Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கையும் - மொட்டும் ஒரு தாய் பிள்ளைகள் : மஹிந்த ராஜபக்ஷ

Featured Replies

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒரு தாய் பிள்ளைகளாகும்.

ஜனாதிபதித் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டு 71 வீத வாக்கினைப் பெற்று கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

அத்தோடு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த சம்பளத்தையும், மேலதிக தீபாவளி முற்பணத்தை பெற்றுக் கொடுக்க முடியாத அரசாங்கம், 1500 ரூபா நாளாந்த சம்பத்தைப் பெற்றுக் கொடுப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றுவதாகவும் குற்றஞ்சுமத்தினார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கோகாலை மாவட்மத்தில் இன்று ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் , 

சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒரே கூட்டணியில் இணைந்திருக்கிறது. 

இவ்விரு கட்சிகளும் ஒரு தாய் மக்களாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்க்கட்சி பலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்மிடம் வழங்கினார். 

சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க தீர்மானித்தது. எதிர்கட்சியில் இருந்து கொண்டு கட்சியொன்றை உருவாக்கினோம். அந்த கட்சியூடாக போட்டியிட்டு உள்ளுராட்சி தேரதலில் நூற்றுக்கு 71 வீதத்தில் வெற்றி பெற்றோம். 

உள்ளுராட்சி தேர்தலில் பொதுஜன பெரமுன , சுதந்திர கட்சி தனித்தனியே போட்டியிட்டது. அதே எல்பிட்டி தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டோம். 

எனினும் இருகட்சிகளினதும் முடிவை இணைத்த போது 70 வீத வாக்கினைப் பெற்று பாரிய வெற்றி பெற்றுள்ளோம். எனவே இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடும் இந்த தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றி பெறுவார் என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/68479

  • தொடங்கியவர்

என்மீது நம்பிக்கை கொள்ளுங்கள் : சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் நாட்டை மீண்டும் -கோத்தபய

Published by J Anojan on 2019-11-07 19:54:23

 

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் பல்துறையில் எழுந்துள்ள அனைத்து  சவால்களையும் வெற்றிக் கொள்வேன். என்மீது  நம்பிக்கை கொள்ளுங்கள்    அனைவரும் சுதந்திரமாக வாழும் பாதுகாப்பான  நாட்டை மீண்டும் பெற்றுக் கொடுப்பேன் என  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கேகாலை நகரில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல்  பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து  வாக்குறுதிகளையும் பதவி காலத்திற்குள் முழுமையாக  நிறைவேற்றுவேன். தேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தியவர்கள் எவ்வித பாரபட்சமுமின்றி தண்டிக்கப்படுவார்கள். எமது ஆட்சியில்   தேசிய பாதுகாப்பிற்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.

இராணுவத்தினரையும், பொலிஸாரையும் பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும், சட்டம் ஒழுங்கிற்கும் பயன்படுத்தினோம். ஆனால் நல்லாட்சி அரசாங்கம்  பாதுகாப்பு தரப்பினரை தங்களின் தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டமையினால் மீண்டும் நாட்டில் தீவிரவாதம் தலைதோங்கியுள்ளது.

சர்வதேச அமைப்புகளுக்கு  அடிபணிந்துள்ள  அமைச்சரவையினால் ஒருபோதும் தேசிய பாதுகாப்பினை   பலப்படுத்த முடியாது.  இதன் காரணமாகவே சட்டம் மற்றும் ஒழுங்கு இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.   இதன் பாதிப்பினை இன்று நாட்டு  மக்கள் எதிர்க் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/68477

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.