Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களுக்கான தீர்வை பகிரங்கமாக சொல்ல அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் அச்சம்- சிவஞானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கான தீர்வை பகிரங்கமாக சொல்ல அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் அச்சம்- சிவஞானம்

(தி.சோபிதன்)

தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதனை விட இதனை சொன்னால் தங்கள் பகிரங்கமாக தேர்தலில் தாக்கப்படுவோம் தங்களுக்கு எதிராக அமைந்துவிடும் என்ற பயத்தில் எல்லா வேட்ப்பாளர்களும் ஒளித்து விளையாடும் நிலைமையே காணப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

sivaganam.jpg

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுஜன பெரமுனாவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனை சார்ந்த விடயம் எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை. அதில் தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பிலோ புதிய அரசியலமைப்பு பற்றியோ தெளிவாக எவையும் குறிப்பிடப்படவில்லை.

குறிப்பாக தெற்கில் தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகக்ளை வழங்க வேண்டும் என்பதனை விட இதனை சொன்னால் தங்கள் பகிரங்கமாக தேர்தலில் தாக்கப்படுவோம் தங்களுக்கு எதிராக அமைந்துவிடும் என்ற பயத்தில் எல்லா வேட்பாளர்களும் ஒளித்து விளையாடும் நிலைமையே காணப்படுகின்றது.

தமிழர்களின் தீர்வுகள் தொடர்பில் குறிப்பிடப்படாமல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் வெற்றி பெறுவாராக இருந்தால் அவர் சிங்கள தேசத்தின் ஜனாதிபதியாக மட்டுமே அவர் செயற்படுவார்.தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகள் அல்லாத ஏனெனில் கோத்தாபயாவுக்கு ஆதரவு கொடுக்கும் தரப்பின் சிறு வாக்குகள் கிடைக்கலம் ஆனால் அவர்கள் வாக்களித்து வந்தால் கூட வேட்ப்பாளர் வென்றால் அது தனி சிங்கள ஜனாதிபதியாகவே இருப்பார் தமிழ் மக்களின் மனங்களை வென்றவராக இருக்கமாட்ட்டார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச இப்போது அல்ல தேர்தலில் போட்டியிட ஆரம்பித்த போதே தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமல் தான் ஜனாதிபதி தேர்தலிலே போட்டியிடுவேன் என்று கூறியிருக்கின்றார். 

ஆகவே அந்த அடிப்படையில்தான் அவருடைய தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கின்றதோ என்று புரியவில்லை.எனினும் தாம் ஜனாதிபதியானால் நிர்வாக விடயங்களை மட்டுமே கவனிப்பேன் அரசியல் விடயங்களை மகிந்தராஜ பக்ஸவே கவனிப்பார் என்றும் கூறியுள்ளார். ஆகவே சிலவற்றை வெளிப்படையாக கூறாமல் தவிர்த்துக் கொண்டாரா என்று அவருக்குத்தான் தெரியும்.

தமிழ்க் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இரண்டு பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களும் கூறியிருப்பதாக அறிகின்றேன்.எனினும் நாம் திட்டமிட்டபடி அவர்களுடன் பேசுவோம்.அதன் பின்னர் அடுத்து என்ன செய்வது என்று அனைவரும் கூடி முடிவெடுப்போம்.தற்போது நாம் இணைந்து பலமான அணியாக செயற்படுவதால் தான் பேரம் பேசுவதிலும் பலமான தன்மை ஏற்பட்டுள்ளது.ஆனால் இதில் இருந்து வெளியேறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த முயற்சியிலும் இந்தியாதான் பின்னணி என்று கூறுவது நகைப்புக்குரிய விடயமாகும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு எடுத்துதுக்கு எல்லாம் இந்தியா பின்னணி, இந்தியாவின் ஆட்கள் என்று கூறுவது வழக்கமாகிவிட்டது.எமது நாட்டினை பொறுத்தவரையில் அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களை பொறுத்தவரையில் அயல்நாடான இந்தியாவினை பகைத்துக்கொண்டு எமக்கான தீர்வுக்கு எப்போதும் சாத்தியமில்லை.எனவே அவர்களின் ஆதரவு தேவை அதற்காக இந்த முயற்சிக்கும் இந்தியாதான் பின்னணி என கூறுவது நகைப்புக்குரியது என்றார்.
 

https://www.virakesari.lk/article/67620

"தமிழ்க் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இரண்டு பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களும் கூறியிருப்பதாக அறிகின்றேன்.எனினும் நாம் திட்டமிட்டபடி அவர்களுடன் பேசுவோம்.அதன் பின்னர் அடுத்து என்ன செய்வது என்று அனைவரும் கூடி முடிவெடுப்போம்.தற்போது நாம் இணைந்து பலமான அணியாக செயற்படுவதால் தான் பேரம் பேசுவதிலும் பலமான தன்மை ஏற்பட்டுள்ளது."

 

மீண்டும்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் இணைத்து மக்களுக்காக ஒன்றாக பயணியுங்கள்.

இல்லாவிட்டால் தொடர்ந்தும் எமது இனத்தை முழுமையாக அழித்து விடுவார்கள், அவர்கள் ஒற்றுமையாக. 

 

யதார்த்தம் #1 : எந்த சிங்கள தலைவரும் தமிழர் பிரச்சனையை சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் தீர்க்க மாட்டார்கள், தீர்க்க முடியாது. 

யதார்த்தம் #2 : சிங்கள மக்களின் முன்னால் தமிழர்களின் பிரச்னையை ' தீர்த்தால் தான் '  என்ற நிலைமை இன்று இல்லை. 

ஆகவே தமிழர் அரசியல் தலைமைகள் முன்னால் உள்ள சில தெரிவுகள் :

தெரிவு #1 : ஒரு சிங்கள முன்னணி அரசியல்வாதியுடன் ஒரு 'இரகசிய' ஒப்பத்தந்தை ஏற்படுத்துவது. ஆனால், வென்ற பின்னர் எந்த தீர்வும் கிடைக்காவிட்டாலும், நிலைமை மேலும் மோசமாகாமல் தடுக்கலாம். 

தெரிவு #2 : சிங்கள மக்கள் முன்னால் எமது மக்களின் அரசியல் தீர்வை பற்றி கூறி அதற்கான ஆதரவை பெறுதல். அதை ஆதரிக்கும் அரசியல் கட்சியை வளர்த்தல். 

தெரிவு #3 :  சர்வதேச அரசியல் இல்லை பொருளாதார நிலைமைகள் காரணமாக,  " தமிழர்களின் பிரச்னையை ' தீர்த்தால் தான் '  என்ற நிலைமையை" உருவாக்குதல் இல்லை அது வரும்பொழுது அதை சாதுரியமாக தீர்வு நோக்கி நகர்த்தல். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு  என்ன தேவை என தமிழருக்கே தெரியாதபோது சிங்களம் எதை தரும் அல்லது தரத்தான்முடியுமா ? சுயநலவாதிகளையும் முட்டாள்களையும் தலைவர்களாககொண்ட எமக்கு எதனை எதிர்பார்க்க முடியும் ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.