Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பரப்பு கூட்டங்கள் 250 : மக்கள் சந்திப்பு 3500

Featured Replies

(செ.தேன்மொழி)

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் தொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி அறிவிக்கப்படும். 

jvp.jpg

இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் தியதியிலிருந்து ஒவ்வொரு தலைப்பின் கீழ் எமது வேட்பாளர் கொள்கைகளை முன்வைப்பார். அதேவேளை 50 பேரணிகளையும், 250 கூட்டங்களையும் 3500 மக்கள் சந்திப்புகளையும் மேற்கொள்வதற்கான தீர்மானங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பு - பத்தரமுல்லவில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/66694

மஹிந்த, ரணிலால் ஊழலற்ற ஆட்சியை உருவாக்க முடியுமா - அனுரகுமார கேள்வி

(ஆர்.யசி)

ஊழல் குற்றமில்லாத ஆட்சியை உருவாக்க வேண்டும் என்றால் மஹிந்த ராஜபக்ஷவின் மேடையில் இருந்த பலர் சிறைச்சாலையில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க, ரணில் விக்கிரமசிங்கவை அருகில் வைத்துகொண்டு சஜித் பிரேமதாசவினல் எவ்வாறு ஒழுக்கமான நாட்டினை கட்டியெழுப்ப முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

அத்துடன் மத்திய வங்கி ஊழல் மோசடியில் பிரதான குற்றவாளி ரணில் விக்கிரமசிங்கவே ஆவார். அவர்களுடன் எவ்வாறு ஒழுக்கமான நாட்டினை கட்டியெழுப்ப முடியும் என்றும் கூறினார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயகவின் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் இருவருமே மக்களை ஏமாற்றும் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மீண்டும் இந்த நாட்டினை நாசமாக்கவே முயற்சிக்கின்றனர். பிரதான இரண்டு வேட்பாளர்களின் மேடையில் உள்ள பலர் சிறைக்கு செல்லவேண்டியவர்கள்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அப்போதைய ராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் நல்லாட்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. 

ஆனால் உருவாக்கப்பட்ட அந்த அரசாங்கமும் ராஜபக்ஷ அரசாங்கத்தை போலவே செயற்பட்டது. ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்த 53 பேர் புதிய அரசாங்கத்தில் அமைச்சர்கள், பிரதி அமைச்சு மற்றும் உறுப்பினர்களாக செயற்பட்டனர். இப்போது மீண்டும் கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் உருவாக்கப்பட்டாலும் அதிலும் இப்போது ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் உள்ள அதே உறுப்பினர்களே இணைந்துகொள்வார்கள். 

இந்த நாட்டினை மாற்றியமைக்க வேண்டுமென்றால் முதலில் நாட்டின் பொருளாதார கொள்கையில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். சர்வதேச வலையில் சிக்கிக்கொண்டு நாட்டினை பங்குபோட்டுக்கொண்டு நாட்டையும் பொருளாதாரத்தையும் ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது என்றும் அவர் இதன்போது கூறினார்.

https://www.virakesari.lk/article/66677

8 ஆம் திகதி நடைபெற்ற அநுரவின் கூட்டம் தொடர்பான சில படங்கள்.

EGXXIriU8AESmhK?format=jpg&name=large

EGXXIrsUcAAgoTf?format=jpg&name=large

EGXXIroUwAAsvHz?format=jpg&name=large

EGXXIroU0AIVF2c?format=jpg&name=large

  • தொடங்கியவர்

இந்த சனாதிபதி தேர்தலில் மகிந்த அண்ட் கோ தோற்றால் அந்த கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும்.

சுதந்திர கட்சி மீண்டும் மிளிர சந்தர்ப்பங்கள் குறைவு.

அதனால், மக்கள் விடுதலை முன்னணி இரண்டாம் இடத்திற்கு, ஐ.தே.க. விற்கு போட்டியாக வளரலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.