Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கி. மு. 6-வது நூற்றாண்டிலே தமிழ் உயரிய எழுத்து வடிவம் கொண்டிருந்ததைக் காட்டும் கீழடி அகழாய்வுகளின் தொல்காப்பியத் தொடர்புகள்!

Featured Replies

கி. மு. 6-வது நூற்றாண்டிலே தமிழ் உயரிய எழுத்து வடிவம் கொண்டிருந்ததைக் காட்டும் கீழடி அகழாய்வுகளின் தொல்காப்பியத் தொடர்புகள்!

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

கிமு ஆறாவது நூற்றாண்டிலேயே தமிழ் உயரிய எழுத்துவடிவம் கொண்டிருந்தது என்பதை கீழடி அகழ்வாய்வுகள் உறுதிசெய்கின்றன! கீழடி தரும் புதிய ஆதாரங்களின் பின்புலத்தில், நம் தொன்மையான  இலக்கியங்களில் காணப்படும் இலக்கியச் சான்றுகளில்  சிலவற்றை மீள்வாசிப்பு செய்வோம்!

1.கீழடி அகழாய்வுகள் காட்டும் முதல் இலக்கியப் பொருள் தொல்காப்பிய காலம்!

தொல்காப்பியத்தின் காலம் (கீழ் எல்லை) கி.மு. ஏழாம் நூற்றாண்டு என்பது மொழியியல் ஆய்வாளர்கள் கண்ட முடிவு! குறைந்தபட்சக் கீழ் எல்லையை எடுத்துக்கொண்டாலும், கி.மு.ஏழாம் நூற்றாண்டு. தாங்கள் குறிப்பிட்ட காலத்துக்கும் ஒரு நூற்றாண்டு முன்பு தொல்காப்பியத்தின் கீழ் எல்லை முடிகிறது!

2. கீழடி அகழாய்வுகள் காட்டும் இரண்டாவது இலக்கியப் பொருள் - தமிழ் எழுத்துக்களின் தோற்ற காலம்!

ஆகவே, தமிழ் எழுத்துக்களின் தோற்ற காலம், மொழியியல் நூல்முறைப்படி, குறைந்த அளவு, கி.மு.12ம் நூற்றாண்டு என்பதை அறிவோம்!

3. ஐந்திலக்கணம் கொண்ட ஒரே உலகமொழி தமிழ்!

மொழி இலக்கணத்தின் ஐந்து கூறுகளாக எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணம் கொண்ட ஒரே உலகமொழி தமிழ் மட்டுமே!

4. மொழிக்கும், பொருளுக்கும் இலக்கணம் படைத்த ஒரே உலக மொழி தமிழ்!

தொல்காப்பியம் தமிழ் மொழியியலுக்கும்(எழுத்து, சொல். யாப்பு, அணி இலக்கணங்கள்), தமிழ் பொருளியலுக்கும் (தமிழ் மரபுகள், ஐந்து வகைத் தமிழ் நிலங்கள், நிலம் சார்ந்த காலங்கள், ஒவ்வொரு நிலம் சார்ந்த தமிழர்களின் பண்பாட்டு அசைவுகள், ஐவகை தமிழ்நிலத் தாவர, விலங்கினங்களின் பண்புகள் உள்ளிட்ட பொருளியல் இலக்கணங்கள்) ஒருங்கே எழுதப்பட்ட முழுமையான இலக்கண நூல்.

உலகின் கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் உள்ளிட்ட உலகின் அனைத்துமொழிகளின் இலக்கணத்துக்கும் சொல் இலக்கணம், பொருள் இலக்கணம் என்னும் இரண்டு கூறுகள் மட்டுமே உண்டு! யாப்பு, அணி போன்ற செய்யுள் இலக்கணங்கள் மொழி இலக்கணத்தின் பகுதியாக எம்மொழிக்கும் இல்லை. பொருள் இலக்கணமும் எம்மொழிக்கும் இல்லை.

5. பொறாமையாளர்களின் பொருமல்!

பெயர் சொல்லவிரும்பாத பொறாமையாளர்கள், 'நாம் அனைவரும் உலகின் தலைசிறந்த கற்பனைவாதிகள் என மற்ற மொழிக்காரர்களுக்குப் பறை சாட்டுவதை சுட்டிக் காட்டுகிறது.' என்று பொருமுவதை நம்மால் புரிந்துகொள்ள இயலும்.

எழுத்தும், எண்ணும் அறியாமல் நாடோடிகளாக வந்த கூட்டத்தின், நிறத்தைப் பார்த்து ஏமார்ந்த தமிழர்களை ஏய்க்கப் பார்த்த இனத்தின் தொல்லெச்சங்களின் வயிற்றெரிச்சல் இப்படித்தான் இருக்கும்.

கிடக்கட்டும்! பரவாயில்லை! விடுங்கள்!

உங்கள் கேள்விக்கு வருவோம். கி .மு .6 வது நூற்றாண்டிலே தமிழ் உயரிய எழுத்து வடிவம் கொண்டிருந்தது என்பது எதைக் காட்டுகிறது? என்பதை இப்போது காண்போம்!

உலகின் பிற மொழிகளுக்கு யாப்பு, அணி உள்ளிட்ட பொருள் இலக்கணம் ஏன் உருவாகவில்லை?

உலகின் பிற மொழிகளுக்கு யாப்பு, அணி உள்ளிட்ட பொருள் இலக்கணம் இல்லாததற்குக் காரணம் தெளிவாகச் சொல்கிறேன்!

இலக்கியம் அமைந்து பல ஆண்டுகள் ஆன பிறகுதான், இலக்கியத்தின் அமைப்பை உற்று நோக்கி யாப்பு, அணி போன்ற உயர் பொருள் இலக்கணம் அமைவது இயல்பு.

7. உலகமொழிகளுக்கு பிற மொழித் தொடர்பினாலேயே இலக்கணம்!

உலகின் ஏனைய மொழிகளுக்கெல்லாம் பிற மொழித் தொடர்பினாலேயே இலக்கணம் ஏற்பட்டது; அதாவது, பிற மொழி பேசுபவர்கள், ஒரு மொழியினத்துடன் வாணிகம் உள்ளிட்ட தொடர்புகள் கொள்ளச்செய்த முயற்சிகளின் விளைவாகவே அம்மொழிக்கு இலக்கணம் அமைந்தது.

8. எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணங்கள் எழுதப்பட்டதன் காரணம்!

வேற்றுமொழிக்காரர்களுக்கு மொழி கற்பிப்பதற்காகவே உலக மொழி இலக்கணங்கள் உருவாயின! 'மொழி இலக்கணம் என்பது அம்மொழியைக் கற்றுக்கொள்பவருக்கு கருவி மட்டுமே' என்ற முறையில் உருவானதால், எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணங்கள் எழுதப்பட்டன.

மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், கிரேக்கம், இலத்தீன், அரபு, எபிரேயம், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளின் இலக்கணங்கள், இம்மொழிகளைத் தெரியாதவர்களுக்கு, இம்மொழிகளைக் கற்றுக்கொடுக்கவே உருவாயின.

9. சமஸ்கிருதம் - யாருக்கும் தாய்மொழி அல்லாத முற்றிலுமான ஏட்டுச் சுரைக்காய்!

சமஸ்கிருதத்தின் கதையோ இன்னும் மோசம்! அது யாருக்கும் தாய்மொழி அல்லாத முற்றிலுமான ஒரு ஏட்டுச் சுரைக்காய் மட்டுமே! தாய்மொழி பேசுபவனுக்குக்கு மட்டுமே, எழுத்துக்கும், சொல்லுக்கும் இலக்கணம் படிக்காமலேயே எழுத்தையும், சொல்லையும், சொற்றொடரையும் உச்சரிக்கவும் பேசவும் இயலும்!

சமஸ்கிருத மொழி கற்பவனுக்கும், பேசுபவனுக்கும் சமஸ்கிருத இலக்கணம்தான் உயிர்நாடி. சமஸ்கிருத இலக்கணம் படிக்காமல், எவரும்  ஒரு எழுத்தோ, சொல்லோ உச்சரிக்க முடியாது.

எனவே, சமஸ்கிருத இலக்கணம் என்பது எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே ஆனது. பாணினியின் இலக்கண நூல் இவ்விரண்டை மட்டுமே பேசும். ஏனென்றால் தேவையும் இவை இரண்டு மட்டுமே!

10. பாணினி இலக்கணம் 'பாஷா'வுக்கே!

பாணினியின் இலக்கணத்தைப் பின்பற்றியே இன்றைய சமஸ்கிருதம் இருந்தாலும், பாணினி இலக்கணம் எழுதியது சமஸ்கிருத்ததிலும் அல்ல! சமஸ்கிருதத்துக்கும் அல்ல! 'கீர்வாணம்' என்னும் வேதமொழிக்குப் பிற்பட்ட, சமஸ்கிருதத்துக்கு முற்பட்ட 'பாஷா' என்ற மொழிக்கே பாணினி இலக்கணம் எழுதினார்.

11. எழுதப்படாத இன, சமுதாய இலக்கியங்களே பாணினி கால ஆரிய இலக்கியங்கள்!

'பாஷா'வுக்கு இலக்கணம் எழுதிய பாணினி காலத்தில், ஆரியர்களிடம் இருந்தவை எழுதப்படாத இன இலக்கியமான வேத-உபநிஷத்துக்களும், எழுதப்படாத சமுதாய இலக்கியமான இதிகாசங்களும் மட்டுமே! இவை 'பாஷா'வில் பாடப்பட்டு வந்தன. பாணினி காலத்தில், இவை தவிர, சொல்லிக்கொள்கிற அளவில் வேறு இலக்கியமில்லாத காரணத்தால், யாப்பியலோ, அணியியலோ 'பாஷா'-வுக்கு (சமஸ்கிருதத்துக்கு) உருவாகவில்லை.

13. பொருளிலக்கணம் உருவாகத் தகுதிபெறாத ஆரியர்கள்!

ஆரியர்களுக்கென்று மரபியல், நிலம், காலம், சிறுபொழுது, பெரும்பொழுது, பண்பாட்டு அசைவுகள், ஆரியர் நிலத் தாவர, விலங்கினங்களின் பண்புகள் உள்ளிட்ட பொருளியல் இலக்கணம் எழுதத் தேவையற்ற நாடோடிகளாகவே ஆரியர்கள் இருந்தனர்.

14. மிகச்சிறந்த சமஸ்கிருத அலங்கார நூல்கள் தந்தது தமிழர்களே!

சமஸ்கிருதம் கற்ற பிற்காலத் தமிழர்கள், குறிப்பாகக் கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த தமிழரிஞரும், சமஸ்கிருதப் புலமை பெற்ற அறிஞருமான 'தண்டி' என்பவர் தந்த  'தண்டியலங்காரம்' என்ற நூல்தான் சம்ஸ்கிருத மொழிக்குக் கிடைத்த முதல் யாப்பு, அணி இலக்கண நூல். 'தண்டியலங்காரம்' தண்டி என்ற தமிழரிஞர் சம்ஸ்கிருதமொழிக்கிட்ட கொடை! சமஸ்கிருதத்தில் மிகச்சிறந்த அலங்கார நூல்கள் தமிழர்களாலேயே எழுதப்பட்டன.

15.சமஸ்கிருத யாப்பணி நூல் 'அலங்கார சாஸ்திரம்' தொல்காப்பியத்தில் கொடையே!

தொல்காப்பியமும், தமிழும், தமிழரும், சமஸ்கிருதத்துக்குப் போட்ட தானக்கொடையே சமஸ்கிருத யாப்பணி நூலான 'அலங்கார சாஸ்திரம்' என்பதை தமிழர்களும், ஆரியர்களும், ஆரியப் பற்றாளர்களும் இப்போதாவது நன்றாக அறியட்டும். காலத்தால் சமஸ்கிருதம் எத்துணை பிற்பட்ட மொழி என்பதைக் கண்டு நம்மவர் பார்வை தெளியட்டும்!

16. மொழிக்கும், இலக்கியத்துக்கும் ஒருங்கே இலக்கணம் கொண்டது தமிழ் மட்டுமே!

தமிழ்மொழி ஒன்றில் மட்டுமே தொடக்க காலத்திலிருந்தே மொழிக்கும், இலக்கியத்துக்கும் ஒருங்கே இலக்கணம் அமைந்திருந்தது. தமிழில் இலக்கணம் என்றால் 'தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் உரிய இலக்கணம்' என்று பொருள்.

கிரேக்கம், லத்தீன், அரபு, சமஸ்கிருதம் உள்ளிட்ட அனைத்து உலகமொழிகளுக்கும் 'இலக்கணம்' என்பதற்கு, 'மொழியின் இலக்கணம்/மொழியில் இயல்பு' என்பது மட்டுமே பொருள்.

17. சம்ஸ்கிருத இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்களைப் பின்பற்றியே எழுந்தவை!

சம்ஸ்கிருத இலக்கியங்கள் தமிழ்ச்சங்க இலக்கியங்களுக்கு மிகவும் பிற்பட்ட பல்லவர்களின் காலத்திலேயே உருவாயின. வடக்கே குப்தர்கள் சம்ஸ்கிருத இலக்கியங்களை வளர்த்தனர். தமிழகத்தில் தமிழ் இலக்கியங்களின் மொழிபெயர்ப்பு இலக்கியங்களாகவே சம்ஸ்கிருத இலக்கியங்கள் பெருகின. சங்ககாலத்துக்குப் பிற்பட்ட சம்ஸ்கிருத இலக்கியத்திலும், தமிழிலக்கியத்திலும் நாம் ஒரே வகையான பண்பாட்டிலக்கியங்களைக் காணலாம்!

18. 'உலக வழக்கும், செய்யுள் வழக்கும்' என்று இலக்கணத்துக்கே இலக்கியமாகக் குறித்த ஒரே உலக மொழிமரபு தமிழ் இலக்கணமரபு மட்டுமே என்பது தமிழர்கள் பெற்ற பேறு!

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்

உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!

கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு

துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.