Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.தே.க. மாநாடு | இனப்பிரச்சினை பற்றி எதுவும் பேசப்படவில்லை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.தே.க. மாநாடு | இனப்பிரச்சினை பற்றி எதுவும் பேசப்படவில்லை?

 அரசியலமைப்புத் திருத்தம் தொடரும்
ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு நேற்று சுகததாச மைதான மண்டபத்தில் நடைபெற்றது. அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  • 2015 இல் தொடங்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தைத் தொடர்வது
  • பிரதமருடன் கலந்தாலோசித்து, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது.
  • விக்கிரமசிங்கவையே தொடர்ந்தும் கட்சியின் தலைவராக வைத்திருப்பது
  • சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது
  • ஐ.தே.கட்சியில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது
  • அபிவிருத்தியில் கவனம் செலுத்துவது
  • உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பது
  • ஒற்றுமையாக 2020 பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது
  • 2018 அரசியலமைப்புப் பிரச்சினையை வெற்றிகரமாகக் கையாண்டதற்காக சபாநாயகர் கரு ஜயசூரியாவைக் கெளரவிப்பது

ஆகியன அவற்றில் சில.

இதில் முக்கியமான அம்சம் 2015 இல் தொடங்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் ஆனால் அது பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட இதர பங்காளிகளுடன் ஆலோசித்த பின்னரே நடைமுறைப்படுத்தப்படும். இந்தத் தீர்மானத்தைப் பிரதமர் விக்கிரமசிங்க முன்மொழிய கட்சி அங்கத்தவர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாக அறியப்படுகிறது.

கட்சித் தலைவர் விக்கிரமசிங்க பேசும்போது கட்சியின் ஒற்றுமை பற்றி வலியுறுத்தியதுடன் எதிர்காலத்துக்கு அது இன்றியமையாததென்றும், கடந்த காலத் தவறுகளிலிருந்து நாங்கள் நிறையக் கற்றுக்கொள்ளவேண்டுமென்றும் நாங்கள் அதிகாரத்தை எடுத்துவிட்டால் அதைத் தப்பிப் போக விட்டுவிடக்கூடாதென்றும் நாங்கள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே எதிர்த் தரப்பினரையும் குழப்பவாதிகளையும் வெற்றிகொள்ள முடியுமெனவும் கூறினார்.

images-1-1.jpg

“ஒவ்வொரு தடவையும் நாங்கள் பிளவுபட்டு நின்ற போது நாங்கள் ஹோறுப்போயிருக்கிறோம். 1969 இல், 1994 இல் அதுவே நடந்தது. ஒன்றாகச் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம். எடுத்த வெற்றியை இழக்கலாகாது. அதை மேலும் பலப்படுத்த வேண்டும்” என அவர் மேலும் பேசினார்.

இரண்டாம் கட்டத் தலைமையை உருவாக்கியிருப்பதையிட்டுத் தான் மகிழ்ச்சியடைவதாகவும். அதே வேளை பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருப்பதாகவும், இரண்டாம் கட்டத் தலைமை இதை நிவர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும், அடுத்த வருடத்தில் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலிலும் ஐ.தே.கட்சி வெற்றிபெறுவதற்காக அர்ப்பணிப்போடு செயலாற்றும் எனவும் இலங்கையை ஒரு ஏற்றுமதி நாடாகவும், தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதரத்தைக் கொண்டதாகவும் உருவாக்கத் தகுந்த சீர்திருத்தங்களைத் தொடர்ந்து செய்யவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி வேபாளர் சஜித் பிரேமதாச பேசும்போது தான் கட்சியையும், நாட்டையும் செழிப்பாக வைத்திருக்கப் பாடுபடுவேன் என்றும், பொருளாதார முன்னேற்றம் காணும் விடயத்தில் பிரதமருடன் இணக்கம் காண்பதாகவும், இளைய தலைமுறைக்கு ஏற்ற நல்ல ஊதியத்தை வழங்கவல்ல வேலைகளை உருவாக்கத் தான் பாடுபடுவேன் என்றும் கூறினார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட பொருளாதாரத்தை உருவாக்கவே விரும்புவதாகவும் இதன் மூலம் நாட்டின் சகல மூலைகளிலும் வாழும் இளையவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.

தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்ததற்கு பிரதம்ர் விக்கிரமசிங்கவிற்கு நன்றியத் தெரிவித்ததோடு, கட்சிக்காவும், நாட்டிற்காகவும் தனது சுய விருப்பங்களைத் தியாகம் செய்த ஒருவர் எனப் புகழாரம் சூட்டினார்.

“இப்படியான பெருந்தன்மையுள்ளவரைத் தலைவராகப் பெற்றமை குறித்து நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று பலமான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என பிரேமதாச தெரிவித்தார்.

தனது கொள்கைகள் மக்கள் சார்ந்ததாக இருக்குமெனவும் பொதுமக்களோடு இணைந்து பணியாற்றக்கூடிய ஒரு தேசியத் திட்டமொன்று உருவாக்கப்படுமெனவும் நாட்டு மக்களுக்குச் சேவையாற்றி அவர்களின் வாழ்க்கைத் தரங்களை உயர்த்தவேண்டுமென்பதே தனது விருப்பமெனவும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு ஒரு வெளிப்படையான சமூக ஒப்பந்தமொன்றைத் தான் எழுதத் தயாராகவுள்ளதாகவும், பெண்கள் விடயத்தில் சம அந்தஸ்தைப் பேணும் வகையில் திட்டங்களை அறிமுகப்படுத்துவேன் எனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு விடயத்தில், பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான நவீன உபகரணங்களையும் பயிற்சிகளையும் வழங்குவதன் மூலம் நாட்டில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் அதி முக்கிய பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகத் தலைவர்கள் எவரும் பேசியாதாகத் தெரியவில்லை.

http://marumoli.com/?p=4741&fbclid=IwAR2uDwHU1Kcx6qla3oR3vhGNAdf4VWix8_uIjKTpLmUBsXjUYfwDpequStg

2 hours ago, nunavilan said:

நாட்டின் அதி முக்கிய பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகத் தலைவர்கள் எவரும் பேசியாதாகத் தெரியவில்லை.

இறுதியில் சகல தமிழ் தலைமைகளும் சஜித்தை ஆதரிக்க கூறுவார்கள். 
தமிழ் மக்களும் ஆதரிப்பார்கள். அரசியல் பெட்டிகள் காய் மாறும். தமிழ் அரசியல் தலைவர்கள் 'ஹாப்பி' மக்கள் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏற்றப்பட்ட கதையே தான். 

மௌனமான தமிழின அழிப்பு ஐ,தே.க. வினால் முன்னெடுக்கப்படும்.    
 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

நாட்டின் அதி முக்கிய பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகத் தலைவர்கள் எவரும் பேசியாதாகத் தெரியவில்லை.

நீங்கள் தான் “நாட்டின் அதி முக்கிய பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினை” என்று கருதுகிறீர்கள். போர் முடிந்த பிறகு பெரும்பாலான இலங்கையருக்கு இப்படி ஒரு பிரச்சினை இருப்பதே தெரியாது. அவர்களின் முக்கிய பிரச்சினை வாழ்க்கை செலவு, வேலை வாய்ப்பு, மருத்துவ தேவைகள், போக்குவரத்து செலவு போன்றவை. அரசியல்வாதிகளின் முக்கியமான பிரச்சினைகள், ஜனாதிபதி முறை, தமது அரசியல் எதிர்காலம் ஆகியவை. உங்ளுடைய பிரச்சினைக்கு அவர்கள் தீர்வு தரமாட்டார்கள் - நீங்கள் தான் தீர்வு கண்டாக வேண்டும்.

3 hours ago, ampanai said:

இறுதியில் சகல தமிழ் தலைமைகளும் சஜித்தை ஆதரிக்க கூறுவார்கள். 
தமிழ் மக்களும் ஆதரிப்பார்கள். அரசியல் பெட்டிகள் காய் மாறும். தமிழ் அரசியல் தலைவர்கள் 'ஹாப்பி' மக்கள் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏற்றப்பட்ட கதையே தான். 

மௌனமான தமிழின அழிப்பு ஐ,தே.க. வினால் முன்னெடுக்கப்படும்.    
 

தமிழ் மக்களும் ஆதரிப்பார்கள்” என்று எழுதி இருக்கிறீர்கள். மக்கள் முட்டாள்கள் அல்லர். 

Edited by Jude

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.