Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரயான்- 2, விக்ரம் லேண்டரின்.. இருப்பிடம் கண்டுபிடிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

chandhrayan.jpg

சந்திரயான்- 2 லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு.

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட சந்திரயான்-2 லாண்டர் பகுதி நிலவின் மேற்பரப்பில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக  இஸ்ரோ அறிவித்துள்ளது.

சந்திரயான்- 2 லாண்டரின் தற்போதைய நிலை தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இஸ்ரோவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் லாண்டர் பகுதியை நிலவைச் சுற்றிவரும் சந்திரயான்-2 வின் ஆப்பிட்டர் கருவி மூலம் எடுக்கப்பட்ட படம் தமக்கு கிடைத்துள்ளதாகவும், இந்நிலையில் லாண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரோ சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யவதற்காக ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. புவியின் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.

கடந்த மாதம் 20ஆம் திகதி ‘சந்திரயான்-2’ விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது.

இதையடுத்து கடந்த 2ஆம் திகதி ‘சந்திரயான்-2’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லாண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

பின்னர் இரண்டு முறை உந்து விசையைப் பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லாண்டர் நிலவை நெருங்கியது.

இந்நிலையில் ‘சந்திரயான்-2’ விண்கலத் திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு நேற்று அதிகாலையில் நடந்தது.

சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லாண்டர் நிலவை நெருங்கிய சந்தர்ப்பத்தில்  அதிலிருந்து சமிக்ஞை எதுவும் கிடைக்காத நிலையில், நிலவிலிருந்து சரியாக 2.1 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தபோது லாண்டர் தரைக்கட்டுப்பாட்டுத் தளத்துடனான தொடர்பிலிருந்து விலகியது.

லாண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ள நிலையில், லாண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சந்திரயான்-2-லேண்டரின்-இர/

##################    ######################    #####################

 

à®à®©à¯à®© à®à¯à®¯à¯à®¤à®¾à®°à¯à®à®³à¯

கரம் கொடுத்த தெர்மல் இமேஜ்.. அசத்திய ஆர்பிட்டர்.. விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப் பட்டது இப்படித்தான்!

சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர், தெர்மல் இமேஜிங் முறையை வைத்து ஆர்பிட்டர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் என்று நினைத்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம்தான் மிச்சமாகி உள்ளது. ஆம், சந்திராயன் 2ன் விக்ரம் லேண்டர் நிலவில் திட்டமிட்டபடி இறங்கவில்லை.

மாறாக நிலவிற்கு மிக அருகில் 2.1 கிமீ தூரம் வரை விக்ரம் லேண்டர் சென்றது. அதன்பின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் எங்கே சென்றது என்று தெரியாமல் இஸ்ரோ குழம்பி வந்தது.

திà®à¯à®à®®à¯

அதே சமயம் லேண்டருடன் தொடர்பை இழந்தாலும் ஆர்பிட்டர் இன்னமும் இஸ்ரோ உடன் தொடர்பில்தான் இருக்கிறது. இந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை ஆராயும். இந்த ஆர்பிட்டர் மூலம் விக்ரம் உடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இஸ்ரோ தீவிரமாக முயன்று வருகிறது. ஆர்பிட்டர் நிலவின் தென் பகுதியைத்தான் சுற்றி வருகிறது.

à®à®ªà¯à®ªà®à®¿ நà®à®¨à¯à®¤à®¤à¯

இந்த ஆர்பிட்டரை வைத்து சந்திரயானை கண்டுபிடிக்க முடிவு செய்தனர். அதன்படியே இன்று காலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆம் நிலவிற்கு மேல் சுற்றும் சந்திரயான் 2 ஆர்பிட்டர் இந்த விக்ரமை மேலே இருந்து படம் பிடித்து, கண்டுபிடித்துள்ளது.

à®à®©à¯à®© மாறà¯à®ªà®¾à®à¯

இதற்காக தெர்மல் இமேஜ் கேமராவை பயன்படுத்தி உள்ளனர். ஆர்பிட்டரில் தெர்மல் இமேஜிங் கேமராக்கள் இருக்கிறது. இது இருள், அதிக வெளிச்சம் என அனைத்து சூழ்நிலையிலும் படம் பிடிக்க கூடியவை. உலகில் இருக்கும் எல்லா பொருட்களும் குறிப்பிட்ட அளவு ஒளியை வெளியே விடும். அந்த ஒளியின் மூலம்தான் நாம் அதை பார்க்கக் முடிகிறது. இந்த தெர்மல் இமேஜிங் கேமராக்கள் அந்த ஒளியை படம் பிடிக்கும்.

à®à®©à¯à®© à®à®¤à®¾à®°à®£à®®à¯

நிலவில் விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியில் இருந்து வித்தியாசமான ஒளி வெளியே வரும். இந்த வித்தியாசமான ஒளிகளை மொத்தமாக சேர்த்து இணைத்து பின் ஒரு இமேஜ் உருவாக்கப்படும். அது உண்மையான பொருளின் வடிவத்தை 99% ஒட்டி இருக்கும். இந்த முறையை வைத்துதான் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக தீவிரவாத அமைப்புகளை தாக்கும் முன் அந்த குறிப்பிட்ட இடத்தில் எத்தனை தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பதை ராணுவ வீரர்கள் தெர்மல் இமேஜிங் கேமராக்கள் மூலம் கண்டுபிடிப்பார்கள். சாட்டிலைட் அல்லது டிரோன் உதவியுடன் இது கண்டுபிடிக்கப்படும்.

à®à®¤à¯ à®®à¯à®±à¯

தற்போது அதே முறையை பயன்படுத்தி தெர்மல் இமேஜிங் கேமராக்களை வைத்து சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளனர். இந்த இமேஜ் விரைவில் வெளியிடப்படும். அதன்பின் விக்ரம் லேண்டரின் உண்மையான நிலை வெளியே தெரிய வரும்.

Read more at: https://tamil.oneindia.com/news/india/chandrayaan-2-what-is-thermal-imaging-and-how-it-helped-in-finding-vikram-362393.html

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

அருமை.  விக்ரமை இயக்க வைத்தால் 100% வெற்றி தான் !

( ஆனால், இலங்கையில் காணாமல் போன தமிழ் மக்களைத்தான் இந்த பூமியில் கண்டு பிடிக்க முடியவில்லை ) 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நிலவில் ஜெல் போன்ற பொருளை கண்டுபிடித்த சீனாவின் சேன்ஜ் 4 லேண்டர்.!

chinas-change4lander-found-gel-moon-bann

சீனாவின் சேன்ஜ் 4 மிஷன் தற்போது நிலவின் தொலைதூர பகுதியை ஆராய்ந்து வருகிறது. எப்போதும் பூமியை நோக்கி இருக்காத நமது நிலவின் ஒரு பகுதியான இதைப் பற்றி நாம் அவ்வளவாக அறிந்ததில்லை.ஆனால் தற்போது அங்கு உலவி வரும் ரோவர் உண்மையிலேயே விசித்திரமான பொருளை கண்டுபிடித்துள்ளது.

இந்தாண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் நிலவில் தரையிறங்கிய சேன்ஜ்5, உடனடியாக அங்குள்ள வித்தியாசமான நிலப்பரப்பை புகைப்படம் எடுத்து அனுப்பியதுடன், சோதனையின் ஒரு பகுதியாக அங்கு நிலவில் மைக்ரோ கிராவிடி-ல் பருத்தியை விளைவிக்க முயற்சித்தது. தற்போது இந்த லேண்டர் நிலவின் பரப்பில் ஜெல் போன்ற விசித்திரமான பொருள் ஒன்றை கண்டறிந்துள்ளது.

இந்த மிஷனின் யூடு-2 ரோவர் இந்த மர்மத்தை நிலவில் அதன் 8 வது நாளில், அதாவது பூமியில் ஜூலை 25ஆம் தேதி உள்ளபோது கண்டறிந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பானது மிகப்பெரிய மர்மத்திற்கு வழிவகுத்துள்ளதால், இந்த மிஷனுக்கு பின்னால் உள்ள விஞ்ஞானிகள் ஏற்கனவே இந்த ரோவருக்கு திட்டமிட்ட மற்ற அனைத்து ஆய்வுப்பணிகளையும் தவிர்த்துவிட்டு, விசித்திர பொருளை ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளனர்

சீனமொழி பத்திரிக்கையான Our Space வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த ஜெல் நிலவு பள்ளதாக்கில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் தனித்த நிறம் மற்றும் அமைப்பு அதனை சுற்றுப்புறத்தில் இருந்து வேறுபடுத்தி காண்பிப்பதால் ரோவர் மூலம் கவனிக்கப்பட்டுள்ளது.

இது ஜெல் போன்றது மற்றும் தனித்துவமான நிறத்தை கொண்டுள்ளது போன்ற தகவல்களை தவிர்த்து, அந்த பொருள் எந்தமாதிரியான தோற்றத்தை கொண்டுள்ளது போன்ற எந்தவொரு தகவல்களையும் விஞ்ஞானிகள் இதுவரை வெளியிடவில்லை. இது உருகிய கண்ணாடியாக இருக்கலாம் எனவும், நிலவின் பரப்பை விண்கல் தாக்கியபோது உருவாகியிருக்கலாம் எனவும் சில வல்லுநர்கள் நம்புகின்றனர்

இந்த மர்ம கண்டுபிடிப்பை தவிர, சேன்ஞ்4 ரோவர் மற்ற அறிவியல் பரிசோதனைகளை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலவின் மேல்ஓட்டின் சேர்மங்களை ஆய்வு செய்வதற்காக இந்த ரோவர் அதன் நியூட்ரான் ரேடியோ டிடெக்டர் மற்றும் லோ-ப்ரீக்வென்சி ரேடியோ டிக்டரை பயன்படுத்த வேண்டும்.

லூனார் டே எனப்படும் நிலவு நாளின்(பூமியில் 14 நாட்கள்) போது மட்டுமே ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளை செய்யும் இந்த லேண்டர்,ஆற்றலை சேமிப்பதற்காக லூனார் நைட் நேரத்தில் ஓய்வு எடுக்கும்.

https://tamil.gizbot.com/scitech/china-s-change-4-lander-found-gel-like-substance-on-the-moon-023048.html

டிஸ்கி :

இந்தியகாரனுக்கு ரப் கொம்படிசன் கொடுப்பான் போல கிடக்கு..👍

Chandrayaan_2.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.