Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான்காவது சுற்று பேச்சிலும் இணக்கம் இல்லை – நாளை முக்கிய முடிவு

Featured Replies

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான நான்காவது சந்திப்பு இணக்கமேதும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது.

பொது உடன்படிக்கையில் கட்சிகள் எவையும் ஒப்பமிடாத நிலையில் நாளை காலை மீண்டும் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும், சர்வதேச சமூகத்திடமும் தமிழர்கள் சார்பில் முன்வைக்கப்பட வேண்டிய சரத்துக்கள் அடங்கிய பொது உடன்படிக்கையில் கட்சிகள் முன்வைத்த திருத்தங்களுடன் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு ஒப்பமிடுவதற்கு கலந்துகொண்ட கட்சிப் பிரமுகர்களிடையே இணக்கம் ஏற்பட்டிருப்பதாக அறியவருகிறது.

தமிழ் கட்சிகளின் ஒருமித்த முடிவு என்ன? – நான்காவது சுற்று பேச்சு இடம்பெறுகிறது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கட்சிகளை பொதுநிலைப்பாடு ஒன்றுக்கு வரச்செய்வதற்கான முயற்சியில் வடக்கு – கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் ஈடுபட்டுள்ளது.

இதன்படி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான நான்காவது சந்திப்பு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அண்மையாகவுள்ள ப்ரைட் இன் விடுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.

இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

அத்துடன் புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்ந்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் பொ.கஜேந்திரகுமார், செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், ஈ.பீ.ஆர்.எல்.எஃப் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.அருந்தவபாலனும் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, இன்றைய சந்திப்பில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளதோடு சின்மய மிஷன் வதிவிட சுவாமிகள், யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எஸ்.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் எஸ்.ஜோதிலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

Jaffna-University-and-Tamil-Political-Pa

Jaffna-University-and-Tamil-Political-Pa

 

Jaffna-University-and-Tamil-Political-Pa

Jaffna-University-and-Tamil-Political-Pa

Jaffna-University-and-Tamil-Political-Pa

Jaffna-University-and-Tamil-Political-Pa

 

Jaffna-University-and-Tamil-Political-Pa

Jaffna-University-and-Tamil-Political-Pa

http://athavannews.com/தமிழ்-கட்சிகளின்-ஒருமித்/

 

 

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

🙏கூட்டத்துக்கு வரும்பொழுது சாப்பிட்டுவிட்டு வரக்கூடாதா?இனி மாவை க க்கா இருந்துவிட்டு வாறன் என்று வெளிக்கிடப்போறார். சாப்பிட்டு விட்டு வருவதாகச் சொல்லி சுமத்திரன் வெளியேறினார்.சோறா சுதந்திரமா?தமிழன்டா 😇🙏🙏🙏

🙏

http://www.vakeesam.com/?p=35596&fbclid=IwAR2_KriOd30_W8fvHjqY_yJsXnmRTmhBqxc3MgIWtH2haYRuDQbAVGmnG10

 

சுமந்திரன் - ஆனந்தன் வெளியேறியது ஏன்?

பரபரப்பை ஏற்படுத்திய கலந்துரையாடல் சறுக்கல்

FB_IMG_1570986007087.jpg
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று (13) மாலை முதல் இரவு 10 மணி வரை இடம்பெற்றது.

பிரிங்டின் விடுதியில் கடும் வாதப்பிரதிவாதங்கள், சராமரியான தர்க்கத்திற்கு மத்தியில் நடைபெற்ற இக் கூட்டம் இணக்கமேதும் எட்டப்படாமலே முடிவடைந்துள்ளது.

பொது  உடன்படிக்கையில் கட்சிகள் எவையும் ஒப்பமிடாத நிலையில் குறித்த கலந்துரையாடல் நாாளை (14) பிற்பகல் 1.30 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யார் கையொப்பம் வைக்காவிடனும் எங்களது முயற்சி தொடரும். ஒப்பமிட்ட கையொப்பங்களுடன் பொது உடன்படிக்கை வெளியிடப்படும் என்று மாணவர் ஒன்றியம் சற்றுமுன் அறிவித்தது.
  • தொடங்கியவர்

மாணவர்களின் கலந்துரையாடல் நடந்த இடத்திலிருந்து கூப்பிடு தூரத்திலிருந்த முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் இந்த கூடத்தில் கலந்துகொள்ளவில்லை.

விக்கினேஸ்வரன் இந்தக் கூட்டத்தை குழப்பும் நோக்கத்துடன் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிகிறது.

விக்கினேஸ்வரன் யாரிடம் காசை வாங்கி இந்த முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை என பலரும் கதைத்துக்கொண்டதாக தெரிகிறது.

சிவசக்தி ஆனந்தன், சுமந்திரன் இருவரும் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டு, அவர்களின் கட்சித் தலைவர்கள் (சுரேஷ், மாவை) தொடர்ந்து கலந்துகொள்ள தகுந்த காரணங்களால் வெளியேறியதாக தெரிகிறது.

கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டத்தில் விக்கினேஸ்வரன் கலந்து கொள்ளாமல் இரண்டு அரசியல் ஞானசூனியன்களை அனுப்பியதாக கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். இதனாலேயே விக்கினேஸ்வரன் யாரிடமோ காசை வாங்கிக் கொண்டு இந்த கலந்துரையாடல்களை குழப்ப முயல்வதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

 

  • தொடங்கியவர்

கஜேந்திரகுமார் கும்பலும் இன்றை கூட்டத்தில் வழமைபோல தங்கள் சுயநலத்தையும் காட்டுமிராண்டி அரசியலை முன்னெடுத்ததாகவும் தெரிகிறது. குதிரை கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை புதைகுழியில் தள்ளிவருவதாக பலரும் தெரிவித்தனர்.

தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கலந்துகொண்ட சுயநலவாதிகளும் அரசியல் ஞானசூனியங்கள்  இருவரின் சொற்படி விக்கினேஸ்வரன் நடப்பதால் அவரும் தமிழ் மக்கள் கூட்டணியை புதைகுழியில் தள்ளிவருவதாக பலரும் தெரிவித்தனர்.
 

கலந்து கொள்பவர்கள், மாணவர்கள் என்ற சக்திக்கு பயந்து கலந்து கொள்கிறார்கள். 
ஒரு பொது உடன்படிக்கைக்கு வர வேண்டும் என்ற இதய சுத்தி இல்லை.  
கருத்தால் வேறுபடலாம், கொள்கையில் வேறு பட முடியாது. 

இறுதியில், ஒரு உடன்படிக்கை அமையாவிட்டாலும், மாணவ சமுதாயத்திற்கு ஒரு 'சலூட்'.  
 

3 hours ago, போல் said:

மாணவர்களின் கலந்துரையாடல் நடந்த இடத்திலிருந்து கூப்பிடு தூரத்திலிருந்த முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் இந்த கூடத்தில் கலந்துகொள்ளவில்லை.

விக்கினேஸ்வரன் இந்தக் கூட்டத்தை குழப்பும் நோக்கத்துடன் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிகிறது.

விக்கினேஸ்வரன் யாரிடம் காசை வாங்கி இந்த முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை என பலரும் கதைத்துக்கொண்டதாக தெரிகிறது.

கலந்து கொள்ளாதாத்திற்கு என்ன காரணம் என நாளை கேட்க்கும் சந்தர்ப்பம் உண்டு. 

அதற்காக, அவர் காசை  வேண்டி கலந்து கொள்ளவில்லை என்பது சேறு பூசும் செயலாக தெரிகின்றது. இல்லை அதற்கு ஆதாரம் இருந்தால் அதை வெளியிட வேண்டும், அதுதான் பண்பு. 

  • தொடங்கியவர்
3 hours ago, ampanai said:

கலந்து கொள்ளாதாத்திற்கு என்ன காரணம் என நாளை கேட்க்கும் சந்தர்ப்பம் உண்டு. 

அதற்காக, அவர் காசை  வேண்டி கலந்து கொள்ளவில்லை என்பது சேறு பூசும் செயலாக தெரிகின்றது. இல்லை அதற்கு ஆதாரம் இருந்தால் அதை வெளியிட வேண்டும், அதுதான் பண்பு. 

மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட சகல கட்சிகளினதும் தலைவர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் விக்கினேஸ்வரன் மட்டும் எந்தவொரு காரணத்தையும் கூறாது பண்பற்ற முறையில் கலந்து கொள்ளாமையால் பலர் பலவிதமாக விக்கினேஸ்வரன் பாணியிலேயே ஊகித்து கதைப்பதற்கு அவரே இடம் கொடுத்துள்ளார் எனத் தெரிகிறது.

இங்கு மாணவர்களின் முயற்சியை மதிக்காமல், தலைவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்ற முயற்சியை மதிக்காமல், தூர இடங்களில் இருந்து கூட வந்து கலந்து கொண்ட ஏனைய தலைவர்களை மதிக்காமல் மிகவும் பண்பற்ற முறையில் மிகவும் அநாகரிகமான முறையில் விக்கினேஸ்வரன் நடந்துகொண்டார் என்றே பலரும் தெரிவித்துள்ளனர்.

மேலும் விக்கினேஸ்வரன் சிறுபான்மை பொதுவேட்பாளர்கள் பற்றி நேற்று பத்திரிகைகளுக்கு கூறிய கருத்துக்கள் மூலம், மாணவர் மற்றும் சமூக ஆர்வலர்களின் முயற்சியை குழப்பும் நோக்கில் அவரது புறக்கணிப்பு ஒரு திட்டமிட்ட சதியாகவே கருதப்படுகிறது.

  • தொடங்கியவர்
11 minutes ago, போல் said:

மேலும் விக்கினேஸ்வரன் சிறுபான்மை பொதுவேட்பாளர்கள் பற்றி நேற்று பத்திரிகைகளுக்கு கூறிய கருத்துக்கள் மூலம், மாணவர் மற்றும் சமூக ஆர்வலர்களின் முயற்சியை குழப்பும் நோக்கில் அவரது புறக்கணிப்பு ஒரு திட்டமிட்ட சதியாகவே கருதப்படுகிறது.

சிறுபான்மை மக்களின் வாக்குகளை சிதறடிக்கவே சில வேட்பாளர்கள் களமிறக்கம்: – சி.வி.

சிறுபான்மை மக்களின் வாக்குகளை சிதறடிக்கவே சில வேட்பாளர்கள் களமிறக்கம்: – சி.வி.

சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே திட்டமிட்டு ஜனாதிபதித் தேர்தலில் சிலர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “நாட்டில் இம்முறை அதிகளவானோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதில் முக்கியமான சிலரை விட ஏனையோர் வேறு காரணங்களுக்காக போட்டியிடுவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பார்கள் என்று நம்புகின்றேன்.

அதாவது குறிப்பாக சிறுபான்மையினரின் இடங்களில் சிலரை களமிறக்கி அவர்களின் வாக்குகளை பிரிப்பதற்கான ஒரு தந்திரோபாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவே தோன்றுகின்றது.

இதனை யார் செய்கின்றார்கள் என்று கூற முடியாது. தேர்தலில் மூன்று முக்கிய கட்சிகள் தான் உள்ளன. ஏனையோர் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரிப்பதற்காக போட்டியிடுவதாகவே நான் பார்க்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

https://www.perikai.com/

  • தொடங்கியவர்

யாழ் பல்கலைக்கழக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து செய்யும் இந்த முயற்சி தமிழ் மக்களின் பரவலான பாராட்டை பெற்றுள்ளது.

மாணவர்கள் முயற்சி வெற்றிபெற வேண்டும் என்பதே தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தில் உண்மையான அக்கறை உடைய அனைவரினதும் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

மாணவர்களின் இந்த முயற்சிக்கு ஈபிஆர்எல்எப், டெலோ, புளட், தமிழரசுக்கட்சி ஆகியவை இதுவரை நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், கஜேந்திரகுமார் கோஷ்டி நிபந்தனைகளை விதித்து குழப்புவதையும் விக்கினேஸ்வரன் கலந்துகொள்ளாமல் குழப்புவதையும் பொது மக்கள் கவனமாக அவதானித்தபடியே உள்ளனர்.

  • தொடங்கியவர்

மாணவர் முயற்சி வெற்றி பெற்றது! ஐந்து கட்சிகள் பொது உடன்படிக்கை மூலம் இணைந்துள்ளனர். ஜனாதிபதி தேர்தல் முடியும்வரை இவர்கள் இவர்கள் இணைந்து செயற்பட இணங்கியுள்ளனர்.

கலந்து கொள்ளாமல் குழப்பத்தை  ஏற்படுத்திய விக்கினேஸ்வரன் (தமிழ் மக்கள் முன்னணி) அழுத்தங்களால் "மனம் திருந்தி" இன்று கலந்துகொண்டு பொது உடன்பாட்டில் முதலாவதாக கையெழுத்து வைக்க, பின்னர் தமிழரசுக்கட்சி (மாவை), செல்வம் அடைக்கலநாதன் (டெலோ), சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எப்), சித்தார்த்தன் (புளட்) ஆகியோர் கையெழுத்து வைத்தனர்.

தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று தாங்கள் கபட நோக்கத்துடன் பகிரங்கமாக அறிவித்த கொள்கையை எல்லாரும் ஏற்கவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று வலியுறுத்திய கஜேந்திரகுமார் கோஷ்டி கையெழுத்து வைக்காமல் வெளியேறினார்.  

tamiul-party.jpg

 

சுயநல நோக்கில் வெளியேறிய கஜேந்திரகுமார் தெருவில் நின்று புலம்புவதாக தெரிவிக்கின்றனர்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.