Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது தந்தையை 2009 மே 17 ம் திகதியே இறுதியாக பார்த்தேன்- பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ் சிறுமி உருக்க உரை

Featured Replies

2009 மே 14 ம் திகதியே எனது தந்தைய நான் இறுதியாக பார்த்தேன் என  முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பிய  14 வயது சிறுமி கலையரசி கனகலிங்கம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

தமிழர் இனப்படுகொலை குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பிரிட்டனின் பொதுச்சபைக்கு ஆற்றிய உரையில் கலையரசி கனகலிங்கம் இதனை தெரிவித்துள்ளார்.

தனது தந்தையை இறுதியாக பார்த்தது குறித்து உரையாற்றியுள்ள அவர் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அங்கீகரிப்பது ஏன் அவசியமான விடயம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனது பெயர் கலையரசி கனகலிங்கம்,எனக்கு 14 வயது  2009 இல் நடந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்ட வாழ்க்கை குறித்து நான் இங்கு உரையாற்ற வந்திருக்கின்றேன் என அவர் தனது உரையை ஆரம்பித்துள்ளார்.

2009 ம் ஆண்டே எனது வாழ்;க்கையில் மிகவும் வேதனையான வருடம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009 மே 17 ம் திகதி நான் எனது தந்தையை இறுதியாக பார்த்தேன்,எனது தந்தையை விட்டு பிரிந்த அந்த நிமிடம் இன்னமும் எனக்கு வேதனையை ஏற்படுத்துகின்றது,நான் எனக்கு அச்சமாகஉள்ளது வாருங்கள் என எனது தந்தையை அழைத்தேன்,ஆனால் அவர் என்னை விட்டு போகவேண்டியிருந்தது என கலையரசி கனகலிங்கம் குறிப்பிட்டுள்ளார்,

kalayarasy.jpg

அந்த இறுதி தருணங்களை என்னால் எப்படி தெரிவிக்க முடியும்? ஏனைய பல சிறுவர்களும் தங்கள் தந்தைகளிற்காக அழுதுகொண்டிருந்ததை நான் பார்த்தேன் நான் எனது தந்தையின் கழுத்தை இறுக்கி அணைத்தபடி அழுதேன் அவர் எனக்கு முத்தமிட்டுவிட்டு கண்ணால் எதனையோ சொல்லமுயன்றவராக விலகிச்சென்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் தற்போது லண்டனில் வாழும்அதேவேளை  எனது தாய்; -தந்தை உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற துயரத்துடன் வாழ்கின்றார்,ஒவ்வொரு நாளும் நாங்கள் எங்கள்  துயரத்தை மறைத்துவிட்டு  நாங்கள் அவருடைய வருகைக்காக முகத்தில் சிரிப்பை ஏற்படுத்தியபடி காத்திருக்கின்றோம் எனவும் அந்த தமிழ் சிறுமி தெரிவித்துள்ளார்.

எனது இருண்ட நாட்களின் போது எனது தந்தை இங்கிருந்து எனது வாழ்க்கைக்கு வழிகாட்டினால் அது எவ்வளவு சிறப்பாகயிருக்கும் என நான் நினைப்பதுண்டு.

எனது தந்தையை பார்ப்பதற்கு சில நாட்களிற்கு முன்னர் எனது உறவினர்களுடன் நான்  பதுங்குழிக்குள் இருந்தேன்,அவ்வேளை எனக்கு தெரிந்த சிறுவன் ஒருவன் சைக்கிள் ஒடுவதை பார்த்தேன் நான் அவனை கூப்பிட எண்ணினேன்,ஆனால் அதற்கு முதல் படையினரின் எறிகணை எங்களிற்கு அருகில் விழுந்து வெடித்தது, அந்த சிறுவன் தூக்கியெறிப்பட்டான் என கலையரசி கனகலிங்கம் தெரிவித்துள்ளார்.

விமானக்குண்டுவீச்சினால் எனது இரு உறவினர்கள் கொல்லப்பட்டனர்,என்னால் அதனை மறக்க முடியாது,குண்டு பதுங்குழியின் மேல் விழுந்தது எனது உறவினர்கள் அதற்குள் சிக்குண்டனர் என கலையரசி கனகலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்றும் நான் அந்த நினைவுகளுடன் வாழ்கின்றேன்,எனது தந்தைக்கு என்ன நடந்தது என்ற கேள்வியுடன் நான் ஒவ்வொருநாளும் போராடுகின்றேன்,தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அங்கீகரிப்பது எனது வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டுவராது ஆனால் எனது தந்தைக்கும் காணாமல்போன ஏனையவர்களிற்கும் என்ன நடந்தது என்பதை அறிவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என கலையரசி கனகலிங்கம் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/67568

  • தொடங்கியவர்

 

 

  • தொடங்கியவர்

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றது இன அழிப்பே பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின்

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டும் எனப் பிரித்தானியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் வலியுறுத்தினார். இல்லையேல் தாம் அமைக்கப்போகும் அரசாங்கத்தில் இலங்கையுடனான இராணுவ பொருளாதார உடன்படிக்கைகள் இரத்தாகும் என்றும் அவர் எச்சரித்தார்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட போர்- படு கொலையானது ஓர் “இன அழிப்பு” தான் என்னும் கோரிக்கையை வலியுறுத்தி விசேட மாநாடு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது.
பிரித்தானிய தமிழருக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்றக் குழு நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்ரர் பாராளுமன்றக் கட்டடத்தின் அறை இலக்கம் 14 இல் இந்த மாநாடு இடம் பெற்றது.

இம்மாநாட்டின் வாயிலாக இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இறுதிக் கட்டப் போரில் நடைபெற்ற கோரத்தை “இன அழிப்பு” என்று பிரகடனம் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஜெரமி கோர்பின், “ஒருவருக்கு என்ன ஆனது என்று தெரியாத வலி ஒருபோதும் நீங்காத ஒரு வலியாகவே இருக்கும்.

அமைதி, நீதி, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுக்காக அர்ப்பணிக் கப்பட்ட வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் ஒரு அரசாங்கத்தை வழிநடத்த விரும்புகின்றேன்.

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணை ந்து செயற்பட வேண்டும்.அவ்வாறு இல்லையெனில் நாம் அமைக்கப்போகும் அரசில் இலங்கையுடனான இராணுவ பொருளாதார உடன்படிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது” என அவர் மேலும் தெரிவித்தார்.  

http://valampurii.lk/valampurii/content.php?id=19637&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.