Jump to content

வேள்விக்கு தயாராகும் "கிழக்கின் விடிவெள்ளி"!!!!


Recommended Posts

கருணா குழுவிற்குள் பிளவு- பிள்ளையான தப்பி ஓட்டம்: கொழும்பு ஊடகம்

[ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007, 05:56 ஈழம்] [க.திருக்குமார்]

சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் உருவாகியுள்ள உட்பூசல் காரணமாக அந்த குழுவின் இரண்டாவது நிலை தலைவரான பிள்ளையான் தனது 150 விசுவாசிகளுடன் தப்பி ஓடியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கருணா குழுவிற்குள் ஏற்பட்ட பெரும் பிளவினால் அதன் இராணுவப்பிரிவுத் பொறுப்பாளரான பிள்ளையான் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். இந்த முயற்சியில் அவரின் விசுவாசியான சிந்துஜன் கொல்லப்பட்டுள்ளார்.

கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிள்ளையான் தனக்கு விசுவாசமான 150 உறுப்பினர்களுடன் திருகோணமலை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:

கருணா குழுவின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளரான சீலனையும், அதன் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரான சிந்துஜனையும் கலந்துரையாடலுக்கு வருமாறு அழைத்தனர்.

கலந்துரையாடலுக்கு வந்திருந்த இவர்களை நோக்கி கருணா குழுவின் விசுவாசியான இனியபாரதி துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும், அதன் போது சிந்துஜன் அந்த இடத்திலேயே கொல்லப்பட சீலன் படுகாயத்துடன் மயிரிழையில் தப்பியுள்ளார்.

கருணா குழுவின் நிதிக் கையாள்கை, புதிய நியமனங்கள் தொடர்பாக கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும், அதனைத் தெடர்ந்து பிள்ளையானையும் அவரது விசுவாசிகளையும் வேட்டையாடும் படி கருணா தனது விசுவாகிகளுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிந்துஜன் கொல்லப்பட்ட நாளன்று பிள்ளையானை அவசர கூட்டம் ஒன்றிற்காக கொழும்புக்கு வருமாறு கருணா அழைத்திருந்ததாகவும், எனினும் கருணாவின் உள்நோக்கத்தை புரிந்து கொண்ட பிள்ளையான அதனை தவிர்த்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளையானும் கருணாவும் மரதன் ஓட்டம்.

(ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007 , யோகராஜன் )

சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் உருவாகியுள்ள உட்பூசல் காரணமாக அந்த குழுவின் இரண்டாவது நிலை தலைவரான பிள்ளையானின் சகாக்கள் 150 விசுவாசிகளுடன் தப்பி ஓடியுள்ளனர். கருணா குழுவிற்குள் ஏற்பட்ட பெரும் பிளவினால் அதன் இராணுவப்பிரிவுத் பொறுப்பாளரான பிள்ளையானின் முக்கிய சகா கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். இந்தக் கொலை முயற்சியில் அவரின் விசுவாசியான சிந்துஜன் கொல்லப்பட்டுள்ளார்.

கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிள்ளையானின் உதவியாளன் தனக்கு விசுவாசமான 150 உறுப்பினர்களுடன் திருகோணமலை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

kpmd4.png

சிறிலங்கா இராணுவத்தினரின் ஒட்டு இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் உருவாகியுள்ள உட்பூசல் காரணமாக அந்த கூலிக்குழுவின் இரண்டாவது நிலை தலைவரான பிள்ளையான், கருணா கூலிகளின் கொலை முயற்சியிலிருந்து தப்பிய நிலையில் தனது 150 விசுவாசிகளுடன் தப்பி ஓடியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணா குழுவிற்குள் ஏற்பட்ட பெரும் பிளவினால் அதன் இராணுவப்பிரிவுத் பொறுப்பாளரான பிள்ளையான் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளான். இந்த முயற்சியில் அவரின் விசுவாசியான சிந்துஜன் கொல்லப்பட்டுள்ளான். இந்த சிந்துஜனே கடத்தப்பட்ட தமிழர் புணர்வாழ்வுக் கழக உறுப்பினரான பிறேமினியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிக் கொடூரமாகக் கொலை செய்தவன. கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிள்ளையான் தனக்கு விசுவாசமான 150 உறுப்பினர்களுடன் திருகோணமலை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது: கருணா குழுவின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளரான சீலனையும், அதன் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரான சிந்துஜனையும் கலந்துரையாடலுக்கு வருமாறு அழைத்தனர். கலந்துரையாடலுக்கு வந்திருந்த இவர்களை நோக்கி கருணா குழுவின் விசுவாசியான இனியபாரதி துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும், அதன் போது சிந்துஜன் அந்த இடத்திலேயே கொல்லப்பட சீலன் படுகாயத்துடன் மயிரிழையில் தப்பியுள்ளான்.

கருணா குழுவின் நிதிக் கையாள்கை, புதிய நியமனங்கள் தொடர்பாக கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும், அதனைத் தெடர்ந்து பிள்ளையானையும் அவரது விசுவாசிகளையும் வேட்டையாடும் படி கருணா தனது விசுவாகிகளுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிந்துஜன் கொல்லப்பட்ட நாளன்று பிள்ளையானை அவசர கூட்டம் ஒன்றிற்காக கொழும்புக்கு வருமாறு கருணா அழைத்திருந்ததாகவும், எனினும் கருணாவின் உள்நோக்கத்தை புரிந்து கொண்ட பிள்ளையான அதனை தவிர்த்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கருணா ஒட்டுக்குலிக்கும்பலிடையே தோன்றிய பிளவு தொடர்பாக எமக்குக் கிடைத்த உறுதியான தகவல்களின்படி, இப்பிளவை சரி செய்ய இலங்கை இராணுவ புலனாய்வுத்துறை பெரும் முயற்சி எடுத்து தோல்வியடைந்த நிலையில், கருணா கூலிக்கும்பலை மட்டக்களப்பிலும், பிள்ளையான் கூலிக்கும்பலை திருமலையிலும் தங்க வைக்க முயற்சி எடுப்பதாக தெரியவருகிறது. இதேவேளை கூலி பிள்ளையானின் 40 விசுவாசிகளை, கருணா கூலிக்கும்பல் கடத்தி படுகொலை செய்திருப்பதாகவும் அறிய முடிகிறது.

இக்கூலிகளின் இடையே தோன்றியுள்ள பிளவையடுத்து பிள்ளையான் கும்பல் எந்நேரமும் புலிகளிடம் சரணடையலாம் என கிழக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கருணா கும்பலிடையே பலமாக ஊடுருவியிருக்கும் புலிகளின் உளவுப்பிரிவினர், இப்பிளவையடுத்து தக்க தருணத்தில் களையெடுக்கத் தொடங்கலாம் எனவும் நம்பகரமாகத் தெரிய வருகிறது.

Link to comment
Share on other sites

நம்பினால் நம்புங்கள், எமக்கு விடுதலையை பெற்றுத்தருவதில் முக்கிய பங்கு வகிக்கப் போகின்றவர்கள் "கருங்காலி" கருணாவும், "அத்தியடிக்குத்தி" டக்கிலஸும்தான்!!! ....

அண்மையில் விடுதலையான கிழக்குத்தீமோர் இதற்கு ஓர் நல்ல உதாரணம்!! கிழக்குத்தீமோர் விடுதலைக்கு முன்னர் அங்கு நிலை கொண்டிருந்த இந்தோனேசிய துருப்பகளுடன் ஒட்டிச் செயற்பட்ட ஒட்டுக்குழுக்கள் செய்த படுகொலைகளே உலக கண்களை திறந்தன!! கிழக்குத்தீமோரின் விடுதலையில் மிக முக்கிய பங்கு வகித்தவர்கள் அந்த ஒட்டுக்குழுக்களே!!

இவ்வாறே எமது விடுதலையிலும் கூலி கருணாவும், கூலி டக்கிலஸின் பங்கு நிச்சயமாக மிக முக்கிய பங்கு வகிக்கும்!! இன்று சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பார்வை எம் பக்கம் திரும்பவும் இவர்கள்தான் காரணம்!! அது மட்டுமல்ல பல நாடுகளின் இன்றைய என் நோக்கிய சில மாறுதலுக்கும் இவர்களே காரணம்!!!

ஆகாவே இந்தப் பிளவு, கூலிகளின் அட்டகாசங்களை குறைக்குமா???? அது நல்லதல்ல!!!! கூலிகள் கட்டுக்கடங்காமல் அட்டகாசங்கள் செய்தால்தான் எமக்கு நல்லது!!! அது வெதமாத்தயா மகிந்தவின் ஆட்சிக்கும் உலகில் நல்ல பெயரைக் கொடுக்கும்!!! ஆகவே .....

.... குழம்புகிறனோ??? குழப்புகிறனோ????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆனாலும் சவுக்குக்கு மாவு கட்டு போட்டது கொஞ்சம் ஓவர்தான். அதே போல் அவராக அவதூறாக பேசினால் அன்றி நேர்காண்பவரை எல்லாம் தூக்கி உள்ளே வைப்பது பேச்சுரிமை மீறல். பேட்டி கொடுப்பவர் உளறுவதற்கு அவர் மட்டுமே பொறுப்பு. 
    • எனக்கும் தெரியும் நந்தன்.அவரது சகோதரியையும் அறிவேன். அதற்காக அடுத்தவரை கொச்சைப்படுத்தாமல் இருக்கலாம் தானே.
    • நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை மொத்தமாக 12 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி, தலா 6 போட்டிகளில் வெற்றியையும், ஆறில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதற்கிடையே, டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டெல்லி அணியினர், ஐபிஎல் விதிகளை மீறியதாகவும், அவர்களுக்கு அபராதம் விதிப்பதாகவும் ஐபிஎல் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.   இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், பந்துவீசுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது போன்ற ஐபிஎல் விதிகளை டெல்லி அணி மீறுவது இது மூன்றாவது முறையாகும். அருண் ஜெட்லி மைதானத்தில் ராஜஸ்தான் அணி உடனான போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி பந்துவீச்சுக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டனர். ஐபிஎல் விதிகளை மீறியதற்காக ரிஷப் பண்டிற்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும், நாளைய போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படுகிறது. அதேபோல், அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கு தலா 12 லட்சம் ரூபாய் அல்லது அந்த போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் பிடித்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டு முறை டெல்லி அணியினர் ஐபிஎல் விதிகளை மீறியுள்ளதால், மூன்றாவது முறையாக மீறியதற்காக அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நாளைய போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. https://www.puthiyathalaimurai.com/sports/cricket/rishabh-pant-suspended-for-a-match-and-fined-30-lakhs-for-maintaining-slow-overrate
    • 🤣 சொன்னேன் என நினைத்தேன் 🤣 நியாயமான ஒப்பீடு. ஆனால் ரஸ்யாவில் இருப்பது போல் தாய்லாந்தில் தனி மனித சுதந்திரத்தில் அதிகம் இறுக்கம் இல்லை. அப்ப போகாமல்தானா அங்கே பாலும் தேனும் ஓடுவதாக எழுதினீர்கள்🤣
    • இரண்டு மாவீரர்களை கொண்ட குடும்பத்தில் இருக்கும் கவி ஜயாவுக்கு ,உங்களை என்னை விட  நிறையவே பொறுப்பும் கடமையும் உண்டு
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.