Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-1-720x450.jpg

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு போராட்டம்!

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து எழுக தமிழ் பேரணி இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும் பாடசாலைகள் வழமை போன்று இயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் கதவடைப்பு போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்திருந்தது.

எனினும் வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்கள் வழமைபோன்று இயங்குவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

Jaffna-3-384x288.jpg

http://athavannews.com/எழுக-தமிழ்-பேரணிக்கு-ஆதர-2/

எழுக தமிழ் பேரணி - வவுனியா, மன்னாரில் இயல்பு நிலை

ழுக தமிழ் நிகழ்வு தமிழ் மக்கள் பேரவையால் யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் கதவடைப்பு போராட்டத்திற்கும் பேரவையால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

DSC00269.JPG

இந்நிலையில் வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் அனைத்து பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன

இதன்போது, வவுனியா வர்த்தக நலன்புரிச்சங்கம் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது என தெரிவித்த நிலையில் இன்று வழமைபோன்று கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

DSC00274.JPG

இதேவேளை பாடசாலைகள் மற்றும் அரச திணைக்களங்களும் வழங்மைபோன்று இடம்பெற்று வருகின்றது.

போக்குவரத்து சேவைகள் தங்கு தடையின்று இடம்பெறுகின்ற நிலையிலும் வவுனியாவிலிருந்து விசேட பேரூந்துகள் எழுக தமிழ் நிகழ்வுக்கு மக்களை அழைத்து சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

DSC00274.JPG

இதேவேளை வவுனியா நகர்ப்பகுதியில் மக்கள் நடமாட்டம் வழமைக்கு மாறாக குறைந்தே காணப்படுகின்றது.

இதையடுத்து மன்னாரின் இயல்பு நிலைமையும் வழமை போல் காணப்பட்டது.

DSC00276.JPG

.மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் வழமை போல் இயங்கியது.தனியார் போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம் பெற்று வருகின்றது.

DSC00278.JPG

பாடசாலைகள்,அரச,தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமை போல் இடம் பெற்று வருகின்றது.ஒரு சில வர்த்தக நிலையங்கள் மாத்திரமே மூடப்பட்டுள்ளது.

மன்னார்

இதே வேளை  எழுக தமிழ் நிகழ்விற்கு ஆதரவு வழங்கும் வகையில்  மன்னார் மாவட்டத்தில் உள்ள  அரசியல் சிவில் சமூக பிரதிநிதிகள் பலர் நேரடியாக கண்டன போரட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

DSC_0218.JPG

இதே வேளை இலங்கை அரச போக்குவரத்துச் ஊழியர்களுக்கு சம்பள சுற்றறிக்கையின் படி புதிய சம்பள முறை துரிதமாக நடைமுறைப்படுத்த கட்டாயப்படுத்தி இலங்கை அரச போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை (16) தொடக்கம் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

DSC_0225.JPG

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி இலங்கை அரச போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை ஊழியர்களும் இன்றைய தினம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

DSC_0234.JPG

இதனால் இன்றைய தினம் மன்னாரில் இருந்து உள்ளக மற்றும் வெளி மாவட்டங்களுக்கான அரச போக்குவரத்து சேவைகள் இடம் பெறவில்லை.

DSC_0237.JPG

எனினும் மக்கள் எவ்வித அசௌகரியங்களும் இன்றி தனியார் போக்குவரத்துச் சேவையூடாக தமது பயணங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

DSC_0247.JPG

 

https://www.virakesari.lk/article/64862

 

எழுக தமிழ் பேரணியால் அம்பாறையில் கடையடைப்பு

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தில் கடையடைப்புடன்  ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டதனால்    அம்பாறையில் சில இடங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

b__10_.jpeg

தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு நீதி கோரி தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் பேரணி யாழில் இன்று திங்கட்கிழமை(16) ஆரம்பமானது.

இந்நிகழ்விற்கு கிழக்கிலிருந்து ஆதரவாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் அம்பாறை மாவட்டத்தின் சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை பெரிய நீலாவணை பாண்டிருப்பு காரைதீவு திருக்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.

pc__9_.jpeg

மேலும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள  நிலையில் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன்  பஸ் சேவைகள் எவையும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/64872

எழுக தமிழுக்காக முடங்கியது முல்லைத்தீவு

எழுக தமிழுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக, முல்லைத்தீவில், கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், வீதிகளும் ஆளரவமற்ற நிலையில், வெறிச்சோடிப் போயுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.

IMG_0072_resized_9.JPG

குறிப்பாக முல்லைத்தீவு நகரில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், பொதுச்சந்தை வளாகம் என்பனவும் மூடப்பட்டுள்ளன. இதனால் முல்லை நகர்ப் பகுதி ஆளரவமின்றிக் காணப்படுகின்றது.

IMG_0084_resized_4.JPG

இதேபோல் முல்லைத்தீவின் முள்ளியவளை, தண்ணீரூற்று போன்ற பகுதிகளும் இவ்வாறே கடைகள் அடைக்கப்பட்டு, சனநடமாட்டங்கள் இன்றி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_0087_resized_3.JPG

https://www.virakesari.lk/article/64882

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.