Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலனாய்வுத்துறை அதிகாரியை கண்டுபிடிக்க அனைத்துலக உதவி கோருகிறது சிறிலங்கா

Featured Replies

புலனாய்வுத்துறை அதிகாரியை கண்டுபிடிக்க அனைத்துலக உதவி கோருகிறது சிறிலங்கா

இந்தோனேசியாவில் காணாமல் போன சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரி கப்டன் மொகமட் நிலாமைக் கண்டுபிடிக்க அனைத்துலகத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் புலனாய்வுத்துறைப் பிரிவு அதிகாரியாக நிலாம் பணியாற்றி வந்தார். அவரது பணிக்காலம் முடிவடைவதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாக அவர் காணாமல் போனார்.

இது தொடர்பாக இந்தோனேசிய பாதுகாப்பு தரப்பினரிடம் சிறிலங்கா அரசாங்கம் முறைப்பாடு செய்துள்ளது.

மொகமட் நிலாம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காணாமல் போயுள்ளார்.

தமிழ்வின்

அவன் தன் பாவத்துக்கு பாவ விமோசனம் செய்ய போயிட்டார் ஏன் இவை திரும்ப திரும்ப தேடினம்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

அமரிக்க உளவுத்துரைக்கு சில ரகசியங்களை காட்டிகுடுத்துட்டு இத்தாலிய உளவுத்துரை அதிகாரி, உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் பல கோடி மில்லின் களுடன் சுகபோக வாழ்க்கை வாழ்வது யாவர் அறிந்த்தது. அது போலத்தான் இதுவும் ஒன்று. உளவுத்துரையினரின் வழக்கமான வேலை இதுஎல்லாம். உலகதில் அவர்களின் இப்படிப்பட்ட மறை வு சாதாரனம் தான்.

www.tamil.2.ag

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உளவுத்தொழில் என்பது மிக மிக கேவலமான தொழில்....

அதைச் செய்பவனும் கேவலாமாகவே சாவான்

  • கருத்துக்கள உறவுகள்

உளவுத்தொழில் என்பது மிக மிக கேவலமான தொழில்....

அதைச் செய்பவனும் கேவலாமாகவே சாவான்

இத்தொழிலைக் கேவலப்படுத்த வேண்டாம். தமிழீழப்போராளிகளில் சிலரும் உளவுத்தொழிலில் எதிரியினைப்பற்றி அறிவதினால் பல வெற்றிகள் தமிழர்களுக்கு கிடைத்திருக்கின்றன.

கீழே இணைத்துள்ள போராளியின் வீரமிகுந்த சாதனைகளையும் வாசித்துப்பாருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20023

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தொழிலைக் கேவலப்படுத்த வேண்டாம். தமிழீழப்போராளிகளில் சிலரும் உளவுத்தொழிலில் எதிரியினைப்பற்றி அறிவதினால் பல வெற்றிகள் தமிழர்களுக்கு கிடைத்திருக்கின்றன.

கீழே இணைத்துள்ள போராளியின் வீரமிகுந்த சாதனைகளையும் வாசித்துப்பாருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20023

இங்கு நான் போராட்டத்தைக்குறித்து கருத்து எதுவும் சொல்லவில்லை..

தொழிலைப்பற்றி மட்டுமே கருத்து சொன்னேன்..

எல்லா விதமான போராட்டத்திற்கு அப்பாற்பட்டு, எல்லாவிதமான க்ருத்துக்களுக்கு அப்பாற்பட்டுப் பார்த்தால் உண்மையிலேயே உளவுத்தொழில் என்பது முதுகில் குத்தும் செயல் அது கேவலமானதும் கூட..

இலங்கை கயவர்களின் கெட்ட புத்தி காரணமாகத்தான் நமது போராளிகள் கூட உளவில் ஈடுபட்டார்கள்..

இருப்பினும் நமது போராளிகள் செய்கிறார்கள் என்பதற்காக அது சரி என்பது ஆகிவிடாது...

எதிரியை நேருக்கு நேர் சந்திப்பதே முறை வீரம்...

உளவு என்பது கேவலமான தொழில் அல்ல அதில் இரண்டு வகை இருக்கு மற்றவர்களை போட்டு கொடுத்தல் மற்றது நாட்டின் நலனுக்காக செயற்படுத்தல் இதில் முதலாவது வேன்டுமென்றால் உங்களுக்கு கேவலமாக தெரியலாம் ஆனால் இரண்டாவது ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமானது.ஒரு பெரும் படையால் செய்யமுடியாத சில வேலைகளை ஒரு உளவு துறையினனால் செய்து முடிக்க முடியும்.போர் என்றது எப்போது உலகில் அறிமுகமாகியக்தோ அன்றே உளவும் அறிமுகமாகிவிட்டது உளவுத்துறை மீது நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு உங்கள் குறிகிய வட்டத்தையே காட்டுகின்றது

இதான்பா...

தனியா குடும்பத்தோட நிம்மதியாவும் இருக்க விடமாட்டாங்கள்...

உளவுத்தொழில் செய்தநேரம் உழவுத்தொழில் செய்திருந்தால் கடைசி... மனைவி, பிள்ளை குடும்பத்தோட ஒன்றாய் இருந்து நிலாச் சோறாவது சாப்பிட்டிருக்கலாம்....

இனி என்ன செய்வது...?

சங்கு ஊதவேண்டியதுதான்...

  • 2 weeks later...

இந்தோனேசியாவில் கப்டன் நிலாம் காணாமல் போனதாக அரசாங்கத்தால் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன.

ஜ வெள்ளிக்கிழமைஇ 18 மே 2007 ஸ ஜ யோகராஜன் ஸ

இராணுவ புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரியாக முன்னர் பணியாற்றி வந்த கப்டன் எஸ்.எம்.எம்.நிலாம் தனது குடும்பத்தினருடன் இந்தோனேசியாவில் காணாமல்போய்விட்டதாக அண்மையில் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. இந்தோனேசியாவிலுள்ள ஷ்ரீலங்கா தூதரகத்தில் உயர்மட்ட உத்தியோகத்தராகப் பணியாற்றிவந்த கப்டன் நிலாம் கடந்த மாதம் 24 ஆம் திகதியிலிருந்து தூதரக அலுவலகத்தில் கடமைக்கு சமுகமளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இவ்வாறு கப்டன் நிலாம் அலுவலகத்துக்கு அறிவிப்பு எதனையும் செய்யாத நிலையில் அவருக்கு ஏதோ ஆபத்து நேர்ந்திருக்கலாம் என்றே அச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று தற்போது தெரியவந்துள்ளது. இதுபற்றி பாதுகாப்புத்துறை சார்ந்த பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்திருக்கும் தகவல்களுக்கேற்ப கப்டன் நிலாமும் அவருடைய குடும்பத்தினரும் காணாமல்போய்விட்டதாகத் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் உண்மையல்ல எனவும் நிலாமும் குடும்பத்தினரும் உயிராபத்து எதுவுமின்றி மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பாதுகாப்புத்துறை தரப்பில் மேலும் தெரிவிக்கப்படும் தகவல்களின்படி கப்டன் நிலாம் இந்தோனேசியாவிலுள்ள ஷ்ரீலங்கா தூதரகத்தின் உயர்மட்ட உத்தியோகத்தராக 2004 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டதாகவும் அவருடைய இராணுவ சேவைக்காலம் கடந்த 2006 டிசம்பர் இறுதியுடன் முடிவடைந்தபோது அவர் சேவைக்காலத்தை நீடிக்க விண்ணப்பம் செய்ததன் பேரில் மேலும் மூன்று மாதங்கள் நீடிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வகையில் கப்டன் நிலாம் இந்தோனேசியாவிலுள்ள ஷ்ரீலங்கா தூதரகத்தில் அவருடைய சேவை 2007 மார்ச் 31 ஆம் திகதி முடிவடைந்துள்ளது. ஆயினும், இம்முறை கப்டன் நிலாம் தனது இராணுவ சேவைக் காலத்தை நீடிப்பதற்குக் கோராமல், உயிருடன் இருக்கும் போதே இராணுவ சேவையிலிருந்து விலகிவிடத் தீர்மானித்து ஓய்வுபெறுவதற்கான விண்ணப்பத்தை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியுள்ளார். இராணுவ சேவையில் 20 வருடங்கள் பூர்த்தி செய்பவர்களுக்கு ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பத்தைச் செய்யமுடியும். எவ்வாறாயினும் கப்டன் நிலாம் இராணுவ சேவையில் 25 வருடங்களைப் பூர்த்தி செய்தநிலையில் வெளிநாடு ஒன்றிலிருந்து தற்போது சேவையிலிருந்து ஓய்வுபெறுவதற்கான விண்ணப்பத்தை செய்துள்ளார். இந்த வகையில் கப்டன் நிலாமும் அவருடைய குடும்பத்தினரும் வெளிநாட்டில் உயிராபத்து இன்றி பாதுகாப்பாக இருப்பதாகவும் தற்போது சில தகவல்கள் தெரிவிப்பதைப்போன்று அவரோ அவருடைய குடும்பத்தினரோ இந்தோனேசியாவில் காணாமல்போகவில்லை எனவும் பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-லங்காதீப விமர்சனம்:13.05.2007- (nitharsanam)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.