Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது

Featured Replies

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை கடந்த ஆண்டில் 44300 மில்லியன் ரூபாய்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது எனவும் நஷ்டத்தை அரசாங்கத்தின் திறைசேரியே கையாள்கின்றது எனவும் இராஜங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில். 

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை நஷ்டத்தில் இயங்குகின்றது. நிதி அமைச்சின் ஊடாக அரசாங்கமே இதனை தாங்கி வருகின்றது. தனியார் துறைக்கு கொடுக்க முடிந்தால் பிரச்சினை இல்லை.

 அரசாங்கம் பராமரிக்க வேண்டும் என்றால் நஷ்டத்தை தக்கிந்தான் ஆகவேண்டும். ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் சேவை கடந்த 2018 ஆம் ஆண்டில் 44300 மில்லியன் ரூபாய்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்த காலங்களில் சிறிது காலம் விமானநிலையம் மூடப்பட்டமை மற்றும் விமானங்கள் விற்றமை என்பன காரணமாக அமைந்தது. அத்துடன் எரிபொருள் விலை உயர்வும் பிரதான காரணியாக அமைந்தது. இன்றுவரை திறைசேரியின் உதவியுடன் தான் கொண்டு செல்கின்றோம் என்றார். 

srilankan-airlines.jpg

https://www.virakesari.lk/article/63115

 

The decision of the incumbent government to terminate the agreement to acquire 14 modern aircraft for SriLankan Airlines, which was signed during the Mahinda Rajapaksa government, had resulted in staggering losses amounting to a sum of US$ 115.77 million (Rs 17,058 .1 million), Parliamentary Committee on Public Enterprises (COPE) report submitted to parliament said today.

“It was observed by COPE that attention should have been made on the adverse impact that could create upon the country’s economy by having to pay a large sum of US dollars 115.77 million (Rs 17,058.1 million) as compensation when it was decided to terminate the agreement to acquire the aircraft. The termination agreement had been prepared under the guidance of ‘Aviation Legal Experts, a legal consultant firm in the UK." The report revealed that only the Finance Ministry officials and Srilankan Airlines have taken part in the discussion.

The report further revealed that a sum of US$ 612,345 has been paid to a company named Seabury for consultancy services for re-fleeting. A sum of US$ 355,451.09 million had been paid to the consultancy firm Skyworks for providing consultancy on termination of the agreement, while a company named 'Nyras' had been paid 248,691 sterling pounds. Also, it has been disclosed that the proposed VIP kit onboard the A330-300 aircraft was not included in the proposal made by the Srilankan Airlines Director Board to acquire new aircraft.

http://www.dailymirror.lk/breaking_news/Terminating-14-modern-aircraft-incurred-Rs-17-058-1-million-loss-COPE/108-173212

  • தொடங்கியவர்

10 வருடத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் நட்டம் 24 ஆயிரம் கோடி ரூபாய்

2009 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு விமானங்களை மாற்றுவதற்காக 2013 ஆம் மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஏ-350, 900 விமானங்கள் எட்டினை கையகப்படுத்துவற்கான உடன்படிக்கை நிறைவு செய்தமை தொடர்பான அறிக்கையையே கோப் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துன்நெத்தி நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

இதனுடன் தற்போது ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வழிநடத்தல் நட்டமும் இதன் காரணமாக ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனுடன் அரச வங்கிகள் மற்றும் இலங்கை கனிய எண்ணெய் கூட்டுதாபனத்திற்கும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த கடனின் அளவு 146 பில்லியன் ரூபாய் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.hirunews.lk/tamil/222685/10-வருடத்தில்-ஸ்ரீலங்கன்-விமான-சேவை-நிறுவனத்தின்-நட்டம்-24-ஆயிரம்-கோடி-ரூபாய்

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்

10 வரு­டங்­களில் ஸ்ரீலங்­க­னுக்கு 24000 கோடி ரூபா நஷ்டம்  சுட்­டிக்­காட்­டு­கி­றது கோப்­குழு

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறு­வ­னத்­துக்கு 2009 தொடக்கம் 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை­யி­லான காலப்­ப­கு­திக்­கான மொத்த நஷ்டம் 24000 கோடி ரூபா என்றும் இதற்கு மேல­தி­க­மாக அரசு வங்­கிகள்,இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் உள்­ளிட்ட அரச நிறு­வ­னங்­க­ளுக்கு 14600 கோடி ரூபாவை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறு­வனம்  கட­னாக செலுத்த வேண்டி உள்­ள­தெ­னவும் அர­சாங்க பொறுப்பு முயற்­சிகள் பற்­றிய குழு (கோப்)சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. 

அர­சாங்க பொறுப்பு முயற்­சிகள் பற்­றிய குழு (கோப்)வின் தலைவர் சுனில் ஹந்­துன்­நெத்­தி­யினால் நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை கம்­பெ­னியின் விமா­னங்­களை மீள் தொகு­திப்­ப­டுத்­து­தலும் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்­டு­களில் மேற்­கொள்­ளப்­பட்ட A 350-900 ரக 8 விமா­னங்­களை சுவீ­க­ரிப்­ப­தற்­கான உடன்­ப­டிக்­கையை முடி­வு­றுத்தல் தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­யி­லேயே இவ்­வி­பரம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. 

sunil.jpg

தாபனம் சார் முகா­மைத்­துவ பல­வீ­னங்­க­ளினால் மட்­டு­மன்றி அர­சியல் பலம் பொருந்­தி­ய­வர்­க­ளினால் புரி­யப்­பட்ட அர­சியல் தலை­யீ­டு­க­ளி­னா­லேயே ஸ்ரீலங்கன் விமான சேவைகள் கம்­பெனி பாரிய நஷ்­டத்தை சந்­தித்­துள்­ளது. ஆகவே  இத்­த­கைய நஷ்­டத்­துக்கு கார­ண­மா­ன­வர்­களை சட்­டத்தின் முன் வர­வ­ழைத்து அவர்­க­ளுக்­கான  தண்­ட­னையை  வழங்க  உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் அர­சாங்க பொறுப்பு முயற்­சிகள் பற்­றிய குழு (கோப்)  இந்த விசா­ரணை அறிக்­கையில் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. 

அத்­துடன் அமைச்­ச­ர­வையின் அனு­ம­தி­யின்றி முறை­யான செல­வுப்­ப­குப்­பாய்வு மேற்­கொள்­ளப்­ப­டாமல் 14 நவீன விமா­னங்கள் 8 வருட காலப்­ப­கு­திக்குள் விமா­னத்­தொ­கு­தியில் சேர்ப்­ப­தற்கு நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவம் மேற்­கொண்ட தீர்­மா­ன­மா­னது தமது அதி­கா­ரத்­தி­ணைக்­க­டந்து மேற்­கொண்­ட­தொரு தீர்மானமெனவும் குறித்த தீர்மானம் வெற்றியளிக்காமை தொடர்பில் உரிய அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டுமெனவும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) இந்த விசாரணை அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. 

 

https://www.virakesari.lk/article/63145

  • தொடங்கியவர்

கிட்டத்தட்ட 180 கோடி அமெரிக்க டாலர்கள். (1800000000) 
சராசரி வருமானம் 4000 அமெரிக்க டாலர்கள் / ஆண்டுக்கு 
இல்லை 450,000 மக்களின் வருட உழைப்பு 😞 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.