Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனக்கொலையாளிகள் சோனியாவுக்கும் சிதம்பரத்திற்கும் வெள்ளையடிக்கும் சுவாமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

கடந்தவருடம், செப்டெம்பர் 2018,  , தி பயனியர் எனும் இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளிவந்த கட்டுரை ஒன்றினைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 

அக்கட்டுரையின்படி, இந்திய பி ஜே பி அரசின் அமைச்சரான சுப்ரமணிய சுவாமி காங்கிரஸின் முன்னாள் தலைவி சோனியாவையும், ப சிதம்பரத்தையும் 2009 இறுதிக்கட்டப் போரின்பொழுது புலிகளுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார்கள் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

அவரது புளொக்கில் அவர் எழுதிய கருத்துப்படி, இறுதிக்கட்டப் போரின்பொழுது, சிதம்பரம் பிரபாகரனுக்கு அனுப்பிய தகவலில், "இந்திய கடற்படை உங்களைக் காப்பாற்றும், ஆகவே பொறுத்திருங்கள்" என்று கூறியிருந்தாராம். ஆனால், வந்ததோ இலங்கை கடற்படை. வந்திருப்பது இலங்கையின் கடற்படை என்பதைத் தெரிந்திருக்காத பிரபாகரன், தனது பதுங்கு குழிக்குள்ளிருந்து வெளியே வந்தபோது கடற்கரையில் அவருக்காகக் காத்திருந்த இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சுவாமி கூறியிருக்கிறார். மேலும், சுவாமியின் கருத்துப்படி, சோனியாவின் கட்டளையின்படியே சிதம்பரம் இந்தச் செய்திப் பரிமாற்றத்தை மேற்கொண்டதாகக் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் அவர் கூறுகையில், அவ்வாறு பிரபாகரனை காப்பாற்றுவதற்காக தயாரான இந்தியக் கப்பற்படை, மேலிடத்து அழுத்தங்களுக்குப் பணிந்து, இந்தியத் துறைமுகத்தை விட்டு ஒருபோதும் கிளம்பவில்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்திய கடற்படை நடவடிக்கையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை இந்திய காங்கிரஸ் தலைமைப் பீடம் பிரபாகரனிடம் சொல்லமுடியாமல்ப் போய்விட்டதனாலேயே, பிரபாகரன் வெளியேவந்து கொல்லப்பட்டார் என்றும் சாமி கூறியிருக்கிறார்.


சுநாமியின் இந்த புதிய குற்றச்சாட்டு, இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ சுவாமியின் அழைப்பினை ஏற்று இந்தியா வந்து சென்ற சில தினங்களில் வெளியாகியிருக்கிறது. ஆனால், இந்த விஜயத்தின்போது இந்தியப் பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டியளித்த மகிந்த ராஜபக்ஷவோ, இறுதிப்போரில் இந்தியாவும் இலங்கையும் மிக நெருக்கமாகச் செயற்பட்டதினாலேயே புலிகளை முற்றாக அழிக்க முடிந்ததென்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

"எங்களிடம் புலிகளைத் தோற்கடிப்பதற்கான பொறிமுறை ஒன்றிருந்தது. மூவர் அடங்கிய குழுக்கள் சிறிலங்கா தரப்பிலும் இந்தியத் தரப்பிலும் உருவாக்கப்பட்டன. எந்த விடயத்தையும், எந்த நேரத்திலும் கலந்தாலோசிக்கும் வசதிகள் இந்தக் குழுக்களுக்கிடையே உருவாக்கப்பட்டிருந்தன" என்று மகிந்த கூறியிருந்தார். இந்த விசேட பொறிமுறையே பிரபாகரனைப் பாதுகாக்க எத்தனிக்கும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்தியதென்று, சுவாமியை மேற்கொள் காட்டி சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மகிந்தவின் கருத்துப்படி, இலங்கையையும் இந்தியாவையும் சேர்ந்த ஆறு உயர் அதிகாரிகள் இக்குழுவில் அங்கம் வகித்ததாகவும், இவர்கள் போர்தொடர்பான தகவல்களை மிகவும் ஒருங்கிணைந்த வழியில் பகிர்ந்துகொண்டதாகவும், போரின் போக்கினைத் தீர்மானிக்கும் முக்கிய முடிவுகளில் ஒருங்கிணைந்து செயற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மே 2009 இல் இக்குழுவின் செயற்பாடு போரின் வெற்றியை உறுதிப்படுத்தியதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது."இந்தப் பொறிமுறையினை நாம் ட்ரொய்க்கா என்று அழைத்தோம், இதன்மூலம் இருபக்கத்திலும் இருந்த எமது அதிகாரிகள், நடுச்சாம வேளையில்க் கூட போர்பற்றிய தகவல்களைப் பரிமாறவும், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராயவும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆகவே அவ்வாறானதொரு பொறிமுறையைத்தான் எமது நாடுகளுக்கிடையிலான வர்த்தக செயற்பாடுகளிலும் எதிர்பார்க்கிறோம்" என்றும் கூறினார் மகிந்த.


மகிந்தவினது இந்தக் கூற்று அன்று காங்கிரஸ் கூட்டணியில் அங்கமாகவிருந்த திராவிட முன்னேற்றக்கழகம் கூறிவரும் கூற்றிற்கு மிகவும் முரணானதாகும். அந்நாள் முதல்வர் கருனாநிதியின் கூற்றுப்படி, இலங்கையின் ராணுவ நடவடிக்கை பிரபாகரனைக் கொல்வதை நோக்கமாக வைத்தே மேற்கொள்ளப்படுகிறது என்றும் இந்தியா இப்போரில் எந்தவிதமான பங்களிப்பினையும் செலுத்தவில்லை என்று மத்திய அரசு தனக்கு உறுதிமொழி தந்திருந்ததென்றும் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழ் மக்களை ஏமாற்றியிருக்கும் கருனாநிதியின் துரோகத்தனத்தை எதிர்த்து தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக        அ. தி. மு. க கூறியிருந்தது.

கருனாநிதி, தனது இரட்டை மனைவிகளுடன், மரீனா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்ததும், போரினை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற உறுதிமொழியினை அடுத்து, வெறும் இரண்டு மணிநேரத்தில் அதைக் கைவிட்டுச் சென்றதும் நினவிலிருக்கலாம்.

அ.தி. மு. க வின் உறுப்பினர் முனுசாமியின் கருத்துப்படி, ராஜபக்ஷவின் கருத்தைப் பார்க்கும்போது, தி. மு. க வும் தமிழின அழிப்பில் பங்குகொண்டிருப்பது தெளிவாகிறது.  "இந்திய அரசாங்கம் புலிகளை அழிக்க இலங்கை ராணுவத்திற்கு ராணுவ உதவிகளை வழங்கியது. அதற்குத் துணைபோன கருனாநிதி ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படக் காரணமாகினார்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

ஆக, சோனியாவும், சிதம்பரமும் தலைவரைப் பாதுகாக்க நினைத்திருக்கிறார்கள். கடற்படையை அனுப்பி அவரைச் சேமமாக இந்தியாவுக்குக் கொண்டுவரவும் ஆயத்தமாகியிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கும் மேலான "இந்திய சக்தியொன்றே" பிரபாகரனைக் கொல்லவேண்டுமென்பதில் உறுதியாகவிருந்து செய்துமுடித்திருக்கிறது !!! அந்த சக்தி யாராக இருக்கும்??? 

இப்படி இருக்கிறது இந்திய அரசியலும், அதன் அடிவருடி வட இந்திய ஊடகங்களும். ஆனால், கட்டுரையை வரைந்தவரோ, தமிழ்ப் பிராமணர் !!!!!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.