Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் ஆணையாளரை பதவி விலகக் கோரி யாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா கைது

Featured Replies

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவ பதவி விலக வேண்டும் என கோரி யாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா பொலிஸாரல் கைது செய்யப்பட்டார்.

t3.jpg

கொழும்பு மாவட்ட வாக்காளர்களின் விபரத்தை கோரிய போது அது சிங்கள மொழியில் தரப்பட்டதாகவும், அது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்ட போது , தமிழில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியபோதும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதமையால், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என கோரி இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மாவட்ட செயலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.

t52.JPG

அதனையடுத்து தேர்தல் கடமைக்காக மாவட்ட செயலகத்தில் கடமையில் இருந்த பொலிஸார் அவரை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். அதற்கு அவர் உடன்படாததையடுத்து, பொலிஸார் அவரை பலவந்தமாக கைது சென்று தூக்கி சென்றனர்.

t1.JPG

https://www.virakesari.lk/article/68973

  • கருத்துக்கள உறவுகள்

எதனையும் சண்டித்தனத்தால்தான் பெற்றகொள்ள முயற்சி செய்யவேண்டும். நீதி, நேர்மை, நியாயம், சனநாயகம் என்பதெல்லாம் போலி என்று வருங்காலச் சந்ததிக்குப் போதிக்கப்படுகிறது. 😲

13 hours ago, ampanai said:

கொழும்பு மாவட்ட வாக்காளர்களின் விபரத்தை கோரிய போது அது சிங்கள மொழியில் தரப்பட்டதாகவும், அது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்ட போது , தமிழில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியபோதும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதமையால், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என கோரி இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மாவட்ட செயலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்

நீதி கோரி மேற்கொள்ளப்படும் ஒரு ஜனநாயக போராட்டத்தை அடக்குவதும், போராடியவரை கைது செய்வதும் அரச  பயங்கரவாதமே!
 
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் ஓர் அங்கமே தேர்தல் திணைக்களம். அதன் ஆணையாளர் ஆக நியமிக்கப்படுபவர் பொதுவாக ஒரு  சிங்கள இனவெறியராகவே இருப்பர். இவர்கள் அரசியல் யாப்பையும் மீறி தமிழின விரோதமாக நடப்பது புதுமையில்லை. இந்த தேர்தல் ஆணைக்குழுவில் தற்போது மனித உரிமை பற்றி கரிசனை உள்ளவராக வேடம் போட்டு சுயலாபங்களை பெறும் ரட்ணஜீவன் கூல் உம் ஒரு உறுப்பினர். இருந்தும் தமிழுக்கு உரிய இடம் வழக்கப்படாமல் உள்ளமை, ரட்ணஜீவன் கூல் அடிக்கடி போடும் மனித உரிமை வேடங்கள் போலியானவை என்பதை நிரூபிக்கின்றது.

"தமிழில் தேர்தல் ஆவணங்களை தரத் தவறியமையை கண்டித்தவர் கைது" என்று தலைப்பை போடுமளவுக்கு நல்ல ஊடகவியலாளர்கள் வீரகேசரியில் இல்லை!   

தனியே நீதி நியாயம் கேட்டு போராடுவதற்கு ஒரு துணிவு வேண்டும்! அதற்காக தம்பிராசாவை பாராட்டலாம்.

நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் தமிழீழ தனி நாடே தமிழர்களுக்கான நீதி, நியாத்தை  தரும் சிறந்த தீர்வாக அமையும் என்பதை உறுதி செய்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.