Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் ஆதாயத்துக்காக ராஜீவ் கொலையைப் பயன்படுத்துவதா? குஷ்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் ஆதாயத்துக்காக ராஜீவ் கொலையைப் பயன்படுத்துவதா? குஷ்பு

ராஜீவ்காந்தி கொலையைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிக்க கூடாது என அகில இந்தியக் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், முன்னணி தமிழ் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

“சில நாட்களாகத் தமிழக அரசியல் களத்தில் ராஜீவ்காந்தியின் படுகொலை சம்பவம் விவாதிக்கப்படும் விதம் வேதனை அளிக்கிறது. நாட்டின் பிரதமர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்திப் பேசும் சீமானுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.

kosupoo.jpg

கொலை செய்பவர்களும், கொலைக் குற்றவாளிகளும் தங்களுக்குச் சாதகமாக எதையாவது காரணத்தைத் தேடுவது இயல்பு. ஆனால் 7 பேர் விடுதலைக்காகப் பிரதமரைக் கொலை செய்ததைப் பெருமையாகப் பேசும் ஒவ்வொருவரும் இதைச் சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவது கண்டிக்கத்தக்கது.

அவர்களை விடுதலை செய்யும் முடிவை ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் நிராகரித்து இருக்கிறார். இனிமேல் யார் என்ன சொல்ல முடியும்? இதற்குச் சட்டம்தான் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குடும்பம் அவர்களை விடுதலை செய்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறி விட்டது.

ஆனால், அதற்கு மேல் நாடு என்று வரும் பொழுது, சட்டம் தான் இதனை முடிவு செய்யும். ராஜீவ்காந்தியோடு பழகியவர்களுக்கு அவர் எப்படிப்பட்ட தலைவர் என்பது தெரியும். மகாத்மா காந்தியோடு பழகியவர்களுக்கு அவரைப்பற்றித் தெரியும். அவர்கள் காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சே  இன்று இருந்தாலும் விடுதலை செய்யக் கூடாது என்று தான் சொல்வார்கள்.

அதே போல் தான் பணியாற்றியவர்கள், பழகியவர்கள் அவரை கொலை செய்தவர்களை விடுவிக்கக் கூடாது என்கிறார்கள். கட்சி ரீதியாக இந்த விவகாரத்தைப் பேசும் தகுதி காங்கிரஸிற்கு மட்டும்தான் உண்டு. ஏனெனில் அந்த கட்சி தங்கள் தலைவரை இழந்திருக்கிறது. தண்டனை வழங்கப்பட்டவர்கள் 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்கள் என்கிறார்கள். இதற்குச் சட்டம்தான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதை வைத்து அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிக்க கூடாது.” என்றார்.
 

https://www.virakesari.lk/article/67202

  • கருத்துக்கள உறவுகள்

இவா எல்லாம் அரசியல் பேசுறது.. கேவலமா இருக்குது.

ஈழத்தில் பெரும் தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றிய ஹிந்திய படைகளின் கதாநாயகனான.. ராஜீவ் காந்தி கொலையை வைத்து.. மொத்த தமிழினதையும்... சீரழித்து.. ஈழத்தில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை கருவறுத்ததை எப்படிம்மா பார்க்கிறீர்கள்..??! அது நியாயமா..???! 

ராஜீவ் காந்தி கொலையை ஈழத்தை கருவறுக்க பாவிக்கலாமா..??! 

ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்படாத எத்தனையோ அப்பாவிகளை கொன்றொழித்து.. ஒரு தேசத்தையே அடிமைப்படுத்தி.. இன அழிப்பு ஆளாக்கி இருக்கிறீர்களே.. இதே ராஜீவ் காந்தி கொலையைப் பயன்படுத்தி.. அதற்கு எங்கு போய் நீதி கேட்பது.

ராஜீவ் காந்தி கொலைக்கு சம்பந்தட்டதாக கருதப்படும்.. சுப்பிரமணியம் சுவாமி.. உட்பட்ட பலர் வெளில இருக்கிறார்கள்.. அவர்களை எல்லாம் பாதுகாக்கும் ஹிந்தியா.. ஏன் ஈழத்தமிழர்களை மட்டும் ஹிந்தியப் படைகள் காலத்திலும் சரி.. ராஜீவ் கொலைக்கு பின்னான காலத்திலும் சரி.. ஈழப் போராட்ட பின்னடைவின் பின்னும் சரி.. தண்டித்துக் கொண்டே இருக்கிறது... காரணம்..

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதே ஈழத்தை கருவறுக்கும் நோக்கோடு அமைந்த ஒரு சர்வதேச.. ஹிந்திய.. சிங்கள கூட்டுத்தேவைக்குத்தான் என்பதே வெளிப்படை உண்மை. அதை ஏன் பேசுகிறீர்கள் இல்லை... யாரும். 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று யாழ் வைத்தியசாலை படுகொலை நடந்தேறிய நாள். இக்கொலையின்போது ராயீவ் காந்தி பதவியில் இருந்தார், 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

இன்று யாழ் வைத்தியசாலை படுகொலை நடந்தேறிய நாள். இக்கொலையின்போது ராயீவ் காந்தி பதவியில் இருந்தார், 

காங்கிரஸ் கட்சி ஒரு கொலையை மையப்படுத்தி செய்த தொடர் பிரச்சாரங்களின் விளைவு நாம் எம் இனத்தின் எதிர்காலத்தையே இழக்கும் அளவுக்கு கொண்டு செல்ல அனுமதித்தது.

எமது மெளனங்களும்.. ஹிந்திய வல்லாதிக்க.. ராஜீவ் அரசின்.. அரச படைகளின் கொடுமைகளை நாம் தொடர்ச்சியாக பதிவு செய்யாததும்.. உலக அளவில் அதனை தொடர்ச்சியாக முன்னிலைப்படுத்தத் தவறியதும்.. நாம் நமக்கான நியாயங்களை நீதிகளை தொலைத்து.. பேரழிவுகளை சந்திக்க.. காங்கிரஸ் தி மு க.. அதி முக கும்பல்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. 

இதே தவறையே நாம் மீண்டும் மீண்டும் செய்து கொண்டு..

அன்று கிளாலியில் எம் உறவுகளை வேட்டையாடி.. எம் மீது கடுமையான பொருண்மியத் தடைகளை விதித்த பிரேமதாசவின் வாரிசை எமக்கான தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் மறதி பிடித்த சுயநல மிகை அரசியல்வாதிகளின் பேச்சோடு மட்டுமன்றி..

எம் மீது இன அழிப்பை பகிரங்கமாகவே கட்டவிழ்த்துவிட்ட கோத்தபாயவுக்கு ஆதரவு என்று சொல்லி செல்லும் நிலையில் எமக்குள் ஒரு பிரிவு அடிப்படை மனித உணர்வின் ஈவு இரக்கமின்றி இருக்கும் கொடுமையை..

தமிழினத்தில் கொண்டிருப்பது தான்.. தமிழினத்தின் அரும்பெரும் தியாகங்களின் மத்தியிலும் அந்த இன விடுதலை.. தேச விடுதலை.. சமூக விடுதலை இன்றி.. இந்தப் பூமிப்பந்தில்.. அடிமைப்பட்டுக்கிடக்க முக்கிய காரணம்.

எனிவரும் சந்ததியாவது.. நாம் தமிழராக ஒருங்கிணைந்து.. இனம்.. மொழி..தேசம் என்று சிந்தித்து உரிமை வெல்லுமா.. ??!

வெல்ல வேண்டும். வெல்ல வேண்டும் என்றால்.. எமது இனத்தின் கடந்த கால வரலாறு அவர்களை நோக்கி சரியாகச் சொல்லப்படுவதோடு.. எமது இனத்தின் துன்பியல்.. உலகின் கண்களின் முன் சதா நிறுத்தப்படுவதும் அவசியம்.

இதனை இந்த ராஜீவ் கொலையை ஹிந்தியர்கள் கையாள்வதில் இருந்து பாடமாக நாம் கற்றுக்கொள்வது முக்கியம்.

இந்திரா அம்மையாரின் கொலைக்கு இல்லாத முதன்மை ராஜீவின் கொலைக்கு வரக்காரணம்.. எமது துன்பியலை நாம் தொடர்ந்து உலகின் முன் நிறுத்தாததும் தான்.  சீக்கியர்கள் அப்படியல்ல. அதனால் தான் இந்திரா கொலை அடைக்கி வாசிக்கிறார்கள். 

இந்திரா ஒரு பொற்கோவில் படுகொலை தான் செய்தார். ஆனால்.. ராஜீவும் இந்தியப் படைகளும் ஈழத்தில் செய்தது பல பொற்கோவில் படுகொலைகளாகும். ஆனாலும்.. நாம்.. எல்லாத்தையும் மறந்து மறைத்து மரத்து வாழ்வதால்.. இன்று எம் இனத்தை நாமே அடிமைப்படுத்தி.. படுகுழிக்குள் தள்ளியுள்ளோம். 

நாம் தான் எனி சரியா சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.