Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாரம் மூன்று பேர் வரை விபத்தில் உயிரிழக்கின்றனர்

Featured Replies

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், வாரத்தில் இரண்டு மூன்று பேர்வரையானவர்கள் வீதி விபத்துகளில் உயிரிழந்து வருகின்றார்கள்  என, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி கை.சுதர்சன் தெரிவித்தார்

புதுக்குடியிருப்பில், நடைபெற்ற விபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,  வடமாகாணத்தில் வீதி விபத்துகளை தடுப்பதற்காக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டு இருக்கின்றோம். வகன சாரதிகளுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன என்றார்.

“விபத்துகளில் உயிரிழந்தவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டுவரும்போது, அதில் வயது குறைந்தவர்கள்தான் அதிகளவில் உயிரிழக்கின்றார்கள். தற்போது இளைஞர்களின் வேகம் அவர்களின் விவேகத்தில் இல்லை. வேகமாக தமது சந்தோசத்துக்காகவே உந்துருளிகளில் இளைஞர்கள் பயணம் செய்கின்றார்கள். ஆனால் அவர்களின் குடும்பத்தையோ உயிரையோ கண்டுகொள்ளவில்லை. 

“பெற்றோர்கள் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் தங்கள் பிள்ளைகளை வளர்க்கின்றார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு ஒரு கடமை இருக்கின்றது, பெற்றோர்களை பிற்காலத்தில் கவனிக்க வேண்டும் என்று. குறுகிய காலத்தில் இளைஞர்கள் உயிரை இழக்கும் போது பெற்றோர்கள் அனதரவாக விடப்படுவார்கள்.

“போராட்டகாலங்களில் பல இழப்புகள் இருந்தன அது தவிர்க்க முடியாததாக இருந்தது. அந்த இழப்புகளை நாம் ஏற்கக்கூடிய மனநிலையில் இருந்தோம். இருந்தும் போராட்டத்தில் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் அனதரவாக நிக்கின்ற நிலையை நாம் கண்ணூடாக காணக்கூடியதாக இருக்கின்றது.

“இன்று வீதிவிபத்துக்களை தவிர்ப்பதற்காக நாம் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தையும் மக்கள் அனைவரும் ஒத்துளைத்து வீதி விபத்தை தவிர்ப்போம் என்று உறுதி எடுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/வன்னி/வாரம்-மூன்று-பேர்-வரை-விபத்தில்-உயிரிழக்கின்றனர்/72-239898

  • கருத்துக்கள உறவுகள்

ஊழலும்.. அதிகார துஷ்பிரயோகமும்.. மனித உரிமைமீறல்களும்.. அநியாயங்களும் ஆளும் நாட்டில் இதெல்லாம் சகஜமே. 

பாவம் அந்தத் தீவுக்குள் சிக்கி உள்ள மக்கள். 

  • தொடங்கியவர்

அன்றும் ஒரு காவல்துறை இருந்தது.
அங்கும் மக்கள் வாழ்வு இருந்தது.

அது வெறும் கனவாய் இன்று போனது 😞 

  • தொடங்கியவர்

போக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் தண்டனைச்சீட்டு

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தமிழ்பேசும் மக்களின் நன்மையை கருத்தில்கொண்டு அதிமேதகு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வீதி பயணத்தின் போது வழங்கப்படும் தண்டனைச்சீட்டானது இனிவரும் காலங்களில் மூன்று மொழிகளிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

01.jpg

 இதுவரை காலமும் வாகன சாரதி வீதிப்போக்குவரத்து விதிகளை மீறும் பட்சத்தில் குறித்த சாரதியின் வாகன உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு தண்டனைச்சீட்டு  வழங்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனைச்சீட்டில் தண்டனைகள் என்ன ஏது என்பது தொடர்பில் சிங்கள மொழியிலேயே குறிப்பிடப்பட்டிருந்தன.

 வடமகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் இதுதொடர்பில் தமக்கு தெளிவின்மை காணப்படுவதாகவும் இதனை மாற்றியமைத்து தமிழில் அவை வழங்கப்படவேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதியிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டதற்கிணங்க குறித்த தண்டனைச்சீட்டில்  மூன்று மொழிகளிலும் தண்டனைகள் என்ன என்பது தொடர்பில் குறிப்பிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

0011.jpg

இவ்வாறாக தண்டனைச்சீட்டில் குறிப்பிடப்படும் இலக்கத்தினை அதன் மறுபக்கத்தில் உள்ள தண்டனைப்பட்டியலில் இலகுவில் அறிந்துகொள்ளமுடியும் .

 போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலினை தொடர்ந்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/66791

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.