Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`ரூ.1.5 லட்சம் ரொக்கம்; 8 லட்சம் டெபாசிட்'- இறந்த பிச்சைக்காரர் வீட்டை சோதித்த போலீஸுக்கு அதிர்ச்சி!

Featured Replies

மும்பையில் ரயில் அடிபட்டு உயிரிழந்த பிச்சைக்காரரின் வீட்டில் ரொக்கமாக 1.5 லட்சம் ரூபாய் இருந்துள்ளது.

Coins

Coins

மும்பையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை ரயிலில் மோதி உயிரிழந்தார். ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் இந்த முதியவர் ரயிலில் வரும் பயணிகளிடம் பிச்சை எடுப்பார் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து முதியவர் குறித்த விவரங்களை காவல்துறையினர் விசாரித்தனர்.

Mumbai
 
Mumbai

ரயில் நிலையங்களில் பிச்சை எடுத்து வந்த அந்த முதியவரின் பெயர் புர்ஜூ சந்திரா ஆசாத் என்பது தெரியவந்தது. அவர் மும்பை கோவான்டி குடிசைப்பகுதியில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வந்ததை போலீஸார் கண்டறிந்தனர். இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவலர்கள் முதியவர் குறித்த விசாரித்தனர். உறவினர்கள் யாரும் இல்லை முதியவர் மட்டும் தான் இங்கு தனியாக வசித்து வந்தார் என அக்கம் பக்கத்தினர் கூறியதையடுத்து காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் சென்று சோதனை செய்தனர்.

அப்போது அந்த முதியவரின் வீட்டில் பேரல்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டனர். அதற்குள் 1, 2 , 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் இருந்ததை போலீஸார் கண்டனர். மேலும் வங்கி பாஸ்போர்ட் புத்தகமும் அந்த வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இவையனைத்ததையும் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்த அதிகாரிகள் எண்ணத் தொடங்கினர். அதில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் இருந்துள்ளது. இதில் நிறைய சில்லறைக் காசுகள் மட்டுமே இருந்துள்ளது.

பணம்
 
பணம்

ரொக்கப்பணம் மற்றும் வங்கியில் 8.77 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக இருந்துள்ளது. வங்கியில் டெபாசிட் செய்துள்ள பணத்திற்கு வாரிசாக தனது மகனை நியமித்துள்ளார். அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பான் கார்டு, ஆதார் கார்டு, மூத்த குடிமக்களுக்காக அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் தொடர்புக்கொண்டனர். புர்ஜூ சந்திரா ஆசாத் இறப்பு குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்தினர்.

https://www.vikatan.com/news/general-news/15-lakhs-of-cash-recovered-by-beggar-home

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல உடுப்பு வேண்டுற வெளிக்கிடுற செலவு இல்லை 
கடன் கேட்டு தொல்லை இல்லை 

வரி இல்லை  
நல்ல வருமானம் தர கூடிய தொழில் 

  • தொடங்கியவர்
2 hours ago, Maruthankerny said:

நல்ல உடுப்பு வேண்டுற வெளிக்கிடுற செலவு இல்லை 
கடன் கேட்டு தொல்லை இல்லை 

வரி இல்லை  
நல்ல வருமானம் தர கூடிய தொழில்

செய்யலாம் தான். ஆனால், மானமும் மரியாதையும் டி.என்.ஏ.இல் இருந்து போகமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றதே  🙂 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காசு சேர்த்து வைத்தும்....  அதை அனுபவிக்காமல், 
ரயிலில்... அடி பட்டு சாக வேண்டி வந்திட்டுது. 😲

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ampanai said:

செய்யலாம் தான். ஆனால், மானமும் மரியாதையும் டி.என்.ஏ.இல் இருந்து போகமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றதே  🙂 

அம்பானி இது டி என் ஏ யில் இல்லை 
சலவை செய்யப்பட்ட எமது மூளையில்தான் இருக்கிறது 
இப்படி சிந்திக்கும்படி எமது மூளை சலவை செய்து வைக்கபட்டுள்ளது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.