Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சம்பந்தன் விடுக்கும் செய்தி

Featured Replies

புதிய ஜனா­தி­பதி  தமிழ் மக்­க­ளது கருத்து வெளிப்­பாட்­டுக்கு மதிப்­ப­ளித்து செயற்­ப­ட­வேண்டும். அவர் அவ்­வாறு செயற்­ப­டுவார் என  நம்­பு­கின்றேன். அவ்­வாறு செயற்­ப­டு­வதன் மூலம் நாம் அனை­வரும் இலங்கை நாட்டின்  சம­மான குடி­மக்கள் எனும் உணர்வு ஏற்­படும் என்­ப­தையும்   நாடு  பிள­வு­ப­டாது பாது­காக்­கப்­படும் என்­ப­தையும்  புதிய ஜனா­தி­ப­திக்கும் அவர் சார்ந்­தோ­ருக்கும்  தமிழ் மக்கள் சார்பில்   தெரி­வித்­துக்­கொள்­கின்றேன் என்று  தமிழ்  தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர்  இரா. சம்­பந்தன் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

sampanthan.jpg

இலங்­கையின்  வடக்­கிலும் கிழக்­கிலும் உள்ள  அனைத்து நிர்­வாக மாவட்­டங்­க­ளிலும் தேர்தல் மாவட்­டங்­க­ளிலும் வாழும் மக்கள்  நீண்­ட­கா­ல­மாக  தீர்க்­கப்­ப­டாமல் உள்ள   தேசிய பிரச்­சி­னைக்கு  தீர்­வு­ கா­ணக்­கூ­டிய  வகையில்  முன்­னோ­டி­யான  செய்­தியை  தனது  தேர்தல் அறிக்­கையின் வாயி­லாக வெளிப்­ப­டுத்­திய கருத்­துக்­களின் அடிப்­ப­டையில்  சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு   பெரு­வா­ரி­யாக   வாக்­க­ளித்­துள்­ளனர்.  எமது கட்­சி­யா­கிய தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு  பிள­வு­ப­டாத  பிரிக்க முடி­யாத இலங்கை நாட்­டினுள் அதி­உச்ச அதி­கா­ரப்­ப­கிர்வு வழங்­கப்­படும் என்ற  அடிப்­ப­டையில்  தமிழ் மக்­களை  ஒரு­மித்து  சஜித் பிரே­ம­தா­சவின் சின்­ன­மான அன்­னத்­திற்கு வாக்­க­ளிக்­கு­மாறு   கேட்­டி­ருந்­தது. அதி உச்ச அதி­கா­ரப்­ப­கிர்வு  தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வாக வழங்­கப்­ப­ட­வேண்டும் என்ற கருத்தை  அனைத்து  அர­சியல் கட்­சி­களும் தலை­வர்­களும் வெளிப்­ப­டை­யாக  ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தனர். இத­ன­டிப்­ப­டை­யி­லேயே வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் தீர்ப்பு அமைந்­தி­ருந்­தது என்றும் சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

தேர்தல் புறக்­க­ணிப்பு, தமிழ் வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிப்பு போன்ற பல்­வேறு திசை திருப்­பல்கள் காணப்­பட்ட சூழலில் அவற்­றுக்கு செவி­சாய்க்­காது எமது வேண்­டு­கோ­ளுக்­க­மைய  ஒற்­று­மை­யாக அன்­னத்­திற்கு வாக்­க­ளித்து  இலங்கை ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு  பன்­நாட்டு சமூ­கத்­திற்கும்  தமிழ் மக்கள் ஓர் உறு­தி­யான செய்­தியை கூறி­யி­ருக்­கின்­றனர். அதா­வது தமது உரிமை தொடர்­பான வேட்­கைகள் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும்  என்­பதில் தாம் உறு­தி­யாக இருப்­பதை மக்கள்  வெளிக்­காட்­டி­யுள்­ளனர். எனவே ஜனா­தி­பதி இந்த செய்­தியை புரிந்­து­ கொண்டு மதிப்­ப­ளித்து செயற்­ப­ட­வேண்டும் என்றும் அவர்  தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

ஜனா­தி­பதி தேர்­தலில் பெரும்­பான்மை சிங்­கள மக்­களின் பேரா­த­ர­வினை பெற்று  புதிய ஜனா­தி­ப­தி­யாக  சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின்  வேட்­பாளர்  கோத்­தபாய ராஜ­பக்ஷ  புதிய ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார். அவ­ரது  தெரிவை அடுத்து  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர்  தமது நிலைப்­பாட்டை விளக்கி நேற்று முன்­தினம்  அறிக்­கை­யொன்­றினை  வெளி­யிட்­டி­ருந்தார்.  அந்த அறிக்­கை­யி­லேயே அவர் இந்த விட­யங்­களை சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

ஜனா­தி­பதி தேர்­தலில்  வடக்கு,  கிழக்கை சேர்ந்த சிறு­பான்­மை­யின மக்கள்  தமது உறு­தி­யான நிலைப்­பாட்­டினை   வாக்­க­ளிப்பின் மூலம்  தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.   2015ஆம்  ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம் திக­தி­ ந­டை­பெற்ற   7ஆவது ஜனா­தி­பதி தேர்­தலில்  தமிழ் மக்கள்  தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்ற நோக்­கத்­தி­லேயே  அன்று  பொது எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்­டி­ருந்த  மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு பேரா­த­ர­வினை வழங்­கி­யி­ருந்­தனர். அந்த தேர்­தலில்  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ­வுக்கும் பொது எதிரணியின் வேட்­பாளர்  மைத்­தி­ரி­பால சிறி­சேன­விற்­கு­மி­டையில் கடும் போட்டி நில­வி­யது.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு  மற்றும்  தமது அன்­றா­டப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வு­களை வழங்­கு­வ­தாக  பொது எதி­ரணி வாக்­கு­றுதி அளித்­த­தை­ய­டுத்தே தமிழ் பேசும் மக்கள் பெரும்­பான்­மை­யான ஆத­ரவை  மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு வழங்­கி­யி­ருந்­தனர்.  

அதே­போன்றே  தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கா­ணப்­ப­ட­வேண்டும்,   இனப்­பி­ரச்­சி­னைக்கு  அதி­கா­ரப்­ப­கிர்­வு­ட­னான அர­சியல் தீர்வு உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை மனதில் வைத்து  இம்­மு­றையும் வடக்கு,கிழக்கை சேர்ந்த தமிழ் மக்கள் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு தமது ஆத­ர­வினை பெரும்­பான்­மை­யாக வழங்­கி­யுள்­ளனர்.

பொது­ஜன பெர­மு­னவின்  வேட்­பாளர்  கோத்­தாபய ராஜ­பக் ஷவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில்   அதி­கா­ரப்­ப­கிர்வு தொடர்­பிலோ அர­சியல் தீர்வு தொடர்­பிலோ எதுவும்  குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. ஆனால்  புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின்  வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வினால் வெளி­யி­டப்­பட்ட தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் ஒரு­மித்த நாட்­டுக்குள்  அதி­கூ­டிய அதி­கா­ரப்­ப­கிர்வு வழங்­கப்­படும் என்றும் மாகா­ண­ச­பை­க­ளுக்­கான அதி­கா­ரங்கள்  அதி­க­ரிக்­கப்­படும் எனவும்  குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இதன் அடிப்­ப­டை­யி­லேயே தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது   சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தது.  அதனை  ஏற்­றுக்­கொண்டே  வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழ் மக்கள் பெரும்­பான்­மை­யாக  சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தனர்.

2015ஆம்  ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­த­லாக இருக்­கலாம். அல்­லது இம்­முறை நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­த­லாக இருக்­கலாம்.   தமிழ் மக்­களின்  எண்­ணங்­களும்   நோக்­கங்­களும்  ஒன்­றா­கவே  இருந்­துள்­ளதை  இதன்­மூலம் அவ­தா­னிக்க முடி­கின்­றது. இத­னைத்தான் தமிழ்  தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இதன் மூலம் அறிக்கை மூலம் எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார்.

இத­னை­விட இந்த ஜனா­தி­பதி தேர்­தலில்   சிறு­பான்­மை­யி­னத்­த­வர்கள்   ஓர­ணி­யா­கவும்  பெரும்­பான்மை இனத்தை சேர்ந்த பெரும்­பான்­மை­யி­னத்தோர் மாற்று அணி­யா­கவும்   வாக்­க­ளித்­துள்­ள­மை­யினால் இன­வாத ரீதியில்   வாக்­குகள் அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக குற்­றச்­சாட்­டுக்கள்  எழுந்­துள்­ளன.  தமிழ் மக்கள்  இன­வாத ரீதியில் செயற்­பட்­டுள்­ள­தா­கவும்   பெரும்­பான்­மை­யினத் தலை­வர்கள்  குற்­றச்­சாட்­டுக்­களை  முன்­வைத்­தி­ருக்­கின்­றனர்.

இந்த விடயம் தொடர்பில்  கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

ஜனா­தி­பதி தேர்­தலில்  தமிழ் மக்கள் வாக்­க­ளித்­தி­ருக்கும் முறைக்கு  இன­வாத பரி­மா­ணத்தை கற்­பிப்­பது  நேர்­மை­யற்ற விட­ய­மாகும்.  இந்த தேர்­தலில்  இன­வாத அடிப்­ப­டையில் வாக்­க­ளிப்­ப­தற்­கான தேவை தமிழ் மக்­க­ளுக்கு  ஏற்­ப­ட­வில்லை.  தேர்­தலில் போட்­டி­யிட்ட கோத்­த­பாய ராஜ­பக் ஷவும் சஜித் பிரே­ம­தா­சவும்  சிங்­கள  பௌத்­தர்­க­ளே­யாவர்.  பொரு­ளா­தார விட­யங்­களைப் பொறுத்­த­வ­ரை­யிலும் கூட  அவர்கள் இரு­வரும் ஒரே­மா­தி­ரி­யான அணு­கு­மு­றையை  கொண்­ட­வர்­க­ளா­கவே இருந்­தனர். ஆனால்   சிறு­பான்­மை­யி­னத்­த­வரின் பிரச்­சி­னை­களைப் பொறுத்­த­வரை  சஜித் பிரே­ம­தாச   தேர்தல் பிர­சா­ரங்­களில் வர­வேற்­­கக்­கூ­டிய நிலைப்­பா­டு­களை வலி­யுறுத்­தி­யி­ருந்தார்.  தமிழ் மக்கள்  இன­வாத அடிப்­ப­டையில்   வாக்­க­ளிக்க விரும்­பியி­ருந்தால் தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில்  இன­வாத தொனி­யு­ட­னான கருத்­துக்­களை வெளி­யிட்ட தமிழ் வேட்­பா­ள­ரான  சிவா­ஜி­லிங்­கத்­திற்கு  வாக்­க­ளித்­தி­ருக்­கலாம்.  ஆனால் தமி­ழர்கள்  அவ்­வாறு செய்­ய­வில்லை.  சிங்­கள பௌத்­த­ரான சஜித் பிரே­ம­தா­ச­விற்கே  வாக்­க­ளித்­தனர். எனவே இதனை  இன­வாத கண்­ணோட்­டத்­துடன் அணு­கு­வது  தவ­றா­னது என்றும்   சம்­பந்தன்  சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இதே கருத்­தினை  அமைச்சர்  இராதா­கி­ருஷ்ணன் உட்­பட தமிழ், முஸ்லிம் தலை­வர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

உண்­மை­யி­லேயே  தமிழ் பேசும் மக்கள் இன­வாத கண்­ணோட்­டத்­துடன்   இந்த தேர்­தலை அணு­கி­யி­ருந்தால் தமிழ் மக்கள்  சிவா­ஜி­லிங்­கத்­திற்கும்  முஸ்லிம் மக்கள் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் வுக்கும்  வாக்­க­ளித்­தி­ருக்­க­வேண்டும்.   ஆனால் அவர்கள் அவ்­வாறு   இன­வாத செயற்­பாட்டில் ஈடு­பட்­டி­ருக்­க­வில்லை. ஒரு­மித்த நாட்­டுக்குள்  பெரும்­பான்­மை­யின மக்­க­ளுடன் ஒன்­றி­ணைந்து வாழ­வேண்டும்  என்­ப­தற்­கா­கவே அவர்கள் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு வாக்­க­ளித்­தி­ருந்­தனர்.   இதனை  இன­வாதம் பரப்பும் தரப்­பினர் புரிந்­து­கொள்­ள­வேண்டும்.

யுத்­தத்தால் பெரும் அழி­வு­களை சந்­தித்த  வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்  தமது  அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைக் காண்­ப­துடன்  இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு  காணப்­ப­ட­வேண்டும் என்று வலி­யு­றுத்தி வருகின்றனர். அதற்காகவே கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் இந்த தேர்தலிலும்  தமது வாக்குகளை ஒற்றுமையாக உறுதிப்பாட்டுடன் பயன்படுத்தியுள்ளனர்.      

எனவே தமிழ் மக்களது  இந்த செய்தியினை  புதிய ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷவும்  அவரை சார்ந்தோரும்  நன்கு விளங்கிக் கொள்ளவேண்டும்.   தற்போதைய நிலையில்   சிங்கள மக்களின்  பேராதரவைப் பெற்று   கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருக்கின்றார்.  அதேபோன்று  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் பிரதமராகப் போகின்றார்.  இவர்கள் இருவரும் தமிழ் மக்களின்  பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து  அதற்கு தீர்வுகாண முன்வரவேண்டும்.

சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற   இந்த இரு  தலைவர்களும்   தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ அல்லது நியாயமான அரசியல் தீர்வினை வழங்குவதற்கோ   சிங்கள மக்கள்  எதிர்க்கப் போவதில்லை.  எனவே இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ்  பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க  புதிய ஜனாதிபதியும்   அவரது தலைமையிலான  பொதுஜன பெரமுனவினரும்  முனைவது நல்லது.

(21.11.2019 வீரகேசரி நாளிதழின் ஆசிரியத் தலையங்கம் )

https://www.virakesari.lk/article/69428

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.