Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேரடியாக தமிழ் மக்களுடைனேயே பேச்சு – ஜே.வி.பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tilvin-silva-720x450.jpg

நேரடியாக தமிழ் மக்களுடைனேயே பேச்சு – ஜே.வி.பி.

தமிழ அரசியல் கட்சிகளுடன் பேரம்பேசி தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஆகவே தமிழ அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விடவும் தமிழ் மக்களுடன் நேராடியாக பேசி இணக்கம் காணவே தாம் விரும்புவதாகவும் கூறினார்.

தேர்தலில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதன் பிரகாரம் விரைவாக வடக்கு கிழக்கில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கபடும் என கூறிய அவர், தேசிய அரசியல் கொள்கையின் பிரகாரம் இந்த வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த வேலைத்திட்டங்களின்போது பாகுபாடு இல்லாத அரசியல் நகர்வுகளையே தாம் முன்னெடுத்து வருவதாகவும், தேர்தல் பிரசாரங்களுக்கு முன்னர் மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொண்டு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே ஆரோக்கியமானது என்றும் டில்வின் சில்வா குறிப்பிட்டார்.

http://athavannews.com/நேராடியாக-தமிழ்-மக்களுடை/

 

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஏனைய தேர்தல்களில் தமிழ் அரசியல் கட்சிகளை ஆதரிக்கலாம்.ஆனால், ஜனாதிபதி தேர்தல் என்று வரும்போது தமிழ் மக்கள் தென்னிலங்கை கட்சியொன்றை ஆதரிப்பதென்றால், தென்னிலங்கை கட்சியொன்றை அவர்கள் நம்புவதென்றால் ஜே.வி.பி.யே ஒரே தெரிவாக இருக்கமுடியும் என்று கூறியிருக்கும் திசாநாயக்க " தமிழ் மக்களின் கொள்கைகள், எதிர்பார்ப்புகளை தென்னிலங்கை மக்கள் மத்தியில் சரியான முறையில் கொண்டுசெல்லவேண்டும் ; தமிழ் மக்கள் மத்தியில் எமது அரசியலை பலப்படுத்தவேண்டும்.இந்த இரு பணிகளையும் உருப்படியாக செய்யாமல் முன்னோக்கி நகரமுடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். " என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையின் கடந்த அரை நூற்றாண்டு கால அரசியல் வரலாறு இனப்பிரச்சினை தொடர்பான ஜே.வி.பி.யின் நிலைப்பாடு எப்போதுமே தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு மாறானதாகவே இருந்துவந்திருப்பதை காட்டுகிறது. மார்க்சிய -- லெனினச கோட்பாடுகளைப் பின்பற்றுகின்ற கட்சி என்று உரிமைகோரிக்கொள்கின்ற போதிலும்,சிறுபான்மை இனங்களின் அரசியல் பிரச்சினைகள் என்று வரும்போது அதுவும் குறிப்பாக, அதிகாரப்பரவலாக்கல் என்று வரும்போது ஜே.வி.பி.யிடம் ஒருபோதுமே முற்போக்கு கொள்கை அணுகுமுறை இருந்ததில்லை. இப்போதும் கூட அதிகாரப்பரவலாக்கல் குறித்து அவர்களின் நிலைப்பாடுகள் தெளிவானவையாக இல்லை. இது விடயத்தில் அந்த கட்சியின் வரலாற்றை ஒரு கணம் திரும்பிப் பார்ப்போம்.

https://www.virakesari.lk/article/63816

 

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவிகளா
இவ்வளவு நடந்தும் மீண்டும் முதலாம் வகுப்பிலிருந்தா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.