Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவின் மரண அச்சுறுத்தல் விவகாரம்- இன்று மீண்டும் நீதிமன்றில்

Featured Replies

பிரிட்டனிற்கான இலங்கை தூதரகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகளின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி இலங்கை தூதரகத்தின்  பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோமரண அச்சுறுத்தல் சைகை செய்தது  தொடர்பான வழக்கினை வெஸ்மிஸ்டர்ஸ் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.

இனப்படுகொலையை தடுப்பது வழக்கு தாக்கல் செய்வது தொடர்பான அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

2018 பெப்ரவரி நான்காம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே நீதிமன்ற விசாரணை மீண்டும் இடம்பெறுகின்றது.

priyankara_fe_oct_18.jpg

இலங்கை தூதரகத்திற்கு வெளியே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ  மரண எச்சரிக்கை விடுப்பதை  காண்பிக்கும் வீடியோக்களும் படங்களும் வெளியானதை தொடர்ந்து  சர்வதேச அளவில் பலத்த சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இனப்படுகொலையை தடுப்பது வழக்கு தாக்கல் செய்வது தொடர்பான அமைப்பு இதற்கு உதவியளித்தது.

https://www.virakesari.lk/article/67171

  • தொடங்கியவர்

பிரிகேடியர் பிரியங்கரவின் வழக்கு; லண்டன் நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்

பிரிகேடியர் பிரியங்கரவின் வழக்கு; லண்டன் நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்-Protest-Near-Westminster-Magistrate-Brigadier-Priyanka-Fernando

ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தி சைகை

இலங்கையின் ராஜதந்திரியும் இங்கிலாந்துக்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு தொடர்பான அதிமான பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றுக்கு முன்பாக குறித்த ஆர்ப்ப்பாட்டம் இன்று (18) இடம்பெற்றது.

குறித்த வழக்கு வெஸ்மினிஸ்டர் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட நிலையிலேயே இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.

கடந்த ஆண்டு இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 04 ஆம் திகதி லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், அதற்கு எதிரில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறி கோரி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டகார்களை நோக்கி 'கழுத்து அறுப்பது போன்ற" சைகை காட்டி அச்சுறுத்தியதாக பிரிகேடியர் பிரியங்கர பெனாண்டோவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய நீதி துறையில் அரசியல் தலையீட்டை தவிர்ப்போம் எனவும், குறித்த இராணுவ அதிகாரிக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், புலம்பெயர் தமிழ் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிரிகேடியர் பிரியங்கர பெனாண்டோ, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெரும்பாலான முன்முனை தாக்குதல்களை மேற்கொண்ட, இலங்கை இராணுவத்தின் 59 அவது பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தர்ப்பத்தில் இராணுவ உடை அணிந்திருந்த அவர், ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி, அவர்களை அச்சுறுத்தும் வகையில் மூன்று முறை இவ்வாறு சைகை செய்திருந்ததோடு, குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவியது.

அத்துடன் இது தொடர்பில் லண்டனிலுள்ள பொலிஸில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பதோடு, பின்னர் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்த்கது.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)

http://www.thinakaran.lk/2019/10/18/உள்நாடு/42302/பிரிகேடியர்-பிரியங்கரவின்-வழக்கு-லண்டன்-நீதிமன்றம்-முன்பாக-ஆர்ப்பாட்டம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.