Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோவை பள்ளி மாணவி: ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு - அதிர்ச்சி சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோவை பள்ளி மாணவி: ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு - அதிர்ச்சி சம்பவம்

கோவை பள்ளி மாணவி: ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டு பாலியல் வல்லுறவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "கோவையில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வல்லுறவு"

கோவை சீரநாயக்கன்பாளையத்தில் பள்ளி மாணவி ஒருவர் ஆறு பேரால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதில் நான்கு பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருவதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது உறவினர் ஒருவருடன் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு மாலையில் பூங்கா ஒன்றுக்கு சென்றுள்ளார். இரவு சுமார் 9 மணியளவில் அவர்கள் வீட்டுக்குச் செல்ல தயாரான போது, 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்துள்ளது.

போலீஸார் என்று கூறிய அவர்கள், ஆண் நண்பரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று ஆடைகளை அவிழ்த்ததாகவும், பின்னர் மாணவியை ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததை வீடியோ பதிவாகவும் அவர்கள் எடுத்ததாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து போக்சோ சட்டம் மற்றும் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இருவரைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/india-50618987

 
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும், வெட்கப்படக் கூடிய செயல்.
கைது செய்யப் பட்டவர்கள்... எப்படியும் ஒரு மாதத்தில், 
வெளியே வந்து இந்தச் சமூகத்தில் நடமாடத்தான் போகின்றார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஏராளன் said:

கோவை பள்ளி மாணவி: ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு - அதிர்ச்சி சம்பவம்

இது வட இந்திய கலாச்சாரமாச்சே?

திரைப்படங்களில் கூட்டு பாலியல் வல்லுறவுகளை எப்படி  கடைப்பிடிக்க வேண்டும் என்பதை விலாவரியாக காட்டுவார்கள்.
மணிரத்தினம் எண்ட ஒரு கோதாரி இயக்குனர் ஒருபடத்திலை எப்பிடி ஓடிப்போய் கலியாணம் கட்டலாம் எண்டதை அந்தமாதிரி காட்டியிருப்பார்.அதையே இப்ப தென்னிந்தியாவிலை குஞ்சுகுருமனெல்லாம் தாலிகட்டிக்கொண்டு திரியுதுகள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோவை பள்ளி மாணவி கூட்டு வன்புணர்வு: பிறந்தநாள் கொண்டாட பூங்கா சென்றவருக்கு கொடுமை, நால்வர் கைது

ஹைதராபாத்தில் 27 வயது பெண் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டதை கண்டித்து கொல்கத்தாவில் பெண்கள் நடத்திய போராட்டம்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஹைதராபாத்தில் 27 வயது பெண் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டதை கண்டித்து கொல்கத்தாவில் பெண்கள் நடத்திய போராட்டம்.

கோவையில் பிளஸ் ஒன் படித்து வரும் 17 வயது மாணவியை 6 பேர் கும்பல் கூட்டு வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த வாரம் செவ்வாய்கிழமை, மாலை வேளையில், தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, வீட்டின் அருகே உள்ள பூங்காவிற்கு தனது நண்பருடன் சென்றிருக்கிறார் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி. அப்போது அங்கிருந்த 6 பேர் இருவரையும் தாக்கியதோடு, சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்துள்ளது, என்று போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து, அடுத்த சில நாட்களில் தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். இதனையடுத்து, அவரது தாய் ஆர்.எஸ். புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் மோகனஜோதி, சீனிவாசன் மற்றும் போலீசார் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை தேடி வந்தனர்.

இந்நிலையில், மாணவியை கூட்டு வன்புணர்வு செய்ததாக ராகுல் (வயது 21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயணமூர்த்தி (30) ஆகியோரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழும், வன்புணர்வு, கொலை மிரட்டல் ஆகியவற்றுக்கான சட்டப் பிரிவுகளின் கீழும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பின்னர், கைது செய்யபட்டவர்களை பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

"பூங்காவில் இருந்த மாணவியையும், அவருடைய நண்பரையும் அங்கிருந்த நபர்கள் மிரட்டி உள்ளனர். பின்னர் அவர்கள், சிறுமியின் நண்பரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கிவிட்டார்.

சிறுமியையும் தாக்கி, அவர் சத்தம்போடாமல் இருக்க வாயை பொத்தியதோடு, இருவரையும் கொலைசெய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல், சிறுமியை பூங்காவின் மறைவான பகுதிக்கு தூக்கி சென்று வன்புணர்வு செய்துள்ளனர். அதை செல்போனில் படம் பிடித்து, சமூகவலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டி, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்" என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் மணிகண்டன் மற்றும் கார்த்திக் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி, முதல் தகவல் அறிக்கை போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

https://www.bbc.com/tamil/india-50621011

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, people standing

இந்தியாவில் தொடர்பாலியல் வன்கொடுமை .... 
பெண்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க மத்தியஅரசு முடிவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோவை சிறுமி வன்புணர்வு வழக்கில் பிரதான சந்தேக நபர் சரண்

கோவையில் சிறுமியை கூட்டு வன்புணர்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கோவையில் சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்த வழக்கில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டன் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சரணடைந்துள்ளார்.

கோவையில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமியை, 6 நபர்கள் வன்புணர்வு செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 26ஆம் தேதி, மாலை வேளையில், தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, வீட்டின் அருகே உள்ள பூங்காவிற்கு தனது நண்பருடன் சென்றிருக்கிறார் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி. அப்போது அங்கிருந்த 6 நபர்கள் கொண்ட கும்பல் இருவரையும் தாக்கியதோடு, சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, அடுத்த சில நாட்களில் தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட சிறுமி. இதனையடுத்து, சிறுமியின் தாயார் ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் மோகனஜோதி, சீனிவாசன் மற்றும் போலீசார் சிறுமியை மிரட்டி வன்புணர்வு செய்த கும்பலை தேடி வந்தனர்.

இந்நிலையில், சிறுமியை வன்புணர்வு செய்ததாக ராகுல் (வயது 21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயணமூர்த்தி (30) ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பின்னர், கைது செய்யபட்டவர்களை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

கோவையில் சிறுமியை கூட்டு வன்புணர்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

'பூங்காவில் இருந்த சிறுமியையும், அவருடைய நண்பரையும் அங்கிருந்த நபர்கள் மிரட்டி உள்ளனர். பின்னர் அவர்கள், சிறுமியின் நண்பரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கிவிட்டார்.

சிறுமியையும் தாக்கி, அவர் சத்தம்போடாமல் இருக்க வாயை பொத்தியதோடு, இருவரையும் கொலைசெய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல், சிறுமியை பூங்காவின் மறைவான பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதை செல்போனில் படம் பிடித்து, சமூகவலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டி, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்', என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சிறுமியை அழைத்துச் சென்ற நபர் தான், குற்றம்சாட்டப்பட்ட 6 பேரோடு கூட்டு சேர்ந்து வன்புணர்வு செய்தார், எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறை இதுவரை முறையான தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை.

இந்நிலையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டன், கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

மற்றொரு முக்கியசந்தேக நபரான கார்த்திக் இன்னும் தலைமறைவாகவே உள்ளார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/india-50643374

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.