதற்கிடையே, புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தும் சமூக வலைத்தளப் பரப்புரை ஒன்று தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

முன்னொரு போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமான முறையில் இந்தப் பரப்புரை இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டே, இராணுவத் தளபதி தொடர்பான முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுப்பார் என, பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு மூன்றாவது சேவை நீடிப்பு அளிக்கப்படலாம் என்றும், தகவல்கள் கூறுகின்றன.

http://www.puthinappalakai.net/2019/08/18/news/39589

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.