Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கு தனித்தனியாக அபிவிருத்தி செய்யப்படும் - சஜித்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கு தனித்தனியாக அபிவிருத்தி செய்யப்படும் - சஜித்

image_f54ab19dd3.jpgமட்டக்களப்பு மாவட்டத்தில் புதியதொரு வைத்தியசாலையை அமைத்துகொடுக்கவுள்ளதாக வாக்குறுதியளிக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனியான சர்வதேச உதவிக்கோரல் மாநாடுகளை நடத்துவதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுதாவலை பொது மைதானத்தில் இன்று (09) நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான புதியதொரு பொது வைத்தியசாலையை உருவாக்குவதாகவும், கிராமிய வைத்தியசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

அதேபோல் மட்டக்களப்பின் விவசாய செயற்பாடுகளை தரமாக முன்னெடுக்கும் வகையிலான அபிவிருத்திகள் செய்துகொடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், வடக்கு, கிழக்கு மக்களை சகலருமே ஒரு ஆயுதமாக மட்டுமே பயன்படுத்திகொண்டனர் எனவும் தெரிவித்தார்.

யுத்த காலத்தின் கிழக்கு மாகாணத்தை மய்யப்படுத்தி சர்வதேச உதவிக்கோரும் மாநாடொன்றை நடத்தியிருக்கலாம் எனவும், இதற்கும் முன்பிருந்த அரசாங்கங்கள் அதை செய்யத் தவறியிருந்தாலும் தனது ஆட்சியில் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனியே சர்வதேச உதவிக்கோரல் மாநாடுகளை நடத்தி விஷேட அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாவும் உறுதியளித்தார். 

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 14 தொழில் பேட்டைகள் ஆரம்பிக்கப்படும் எனவும், நாடளாவிய ரீதியில் தொழில்நுட்ப கல்லூரிகள் உருவாக்கி கொடுக்கப்படவுள்ளதோடு, பட்டிருப்பு பகுதியிலும் தொழில்நுட்ப கல்லூரிகள் உருவாக்கப்படும் என்றார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/வடகக-கழகக-தனததனயக-அபவரதத-சயயபபடம/175-240864

அரசியல் கைதிகள் விடுதலை: அமைச்சரவை பத்திரம் தயார்

அரசியல் கைதிகளை விடுப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தற்போதும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கும் அமைச்சர் மனோ கணேசன், சஜித் ஆட்சியில் அந்த பத்திரத்தை சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

அதேபோல், எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்குள் இருந்து ஆதரவளிப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்பதோடு, அமைச்சு பதவிகளையும் பெற்றுகொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். 

மட்டக்களப்பு களுதாவலை பொது மைதானத்தில் இன்று (09) நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

யுத்தத்தால் கிழக்கு மாகாண தமிழர்கள் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதாகவும், ஜனாதிபதியை உருவாக்கிவிட்டு தமிழ் வேடிக்கை பார்க்கும் நிலைமை வேண்டாம் எனவும், தமிழ் மக்களுக்கும் சகல சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்றார். 

தமிழர்களின் வாக்குகளை பெற்றுகொடுத்துவிட்டுத்த  தமிழர்களுக்கு உரிய சலுகைகள் கிடைக்காதிருப்பதை வேடிக்கை பார்க்க விரும்பவில்லை எனத் தெரிவித்த அவர், அரசாங்கத்திடம் சண்டையிட்டாவது சலுகைகயை பெற்றுகொடுப்போம் என்றார். 

அதேபோல் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தின் சனத்தொகையை பொருத்தே மாகாணத்துக்கான ஆளுநரை அமைச்சர் சஜித் நியமிப்பார் எனவும், கிழக்கு மக்கள் இழந்தவைகளை ஈடு செய்து சுபீட்சமான வாழ்வாதாரத்தை உருவாக்கிகொடுக்க வேண்டும் என்றார். 

அதேபோல் அண்மையில் கூறியதுபோன்று அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தயார் நிலையில் உள்ளதெனவும், தேர்தல் வந்துவிட்ட காரணத்தால் அதனை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் தான் அமைச்சராக இருக்க போவது உறுதியெனவும் அந்த அரசாங்த்தில் மேற்படி அமைச்சரவை பத்திரத்தை சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து எதிர்காலத்தில் ஒரு தமிழ் அமைச்சர் ஒருவரை தெரிவு செய்யபோவதாகவும் வாக்குறுதியளித்தார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அரசயல-கதகள-வடதல-அமசசரவ-பததரம-தயர/150-240858

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அரசியல்வாதி வேறு எப்படி கதைப்பார் ?  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.