Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அல்லைப்பிட்டியில் சீனர்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
CHINESE IN ALLAIPITI (JAFFNA) - V.I.S.JAYAPALAN
அல்லைப்பிட்டியில் சீனர்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன்
.
941424350.jpg
.
 
அல்லைபிட்டி அகழ்வாரட்ச்சி புலத்தில் புதிதாக சீன மட்பாண்டம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. எங்கள் மண்ணின் வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். எனினும் பலர் நினைப்பதுபோல 1980ல்தான் அல்லைப்பிட்டியில் சீன மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன என்கிற கருத்து தப்பானதாகவும். அதற்க்கு முன்பே மணல் கிள்ளைக்காரர்களுக்கு இவ்விடாம் தெரிந்திருக்கிறது.
 
நான் யாழ்பல்கலைக்கழக மாணவர் மன்ற தலைவராக இருந்த சமயம் (1976-78) தற்செயலாக மண் அள்ளுகிறவர்களால் முதல் சீன மண்பாண்டம் கண்டுபிடிக்கபட்டிருந்தது. அதற்க்கு முன்பே மண் ஏற்றிச் செல்பவர்கள் அவற்றை கண்டிருக்கக்கூடும். ஆனால் 1970பதுகளில் மிழகாய் வெண்காய தடையால் யாழ்ப்பாணத்தில் பணம் குவிந்ததால் தனியார் அரசு கட்டிடப் பணிகள் திடீரென உயர்ந்தது. மணல் தட்டுபாடு ஏற்பட்டதால் மணணல் பெரும் வியாபாரப் பொருளானது. அல்லைபிட்டி மண்கும்பிகள் வெட்டி ஏற்றப்பட்டனன. ஆனைக்கோட்டை மணல்காடு போன்ற இடங்களில் இருந்த தொன்மையான நில அடையாளங்களான மணம் கும்பிகளும் வெட்டி ஏற்றபட்டன. அக்காலக்கட்டத்தில்தான் மிழகாய் செய்கைக்கும் யாழ்பாண கட்டிட தேவைகளுக்குமாக வன்னிக் காடுகள் பெருமளவில் அழிக்கபடுவதும் ஆரம்பமானது.
 
1976-78 காலப்பகுதியில் மணல் கொள்ளைக்காரர்கள்தான் சீன பாண்டங்களை முதலில் கண்டெடுத்து வெளியில் வைத்திருக்கிறார்கள். இதுபற்றிய தகவல் யாழ்பொலிசுக்கு கிடைத்தது அப்போதைய யாழ்ப்பாணம் பெலிஸ் சுபிரீண்டன்ற் சம்பவ இடத்தைப் பார்வையிட வரும்படி என்னையும் அழைத்தார். - சிங்கள இனவாதத்துக்கு எதிரான அந்த சிங்கள அதிகாரியின பெயர் நினைவில் இல்லை. அவர் மனைவி பொருளாதார விரிவுரையாளராக கொழும்பு பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்தார். - அதனால் முதன்முதலில் கண்டெடுக்கபட்ட உடைந்த சீன மண்பாண்டத்தை முதல் ஆளாகப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. இதன் தொடற்ச்சியாக அல்லைபிட்டியிலும் வெளியிலும் வளங்கும் செவிவழி வரலாற்று கதைகளையும் சேதிகளையும் திரட்ட முனைந்தேன். எனினும் எனது பணி ஒருசில நாட்களுக்கு மேல் தொடரவில்லை. ஆனையிறவு அகழ்வாராட்ச்சிக்குப் பிறகு இத்தகைய ஆய்வு மேற்கொண்டபோது அங்கு வேறெங்கும் கானப்படாத ‘பரம்பர்’ என்கிற ஒரு சிறு சாதிக் குழுவினர் அழிவின் விழிம்பில் இருப்பதை கண்டுபிடித்தேன். அவர்களும் ஆனைக்கோட்டை முன்னோர்போல இறந்தவர்களை எரிக்காது உட்கார்ந்த நிலையில் புதைக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனர். உண்மையில் தமிழர் ஆய்வு துறைகள் செவிவழி வரலாற்றில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த மாபெரும்தவறை இப்போதாவது திருத்திக் கொள்ள வேண்டும்.
 
ஆனையிறவில் தற்செயலாக மணல் கொள்ளைக்காரர்களால் மட்பாண்டங்கள் சில கண்டுபிடிக்கபட்ட பின்னர் சில வருடங்கள் கழித்துத்தான் 1980 களில்தான் சீன தொல்பொருள் ஆய்வாளர்கள் அல்லைபிட்டிக்கு வந்தனர்.
 
இப்ப சீனர்கள் மீண்டும் அல்லைப்பிட்டியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். 800 வருட பழைமையான சீன மட்பாண்டமொன்று கண்டெடுக்கப்பட்டதாக யாழ்பல்கலைக்கழக யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பி.புஷ்பரட்ணம் தெரிவித்திருக்கிறார். சீனர்கள் 600 ஆண்டு பழையது என்கிறார்கள். அது யாழ்பாண அரசு தோற்றம்பெற்றிருந்த காலக்கட்டமாகும். இது மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்.
 
.
 
1970பதுகளில் அல்லைபிட்டியில் சீன மட்பாண்டங்கள் கிடைத்தபோது அல்லைபிட்டியில் சீனகப்பல்கள் தங்கி இளைப்பாறி உணவு நீர் ஏற்றிச் சென்றதாகக் கருதப்பட்டது. சீன மாலுமிகள் பெரிசு சின்னன் வரிசையில் ஒன்றுள் ஒன்றாக அடுக்கி வைத்த மண்பாண்ட தொகுதிகளுள் எதாவது உடைந்திருந்தால் அந்த தொகுதிகளை கரைக்கு கொண்டுவந்து பிரித்துப் பார்த்து உடைந்தவற்றை அகற்றியிருக்கிறார்கள் என்கிற முடிவு அன்றைக்கு எட்டப்பட்டிருந்தது. இவை பற்றிய புதிய கருத்துக்களை புஸ்பரட்ணம் சொல்லவேண்டும்.
 
,
 
மாணவனாக இருக்கும்போதே பேராசிரியர் புஷ்பரட்ணத்தின் தேடலையும் உழைபையும் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். நம் மண்ணின் வரலாற்றை செம்மை செய்ய அவசியமான ஆதாரங்களை புஷ்பரட்ணத்தின் தேடலும் உழைப்பும் கண்டெடுத்து தந்திருக்கிறது. போர்க் காலமா சமாதான காலமா என்று கவலைப் படாமல் தொடர்ந்து வடகிழக்கில் உழைத்த ஆசிரியர்கள் பேராசிரியர் வைத்தியர்கள் என அத்தனை பேருக்கும் தலை வணங்குகிறேன். அவர்களுள் கர்மஜோகியான பேராசிரியர் புஷ்பரட்ணத்தின் பங்கு முக்கியமானது. உண்மையில் புஷ்பரட்ணத்துக்கு தான் நம் மண்ணுக்காக எவ்வளவு செய்திருக்கிறார் என்பது தெரியாது. அதுதான் அவரது தனிதன்மையும் பலமும். நண்பா அல்லைப்பிட்டி மண்ணைப்போலவே நீயும் நிச்சயமாகக் கவிஞர்களால் பாடப்பட வேண்டியவன் .
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மகராஜா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஏராளன்

On 11/2/2019 at 8:24 PM, poet said:
சீனர்கள் 600 ஆண்டு பழையது என்கிறார்கள். அது யாழ்பாண அரசு தோற்றம்பெற்றிருந்த காலக்கட்டமாகும். இது மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்
---
மாணவனாக இருக்கும்போதே பேராசிரியர் புஷ்பரட்ணத்தின் தேடலையும் உழைபையும் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். நம் மண்ணின் வரலாற்றை செம்மை செய்ய அவசியமான ஆதாரங்களை புஷ்பரட்ணத்தின் தேடலும் உழைப்பும் கண்டெடுத்து தந்திருக்கிறது. போர்க் காலமா சமாதான காலமா என்று கவலைப் படாமல் தொடர்ந்து வடகிழக்கில் உழைத்த ஆசிரியர்கள் பேராசிரியர் வைத்தியர்கள் என அத்தனை பேருக்கும் தலை வணங்குகிறேன். அவர்களுள் கர்மஜோகியான பேராசிரியர் புஷ்பரட்ணத்தின் பங்கு முக்கியமானது. உண்மையில் புஷ்பரட்ணத்துக்கு தான் நம் மண்ணுக்காக எவ்வளவு செய்திருக்கிறார் என்பது தெரியாது. அதுதான் அவரது தனிதன்மையும் பலமும். நண்பா அல்லைப்பிட்டி மண்ணைப்போலவே நீயும் நிச்சயமாகக் கவிஞர்களால் பாடப்பட வேண்டியவன் .

எமது மண்ணில் நாம் உரிமையை நிலைநாட்டுவதற்கான ஆதாரங்களைத் தேடுபவர்களின் சேவை பாராட்டத்தக்கது. துரதிஷ்டவசமாக அதிகமானோர் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆதாரமற்ற கட்டுக் கதைகளாலும் சிங்களத்தின் சோடிக்கப்பட்ட வரலாற்றுத் திரிபுகளாலும் எமது தொன்மையான வரலாறு அழிந்துகொண்டிருக்கின்றது. அறிவியல் ஆதாரங்களே முக்கியமானவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.